ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை!

4 posters

Go down

டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை! Empty டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை!

Post by kitcha Tue Feb 14, 2012 4:33 pm

டல்லாஸ் நகரில் திருக்குறள் போட்டி
கடந்த சனிக்கிழமை இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. ஏராளமான தமிழ்க் குழந்தைகள், பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனர். 104 டிகிரி காய்ச்சலிலும் கூட, விடாப்பிடியாக வந்திருந்து போட்டியில் திருக்குறளை அர்த்தத்தோடு ஒப்பித்த குழந்தைகளை இந்த விழாவில் பார்க்க முடிந்தது.


இந்த விழாவில் கவியரசு கண்ணதாசனின் கொள்ளுப் பேத்தியும், பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகள் வயிற்றுப் பேத்தி நிவேதா, 200 திருக்குறள்களை அர்த்தத்துடன் கூறி சாதனை படைத்தார். இதற்கு முன் 100 குறள்களை இதே மாதிரி சொல்லி சாதனை செய்திருந்தார். இப்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


160 குழந்தைகள்..


சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ப்ளேனோ ஆல்ஃபா மாண்டெசரி பள்ளியில் இந்த விழா தொடங்கியது. மொத்தம் 160 அமெரிக்க தமிழ் குழந்தைகள் பங்கேற்றனர். பெற்றோர்களும் உற்சாகத்துடன் பார்வையாளர்களாக அமர்ந்து திருக்குறள் கேட்டனர். நீதிபதிகளாய் அமர்ந்திருந்தவர்கள், திருக்குறள் மழையில் நனைந்து பேரானந்தம் பெற்றனர். குழந்தைகள் அனைவரும் சேர்ந்து மூன்று மணி நேரம் வெவ்வேறு குறள்கள் மற்றும் விளக்கங்களை 2300 முறை சொல்லி. அந்த பள்ளி வளாகத்தையே திருக்குறள் ஒலியில் நிறைத்தனர்.


சாதாரணமாக ‘திருக்குறள்’ என்ற வார்த்தையை கூட சொல்ல சிரமப்படும் இரண்டு வயது குழந்தையும் முழுமையாக சொன்னது இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பு.


இந்த போட்டி சிறப்பாக அமைந்ததற்கு குழந்தைகளின் பெற்றோர்கள், குறிப்பாக ‘அம்மாக்கள்’ மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மிகுந்த சிரத்தையெடுத்து பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து, உற்சாகமூட்டி உடனிருந்து வெற்றி பெறச் செய்தனர்.


திருவள்ளுவர் திருவிழா


மாலை ஆறு மணிக்கு டல்லாஸ் ஃபாரஸ்ட் லேனில் அமைந்துள்ள யூனிட்டி சர்ச் வளாக அரங்கத்தில், போட்டியாளர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்ட பரிசளிப்பு விழா நடந்தது. நிஜமான முத்தமிழ் விழா என்றால் இதுதான்.


தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான விழாவில் சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் வேலு வரவேற்றுப் பேசினார்.

தொடர்ந்து கவியரசர் கண்ணதாசன் வரிகளில் உருவான ‘அணுவைத் துளைத்து ஏழ்கடலை புகுத்தி’ என்ற திருக்குறள் பெருமை போற்றும் பாடலுக்கு, அன்னபூரணி நடனம் அமைக்க ப்ளேனோ தமிழ்ப்பள்ளி மாணவிகள் பாரம்பரிய உடைகளில் நடனமாடினர்.


அடுத்ததாக போட்டியாளர்களாக இல்லாமல் சுய விருப்பத்துடன் கலந்து கொண்ட ஐந்து வயதுக்குட்பட்ட மழலைகள் சிறப்பிக்கப்பட்டார்கள். இவர்களில் ஒருவரான அபிராமி ஐம்பது குறள்கள் சொல்லி அனைவரையும் மிகவும் ஆச்சரியப்படுத்தினார்.


நாடகம்


கோப்பல் தமிழ் கல்வி மையத்தின் மாணவர்கள் பங்கேற்ற ‘வாழ்வாங்கு வாழ்பவன்’ என்ற நாடகம், ஒரு அமெரிக்க வாழ் தமிழ்க் குடும்பத்தின் கதையை சித்தரித்தது. இதில் பத்து குறள்களுக்கு அர்த்தம் சொல்லும் வகையிலான காட்சிகள் அமைந்திருந்தன.


ஏனைய டல்லாஸ் தமிழ்ப் பள்ளிகளான டி.எப்.டபுள்யூ இந்து கோவில் வித்யா விகாஸ் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் ‘தண்டனை’, பாலதத்தா தமிழ்ப்பள்ளி, கொங்கு தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்ற திருக்குறள் நாடகங்களும் நடத்தப்பட்டன. ப்ளேனோ தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நடத்திய ‘குறள்மாஞ்சி’ என்ற வினோதமான திருக்குறள் போட்டியுடன் கூடிய நாடகம் புதிய சிந்தனையை தூண்டும் விதத்தில் அமைந்திருந்தது.


பள்ளிகள் சார்பில் ராம்கி, ஆனந்தி, கீதா சுரேஷ், பழனிசாமி, டாக்டர் பிரபாகரன் ஆகியோர் நாடகத்தை வடிவமைத்து இயக்கி இருந்தார்கள். அமெரிக்க தமிழ் குழந்தைகளின் பல்வேறு பரிமாணத்தை எடுத்துக்காட்டும் வகையில் மாணவ, மாணவிகள் அற்புதமாக நடித்திருந்தார்கள்.



சாலமன் பாப்பையா வாழ்த்து


இந்த திருக்குறள் போட்டி நிகழ்ச்சிக்கு , திருக்குறளுக்கு உரை தந்த பேராசிரியர் சாலமன் பாப்பையா வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அவர் சார்பாக , நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும், விழாக்குழுவினருக்கும், பார்வையாளர்களுக்கும் வாழ்த்துச் செய்தி தெரிவிக்கப்பட்டது.

தனது செய்தியில், “எந்த நாட்டில் வசித்தாலும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் முக்கியம். அதுவும் மாணவச் செல்வங்களுக்கு.

இந்த உலகில் ஒழுக்கத்துக்கு முதல் இலக்கணம் வகுத்தவர் என்றால் அவர் திருவள்ளுவர்தான். அவர்தான் இந்த விஷயத்துக்கு முதல் ஆசான்.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

என்பது வள்ளுவர் வாக்கு.
ஒழுக்கம், அதை உடையவர்க்குச் சிறப்பைத் தருவதால் உயிரைக் காட்டிலும் மேலானதாக அதைக் காக்க வேண்டும்.


அதுக்கு திருக்குறளை அர்த்தம் புரிந்து கற்க வேண்டும். மனதில் மந்திரமாய் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.


கால தேச எல்லை கடந்து, இந்த அமெரிக்க தேசத்துக்கு வந்துவிட்டாலும், தமிழர்கள் இன்னும் தங்கள் வேர்களை மறந்துவிடாதது மட்டுமல்ல, மேலும் தழைக்கச் செய்யும் வழிகளில் தீவிரமாக ஈடுபடுவது என் மனமெல்லாம் மகிழ்ச்சியைப் பூக்க வைக்கிறது.


டல்லஸ் மாநகர சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் இன்று நடக்கும் திருக்குறள் போட்டி சிறப்பாக நடந்தேற என் மனமார்ந்த வாழ்த்துகள்.


2500 முறை திருக்குறளை மாணவச் செல்வங்கள் சொல்லக் கேட்பது எத்தனை இனிமையான அனுபவம்! அந்த அனுபவத்தை பெற்ற நீங்கள் பேறு பெற்றவர்கள்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.


அவரின் வாழ்த்துச் செய்தி விழாக்குழுவினருக்கும், டல்லாஸ் தமிழ்ச் சமுதாயத்திற்கும் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்தது.


சிறப்பு விருந்தினர்


அமெரிக்கா வாழ் தமிழ் அறிஞர் கரு. மலர்ச் செல்வன் ஹூஸ்டனில் இருந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மஹாத்மா காந்திக்கு அஹிம்சையை போதித்த அவரது குருவான ரஷ்ய அறிஞர் லியோ தோல்ஸ்டாய் (Leo Tolstoy) அஹிம்சையும் அன்பையும் கற்றுக்கொண்டது நம் திருவள்ளுவரின் திருக்குறளிலிருந்துதான், என்ற உண்மையைச் சொன்ன போது அரங்கமே இன்ப அதிர்ச்சியில் உறைந்தது.


பரிசளிப்பு விழா


ஒன்றிரண்டு நாடகத்திற்கு இடையில் வெவ்வேறு பிரிவுக்கும் பரிசளிப்பு விழா நடத்தினர். தேர்வு செய்யப்பட்ட ஐந்து போட்டியாள்ர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுடன் பெற்றோரும் உடன் வந்தனர். முதலில் மூன்றாம், இரண்டாம் பரிசுகளும், சிறு இடைவெளிக்குப் பிறகு முதல் பரிசும் அறிவிக்கப்பட்டது.


பரிசுகளை மஹாலட்சுமி, பழனிசாமி, முத்துக்குமார் மற்றும் சிறப்பு விருந்தினர் கரு. மலர்ச் செல்வன் ஆகியோர் வழங்கினர். திருக்குறளை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதுதான் என்ற நோக்கத்தில் நடைபெறும் விழா என்பதால், பங்கேற்றோர் அனைவருமே வெற்றியாளர்கள்தான் என்ற அடிப்படையில் எல்லோருக்கும் பணமுடிப்பு வழங்கப்பட்ட்து


சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் வேலு மற்றும் விசாலாட்சி வேலு நன்றி கூறினர்.




வெற்றி பெற்றவர்கள் – முதல் நிலை ( 5 முதல் 7 வயது)

கிறிஸ்டோபர் குருஸ் – முதல் பரிசு
நந்தினி இளங்கோவன் – இரண்டாம் பரிசு
அஜய் வெங்கட் – மூன்றாம் பரிசு


இரண்டாம் நிலை( 8 முதல் 11 வயது)

சீதா ராமசாமி -முதல் பரிசு
அனுஸ்ரீ ராம்மூர்த்தி – இரண்டாம் பரிசு
அம்ரிதா மஹேந்திரமணி – மூன்றாம் பரிசு


மூன்றாம் நிலை( 12முதல் 15 வயது)

நிவேதா சுப்ரமணியன் – முதல் பரிசு
வருண் ரவி – இரண்டாம் பரிசு
திவ்யா பிரபாகரன் – மூன்றாம் பரிசு


திருக்குறள் புது பொன்மொழி


நவ்யா என்ற சிறுமி திருக்குறள் ஒப்புவித்ததோடு மட்டுமல்லாமல் திருக்குறளுக்கு புது விளக்கமும் கொடுத்தார்.

அது:

“மனிதனுக்காக கடவுள் படைத்தது பகவத் கீதை
கடவுளுக்காக மனிதன் படைத்தது திருவாசகம்
மனிதனுக்காக மனிதன் படைத்தது திருக்குறள்”



விழா நாயகர்கள்


திருக்குறள் போட்டி மிக நுட்பமாக திட்டமிடப்பட்டு ஐம்பதிற்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்களின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணி நேர உழைப்பில் வெற்றிகரமாக நடந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த முக்கிய விழாக் குழுவினர்:


லாஜிஸ்டிக்ஸ் பிரிவைச் சேர்ந்த தமிழ்மணி, வெங்கடேசன், ரவி நடராஜன் மற்றும் விசாலாட்சி, திட்ட நிர்வாகி – அருண்குமார், நடுவர் குழுவைச் சேர்ந்த டாக்டர் தீபா, மதிப்பெண் குழுவைச் சேரந்த கவிதா, விருதுக் குழுவின் டாக்டர் ராஜ், போட்டோ – வீடியோ எடுத்த முத்தையா, முத்துக்குமார், ராஜாமணி, சேரன் மற்றும் டாக்டர் வைரவன், பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் மஹாலட்சுமி, முத்துக்குமார், ஜெயசங்கர், பழனிசாமி மற்றும் ஸ்ரீகாந்த், நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பால்பாண்டியன், மனோகர், புவி மனோகர், கொங்கு தமிழ்ப் பள்ளி, வடிவு ரமேஷ், என்வழி இணையதள நண்பர்கள் மற்றும் பல நன்கொடையாளர்கள் ஆகியோர். 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் விழாவுக்கு உதவினர்.


விழாவை ஹேமா & ரம்யா தொகுத்து வழங்கினர்.

-என்வழி
டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை! Dallaszடல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை! Dsc0292580x385டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை! Dsc0334580x384


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை! Empty Re: டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை!

Post by ந.கார்த்தி Tue Feb 14, 2012 4:57 pm

சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை! Empty Re: டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை!

Post by sriniyamasri Wed Feb 15, 2012 12:13 am

மகிழ்ச்சி

அருமையிருக்கு
sriniyamasri
sriniyamasri
பண்பாளர்


பதிவுகள் : 124
இணைந்தது : 11/02/2012

Back to top Go down

டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை! Empty Re: டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை!

Post by ராஜா Wed Feb 15, 2012 11:15 am

வாழ்த்துக்கள் நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை! Empty Re: டல்லாஸ் திருக்குறள் போட்டி.. பஞ்சு அருணாசலம் பேத்தி புதிய சாதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum