புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம்
Page 1 of 1 •
மகளிர் சுய உதவிக்குழு தலைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், சுய உதவிக்குழுவை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது தெரியவந்துள்ளது.
கழுத்தை அறுத்து கொலை
சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கம், ஆகாஷ் நகரை சேர்ந்தவர் ரவி (வயது 43). இவர் ஓட்டல் மானேஜராக பணிபுரிகிறார். இவருடைய மனைவி அம்பிகா (38). மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக இருந்தார். மேலும் பல்வேறு குழுக்களுக்கு வங்கியில் கடன் பெற்று கொடுத்தார்.
கடந்த ஜனவரி மாதம் 24-ந்தேதி நள்ளிரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த அம்பிகாவை போலீஸ் உடையில் வந்த இரண்டு பேர், ``மகளிர் சுய உதவிக்குழு மூலம் வங்கியில் வாங்கிய கடனில் ஊழல் நடந்துள்ளது என்றும், அது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும், உயர் அதிகாரிகள் அங்கு நின்று கொண்டிருக்கிறார்கள். எங்களோடு வாருங்கள்'' என்றும் கூறினார்கள். அவருடைய கணவர் ரவி வீட்டிற்குள் சென்று சட்டையை மாட்டிக்கொண்டு வருவதற்குள் வெளியே நின்று கொண்டிருந்த அம்பிகாவை காணவில்லை. ரவி தனது மகனுடன் தேடிப்பார்த்தபோது, வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அம்பிகா கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.
வங்கியில் தீ விபத்து
இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள், அம்பிகா பயன்படுத்திய செல்போனில் உள்ள நம்பர்கள், தோழிகள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
பணம் கொடுக்கல், வாங்கலில்தான் கொலை நடந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதினார்கள். இதற்கிடையே போரூர்-குன்றத்தூர் சாலையில் உள்ள கூட்டுறவு வங்கியில் அம்பிகா சுய உதவிக்குழுக்களுக்கு பணம் வாங்கி கொடுத்து வந்ததும். இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களே பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கடந்த வருடம் செப்டம்பர் 10-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வங்கியில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
வாக்குமூலம்
இதனால் அம்பிகா மூலம் அதிக கடன் தொகை பெற்றவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை போலீசார் தயார் செய்து விசாரித்ததில் ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர், 4-வது தெருவை சேர்ந்த சுமித்ரா, குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரியை சேர்ந்த சுசீலா மற்றும் மாலா என்பது தெரியவந்தது.
இதனால் அந்த 3 பேரிடமும் அம்பிகா கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் முன்னுக்குப்பின் முரணாக அவர்கள் பதில் அளித்தனர். மேலும் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டதில் வங்கியில் கடனாக வாங்கிய ரூ.52 லட்சம் பணத்தை கட்டாமல் இருக்க அம்பிகா எங்களிடம் ரூ.12 லட்சம் கமிஷன் பணம் கேட்டதால் கொன்று விட்டோம், என்று வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பணம் கேட்டார்
கொலைக்கான காரணம் குறித்து 3 பெண் கொலையாளிகளும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நாங்கள் மூன்று பேரும் அம்பிகாவுக்கு நெருங்கிய தோழிகளாக இருந்தோம். பல்வேறு மகளிர் சுய உதவி குழுக்களை அமைத்து வங்கிகளில் கடன் வாங்கி கொடுப்பது, நகைகளை அடகு வைத்து பணம் பெற்று தருவது போன்றவற்றை செய்து வந்தோம். அம்பிகா மூலம் நாங்கள் கூட்டுறவு வங்கியில் கடந்த வருடம் ரூ.52 லட்சம் கடன் வாங்கினோம். அதனை உரிய முறையில் கட்டிக்கொண்டு வருவதற்குள் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்து விட்டன. அதனால் பணத்தை திருப்பி கட்டாமல் இருந்து விடலாம் என்று நினைத்தோம். ஆனால் வங்கி அதிகாரிகள் பணத்தை கட்டுங்கள் என்று அம்பிகாவை கேட்டனர்.
அம்பிகாவும் எங்களிடம் வந்து, ``நீங்கள் வாங்கிய பணத்துக்கெல்லாம் ஆதாரம் நான் தான்; என்னிடம் வங்கி அதிகாரிகள் கேட்கிறார்கள். நீங்கள் மூன்று பேரும் ரூ.12 லட்சம் எனக்கு கொடுங்கள். மீதமுள்ள தொகையை நீங்கள் கட்டவேண்டிய தேவையில்லை அதனை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறினார். ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் அந்த தொகையை எனக்கு கொடுத்து விட வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் போட்டார். இல்லாவிட்டால் போலீசில் மாட்டி விடுவேன் என்று அம்பிகா மிரட்டினார்.
தீர்த்துக்கட்ட திட்டம்
கடன் வாங்கி தந்ததற்கு ஏற்கனவே ரூ.4 லட்சம் வரை அம்பிகா கமிஷன் பெற்று இருந்தார். மீண்டும் ரூ.12 லட்சம் கேட்டதோடு, அதற்கு காலக்கெடுவும் விதித்தது எங்களுக்கு கோபம், ஆத்திரம் ஏற்பட்டது. `நம்மிடமே பணத்தை கறக்க பார்க்கிறாளே? இவளை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று திட்டம் தீட்டினோம். அதற்கு சுமித்ராவின் கள்ளக்காதலனான அம்பத்தூரை சேர்ந்த அன்னமுத்துவிடம் ஆலோசனை கேட்டோம். அம்பிகாவை தீர்த்துக்கட்ட நாங்கள் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சம் கூலியாக கொடுப்பதாக தெரிவித்தோம். அதற்கு முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்தோம்.
அன்னமுத்து, அவருடைய நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவரும் ஊர்க்காவல் படையில் வேலை செய்து வந்தனர். அவர்களுடன் திலீபன், இன்னொரு ராஜ்குமார் ஆகியோரும் சேர்ந்து அம்பிகாவை கொல்ல திட்டம் தீட்டினார்கள். அதற்கு முன்னதாக அம்பிகாவின் வீட்டை சுமித்ரா காண்பித்தார். 3 நாட்கள் அம்பிகாவின் வீட்டை கண்காணித்து, கொலையை எவ்வாறு செய்வது என்று ஒத்திகை பார்த்தார்கள். கொலையை எப்படி செய்வது என்று திட்டம் தீட்டிய போதுதான் அம்பிகாவின் கணவர் தினமும் இரவு வீட்டிற்கு தாமதமாக வருவதை அறிந்து கொண்டு நள்ளிரவில் ஊர்க்காவல் படை உடையில் அன்னமுத்துவும், ராஜ்குமாரும் வந்தனர்.
சிறையில் அடைப்பு
ஆனால் அந்த நேரத்தில் அம்பிகாவின் கணவர் வீட்டில் இருந்ததால் அதிர்ச்சியடைந்து, ``நாங்கள் போலீஸ்; உனது மனைவியிடம் விசாரணை செய்ய வேண்டும்'' என்றனர். ரவி வீட்டிற்குள் சென்று சட்டையை போட்டுக்கொண்டு வெளியே வருவதற்குள் அம்பிகாவை தனியே அழைத்துச் சென்றனர். அங்கு தயாராக இருந்த திலீபன், ராஜ்குமார் ஆகியோர் வாயை பொத்தி கழுத்தை அறுத்துக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
7 பேர் கைது
இதையடுத்து தனிப்படை போலீசார் கொலையாளிகள் சுமித்ரா, சுசீலா, மாலா மற்றும் அன்னமுத்து, ராஜ்குமார், இன்னொரு ராஜ்குமார், திலீபன் ஆகிய 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு பெண்ணை கொலை செய்ய 3 பெண்கள் கூலிப்படையை அமர்த்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சினிமா பாணியில் அம்பிகாவை தீர்த்துக்கட்டிய கொலையாளிகள்
அம்பிகாவை கொலை செய்தது எப்படி என்று கொலையாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். `அம்பிகாவை அவரது வீட்டில் வைத்தே தீர்த்துக் கட்ட வேண்டும் என்று தான் சென்றோம். ஆனால் அவருடைய கணவர் இருந்ததால் திடீரென்று திட்டத்தை மாற்றினோம். எங்களை போலீஸ் என்று கூறி, அம்பிகாவை விசாரிக்க வேண்டும் என்று அழைத்து வந்தோம். வீடு அருகே தெரு விளக்குகள் அதிகமாக இருந்தது. கொலை செய்யும் போது அம்பிகா சத்தம் போட்டால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணி தெரு விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டோம்.
பருத்தி வீரன் சினிமா படத்தில் பெண் சாராய வியாபாரியை சாக்கு துணியால் முகத்தை மூடி, பன்றியை அறுப்பது போல, கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சி வரும். அதே போன்று மறைந்திருந்த திலீபன், ராஜ்குமார் ஆகியோர் அம்பிகாவின் முகத்தை மூடி, கை, கால்களை மடக்கி பிடித்து கொண்டு, பின்னர் பன்றியை அறுப்பது போல் அறுத்து கொலை செய்து விட்டனர்'' என்று கொலையாளிகள் கூறினார்கள்.
-
ஒரு கொலைக்கு மட்டும் பணம் வாங்கியதால் கணவனின் உயிர் தப்பியது
கொலையாளிகள் முழுக்க, முழுக்க அம்பிகாவை மட்டும் தீர்த்துக் கட்ட வேண்டும் என்று எண்ணி அங்கு சென்றனர். ஆனால் அந்த நேரத்தில் அவருடைய கணவர் வீட்டில் இருந்ததால் அவரையும் சேர்த்து கொன்று விடலாம் என்று நினைத்தனர்.
ஆனால் தாங்கள் ஒரு கொலை செய்ய மட்டுமே பணம் வாங்கியதாலும், இந்த சந்தர்ப்பத்தை விட்டால் அம்பிகாவை கொலை செய்ய முடியாது என்று எண்ணியும், வீட்டில் வைத்து அவரை கொலை செய்யும் திட்டத்தை திடீரென்று மாற்றி, தங்களை போலீஸ் என்று கூறி, விசாரணை செய்யவேண்டும் என்று அழைத்துச்சென்று அம்பிகாவை மட்டும் கொன்று விட்டனர். ரவி உடை மாற்றுவதற்காக வீட்டுக்குள் சென்றது கொலையாளிகளுக்கு வசதியாக போய்விட்டது. அது அவரையும் காப்பாற்றியது.
-
பேராசையால் இறந்து போன அம்பிகா
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளில் கடன் பெற்று தரும் அம்பிகா, வங்கியில் கடன் பெற்றுக் கொண்டவர்களிடம் ரூ.1 லட்சத்துக்கு ரூ.8 ஆயிரம் என்ற வீதத்தில் கமிஷன் பெற்று வந்தார். பெரிய அளவில் கடன் தொகையை வாங்கி தந்த அம்பிகாவுக்கு அடித்தது யோகம். வங்கியில் கடனாக வாங்கியவர்களின் ஆவணங்கள் எல்லாம் எரிந்து விட்டதால் கடன் பெற்றவர்களின் விவரம் அம்பிகாவுக்கு மட்டுமே தெரியும். இதனை பயன்படுத்திக்கொண்ட அம்பிகா பணத்தை திருப்பி கட்டாமல் இருக்க ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார். அம்பிகாவின் இந்த பேராசையே அவரது உயிருக்கு உலைவைக்கும் காரணமாக அமைந்து விட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மகளிர் சுயஉதவிக்குழு தலைவி கொலையில் 7 பேர் கைது. பெண்களே கூலிப்படை அமைத்து கொன்றது அம்பலம்
#730864- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ம்ம்ம்ம... கூலிப்படை அமைப்பதில் ஆண்களுக்கு சமமாக இப்பொழுது பெண்களும் வந்தாயிற்று. ஆண்களுக்கு நிகா் பெண்களும் சமமாயிற்று. இனி பெண்ணூிமையாளா்கள் திருப்தி பட்டுக் கொள்ளலாம்.
சமத்துவம் மலா்ந்தது. வாழ்க பாரதம்.
சமத்துவம் மலா்ந்தது. வாழ்க பாரதம்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Similar topics
» அரிசிக்கடை அதிபர் மனைவி கொலையில் 2 பேர் கைது மகனின் நண்பரே தீர்த்துக்கட்டிய கொடூரம்
» 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது
» மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?
» கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம்
» டெல்லி திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான கழிவறையில் கதவுகள் இல்லை மகளிர் ஆணைய தலைவி கண்டனம்
» 1 வருடமாக சித்ரவதை அறையில் பூட்டி வைத்து இளம்பெண் கற்பழிப்பு குழந்தை பெற்றதால் குட்டு அம்பலம்; 3 பேர் கைது
» மதுரையில் ஓடும் பஸ்சில் வாலிபரை கொன்றது கூலிப்படை : ஆபாச காட்சி 'பிளாக்மெயில்' காரணமா?
» கந்து வட்டிக்கு பணம் தரும் மகளிர் குழு : வங்கி கடன் உதவியை தவறாக பயன்படுத்துவது அம்பலம்
» டெல்லி திகார் சிறையில் பெண் கைதிகளுக்கான கழிவறையில் கதவுகள் இல்லை மகளிர் ஆணைய தலைவி கண்டனம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|