புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
81 Posts - 67%
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
1 Post - 1%
viyasan
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
273 Posts - 45%
heezulia
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
18 Posts - 3%
prajai
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_m10கண்ணதாசன் எனும் காவியம் - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசன் எனும் காவியம்


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 12:05 am

First topic message reminder :

- சத்தி சக்திதாசன்



கவிஞர் கண்ணதாசனைப் பற்றி இலக்கிய ரீதியில் ஆராயக்கூடிய அளவிற்கு பாண்டித்தியம் பெற்றவனல்ல நான். சாதரண பாடல்களின் கருத்தால் கவரப்பட்ட ஓர் சராசரி ரசிகன்தான் நான். கண்ணதாசனின் பாடல்கள்களில் சொந்த அனுபவங்களின் வாயிலாக எழுந்தவையே மிகவும் பிரபல்யம் வாய்ந்தவையாக அமைந்தன. சாதாரண மக்களின் அன்றாட அனுபங்களைத் தொட்டு இந்தப் பாடல்கள் அமைந்ததின் காரணமே இவைகளின் வெற்றிக்குக் காரணம். எட்டாவது வகுப்பு மட்டுமே படித்த முத்தையா என்ற இயற்பெயர் கொண்ட கண்ணதாசன் பிறந்தது வணிகத்திலே புகழ் பெற்ற செட்டி நாட்டைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி எனும் கிராமமேயாகும். தான் சிறுவயதினிலேயே சுவீகாரம் கொடுக்கப் பட்டதை மனதில் வைத்து எழுதப்பட்ட " ஒருத்தி மகனாய் பிறந்தவனாம் ஒருத்தி மகனாய் வளர்ந்தவனாம் " என்ற பாடல் இந்த கவிதைத் தலைவனின் அனுபவ கவிக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும் .

வாழ்வினிலே எடுப்பார் கைபிள்ளை போன்று எல்லோரையும் நம்பி தன் வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை தானே தனது சுயசரிதையில் மிகவும் அழகான எளிய தமிழில் எடுத்துரைத்து இருந்தார் கவிஞர். அவரது வாழ்க்கைப் பாதை பல முட்புதர்கள் நிறைந்த கடுமையான ஒன்றாக அமைந்தது. அவர் தானாகவே ஏற்படுத்திக் கொண்ட இடர்கள் ஏராளம் , அதை அவரே பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை பகிரங்கமாக மக்களுடன் பகிர்ந்து , தன்னைத் தானே சுயவிமர்சனம் செய்யும் மனப்பக்குவததை தன்னுடைய வாழ்வின் இறுதிப் பாகத்தில் அடைந்திருந்தார். இக்கசந்த அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவதனால் ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்குமானால் அதுவே தமக்கு திருப்தி அளிக்கும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தார்.

கண்ணதாசனுக்கு இருந்த தமிழாற்றல் தமிழன்னையால் அவருக்கு அளிக்கப்பட்ட ஓர் உன்னத வரப்பிரசாதம். அதை அவர் பலவழிகளில் உபயோகித்தார்.அரசியல் எனும் அந்த அழமறியா சமுத்திரத்திலே அவர் மூழ்கும்போது தமிழையே அவர் கரைசேர்க்கும் தோணியாக பாவித்தார். தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் அனைவருமே இவரின் புகழ் மாலைக்கும் பின் ஒருபோது வசை மாலைக்கும் இலக்காகியிருக்கின்றார்கள். இதை அழகாக கலைஞர் கருணாநிதி அவர்கள் குறிப்பிடுகையில் " கண்ணதாசன் என்னை உயர தூக்கி வைத்து புகழ்பாடிய காலங்களும் உண்டு பின் மேலிருந்து என்னைத் தொப்பென்று கீழே போட்ட காலங்களும் உண்டு. ஆனால் கீழே விழுந்தபோது அவனது தமிழின் அழகு எனக்கு மெத்தையாக இருந்தது " என்ற பொருள் பட கூறியுள்ளார்.

பலர் இவரை அரசியலில் ஓர் பகடைக்காயாக பயன் படுத்தியுள்ளார்கள்.

ஆரம்பகாலங்களில் பத்திரிக்கைகளில் எழுத்தாளராக வாழ்க்கையை ஆரம்பித்தவர் , பின்பு கவிதைகளிலும் , பாடல்களிலும் தனது கவனத்தைச் செலுத்தினார். அவருக்கு முதன்முதலில் பாடல் எழுதும் சந்தர்ப்பங்கள் அந்நாளில் திமுகவின் கோட்டையாக விளங்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் மூலமே கிடைத்தது . பின்பு படங்களுக்கு வசனம் எழுதும் சந்தர்ப்பமும் கிடைத்தது . தானே சொந்தமாக படங்களையும் தயாரித்துள்ளார். அவர் தயாரித்த படங்களில் வானம்பாடி , மாலையிட்டமங்கை ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

தென்றல் எனும் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர், பின்பு அந்தப் பத்திரிக்கையை வாங்கி தானே நடத்தியுள்ளார். இப்படி பல துறைகளிலும் இறங்கிய அவருக்கு அழியாப்புகழை அளித்தது அவரது பாடல்கள்தான். தமிழ்பேசும் சமூகம் வாழும் எந்த மூலைமுடுக்குகளிலும் இவரது பாடல்கள் முனுமுணுக்கப்படாத இடமே கிடையாது.


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:32 am

தன்னம்பிக்கை என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது. ஒன்றுமே இல்லை எனும் நிலையிலிருந்து எல்லாமே இருக்கிறது எனும் நிலையைத் தன்னம்பிக்கையின் உதவியோடு ஒரு மனிதன் அடைந்து விடலாம். கவிஞரின் வெற்றியின் ரகசியம் தன்னம்பிக்கை என்று சொல்லலாம்.

கவிஞர் கண்ணதாசன் குறைகளற்ற ஒரு மனிதன் என்று கூறி விட முடியாது, ஆனால் அந்தக் குறைகளுக்கெல்லாம் ஒரு மகுடம் வைத்து மக்களின் மனதில் ஏற்றி விடக் கூடிய வல்லமை



அவரிடத்தில் இருந்தது. தன்னிடம் உள்ள குறைகளைத் தானாகவே மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி அதை முன்னுதாரணமாக்கி அதன் அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு அறிவுரை அளிக்கும் துணிச்சல் இருந்தது. மனதில் ஆழப் பதிந்த வடுக்களை பாடங்களாக்கினார், அதை அர்த்தம் பொதிந்த மதத்தின் அடிப்படையில் நோக்கினார், தனது விளக்கங்களை அள்ளி மக்களுக்கு வீசினார். அதுவே கவியரசர் கண்ணதாசனின் படைப்புக்களுக்குக் கலசமாயிற்று.

ஒரு ஆணும், பெண்ணும் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்கள். நடுத்தர வர்க்கத்தின் அடையாள முத்திரையான ஆண், பெண் இருவருமே உழைக்க வேண்டிய நிலைக்கு இருவரும் தள்ளப் பட்டார்கள். தனது குடும்பத்தின் தேவைகளைத் தான் தனது மனைவி பொறுப்பேற்கிறாள் என்று அறிந்திருந்தும், மனைவியின் மேல் அனைவருக்கும் இருக்கும் அன்பையும், மதிப்பையும் கண்டு பொறாமை கொள்ளும் கணவன்.

என்ன நண்பர்களே! ஞாபகம் வருகிறதா? ஒரு அருமையான திரைப்படம் "சூரியகாந்தி", முத்துராமன், ஜெயலலிதா அவர்களின் சிறப்பான நடிப்பினால் மெருகூட்டப்பட்ட படம். அதிலே அந்தக் கணவனின் மனநிலையை விளக்கும் ஒரு பாடல், சமுதாயத்திலே ஆண்கள் தான் பெண்களை விட மேலான ஒரு நிலையில் இருக்க வேண்டும் என்னும் ஒரு சட்டமாக்கப்படாத விதிமுறை தொற்று நோய் போல் தொற்றிக் கொண்டது. இந்த 21ம் நூற்றாண்டில் கூட இப்படிப்பட்ட ஆண்களை நாம் காணலாம். கவிஞர் கண்ணதாசனின் மனதிலே இந்தக் காட்சி எப்படி வியாபிக்கிறது என்பதை, இந்தக் காட்சிக்காக அவர் எழுதிய பாடலில் இருந்து பார்ப்போம். இது டி.எம்.எஸ். தனது கணீரென்ற குரலினால் உயிர் கொடுத்த கவிஞரின் அருமையான பாடல்களில் ஒன்று.

பாம்புக்கும், கருடனுக்கும் உள்ள உறவு உங்களுக்குத் தெரியும் தானே! பாம்பைக் கண்டால் கருடன் உயிரோடு விட்டு வைக்க மாட்டான். அதே போல் கருடன் இருக்கும் இடத்திலே பாம்பின் நிழல் கூட இருக்காது,.
இதுதான் யதார்த்தம்.

இங்கே என்ன நடக்கிறது பாம்பு போய், உலகத்தின் காவலன் பரமசிவனின் கழுத்தில் அமர்ந்து கொண்டதாம். அமர்ந்து கொண்ட பாம்பு சும்மா இருந்திருக்கலாமே! கருடனைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும் பாம்பு, அந்தக் கருடனைப் பார்த்துப் புன்னகையுடன் "செளக்கியமா?" என்கிறது.

“ம் .. இரு, இரு பரமசிவன் கழுத்தில் எப்போதுமே இருந்து விடலாம் என்ற எண்ணமா? பார்த்துக் கொள்கிறேன் " என்று கறுவிக் கொள்கிறது கருடன்.

இதை அழகாக எமது கவியரசரின் வரிகளிலே பார்ப்போம்!

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா செளக்கியமா? யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் செளக்கியமே, கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது.

வாழ்க்கையின் யதார்த்ததை எமது தெய்வங்களின் வடிவங்களோடு சம்மந்தப்படுத்திச் சாதாரண மனிதனுக்கும் புரியக் கூடிய வகையில் கவிஞர் பாடல் தந்திருப்பதன் வகையைப் பார்த்தீர்களா? எங்கே அடுத்த பகுதியைப் பார்ப்போம்!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதருக்கு ஒளவை சொன்னது
அது ஒளவை சொன்னது
அதில் அர்த்தமுள்ளது


உண்மை தானே! ஒரு மனிதனின் நிலை உயர்ந்திருக்கும் போது தான் தனது தலையை உயர்த்தி இந்த உலகம் பார்க்கிறது! ஆனால் அதே மனிதனின் நிலை தாழ்ந்து வந்தாலோ அவனது நிழல் கூட அவனை மிதித்துத் தான் போகிறதாம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:33 am

அருமையாக எடுத்துக் காட்டுகிறார் எங்கள் ஏழிசைக் கவிஞர். அந்தக் காட்சியில் வரும் அந்தக் கணவனின் நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறார். அதாவது அவனது மனைவியின் நிலை அவனது நிலையை விட உயர்ந்து விடுகிறது, அப்போது அவனது குடும்பத்தினரே அவன் மனவியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அந்த மனிதனின் மனதில் வேதனை பொங்குகிறது. தான் தனது நிழல் போல எண்ணியிருந்த தனது குடும்பம் கூடத் தன்னை மிதிக்கிறதே என்று ஆதங்கப் படுகிறான். அடுத்த அடி எம் கவி எவ்வகையாய் எடுத்துத் தந்திருக்கிறான்?

வண்டி ஓடச் சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த
இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்?
உனைப் போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும், தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது


பாதையிலே ஓடும் வண்டி, அதன் சக்கரங்களிலே ஒன்று சிறியது என்று வைத்துக் கொள்ளுங்களேன். தான் போக எண்ணிய இடத்தை அந்த வண்டி அடையுமா? இல்லை அதன் பயணம் தான் ஒரு சீரான பாதையில் போக முடியுமா?

எவரும் தமது அந்தஸ்து அறிந்து பழகிக் கொள்ள வேண்டும் என்கிறார் இந்தக் கவிராயர். உயர்ந்த நிலையில் இருப்போர்களும், தாழ்ந்த நிலையிலிருப்போர்களும் உறவாடும் போது அங்கே நிச்சயம் அவரவர் நிலமைகளில் இருக்கும் வேறுபாடு தலை தூக்கத் தான் செய்யும். இந்த யதார்த்தத்தை அழகாக எடுத்து இயம்புகிறார் கவியரசர் கண்ணதாசன்.

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்
நிலவும் வானும் போலே நான்
நிலவு போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என்னுள்ளம் எனைப் பார்த்துக் கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது? இது
கணவன் சொன்னது இதில் அர்த்தமுள்ளது.


நிலவு இல்லா விட்டால் வானுக்கு அழகு இல்லை. அதே போல வான் இல்லா விட்டால் நிலவு தனது அழகை எங்கே ஊர்வலமாய் எடுத்துச் செல்லப் போகிறது? இவை இரண்டும் சேர்ந்திருக்கும் போது தான் இயற்கை அழகு கொடி கட்டிப் பறக்கிறது.

அதே போலத் தான் குடும்ப வாழ்க்கையும்; கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, சமமான பங்கோடு வாழ்வதை நிலவும் வானும் சேர்ந்த போது ஜொலிக்கும் அழகிற்கு ஒப்பாக்குகிறார் எமது ஒப்பற்ற கவி.

அப்போது அந்தக் கணவன் என்ன சொல்கின்றானாம்? தனது மனவியின் வளர்ச்சி, அவள் அடையும் புகழ் தன்னைச் சிறுமைப் படுத்துகிறது என்று அவனது உள்ளமே அவனைக் கேலி செய்கின்றதாம்.

இங்கே கவிஞர் தனது கருத்துக் குவியலினுள் புதைத்து வைத்துள்ள மற்றுமோர் உன்னதக் கருத்தைப் பாருங்கள். அவர் என்ன சொல்ல விழைகிறார் என்றால், அந்தப் பெண், அதாவது இந்தக் காட்சியில் குறிப்பிடும் மனைவி அடைந்த உயர்வினால் அவள் அவளது கணவனைச் சிறுமைப்படுத்தவில்லை. அவனது உள்ளம் தான் அவனைச் சிறுமைப்படுத்துகிறதாம்.

அதாவது, தன் உள்ளமே தனக்கு எதிரி என்று சொல்கிறார்களே, அப்படியானதொரு சூழ்நிலையில் தனக்குத் தானே அவன் தாழ்வு மனப்பான்மை கொள்கிறானாம். இங்கே தான் அந்தப் புரிந்துணர்வு அவர்களுக்கிடையில் முற்றுப் பெறவில்லை என்பதைச் சூட்சுமமாகத் தெரிவிக்கிறார் கவியரசர்.

நண்பர்களே கண்ணதாசனைப் பற்றி ஆராயும் போது அவரது திரைப்படப் பாடல்களை எடுத்துச் சிறிது பகுப்பதன் மூலம் அந்த ற்றல் மிக்கவரின் பன்முகங்களையும் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. இத்தனை ஆயிரம் பாடல்கள், இத்தனை ஆயிரம் நிலைமகளுக்கு அவரால் வடிக்க முடிந்தது என்றால், எத்தனை ஆயிரம் அனுபவ மைல்களைக் கடந்துள்ளார் என்பது புரியவரும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:34 am

இரண்டு அடிகளில் ஒரு பொருள் தத்துவத்தை எடுத்தியம்பும், தமிழ்ப்பெரும் இலக்கியங்களில் ஒன்றான திருக்குறளை எவ்வாறு எமது கவியரசர் சாதாரண மக்கள் மத்தியில் கொண்டு வருகிறார் என்று இப்போது பார்ப்போம்.

யான் நோக்குங் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்

தான் நோக்கி மெல்ல நகும்


காதல் பருவமதில் காளையும், கன்னியும் எதிர் எதிரே. கன்னி மனமதில் குடிபுகுந்த காளையினைக் கண்டுவிட்டால், அம்பு போன்ற அவள் பார்வை அவனைத் துளைத்தெடுக்க விரும்பாதா என்ன? ஆனால் கன்னியவள் கூடப் பிறந்த நாணம் எனும் விலங்கு அவளைத் தன்னிச்சை போல நடக்க விட்டு விடுமா?





அவன் அவளைப் பார்க்க, அவள் தரை பார்க்க, அவன் விண் பார்க்க, அவள் அவன் முகம் பார்க்க, காதல் பாடத்தின் அரிச்சுவடி, ஆரம்பம் அதுதானே!

கவியரசர் இக்குறளைத் திரைகானமாக்கி எமக்கு விருந்தாக்குகிறார்.

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே


எத்தகைய எளிமையான விளக்கத்தின் மூலம் தமிழால் எம்மைத் தாலாட்டி, வள்ளுவனை சமுதாயத்தின் அடிமட்ட மனிதன் வரை அழைத்து வந்து விடுகிறார் கவிஞர்.

அது மட்டுமா? அதிலே கலந்திருக்கும் கருத்தைக் கவனியுங்கள். அவன் அவளைப் பார்க்கும் போது அவள் எங்கே பார்க்கின்றாள்? தமிழ் நங்கையின் தனிப்பெருஞ் சீதனமான நாணம் தலையெடுக்க அவள் வதனம் கீழ் நோக்கி, கண்கள் மண்ணைப் பார்க்கின்றனவாம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! எம்மண் பெண்களின் பெருங்குணமே மண் பார்த்து நடப்பது தான்.

அப்போது எம் ஏறு போல் பீடு நடையிடும் காளை என்ன செய்கிறான்? மெதுவாக விண்ணைப் பார்க்கிறானாம். அடடா இந்த வேளைக்காகத் தானே காத்திருந்தேன் என்று அந்தப் பூமகள் தன் உள்ளங்கவர் கள்வனைப் பார்க்கிறாளாம்.

எங்கோ அடுத்தொரு முத்து பளிச்சிடுகிறதே!

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:35 am

அழுகுணிச் சித்தர் என்பவரின் பாடல்களில் ஒன்று. வாழ்க்கையை வெறுத்து, சித்தர்களுக்கே உரிய பாடல் ஒன்றிலிருந்து எடுத்த சில வரிகளை, நமது கவிஞர் எப்படித் தமது அனுபவம் எனும் தேன் தடவி எமக்கு விருந்தளிக்கிறார் என்று பார்ப்போம்.

பையூரிலே யிருந்து பாழூரிலே பிறந்து

நெய்யூரிலே போவதற்கு வேதாந்த வீடறியேன்


வாழ்க்கையின் ரகசியத்தை அப்படியே புட்டு வைக்கிறார் சித்தர். தத்துவத்தில் மிதந்து லெளகீகத்தை ரசித்துத் தனது அனுபவங்களைச் சேர்த்த கவிஞர் சித்தர்களுக்கெல்லாம் சித்தரல்லவா!

உடலூரில் வாழ்ந்திருந்தேன்

உறவூரில் மிதந்திருந்தேன்

கருவூரில் குடிபுகுந்தேன்

மண்ணூரில் விழுந்து விட்டேன்


கவிஞர் கண்ணதாசன் சித்தரின் தத்துவத்தை நம் மத்தியில் சுலபமாய் உலவ விட்டுவிட்டாரே!

ஒரு குழந்தை பிறப்பதன் முன்னால் அது தனது தந்தையினதும், தாயினதும் இரத்த அணுக்களுடன் கலந்து அவர்களது உடலில் வாழ்ந்திருக்கிறது. பின்பு கணவன், மனைவி குடும்ப உறவு முறையில் மிதந்து வருகிறதாம். அத்தோடு அதனது தாயின் கருவறையில் பத்து மாதங்கள் குடியேறி வாழ்க்கை நடத்துவதும் நியதியாகிறது. இறுதியாக இந்தப் பாழும் புவியில் வந்து விழுந்ததை அழகாக மண்ணூரில் விழுந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

இதோ என்ன? ஏதோ பளிச்சிடுகிறதே! ஓ மற்றொரு முத்தா?

ஒரு மன்னனின் கடமை என்ன? தனது நாட்டுப் பிரஜைகள் அனைவரையும் சமமாகப் பாவித்து நீதி வழங்குவதே. ஒருவனுக்குக் கை நிறையப் பொன்னை அள்ளிக் கொடுக்கும் வேந்தன், மற்றொருவனை வெறுங்கையுடன் அனுப்புவது என்னே முறை என்று தனது தோழியிடம் முறையிடுகிறாளாம் இந்தப் பூச்சூட்டும் பூவை.

முத்தொள்ளாயிரத்தின் முதற் பாடல் இதை எவ்வாறு கூறுகிறது என்று பார்ப்போமா?

மண்ணுயிர்க் காவல் தனதான அவ்வுயிருள்

என்னுயிரும் எண்ணப்படுமாயின் - என்னுயிர்க்கே

சீரொழுகு செங்கோற்ச் செழியர்க்கே தக்கதோ?


தனது உள்ளங் கவர் கள்வன் ஒரு மன்னவன். ஒரு மன்னவனானவன் தன்னுடைய மண்ணிலுள்ள உயிர் களுக்கெல்லாம் காவலன் ஆவான். அப்படியிருக்க அவன் எவ்வண்ணம் தன்னைக் காக்காது விட்டான் என்று தன் தலைவனின் மீது பொய்க் கோபம் கொண்டு தோழியிடம் வினவுகிறாள் தலைவி.

இந்தப் பாடலின் கருத்தை ரசித்த கவியரசர் கண்ணதாசன் எப்படி மக்களிடம் இந்தப் பாடலை திரை கானத்தின் மூலம் கொண்டு வருகிறார் என்று பாருங்கள்.

என்னுயிர்த் தோழி கேளொரு சேதி

இது தானோ உங்கள் மன்னவன் நீதி

தன்னுயிர் போல மன்னுயிர் காப்பான்

தலைவன் என்றாயே தோழி!


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:36 am

கையிலே கதவு அடிக்கின்றது "அம்மா!" என்கிறோம். சில விநாடிகளில் வேதனை மறைந்து விடுகிறது. ஆனால் உற்ற நண்பன் எம்மை ஏமாற்றுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தத் துரோகத்தனம் கொடுக்கும் வேதனை இதயத்தில் வலியாகி விடுகிறது. அதே போல உயிராக மதித்த காதலனோ அன்றிக் காதலியோ காதலையே தூக்கி எறிந்து விடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம், அப்பப்பா! அது கூட இதயத்தை ரணமாக்கி விடுகிறது.




இந்தக் காயங்கள் இதயத்தில் ஏற்படுத்திய வடுக்கள் அனுபவம் எனும் தடமாகி விடுகிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையிலே அழகுத் தமிழுடன் சேர்ந்து கவிதைகளாகவும், திரைகானங்களாகவும் கவியரசர் எமக்களித்த அற்புதப் படைப்புகள் பல.

அதே வரிசையில் இந்த வாரம் மிகவும் அருமையாகக் கவியரசரினால் தீட்டப்பட்ட பாடல் ஒன்றை எடுத்துப் பார்க்க விழைகின்றோம்.

முத்து மண்டபம் என்னும் படத்திற்காகக் கவியரசரின் கற்பனையில் உதித்து, 'டி.எம்.எஸ்.' இன் குரலில் இசைத்த இந்தப் பாடலை முணுமுணுக்காத வாய்களே இல்லை என்று சொல்லலாம்.

சொன்னாலும் வெட்கமடா! சொல்லா விட்டால் துக்கமடா!
வெட்கமுமில்லாமல் துக்கமுமில்லாமல் வாழுகிறேன் ஒரு பக்கமடா!


இந்த நிலைமை தமது வாழ்க்கையில் தோன்றாதவர்களின் எண்ணிக்கையை விரல்களில் எண்ணிவிடலாம். அடடா! என்னே அழகான மனநிலை விளக்கம். அந்த ஒருவனுக்கோ, ஒருத்திக்கோ வாழ்க்கையில் நடந்தது மிகவும் வெட்ககரமான விட(ஷ)யம், அதைச் சொன்னாலோ ஒரு சாரார் எள்ளி நகையாடப் போகிறார்கள், மற்றொரு சாரார் "சொன்னேன் கேட்டியா? இப்பப் பாரு நடந்ததை" என முற்றும் அறிந்தவர் போல விளக்கம் கொடுப்பார்கள். ஆனால் அதற்காக அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லையே என்று நாயகன் புலம்புகிறான்.

பொன்னோடு பொருள் படைத்தேன் பூவைக்கு நான் பூ முடித்தேன்
மன்னாதி மன்னனைப் போல் மாளிகையில் வாழுகிறேன்


ஜயோ! அந்த மனிதனைப் பாருங்கள், அவனிடம் இருக்கும் அழகான, விலையுயர்ந்த கார் போல என்னிடம் இல்லையே? அதோ அவன் எத்தனை அழகான வீடு வைத்திருக்கிறான், என் வீட்டையும் தான் பாருங்களேன்! எனத் தினமும் தமது வாழ்க்கையில் இல்லாத பலதையும் எண்ணி ஏங்கும் மானிடரைப் பார்த்திருக்கிறோம். ஆனால் சாதாரண மனிதர்கள் பார்த்து ஏங்கும் சகலத்தையும் தான் பெற்று விட்டேன் என்றும், அதனை ஓர் சுமையாகவும் ஒருவன் சொல்கிறான் என்றால் அவன் மனதில் ஓடும் சோக நீரோட்டம் ஒரு வெள்ளமாகத் தானே இருக்க வேண்டும்.

பாய்விரித்துப் படுப்பவரும் வாய்திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சில் ஓர் அமைதியில்லை


படுப்பது எங்கே என்பது கேள்வியில்லை ஆனால் படுப்பவனின் மனதில் தெளிவு வேண்டும். தனக்கு அளிக்கப்பட்டது இவ்வளவு தான் எனும் மனப் பக்குவம் வேண்டும். அதற்காகத் தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளக்கூடிய வகையில் எந்த விதமான முயற்சிகளும் எடுக்கப்படக் கூடது என்பதல்ல. ஆசைகள் நியாயமானவைகளாக இருக்குமட்டும், பேராசைகளாக மாறாத மட்டும் மனதில் பக்குவம் நிலை கொள்ளும். இதையே கவியரசர் தெளிவாகத் தனது அனுபவ ஞானத்தின் மூலம் அவிழ்த்து விடுகிறார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:36 am

கொஞ்சிவரும் கிளிகளெல்லாம் கொடும்பாம்பாய் மாறுதடா
குத்திவிட்டுப் புத்தனைப்போல் சத்தியமாய் வாழுதடா


இது கூட மிகவும் அருமையான உவமானமே! கிளியைப் பார்த்ததும் எமது மனதில் கனிவு பொங்குகிறது அதன் அழகில், அதன் கிள்ளை மொழியில் எமது மனதைப் பறி கொடுக்கிறோம். ஆனால் அந்தக் கிளி மெள்ள மெள்ளத் தத்தி வந்து எமது அன்புக்குப் பாத்திரமாகிவிட்டு, நாம் சிறிது கண்ணயரும் போது கொத்தி விட்டுப் பறந்து போகிறது. அப்போது எமக்குப் புரிகிறது, ஓ! இது கிளியல்ல கிளி வேஷத்தில் வந்த பாம்பு என்று. மறந்து போய்ச் சும்மா இருக்குதா? இல்லையே அதைப் பற்றி அறியாத இடத்தில் சென்று புத்த போதனை செய்து மக்கள் மனதை மயக்குகிறதாம். கொத்து வாங்கிய நாம் போய் என்ன கத்தினாலும், அந்தக் கூட்டம் என்ன, நம்பப் போகிறதா?

நண்பர்களே, கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! நம் எல்லோருக்குமே வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒன்றிரண்டு பேரையாவது தெரிந்திருக்குமே? இது தான் கவியரசர். எமது உள்ளங்களோடு பேசுகிறார். எமக்குப் புரிந்த மொழியில் பேசுகிறார். எமது இதயவீணையின் நரம்புகளை ஒவ்வொன்றாய்த் தட்டி விடுகிறார்.

இல்லாத மனிதருக்கு இல்லையெனும் தொல்லையடா
உள்ளவர்க்கு வாழ்க்கையிலே உள்ளதெல்லாம் தொல்லையடா
அன்னமில்லை என்றாலும் அமைதி கொண்ட மானிடனே
உன் வாழ்வை நினைக்கையிலே என் மனசு தவிக்குதடா


அதோ பாருங்கள், தெருவோரத்திலே படுக்க இடமின்றி நிலவின் வெளிச்சத்தில் ஆகாயம் எனும் கூரையின் கீழ், பூமி எனும் பஞ்சணையில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கிறானே, அவனைப் பார்த்துப் பொறாமை கொள்கிறான் இந்த "உள்ளவன்".

‘இருப்பவன் வாழ்க்கையில் இருப்பதெல்லாமே தொல்லை’ - சத்தியமான வரிகள்

வண்ணமுத்து மண்டபமும் வைரமணிப் பஞ்சணையும்
உன்னிடத்து நான் தருவேன் நிம்மதியை நீ தருவாய்


கலைத்து விட்டான் போங்கள். இத்தனை அமைதியின்மைக்கா நான் இத்துணை பொருள் சேர்த்தேன்? வேண்டாமப்பா! உன்னிடம் சகலத்தையும் கொடுத்து விடுகிறேன், உன்னிடம் இருக்கும் நிம்மதியை மட்டும் எனக்குத் தா என்கிறான்.

நண்பர்களே! இங்கு கவிஞர் சொல்ல விழைவது என்ன? பணம், பதவி, அந்தஸ்து இருப்பவர் எல்லாம் நிம்மதியாக வாழ்வதும் இல்லை, கஷ்டப்பட்டவன் நிம்மதியின்றி இருப்பதுவும் இல்லை. எல்லாவற்றிற்கும் மனமும், முயற்சியுமே காரணம். நல்லவனாக மற்றவர்க்குத் துன்பம் விளைவிக்கா வண்ணம் வாழ்வது ஒன்றே இந்த உலகில் நிச்சயமாகிறது என்கிறார்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:38 am

குழந்தை அழுகிறது. தாய் தாலாட்டுகிறாள். அப்படியே சத்தமின்றிக் குழந்தை சயனித்து விடுகிறது. அது தான் தாலாட்டின் அற்புதம். எமது இலக்கியங்களிலே, தமிழ்க் காவியங்களிலே தாலாட்டுக்குக் கொடுக்கப்பட்ட இடம் மகத்தானது. இத்தகைய தாய்மை இலக்கியத்தைக் கவியசரசரை விட யாரொருவர் அழகாக எழுதிவிட முடியும்?

அவருடைய தாலாட்டுச் சிறப்புக்கள் சிலவற்றைப் பார்ப்போமா?

குழந்தையையும், தெய்வத்தையையும் ஒன்றாகக் காணுபவன் கவிஞன். குழந்தை மனதில் கள்ளமில்லை, தெய்வத்தின் மனதிலும் கள்ளமில்லை. குழந்தையைக் கண்டதும் மனது பூக்கிறது. தெய்வ சந்நிதியில் நுழைந்ததும் அதே பூரிப்பில் மனம் லயிக்கிறது. இதை எமது கவியரசர் அழகாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று


மற்றொரு கவிதையில் பின்வருமாறு குழந்தையைத் தெய்வத்திற்குச் சமமாக்குகிறார்.

கைகள் வீசும் கருணை நெஞ்சில்
மறைவதே இல்லை - துன்பம்
புரிவதே இல்லை - கண்ணில்
தெய்வம் வேறு பிள்ளை வேறாய்த்
தெரிவதே இல்லை - பாசம்
அலைவதே இல்லை


கவியரசருக்குத் தாலாட்டுப் பாடுவது கற்கண்டு சாப்பிடுவது போல. இயேசு காவியத்தின் ஆரம்பத்தையே இயேசுநாதருக்குத் தாலாட்டாக்கியவர் அல்லவா?

மழலை மொழியைப் பற்றி இந்த மண்ணின் கவிமகன் என்ன கூறுகிறானாம்?

ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி
கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வ மொழி


ஆமாம், ஒரு குழந்தை பேச ஆரம்பிக்கும்போது கூறும் கா, மா, என்னும் சப்தங்கள் அனைத்து மொழிக் குழந்தைகளிடத்தும் இருந்து வருகின்றன. அப்படியாயின் அந்த மொழியின் பெயரென்ன? அது தான் தெய்வ மொழி என்கிறார்.

இதோ எம் கவித்தலைவன் தெய்வத்தையே குழந்தையாக்கித் தாலாட்டுப் பாடி மகிழ்கிறாரே பாருங்கள்:

ஆயர் பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்
மாயக் கண்ணன் தூங்குகிறான்
தாலேலோ


கண்ணனின் தாசன் தனது இறைவன் கண்ணபிரானுக்கே தாலாட்டுப் பாடும் அந்த அருமையான தமிழ் எமது செவிகளிலே தேனாகிறது.

இசை என்கிறார்கள், பணம், பொருள் என்கிறார்கள். இவைகளெல்லாம் ஒருவனுக்கு நித்தியமா? ஒரு குழந்தைக்கு முன்னால் இவை எம்மாத்திரம்? எங்கே, எப்படி வடிக்கிறார் இந்த உணர்ச்சி ஓட்டத்தை?

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா?


என்ன அழகாக வார்த்தைகளால் பின்னிய ஒரு தமிழ்த் தோரணத்தினால் தாலாட்டை அலங்கரித்திருக்கிறார் எம் கவித் தலைவன்.

ஒரு ஏழைத் தந்தை, தனது மைந்தனை எப்படித் தாலாட்டுகிறான் என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறார் கவிஞர் பின்வரும் பாடலில்,

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன்வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி
கண்ணுறங்கு - கண்ணுறங்கு
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு.


தனது இல்லாமையை, தனது செல்ல மகனுக்குத் தாலாட்டாக எடுத்துரைக்கின்றான் அந்தக் காலத்தால் வஞ்சிக்கப்பட்ட ஏழை. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் உனக்கு இனாமாகக் கிடைக்கும், அதையாவது அனுபவி என்கிறான். என்ன என்கிறீர்களா?

கண்ணை மூடித் தூங்கினால் பொன்னுலகம் கண்ணில் தெரியும் அதையாவது அனுபவி என்கிறான்.

நண்பர்களே கவிஞரின் பல தாலாட்டுப் பாடல்களிலிருந்து சில பகுதிகளைப் பார்த்திருந்தோம். கவிஞரின் பாடல்களிலேயே, தாலாட்டுப் பாடல்களின் பாணியே தனியானது. இது அவரது புகழ் எனும் மகுடத்தில் பதிக்கும் மற்றொரு வைரமாகும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:39 am

காதலுக்கு இருக்கும் சக்தியை எப்படிக் கவிஞர் கண்ணதாசன் தனது வார்த்தைகளிலே வடிக்கிறார் என்று பார்ப்போம். காதலின் வேகத்தைப் புலப்படுத்தும் ஒரு பாடலை இப்போது எடுத்துப் பார்க்கப் போகின்றோம். இந்தப் பாடலின் கருத்து மட்டுமல்ல, அதில் உபயோகிக்கப்பட்ட வார்த்தைகளும் எனது மனதில் ஆழப்பதிந்தவை.

தங்கை தன் காதலனைப் பிரிந்த சோகத்தை, அந்தக் காதலர்களின் காதலுக்கு ஒரே சாட்சியான தென்றலிடம் சோகத்துடன் எடுத்துக் கூறுகிறாள். அதைச் செவியுற்ற அவள் அண்ணணும் தனது தங்கையின் சோகத்தைப் போக்கும் வழியறியா ஒரு தவிப்புடன் அதே தென்றலிடம் தனது மனதைத் திறக்கின்றான்.

அந்தக் காதலின் ஆழம் அந்தத் தங்கையின் மனதில் அவளது அண்ணன் நினைவுகளைக் கூட மறக்கடித்து விடுகிறது. இந்தப் பாடல்களின் வரிகள் என் மனதினிலே என்னையே அறியாமல் எத்தனையோ தடவைகள் ஊர்கோலமாய் வருவதுண்டு.

இந்தப் பாடல் "போலீஸ்காரன் மகள்" என்னும் படத்திற்காகக் கவியரசரினால் வடிக்கப்பட்டு எஸ். ஜானகி, பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் தேன் குரலினால் முத்துராமன், விஜயகுமாரி ஆகியோரின் அற்புத நடிப்புடன் திரைவிருந்தாகிய பாடல்.

"பெண் (எஸ்.ஜானகி)"

இந்த மன்றத்தில் ஓடி வரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தைக் காண்பாயோ?


தன்னந்தனியளாக வழக்கமாகத் தன் காதலனைச் சந்திக்கும் மன்றத்திலே, நின்றிருக்கும் அந்தக் கன்னிகை, தென்றலிடம் தன் காதலனைப் பற்றி விசாரித்துவிட்டு

வண்ண மலர்களில் அரும்பாவாள், உன் மனதுக்குக் கரும்பாவாள்
என்று ஒரு மொழி கூறாயோ?


என்று அவனுக்குச் சேதியும் சொல்லி அனுப்புகிறாள்

உதாரணத்தைப் பாருங்கள். கரும்பு பார்க்கக் கடினமாக இருக்கும், ஆனால் சுவைக்கத் தெரிந்தவன் கைகளில் அகப்பட்டாலோ அதன் சுவையை அவன் மட்டுமே அறிவான். அப்படி, கடினமான கற்பைக் காக்கும் குலத்தில் உதித்த பெண், அவளது மனதைக் கவர்ந்த, அவளது தலைவனின் மனதினில் மட்டும் கரும்பாக இனித்திடுவாளாம்.

அத்தோடு அவள் சோகத்தையும் தென்றலோடு பகிர்ந்து கொள்கிறாள்

நடு இரவினில் விழிக்கின்றாள் உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்த பின் துயில்கின்றாள் என்ற வேதனை கூறாயோ?


avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:40 am

அழகாக அந்தப் பெண்ணின் காதல் வேதனையைத் தென்றலுக்குக் கூறும் பாணியில் வடித்துக் காட்டிய கவியரசரின் கவியுள்ளத்தில், தன் தங்கையைக் கண்ணின் மணி போலக் காத்த அந்த அண்ணன் இதைக் கேட்டதும், அவனது மன நிலை என்ன என்பதை வடித்துக் காட்டும் எண்ணம் தலைதூக்குகிறது.

அதையும் பார்ப்போம்!

"ஆண் (பி.பி.எஸ்)"

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா?


அதே தென்றல் அண்ணனிடம் வரும் போது, தன் தங்கையின் சோகத்தை அவளிடமிருந்தே அறிந்து கொண்டவன், தென்றலைப் பார்த்துக் கேட்கின்றான், இவள் சொல்வது சரிதானோ? அதை நீ கூட சாட்சி கொண்டாயோ என்று

தன் கண்ணனைத் தேடுகின்றாள் மனக் காதலைக் கூறுகின்றாள்
இந்த அண்ணனை மறந்து விட்டாள் என்று அதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்
என் கண்ணுக்குக் கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா?


அந்த அண்ணணுக்கு மனம் வருத்தமாக இருக்கிறது. ‘ஏய் தென்றலே, நான் உயிருக்குயிராய் வளர்த்த அந்தத் தங்கை உன்னை நம்பும் அளவிற்கு அண்ணனை நம்பவில்லையே. உன்னிடம் தன் கண்ணனைத் தேடித் தரும்படி இறைஞ்சுகிறாள். தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறாள். ஆனால் இந்த அண்ணனை மறந்து விட்டாளே! அவளுடைய காதலை வாழவைக்க நானிருப்பதை மறந்து இத்தனை சோகம் கொள்கிறாளே. இதைக்கூட அவளது காதலனைக் கண்டால் சொல்லிவிடு. என் தங்கையின் காதலின் ஆழம், அவளது அண்ணன் மீதான பாசத்தைக் கூட வென்றுவிட்டது என்று சொல்லிவிடு. அப்போதாவது தலைவன் அவளைத் தேடி வருகின்றானா என்று பார்ப்போம்.’ என்று தனது சோகத்தையும் அக்கறையையும் பகிர்ந்து கொள்கிறான் அதே தென்றலிடம்.

நண்பர்களே கவியரசரின் கற்பனைத் திறனுக்கு எல்லை கிடையாது. அவரது தமிழ் நடைக்கு அணை கிடையாது. அது இயற்கை அவர்க்களித்த வரப்பிரசாதம். நிச்சயமாக என்னைப்போல நீங்களும் அவரது கற்பனைவளத்தையும், கவித்திறனையும், தமிழாற்றலையும் ரசித்திருப்பீர்கள் என்பது திண்ணம்.

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 21, 2009 1:41 am

"உலக வாழ்க்கையில் நான் செல்வத்தை மட்டுமல்ல, அனுபவங்களையும் திரட்டியவன். உலகம் புள்ளிகளால் ஆனது என்றால், அந்த ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்பதை நானறிவேன்"

என்று மிகவும் ஆணித்தரமாக, அடித்துச் சொன்னவர் கண்ணதாசன். இத்தகைய ஒரு தன்னம்பிக்கை நிறைந்த நிலையை கவிஞர் அடைந்தது எப்படி? வாழ்க்கை அவர் மீது எறிந்த அனைத்து சவால்களையும் ஒரு தத்துவ நிலையிலிருந்து நோக்கியமையால் தான். தான் நினைப்பவை நடக்காமல், தான் நம்பியவர்கள் தன்னை ஏமாற்றிய போது, தான் எனும் தன் நிலையிலிருந்து தனக்கும் அப்பாற்பட்ட சக்தியில் நம்பிக்கை வைத்த போது, அவருக்குத் தன்னம்பிக்கை வீறிட்டுக் கொண்டு வந்தது.

ஆன்மீகம் எனும் நிலையை உற்று நோக்கி அதை மதம் எனும் அடிப்படையில் மற்றவர் மீது திணிக்கும் பாணியைக் கைவிட்டு, சாதாரண மனிதர்களின் வாழ்வில் ஆன்மீகத்தின் பங்கை மதத்தின் அடிப்படையில் விளக்குவதன் மூலம் 'மதம் ஒரு மனிதனின் அணிகலனே தவிர ஆடையில்லை' என்பதனை அழகாக விளக்கியதில் கவியரசரின் பங்கு முக்கியமானது. சமய நூல்களை ஒரு பாடப் புத்தகம் போன்று, பரீட்சையில் சித்தியடைய மட்டும் படிப்பது என்ற ஒரு கலாச்சாரத்தினுள் இளைய தலைமுறை திளைத்த ஒரு காலத்தில், ஆன்மீகத்தை ரசித்துப் படிக்கக்கூடிய ஒரு நிலையை உருவாக்கியது கவியரசரின் "அர்த்தமுள்ள இந்துமதம்".

கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூல்களின் பதிப்பின் பின்னாலே, அது சம்பந்தமான கேள்விகளுக்குப் பதில்களைத் தினமணிக் கதிரிலே வெளியிட்டார். அதன் பின் சிறிது காலத்திற்குப் பின்னால் அது இடையே நிறுத்தப்பட்டது. அந்தக் கேள்வி பதில்களை அழகாகத் தொகுத்து, கவியரசரின் வலது கை போன்று விளங்கிய இராம. கண்ணப்பன் அவர்கள் ஒரு நூல் வடிவில் வெளியிட்டார்.

கவிஞரின் உள்ளத்து நிலையை விளக்க அதில் கேட்கப்பட்ட, என்னைக் கவர்ந்த இரு கேள்விகளையும் அதற்கு அவர் அளித்திருந்த விடைகளையும் குறிப்பிடுகின்றேன்.

கேள்வி: வடமொழி, பிறமொழிச் சொற்களைத் தவிர்த்துத் தூயதமிழில் எழுதினால் என்ன?

பதில்: காலத்தாலே தவிர்க்கவே முடியாத திசைச் சொற்கள் தமிழில் ஏராளமாகப் புகுந்து விட்டன. இன்றைய எஸ்.எஸ்.எல்.சி. மாணவனுக்குக் கூடப் புரியாத மொழியில் எழுதுவதானால் மொழி ஆர்வம் தான் மிஞ்சுகிறதே தவிர அற்புதமான கருத்துக்கள் வீணாகி விடுகின்றன. நான் தனித் தமிழின் விரோதியல்ல. ஆனால் என் கருத்துக்கள் கிராமத்து ஊருணிக்கரை வரை போகவேண்டுமென்பதில் கண்ணாக இருக்கிறேன்.

கேள்வி: கோவிலுக்குச் செல்வதனால் ஒருவனைப் பக்திமான் என்றும் கோவிலுக்குச் செல்லாத ஒருவனை நாத்திகன் என்றும் சிலர் முடிவு செய்து விடுகிறார்களே, இதைப்பற்றித் தங்கள் கருத்தென்ன?

பதில்: முடிவு செய்கிறவன் முட்டாள். இறைவன் உள்ளத்துக்குள்ளேயே இருக்கிறான். தாயைக் கும்பிடு. ஒழுங்காக இரு. நீ கோவிலுக்குப் போக வேண்டியதில்லை.

நண்பர்களே! எளிமையாகக் கவியரசரின் மனநிலையைப் புரிந்து கொள்ள இந்த இரண்டு கேள்விகளுக்கும் அவர் அளித்த பதில்களே போதுமானவை. அவர் ஒரு மொழி வெறியரல்ல, ஒரு மத வெறியருமல்ல. சாதாரண இல்வாழ்க்கையில் ஈடுபட்டு அதன் மூலம் தானடைந்த இடர்ப்பாடுகளின் மூலம் விளைந்த அனுபவம் எனும் அறுவடையை, குடும்பம் எனும் கடலில், வாழ்க்கை எனும் தோணியில் சிக்கி அல்லாடும் மக்களிடையே பகிர்ந்தவர்.

கவியரசரின் பெருமை என்னவென்றால், தீயது என்று அவரால் விவரிக்கப்பட்டவைகளைக் கூட ஒரு நாளில் அதுவே சொர்க்கம் என்று மூழ்கிக் கிடந்தவர் தான் கவியரசர்.

அதனால் தான் அவரிடமிருந்து வந்த மொழியில் ஒரு ஆத்மார்த்தம் இருந்தது, அனுபவத்தின் சாயல் இருந்தது. மதுவையும், மங்கையையும் ரசித்திருந்த காலத்தே தமிழ் அவர் வாயில் புரண்டபோது பிறந்த கவிதையைப் பாருங்கள்:

ஓர் கையில் மதுவும் ஓர் கையில் மங்கையரும்
சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால் தான்
நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும் இல்லையெனில்
ஏன் வாழ்ந்தாய் என்றே இறைவன் கேட்பான்


Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக