ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா

Go down

நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா Empty நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா

Post by eraeravi Tue Feb 14, 2012 8:01 am

நூலின் பெயர்:அவ்வுலகம்

நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு I.A.S.iraianbuv@hotmail.com

மதிப்புரை:முனைவர் ச.சந்திரா.neraimathi@rocketmail.com

கோபுர நுழைவாயில்:

இலக்கியநாயகன் பாலைநிலம் கடந்து வாகைசூடியது சங்ககாலம்!புதினநாயகன் மரணவாயிலின் நிலையைக் கடந்துசெல்ல உதித்தது அவ்வுலகம்!சமூகத்தைப் பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலக்கவைக்கும் சீரிய நோக்கத்தில்,விரிந்ததோர் பார்வையுடன் படைப்புக்களை வழங்குவதில் இறையன்புக்கு நிகர் அவர்மட்டுமே!பழமையிலிருந்து வேறுபட்டும்,மாறுபட்டும் இவ்வுலக இணைப்பிற்கும்,மறுவுலக பிரவேசித்தலுக்கும் இடையேயான பயணத்தை எடுத்துரைக்கும் இந்நாவல் ஆசிரியரின் முத்தான மூன்றாவது நாவல்!

உருவமா?பிம்பமா?

மொழிகளற்ற,காலபேதம் உணர இயலாத,பெயர் எனும் அடையாளம் தொலைக்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான ஓர் உலகில் உருவமற்று உலவும் பிம்பங்களின் கதையே அவ்வுலகம்! வெளியுலகில் ,இல்லறத்தில் -என தனக்குள் சுயமுரண்பாடு கொண்ட தலைமைக் கதாப்பாத்திரமும்,துணைக்கதாப்பாத்திரங்களும் நதியும்,கிளைநதிகளுமாய் பிரவாகம் எடுத்து கடலோடு கலப்பதும், கலக்கும்முன் அவர்களது ரிஷிமூலம் கண்டறிவதுமே இந்நாவலின் உள்ளடக்கம்.சதைப்பிண்டம் என்பது முதற்பிறப்பாய் இருக்க, மனிதத்தை உணரும் மறு இருப்பாய் அவ்வுலகவாசிகள் நடமாட,மரணத்திற்குப்பிறகும் மனிதவாழ்வு முற்றுப்பெறுவதில்லை என்பதனை உலகிற்கு சொல்லவந்த நூலே இந்நாவல் எனலாம்.

சொர்க்கமா?நரகமா?

அவ்வுலகம் ஓர் அபூர்வமான உலகம்!அங்கு ஒருமுறை சந்தித்தவரை இன்னொருமுறை சந்தித்தல் இயலாது!அங்கிருப்போர் உண்ணலாம்!உறங்க முடியாது!பார்க்கலாம்;பேசலாம்;வாய்விட்டு அழமுடியாது!பூவுலகில் வாழ்ந்தபொழுது இருளில் பொதிந்திருந்த அவர்களின் பொய்மைகளெல்லாம் இங்கு வெளிச்சமிட்டுக் காட்டப்படும்!வாழ்ந்தவர் மாய்வதும்,மாய்ந்தவர் எழுவதுமாய், இருத்தலில் இல்லாதிருத்தலும், இல்லாமையில் இருத்தலுமாய்,அந்நியப்படுதலும் அன்னியோன்யப்படுதலுமாய்,கட்டமைப்பும் கட்டவிழ்ப்புமாய் ,பிரிதலும் பிரித்தலுமாய் மொத்தத்தில் சுகமும் சோகமுமாய் நாவலின் கதை நயமாய் நகர்கின்றது.

இரத்த ஓட்டம்:

'வாழ்வதற்கே வணங்காதபொழுது சாவதற்கு கடவுளை வணங்கவேண்டுமா?'-என்று வினவும் நாத்திகவாதியான காளிதாஸுடன் துவங்கும் கதை,'கடவுள் மாத்திரம்தான் நான் கேட்டதைத் தரமுடியும்'-என்று பதிலளிக்கும் ஆத்திகவாதியின் வாழ்க்கைக்குறிப்புடன் முடிய,இடையிடையே மகாபாரதக் கிளைக்கதைகளாய் பல்வேறு பாத்திரங்கள் நடமாட, இவ்வனைவரும் எவ்விதமாய் மரணநிலையை எதிர்கொள்கின்றனர் என்பதை ஆசிரியர் சொல்லிச்செல்லும் பாங்கு அற்புதம்!விரும்புகின்ற எல்லாவற்றையும் செய்கின்ற இடமாக மண்ணுலகம் இருக்க,யாருக்கு என்ன விருப்பமோ அவற்றைச் செய்யவிடாது தடுக்கும் ஒரு விசித்திர உலகமாக 'அவ்வுலகம்' இருக்கின்றது.உணர்வுப்பகிர்தல் மறுக்கப்பட,வெறும் எண்ணப்பகிர்தலுடன் வரையறுக்கப்பட்ட பகுதியில் உலவுகின்ற வாழ்வே அவ்வுலக வாழ்வு!

மேடுகளும் பள்ளங்களும்:

அவ்வுலகத்தில் வெளிச்சத்திற்குள் இருளும் ,இருளுக்குள் வெளிச்சமும் புலப்படுகின்றது.அசைவது அசையாதிருக்கின்றது.அசையாதது அசைகின்றது.இவ்வுலகில் யானையாய் இருந்தவர் அவ்வுலகில் பூனையாய் பதுங்குகிறார்.கேட்க முடியாதோர்க்கும் செவி திறக்கின்றது.பார்க்கமுடிந்தவர்க்கோ பார்வை பறிபோகின்றது.விட்டுப்போனது தொடர்கின்றது.தொடர்ந்து வந்ததோ விட்டுப்போகின்றது.புத்தகங்கள் உயிர்பெற்று உலாவுகின்றன.அத்தோடு உயிலிலும் இடம்பெறுகின்றன.வார்த்தைகளை உபதேசிக்க வாய் திறந்தாலோ குருதி வழிகின்றது!கண்ணீரோ விழிகளிலிருந்து வழிய மறுக்கின்றது.

கல்வெட்டு வாசகங்கள்:

தலைமைக் கதாப்பாத்திரமான திரிவிக்ரமன் தனக்குத் தானே வினவிக்கொள்வதும் விடையளித்துக் கொள்வதுமான பகுதி(ப.137-141) தர்க்கநெறி சார்ந்த,அனைவரும் உய்த்துணரவேண்டிய உன்னத பகுதி.

* முடியாதவனின் கடைசி ஆய்தம் பொறாமை(ப.140)
* நல்லபடியாக மரணித்தவனே நல்லபடியாக வாழ்ந்தவன்(ப.124)
*மரணம் என்பது ஒரே நிகழ்வு அல்ல!பல சின்ன நிகழ்வுகளின் ஒட்டுமொத்த தொகுப்பு.
*நாத்தை மிதிச்சால் அது நல்ல பயிராய் வளருமா?(ப.110)
*பகிர்ந்து கொள்கின்ற போதுதான் நொய்யரிசிகூட நெய்யரிசி ஆகும்.(ப.50)

மனதார...

வாழ்கின்ற ஒவ்வொருவருக்கும் எது வேண்டுமானாலும் ஒன்றுபோல் நிகழலாம்;மரணம் என்பது மட்டும் ஒருவரிலிருந்து மற்றவர்க்கு வேறுபடும்;அம்மரணத்தை எதிர்கொள்வதும் ஒருவரிலிருந்து மற்றவர்க்கு மாறுபடும் என்பதனை எடுத்துரைக்க வந்த நூலே டாக்டர் இறையன்பு அவர்களின் 'அவ்வுலகம்'.இந்த மண்ணுலகில் நிறைவேற்றவேண்டும் என்று எண்ணியதை தயக்கமின்றி சாதித்துவிடுங்கள்!இதன்பின் 'அவ்வுலகம்' மட்டுமல்ல! எவ்வுலகம் சென்றாலும் அதற்கான வேகத்தடைகள் எழும்பிக்கொண்டே இருக்கும் என்று வாசகர்க்கு சொல்ல வந்ததே இந்நாவல்.ஏக்கமும் தாக்கமுமாய்,துள்ளலும் துவளலுமாய் தன் எழுத்துக்களை கருத்தாக்கம் செய்யாமல்,தத்துவமும் தார்மீகமுமாய்- இவ்வுலகம் மட்டுமல்லாது மறு உலகத்திற்கும் வழிகாட்டியிருக்கும் நூலாசிரியர் டாக்டர் வெ.இறையன்பு அவர்களின் இலக்கியப்பணி சிறக்க என்போன்ற ஆர்வலர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» அவ்வுலகம் நாவல் ஆசிரியர் முனைவர் .வெ. இறையன்பு இ.ஆ .ப .
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum