ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடுகள் சிதைந்தபோது .நூல் ஆசிரியர் திரு அகில். விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Go down

கூடுகள் சிதைந்தபோது  .நூல் ஆசிரியர் திரு அகில். விமர்சனம் கவிஞர் இரா .இரவி Empty கூடுகள் சிதைந்தபோது .நூல் ஆசிரியர் திரு அகில். விமர்சனம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Feb 14, 2012 8:00 am

கூடுகள் சிதைந்தபோது

நூல் ஆசிரியர் திரு அகில்

வெளியீடு வம்சி திருவண்ணாமலை விலை ரூபாய் 120

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூலின் அட்டைப்படமும் அச்சும் மிக நேர்த்தியாக உள்ளது .வம்சி பதிப்பகத்திற்கு முதலில் பாராட்டுக்கள் .நூல் ஆசிரியர்
திரு அகில் www.tamilauthors.com என்ற இணையத்தின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட எழுத்தாளர்கள்,கவிஞர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி உலகம் முழுவதும் இணைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர்

இந்நூலை முதுபெரும் ஈழத்து எழுத்தாளர் ,பேராசிரியர் , கட்டுரையாளர் ,விமர்சகர் பன்முக ஆற்றலாளர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் .அவர் இறக்கும் தருவாயில் இறுதியாகத் தந்த முன்னுரை இடம்பெற்ற நூல் என்பதால் கூடுதல் சிறப்புப் பெறுகின்றது . அவருடைய முன்னுரையில் உள்ள வைர வரிகள்

அகிலின் கூடுகள் சிதைந்தபோது எனும் சிறுகதையில் இந்த மொன்ராஜ் (montage) உத்தியின் இலக்கிய வடிவைக் காண்கிறேன்.

கலாநிதி க .குணராசா அவர்களின் அணிந்துரை அற்புதம் .கலாநிதிநா .சுப்பிரமணியன் அணிந்துரை அழகுரை .

சாதாரண நகைச்சுவை துணுக்கை விரிவாக்கி சிறுகதை என்றும் ,ஆபாசத்தை விலாவாரியாக விளக்கி சிறுகதை என்றும் எழுதி வெளி வரும் சில சிறுகதைகளை படித்த விபத்தின் காரணமாக ,எனக்கு சிறுகதை மீதே ஈடுபாடு இல்லாமல் இருந்தது .இந்த நூலை படித்து முடித்தவுடன் இது போன்ற சிறுகதைகளை நாமும் எழுத வேண்டும் .என்ற உந்துதலைத் தந்து வெற்றிப் பெற்றது நூல் ஆசிரியரின் சிறுகதை உத்தி பாராட்டுக்குரியது .சிறுகதை எப்படி ? எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் குறும் விதமாக கதைகள் உள்ளது .

14 கதைகளும் புலம் பெயர்ந்த வலியை, வேதனையை ,உணர்வை வாழ்வியல் நெறியை ,மனிதாபிமானத்தை ,விலங்காபிமானத்தை உணர்த்துகின்றது .இந்நூலில் உள்ள பல கதைகள் உலக அளவிலான போட்டியில் பரிசுப் பெற்ற சிறுகதைகள் .முத்திரைப் பதிக்கும் முத்திரைக் கதைகள்.

ஈழத்தமிழர்கள் வலி மிகுந்த புலம் பெயர்ந்த வாழ்விலும் ,தமிழுக்காக தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது .உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக நம் தமிழுக்குத்தான் அதிக இணையம் உள்ளது . தமிழ் இணையங்களில் பெரும்பாலான இணையம் ஈழத்தமிழர்களால்தான் நிர்வகிக்கப் படுகின்றது . நூல் ஆசிரியர் திரு அகில் இனிய ஆசிரியராக இருந்துகொண்டே படைப்பாளியாகவும் வெற்றிப் பெற்று இருப்பது வியப்பைத் தருகின்றது .

வருமானத்தில் ஒரு பகுதியும் ,பொன்னான நேரத்தையும் தமிழ் இலக்கியத்திற்காக செலவு செய்து தமிழை ஈழத்தமிழர்கள் வளர்த்து வருகின்றனர் . புலம் பெயர்ந்தோரின் வலியை ,வேதனையை ,உள்ளத்து உணர்வை ,தாய் மகன் பாசப் போராட்டத்தை கதைகளில் படம் பிடித்துக்காட்டி வெற்றி பெறுகின்றார் . நூல் ஆசிரியர் திரு அகில் .திரு அகில்அவர்களின் வாழ்க்கைத் துணையாக மட்டுமன்றி இலக்கியத் துணையாகவும் விளங்கி, உதவி வரும் அவரது மனைவிக்கும் பாராட்டுக்கள் .அவரது ஒத்துழைப்பு இல்லை என்றால் இந்த நூல் வந்து இருக்க வாய்ப்பு இல்லை .இந்நூலில் உள்ள கதைகளும் முழுவதும் கற்பனையே என்று சொல்லி விட முடியாது . திரு அகில் அவர்களின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள் அவரது உறவினர்கள் நண்பர்கள் வாழ்வில் நடந்து நிகழ்வுகளை அவதானித்து கதை வடித்துள்ளார்

வலி என்ற முதல் கதைய்லேயே முத்திரைப் பதிக்கின்றார். நூல் ஆசிரியர் திரு அகில்.புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இன்னலை படம் பிடித்துக் காட்டுகின்றார் .பன்றிகளோடு பன்றியாகப் பயணித்த தமிழரின் அனுபவத்தை சுட்டி ,
இப்படி நடக்கும் என்று நினைத்து இருந்தால் செத்தாலும் பரவாயில்லை என்று சிலோனில் இருந்து இருக்கலாம் .என்று ஒரு கணம் அவன் நினைத்துப் பார்க்கக் கூடத் தவறவில்லை .என்று எழுதுகின்றார் .

கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனால் அங்கு ஒரு கொடுமை ஆடிக்கொண்டு வந்ததாம். என்ற பொன் மொழியை நினைவு படுத்துவதுப் போல .இலங்கையில் இனவெறி ,வன்முறை தலை விரித்து ஆடுகின்றதே என்று உயிருக்குப் பயந்து புலம் பெயர்ந்தால், அங்கும் துன்பம் வருவதுக் கண்டு ,புலம்பும் தமிழரின் உள்ளத்து உணர்வை மிக நுட்பமாக கதையில் பதிவு செய்துள்ளார் . அசைவ விரும்பியான மயூரன் சைவமாக மாறியதன் மூலம் இந்தக் கதைப் படிக்கும் வாசகர்கள் அசைவ விரும்பியாக இருந்தால் சைவத்திற்கு மாறி விடுவார்கள் .இன்று மருத்துவர்களும் உடல் நலத்திற்கு சைவ உணவையே பரிந்துரை செய்கின்றனர் .கதை நெகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு கதையும் படிக்கும் வாசகனுக்கு ஒரு செய்தி சொல்கின்றது .அதுதான் இந்த நூலின் தனிச் சிறப்பு .
வாடியப் பயிரைக் கண்டப் போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலாரைப் போல விலங்குகளின் மீது பாசத்தைப் பொழிந்து விலங்கு அபிமானத்தை வரவைத்து வெற்றிப் பெறுகின்றார் .நூல் ஆசிரியர் திரு அகில் .தாய் மகன் பாசப் போராட்டத்தை ,முதியோர் இல்லத்தில் வாடும் முதியோரின் வருத்தத்தை காட்சிப் படுத்தி உள்ளார் .

இப்படி அனைத்து கதைகள் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம் .முழுவதும் எழுதி விட்டால் நூல் படிக்க சுவை குன்றும் .என்பதால் இத்துடன் விடுகின்றேன் ,மற்றவை வெள்ளித் திரையில் காண்க ! என்பதைப் போல மீதியை நூலைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். ஈழத்தமிழர் உலகில் இல்லாத நாடு இல்லை ஈழத்தில் நடந்த இனவெறியின் காரணமாக உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து தமிழ் வளர்த்து வருகின்றனர் .கூடுகள் சிதைந்தபோது என்ற நூல் படித்து முடித்தவுடன் என் நினைவிற்கு ஈழத்தமிழர்கள் தேன்கூடு போல வாழ்ந்து வந்தனர் .ஆனால் அந்தக் கூடு சிதைந்து விட்டது .தேன்கூட்டில் கல் எரிந்து சிதைப்பதுப் போல சிதைத்து விட்டனர் .ஈழத் தமிழர்களுக்காக, ஈழத்தில் தனி நாடு அமைவதே ஒன்றே தீர்வாகும் .அப்போதுதான் புலம் பெயர்ந்த தமிழர்கள் பிறந்த, மண்ணான ஈழம் வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் .படைப்பாளிகள் அனைவரும் இதற்காக உரக்க குரல் கொடுங்கள். என்ற சிந்தனையை என்னுள் விதைத்தது இந்த நூல் .இந்நூல படிக்கும் ஒவ்வொரு வாசகர் மனதிலும் தனி ஈழம் வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கின்றது .நூல் ஆசிரியருக்குப் பாராட்டுக்கள் .இந்த நூலிற்காக பல பரிசுகளும் விருதுகளும் உறுதியாகக் கிடைக்கும் .


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» படித்ததில் பிடித்தது ! கூடுகள் சிதைந்த போது நூல் ஆசிரியர் அகில். நூல் விமர்சனம் பேராசிரியர் ,முனைவர் ச .சந்திரா
» வரலாற்றில் இன்று ! நூல் ஆசிரியர் பொறியாளர் திரு K.முத்துராஜு . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சுயம் அறி ! சுடர் விடு ! நூல் ஆசிரியர் திரு ம .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இர .இரவி .
» முயன்றால் முடியும் ! நூல் ஆசிரியர் திரு .லேனா தமிழ்வாணன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum