புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_m10ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கேள்வியும், ஒரு கேள்வியும்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Oct 01, 2009 3:44 pm





//எப்படி ஒரு குழந்தை தன் தாயிடம் சரணடைந்திருக்கிறதோ, அப்படியே பெண்களும் தம்கணவனிடம் சரணடைந்து இருந்து பாருங்கள். அவன் எப்படிப்பட்ட கொடூரனாக இருந்தாலும், சீக்கிரமே தன் பொறுப்புக்களை உணர்ந்து நல்வழிப்படுவான். //

இதெல்லாம் ஓவரு!
அநியாயத்துக்கு ஆணியம் பேசுறிங்க!
உங்களுக்காக பாடுபட்ட பெரிவங்களை மறந்துறாதிங்க!
ஆண்கள் அனைவரும் கெட்டவர்கள் இல்லை, அதே நேரம் அனைவரும் நல்லவர்களும் இல்லை!
நீங்கள் சொல்வது போல் இருந்தால் இது தான் வசதின்னு பையன் செம ஆட்டம் போடுவான்!

/ஆணியம் பேசலைங்க. முடிந்தால் இவை உண்மையா இல்லையா என்று உங்கள் அம்மாவிடம் கேட்டுச் சொல்லுங்கள். //

ஏற்கனவே பின்னூட்டங்கள் கொடுத்த கேள்விகளும், அது கிளப்பிய சிந்தனைகளும் அதனால் உண்டான பல பதிவுகளும் இன்னும் முழுமை அடையாமல் editing-கில் இருக்கிறது. இருந்தாலும், உடனடியாக பதில் சொல்ல முடிந்தாலே இந்த பதிவு.

=======================

மரிலின் பிரன்ச் என்ற பெண்ணியவாதி, "ஆண்கள் எல்லோருமே காமுகர்கள்" என்று ஒரு சபையில், ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன் அறிவித்தாராம். அதோடு மட்டும் இல்லாமல் "அவர்கள் கண்களாலும் விதிமுறைகளாலும் சட்டங்களாலும் கற்பழிக்கிறார்கள்" என்று கோபமாக சீறினாராம். இது பெண்கள் மற்றும் ஆண்களிடையே பெரும் சலசலப்பை அப்போது ஏற்படுத்தியது என்று என் தந்தை எனக்கு செய்தித்தாளில் வாசித்து காண்பித்திருக்கிறார்.

ஏன் இந்த பொதுப்படை சிந்தனை? அந்த பத்து சதவீத விதி-விலக்கு பெண்களில் இல்லையா என்ன? அதற்காக பெண்களைப் பார்த்து இப்படி பொதுப்படை கருத்து தெரிவிக்கிறோமா?

பாடுபட்டாங்க. சரிங்க. அவர்கள் இன்று வந்து சில அலுவலங்களிலும், குடும்பத்திலும் நுழைந்து பார்க்கட்டுமே. ஏண்டா பாடுபட்டோம் என்று நொந்து கொள்வார்கள்.

பெண்ணியம் தவறென்று கூறவில்லை. சமத்துவம் என்பது அடுத்தவரை இழிவுபடுத்துவது இல்லை. பெண்ணோ ஆணோ, தனி நபர் உணர்வுகள் மதிக்கப்படும் போதுதான் சமத்துவம் ஏற்படுகிறது. ஆனால், நடப்பதோ, தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல, ஆட்சி கைமாறினால், அடுத்தவரை முடிந்தவரை எழவே முடியாதவாறு தோற்கடிக்கும், இகழும் குரூரம் மட்டுமே சமத்துவமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதென்ன சமத்துவம் என்றே புரியவில்லை.

எப்படி மாமியார் - நாத்தனார் என்றாலே கொடுமைகாரிகள், தோழிகளாக இருக்கவே முடியாது என்று புரையோடி போய் விட்டதோ, அதே போல ஆண்கள் பற்றிய பெண்ணியவாதிகளின் வாதங்களும் புரையோடி போனவையாக இருக்கிறது. பல பெண்ணியவாதிகளின் மகன்கள் introvert-களாக இருப்பதையும் கண்டிருக்கிறேன். மன்னிக்கவும், ஒரு நாய் கூட கல்லால் அடித்தால் குறைந்தபட்சம் திரும்பக் குரைக்கும், ஆனால் நான் குறிப்பிடும் பெண்ணியவாதிகளால் வளர்க்கப்பட்ட மகன்கள், எதாலோ அடித்தால் கூட வாங்கி கொண்டு சிவனே என்று போனதையும் பார்த்து கொதித்திருக்கிறேன். அவன் நிச்சயம் பெண்கள் மீது வெறுப்பு கொண்டவனாகவே வளர்கிறான்.

யாரோ ஒருவன் அடிக்கிறான். அன்று என்னால் அடிக்க முடியவில்லை என்பதற்காக என் கை ஓங்கியதும் அவனை நசுக்குவது நியாயமா? காலச்சக்கரத்தில், மீண்டும் மாற்றான் கை ஓங்கினால், இதே நிகழும், அப்புறம் நாமெல்லாம் நாகரீகமடைந்து விட்டோம் என்று பறை சாற்றுவதில் என்ன பயன்?

சரி, back to the point, கணவனை சரணடைந்து இருத்தல் எல்லோருக்கும் நன்மை தராது, ஆண்கள் ஆட்டம் போடுவார்கள் என்ற தொனியில் வாலின் பின்னூட்டம் இருக்கிறது.

சரணடைவது / சார்ந்து இருத்தல் என்பது நம்பிக்கையின் எல்லை. ஒரே இரவில் அல்லது across the counter நம்பிக்கை வரவே முடியாது. அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி இல்லை பெற்றோர் பார்த்து முடிவெடுத்த திருமணமாக இருந்தாலும் சரி. கூடவே இருந்து, ஒருவர் மற்றவரின் குறை நிறைகளை தெரிந்து புரிந்து, வரும் பிரச்சினைகளை சமாளித்து, எல்லாவற்றுக்கும் பின், இருவருக்கும் மற்றவர் மீது அதீத நம்பிக்கை வரும் போதே, சார்பு ஏற்படுகிறது. சார்பு வந்தால் மட்டுமே குடும்பம் என்ற வட்டம் இணைகிறது, முழுமை பெறுகிறது.

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல, ஆணையும் பெண்ணையும் ஒரு தராசில் நெறுக்க முடியுமா? நிச்சயம் முடியாது. ஆணையும் பெண்ணையும் ஒப்பீடு செய்வதே தவறு. ஆணோ பெண்ணோ, over-protective ஆகவோ, இல்லை over-liberal ஆகவோ இருப்பது எப்படி balance / சமத்துவமாக கருத முடியும். இவை இரண்டுமே சீர்கேட்டுக்கு / குடும்பச் சிதைவுக்கு மட்டுமே வழிகோலும்.

சில மனைவிகள் இன்றும் கணவன்களால் துன்பத்தில் இருக்கிறார்கள். எங்கே? அடித்தட்டு (below poverty line) மற்றும் மேல்தட்டு (rich) சமூகத்தில் இருக்கும் நான்கு சதவீத பெண்மணிகள் உண்மையாகவே ஆண்களால் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். ஆனால் அவர்களிடம் போய் பேசிப் பாருங்கள், புலம்பிக் கொண்டே, அவனுக்கு உணவு எடுத்து வைத்துக் கொண்டிருப்பாள். இதில் என்ன பெருமை என்றே எனக்கு புரிவதில்லை. தியாகம் என்ற பெயரில் அடிமை வாழ்க்கை வாழ்வாள். எத்தனை பெண்களுக்கு தனக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது? என்று துக்கப்பட்டுக் கொண்டாலும், இதே நிலை ஆண்களுக்கு இல்லையா?

"ஆண்கள் எல்லோரும் மிருகங்கள். அவர்கள் இப்போது எதுவும் செய்யவில்லை என்றாலும், வாய்ப்புக்காக காத்திருந்து, அதை பற்றியே சிந்தனை செய்து கொண்டு இருப்பார்கள்" (Men are animals I don't care if they're not doing anything at the moment they're thinking about it and they will when they have the chance.) என்று ஒரு ஆங்கில நாவலில் படித்திருக்கிறேன். இதே தொனியில், எங்கள் பாட்டி (அவரும் ஒரு பெண்ணியவாதி) கூட "அண்ணனா இருந்தாலும் ஆம்பிள ஆம்பிளதான்" என்பார். இதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

எத்தனை அண்ணன்கள் தன் தங்கைகளுக்காக, தன்னுடைய திருமணத்தை காலம் கடந்து செய்து கொண்டிருக்கிறார்கள். இதை பெருமை என்றோ அல்லது சரியானது என்றோ, சொல்லவில்லை. அப்படி பெண்களுக்கும், வெறும் சதைக்கும் அலைபவர்கள் என்றால், நம் தந்தை, அண்ணன், தம்பி, நண்பன் என்ற ஒவ்வொரு ஆணும் அப்படிப்பட்டவர்களா? நினைத்து கூட பார்க்க சங்கடமாக இருக்கிறது. எல்லோரும் மன்னிக்க.

"அவர்கள் நம் எதிரிகள்", "after all they are boys", என்றெல்லாம் இன்றும் பள்ளி செல்லும் சிறுமிகள் பேசிக் கொள்வதை பார்க்கிறேன். இதே எண்ணத்தோடே வளரும் அவர்களால், மாமியாரை எதிர்கொள்ளும் அதே மனப்பாங்கோடுதான் கணவனையும் எதிர்கொள்வார்களோ என்று நினைத்தது உண்டு.

யார் நல்லவன் என்பதற்கு விளக்கமளிக்கவே முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நல்லவன் இருக்கிறான், ஒவ்வொருவரும் அவரவர் நியாயப்படி நல்லவனாகவே இருக்கிறார்கள்.

நான் உண்ணும் இரண்டு சப்பாத்திகள், இந்த உலகில், எங்கோ நான்கு பேருக்கு உணவாக இருக்கலாம். நான் நல்லவளாக இருக்கிறேன் என்பதற்காக, அதை உண்ணாமல் நான் பட்டினி கிடப்பது எவ்வளவு அறியாமையான செயலோ, அதே போல, பொதுப்படையான ஒரு கருத்தை திணித்தலும் அறியாமையே.

ஆண்களில் பத்து சதவீதம் நல்லவர்கள் இல்லை என்றால், பெண்களும் அதே போல பத்து சதவீதம் நல்லவர்களாக இல்லை என்பது ground reality. ஏன் பெண்களால் பெண்களுக்கு துன்பம் விளைவதில்லையா? உண்மையில் சொல்லப் போனால் "மனம் அழுகிய" ஆண்களை பற்றி எப்படி பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் தெரியுமோ, அதே போல பெண்களிலும் "மனம் அழுகிய"வர்கள் இருக்கிறார்கள்.

Let's accept the fact and move on.

உதாரணத்திற்கு, ஒரு பெண்ணை வெள்ளம்/புயல்/மழையிலிருந்து காப்பாற்றிய ஒருவரை பற்றிய செய்தி நமக்கெல்லாம் சப்பென்று இருக்கிறது. ஆனால், "மழையில் சிக்கிய அழகி கற்பழித்து கொலை" என்ற செய்தி நமக்கெல்லாம் "என்னாச்சு" என்றே தெரியாத மாதிரி, ஒரு பரபரப்பைக் கொடுக்கிறது.

எப்படி தேவ-அசுர, நாத்திக-ஆத்திக, ஜாதி-மத வேறுபாடுகள் மீதான விவாதங்கள் தீர்ந்து போய் விடாமல், பரபரப்பை அடிக்கடி உண்டாக்கி, மீடியா பார்த்துக் கொள்கிறதோ, அதே போல ஆண்-பெண் சமத்துவமும் ஏற்பட்டு விடாமல் பெண்ணியவாதிகள் பார்த்துக் கொள்வார்கள்.

ஏன் ஆண்களை வில்லனாகவே பார்க்க வேண்டும்? அதே போல இன்றும் பெண்களை அடியோடு வெறுக்கும் ஒரு தலைமுறை வளர்ந்து வருவதாகவே தோன்றுகிறது.

ஆணோ, பெண்ணோ, எங்கே மெல்லிய உணர்வுகள் நசுக்கப்படுகிறதோ, அங்கே வன்முறை வெடிக்கிறது. புரட்சி, போராட்டம், எதிர்ப்பு என்றெல்லாம் எந்தப் பெயர் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளலாம். குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் அரவணைப்பு, அவர்களால் தத்தம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இருந்தாலே போது, தனிநபருக்கு சமூகத்தின் அங்கீகாரம் என்ற ஒன்று பற்றிய கவலை கூட வராது. குடும்பத்தின் அரவணைப்பே, அவனுக்கு தன்னம்பிக்கை பெற்றுத் தரும். தன்னம்பிக்கை உடைய யாருமே மனதுக்கு தவறென்று தெரியும் செயல்களைச் செய்வதில்லை.

இதெல்லாம் சாத்தியப்பட ஒன்றே ஒன்று மட்டும் போதும், அது நம்மை சார்ந்தவர்களின் "மெல்லிய உணர்வுகளை மதிப்பது" - நடக்குமா? என்பது million dollar question?

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக