புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_m10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_m10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_m10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_m10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10 
21 Posts - 4%
prajai
சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_m10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_m10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_m10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_m10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_m10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_m10சீரியல்களா? சீரழிவுகளா?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரியல்களா? சீரழிவுகளா?


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 09, 2012 5:51 pm


சீரியல்களா? சீரழிவுகளா?










சீரியல்களா? சீரழிவுகளா?  Tv+watch


நம் தமிழ்நாட்டு கலாச்சாரம் இன்று
கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து வருவதை நாம் அறிகிறோம். கட்டிய கனவனை விட்டு
மற்றவனோடு வாழும்/ ஓடும் பெண்களையும், கட்டிய பெண்டாட்டியை மதிக்காமல்
திமிறாக ஓபனாகவே சின்ன வீடு வைத்துக் கொள்ளும் கனவன்மார்களையும் நாம்
நித்தம் செய்தித்தாள்களில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். இறுதியில்
இது எங்கு போய் முடியுமா என்று பயப்படும் அளவிற்கு போய்விட்டது.


அதிலும் திருமணமாகாத இளம்பெண்கள்
கர்ப்பமாவதும், குழந்தை பெற்றுக் கொள்வதும் இன்று சர்வ சாதரணமாகி விட்டது
(திருமணத்திற்கு முன்பு பாலுறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று சொன்ன
குஷ்புவை தான் வெளியில் விட்டுவிட்டார்களே). சமீபத்தில் பரவியிருக்கும்
Living Together கலாச்சாரம் நம்முடைய இந்திய கலாச்சாரத்திற்கு ஒரு
மணிமகுடம். திருமணமாகாத கல்லூரி பெண்கள் கர்ப்பமாவது என்ற காலம் தொடங்கி
இப்போது பள்ளிப் பெண்களும் கர்ப்பமாகிக் கொண்டிருப்பது நம் அனைவரையும்
நிலைகுலையச் செய்திருக்கிறது.

  • 2010
    டிசம்பர் திங்கள் 24ஆம் நாள் மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த
    ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகேஸ்வரி (வயது 13 வயதுகூட நிரம்பாத அந்தக்
    குழந்தைக்கு) ஓர் ஆண்குழந்தை பிறந்திருக்கிறது. பார்க்க
  • 2010 டிசம்பர் திங்கள் 30 ஆம் நாள்
    உளுந்தூர்பேட்டையில் அரசு மருத்துவமனை கழிவறையில் 12ம் வகுப்பு படித்து
    வரும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் காலனியை சேர்ந்த
    உதயகுமார்-வளர்மதி தம்பதியின் மூத்த மகள் பரணிக்கு(17) ஆண் குழந்தை
    பிறந்தது. பார்க்க
நீங்கள்
விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும்,
(வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது –
(அல் குர் ஆன் – 17:32)



மேலே உள்ள சம்பவங்களை எல்லாம்
பார்க்கும் போது இன்னும் நம் சமுதாயம் எந்த அளவிற்கு கலாச்சார சீர்கேடுகளை
சந்திக்குமோ என்று எல்லோர் மனதிலும் கேள்வி எழுகிறது. இதை தடுப்பதற்கான
வழிகளையும், இந்த தவறுகள் நடப்பதற்கான காரணிகளையும் ஆராய்ந்து நம்முடைய
சமுதாய செல்வங்களுக்கு அறிவுரை கூறுவது நம் அனைவரின் மீதும் கட்டாயக்
கடமையாக இருக்கிறது. பள்ளியில் படிக்கும் போதே காதல், கல்லூரியில்
படிக்கும் போது காதல், இண்டெர்நெட்டில் காதல், மொபைல் போனில் காதல்,
டெலிபோனில் காதல், என்று எப்படி காதலிக்க வேண்டும், எப்படி அதற்காக நம்மை
நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நமக்கு அன்று முதல் இன்று வரை
சொல்லிக் கொடுக்கும் ஒரே ஆசான் பெரியத் திரை. தற்போது சின்னத் திரையும்
அந்த லிஸ்டில் சேர்ந்து இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.


பெரியத் திரை என்பது நாம் தேடித்
தேடி பார்க்கும் திரைப்படங்கள் என்பதாலும், மூன்றே மணி நேரத்தில் முடிந்து
விடுவதாலும் (சினிமாவும் நம் கலாச்சாரத்தை சீரழிக்கிறது என்பதை யாராலும்
மறுக்க முடியாது) இந்த கலாச்சார சீரழிவை செவ்வனே நம் வீட்டிற்கு கொண்டு
வரும் சின்னத் திரை என்று சொல்லக்கூடிய சீரியல்களை பற்றி பார்ப்போம்.


தமிழ் மட்டுமல்லாது மலையாளம்,
ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம், அரபி என்று கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும்
சீரியல்கள் எடுக்கப்பட்டு பலரால் பார்க்கப்பட்டு இன்று பல வீடுகளில்
பஞ்சாயத்தாகி கொண்டிருக்கிறது. பல நெடுந்தொடர்கள் (மெகா தொடர்னா
இங்கிலிஷாம் புன்னகை ) குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை வைத்தே
எடுக்கப்படுகின்றன. இந்த தொடர்கள் பெரிதும் வெற்றியடைய காரணமாக இருப்பது
மிகவும் சிம்பிளான விஷயம். நம் வீட்டில் நடைபெறும் பிரச்சனைகள், நல்ல /
கெட்ட காரியங்கள், அதில் வரும் சச்சரவுகள் போன்றவற்றை பற்றி அதிக தொடர்கள்
எடுப்பதால் பெரும்பாலும் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிடித்து விடுகிறது.
இது ஒரு புறம் இருக்க மாணவமணிகளையும் ஏன் விட்டு வைக்க வேண்டும் என்று
எண்ணி அவர்களுக்காகவும் சீரியல் எடுக்க தொடங்கி விட்டனர் இந்த சீரியல்
கில்லர்கள். கணா காணும் காலங்கள் என்று ஒரு சீரியல். அது இளைஞர்கள்
எந்தளவுக்கு படிக்கும் வயதில் தைரியமாக முடுவெடுக்கிறார்கள், எப்படி ஆண்
மாணவர்கள் பெண் மாணவர்களிடத்தில் பழகுகிறார்கள், எப்படி ஆசிரியர்களிடத்தில்
மாணவர்கள் பழகுகிறார்கள் என்று அனுவனுவாக சொல்லியிருக்கிறார்கள்.
வாழ்க்கைக்கு தேவையான காதலை பற்றியும் அந்த சீரியலில், அதாவது அந்த வயதில்
வரும் பருவ காதலை (a stage of infatuation) பற்றியும் சொல்ல தவறவில்லை.
இதன் காரணமாக சில மாணவர்கள் தங்களையே அந்த சீரியலில் வரும் கதாநாயகர்களாக /
கதாநாயகிகளாக, உதவும் நண்பனாக உருவகப்படுத்தி பார்த்ததன் விளைவு பல
மாணவமணிகள் காதல் என்னும் பெயரால் வீட்டை விட்டு வெளியேறி அந்த சின்ன
வயதில் திருமணம் முடித்துக் கொண்டு பெட்ரோல் பங்கிலும், ஆட்டோ ஓட்டியும்
பிழைப்பு நடத்துவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது எங்கோ
நடக்கிறது, நமக்கேன் வம்பு என்று நினைக்கின்ற கண்ணியவான்கள் தங்கள்
வீட்டில் இதைப் போல் நடந்தால் தம் குடும்பத்தார்கள் கதி என்னெவென்று சற்று
நிதானமாக சிந்தித்து பாருங்கள்.


சினிமா கொடுக்காத தாக்கத்தையா
இந்த சீரியல் கொடுத்து விட்டது என்று கேள்வி கேட்போர் கவனத்திற்கு: சினிமா
என்பதிலும் ஆபாசங்களும், அசிங்கங்களும் இருக்கத்தான் செய்கிறது, ஆனால்
தினந்தோறும் நடக்கும் அன்றாட விஷயங்களை சீரியலில் காண்பிப்பதாலும், சினிமா
போல் மூன்று மணி நேரத்தில் முடியாமல் வருடக்கணக்கில் நீட்டிக்
கொண்டிருப்பதாலும் மாணவமணிகளின் படிப்பில் கவனம் சிதறுவதோடு அவர்கள் தவறான
பாதையை தேர்ந்தெடுக்கவும் இதைப் போன்ற சீரியல்கள் காரணமாக அமைகின்றனர்,


இன்று எந்த வீட்டில் தொலைக்காட்சி
பெட்டி இல்லையோ அந்த வீடு தான் பரம ஏழை வீடாக தெரிகிறது. தற்போது தலீவர்
கலைஞரின் அரசியலால் எல்லார் வீட்டிலும் டிவி இருப்பது சீரியல்
எடுப்பவர்களுக்கு ரொம்பவும் வசதியாகி போய்விட்டது. தொலைக்காட்சி மிகவும்
முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு அதில் ஒளிபரப்படும் சீரியல்களை
பார்ப்பதும் முக்கியமாகி போய்விட்டது. காலையில் 10:30 மணிக்கு ஆரம்பிக்கும்
இந்த சீரியல்கள் இடையில் சிறிது இடைவெளி விட்டு மறுபடியும் 5:30 மணிக்கு
ஆரம்பித்து இரவு 11:00 மணி வரை ஒளிபரப்படுகிறது. கிராம பகுதியில் வீட்டு
வேலையை விரும்பி செய்யும் பெண்கள் கூட இப்போதெல்லாம் சீரியல் பிரியர்களாக
மாறியிருப்பது மனதுக்கு வருத்தத்தை தருகிறது. இதனால் பெண்கள் தங்கள் பொழுதை
உபயோகமாக கழிக்க பயன்படும் கூடை பின்னுதல், கைவினைப் பொருட்கள் செய்தல்
போன்ற செயல்கள் இன்று கிராமப்புறங்களிலும் அறிதாகவே காணப்படுகிறது.


அடுத்தவருடைய கணவனை கவருவது
எப்படி, தன்னுடைய கணவருடைய சகோதரர்களின் மனைவிகளை (Co-sisters) எப்படி
தங்கள் மாமியார் வீட்டை விட்டு துரத்துவது, தங்களுடைய மாமியாரிடத்தில்
எப்படி நடந்து கொள்வது, தங்களுடைய கனவனை எப்படி தங்களின்
கட்டுப்பாட்டிற்குள் வைப்பது, ஆண்கள் - எப்படி சின்ன வீடு வைத்து கொண்டு
இரண்டு வீட்டையும் கவனித்து (MAINTAIN) கொள்வது, எப்படி கொலை செய்வது,
எப்படி சட்ட சிக்கல்களை சமாளிப்பது, எப்படி புறம் பேசுவது, எப்படி கோல்
மூட்டுவது, எப்படி பொய் சொல்லி தவறுகளில் இருந்து தப்பிப்பது, எப்படி கள்ள
உறவுகள் வைத்துக் கொள்வது, அதை எப்படி மூடி மறைப்பது, எப்படி பழிவாங்குவது,
அதற்காக எப்படி திட்டம் தீட்டுவது, எப்படி வார்த்தைகளால் சாகடிப்பது/
நோகடிப்பது என்று நம் குடும்பத்தில் நடக்கும் அத்துனை பிரச்சனகளுக்கும்
காரணகர்த்தாவாக தொலைக்காட்சி சீரியல்கள் செயல்பட்டு வருகிறது எனலாம். இதில்
உச்ச கட்டம் என்னெவென்றால் சினிமா மாதிரியே இதற்கு பாட்டும், ஹிரோ,
ஹிரோயின், வில்லன் கதாப்பாத்திரங்கள், ஆபாச காட்சிகள் என எடுக்கப்படுவதால்
சினிமா பார்ப்பதை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கருவியாக இன்று
தொலைக்காட்சி சீரியல்கள் இயங்கிக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க
முடியாது.


இவுங்க மாமியார் மெட்டி ஒலில வற்ற
மாமியார் மாதிரியானவுங்க, எப்போதும் சண்டை போடுவாங்கலாம், அவ செல்வி
மாதிரி ரொம்ப தைரியக்காரி, இவுங்க அப்பா _______ சீரியல்ல வற்ற அப்பா
மாதிரி டம்மி அப்பாவாம் என்று உதாரணம் சொல்லி பேசிக் கொள்ளும் அளவிற்கு
மிகவும் பிரபல்யமாகி விட்டது. இதையே பெரிய வெற்றியாக எண்ணி பாலசந்தர் போன்ற
பெரிய சினிமா இயக்குனர்கள் கூட தற்போது சீரியல்கள் இயக்கி வருகிறார்கள்.
பெரியவர்களும் குழந்தைகளோடு சேர்ந்து பார்ப்பதால் குழந்தைகளை மட்டும்
பார்க்காதே என்று சொல்ல முடியாத நிலையில் பெற்றோர்கள் இருக்கின்றனர்.
தேர்வு நேரத்திலும் இதே நிலை தொடர்வதால் பல வீடுகளில் மாணவமணிகள் தேர்வில்
மண்ணை கவ்வுகின்றனர்.


இதனால் குடும்பத்தில் கூச்சல்,
குழப்பம், சண்டை, காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் எண்ணம், பண பேராசை என்று
எல்லா கெட்ட பழக்கவழக்கங்களும் மனிதர்களிடத்தில் ஒருசேர வந்துவிடுகிறது.


தொலைக்காட்சி பெட்டியை தொடர்ந்து
பார்ப்பதால் ஏற்படும் நோய்களான பார்வை கோளாறு, மறதி, மூளையில் பல விதமான
பிரச்சனை, உடல் பருமன், குடும்ப வாழ்க்கையில் நிம்மதியின்மை, தேவையற்ற மன
உலைச்சல், ஹார்மோன் பிரச்சனைகள் போன்ற பல விதமான உடல் / மனம் சம்பந்தப்பட்ட
பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதிகமாக டிவி பார்க்கும் குழந்தைகள் முரடராக
வாய்ப்பு இருப்பதாக ஆய்வு கூறுகிறது. மேலும் குழந்தைகள் அதிக நேரம் டிவி பார்ப்பதால் பேச்சு திறன் குறைகிறது என்றும் ஆய்வில் தெரிகிறது.
சீரியல்களா? சீரழிவுகளா?  Tv-kids
kids watching tv
2010
ஆம் ஆண்டு மகளிர் தினத்தன்று சென்னையில் ஒரு விழாவில் பேசிய கனிமொழி
அவர்கள் ''பெண்கள் 'டிவி'யில் சீரியல் பார்ப்பதில் கவனம் செலுத்துவதில் ஒரு
பிரயோசனமும் ஏற்படாது,'' என்று கூறினார்.


மேலும்
கணவனோ அல்லது தன்னுடைய மகனோ கஷ்டப்பட்டு உழைத்து வந்து சாப்பாடு வைக்க
சொல்லி மனைவியிடமோ அல்லது தாயிடமோ சொன்னால், சீரியில் முடிந்தவுடன் தான்
சாப்பாடு என்று சொல்ல கேட்டிருக்கிறேன். பல நேரங்களில் வெளிநாட்டிலிருந்து
போன் செய்து குடும்ப விஷயங்களை விசாரிப்பதை காட்டிலும் சீரியல் விஷயங்களை
விசாரிக்கும் ஆண்களை பார்க்கும் போது நாம் எதை நோக்கி சென்று
கொண்டிருக்கிறோம் என்று நன்றாக தெரிகிறது. ஆக சீரியல் மோகம் நம்முடைய
சமுதாயத்தை சீரழித்து கொண்டிருக்கிறது என்று மட்டும் சொல்லிக்
கொண்டிருப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் இதனால் ஏற்படும் விளைவுகளை மக்களிடம்
எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
அதை இன்றே நம் வீட்டிலிருந்தே தொடங்குவோம்.


"இனி
மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச்
சிறந்த சமூகத்தவராய் (கைரே உம்மத்) நீங்கள் இருக்கின்றீர்கள். நீங்கள்
நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள்.
மேலும் அல்லாஹ்வின் நம்பிக்கை கொள்கின்றீர்கள்" (அல் குர்ஆன் 3:110)



"எந்த
ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ்
அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத்
தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர
துணை செய்வோர் எவரும் இல்லை. (அல் குர்ஆன் 13:11)



தோழமையுடன்
அபு நிஹான்

http://hajaashraf.blogspot.com/2012/02/blog-post_07.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 09, 2012 6:05 pm

உண்மைதான் முகைதீன்.இன்னிக்கு சிரியல்ஸ் எல்லாமே கலாசார சீரழிவை தான் காமிக்கின்றன. பார்க்கவே பயமா இருக்கு.இதுக்குன்னெதான் நான் அலுவலகம் முடிந்து போனதும் சன் ம்யூசிக்,ஜெயா ம்யூசிக்,இசை அருவி என்று மாத்தி மாத்தி பாடல்கள் ஓடிக்கொண்டு இருக்கும்.



சீரியல்களா? சீரழிவுகளா?  Uசீரியல்களா? சீரழிவுகளா?  Dசீரியல்களா? சீரழிவுகளா?  Aசீரியல்களா? சீரழிவுகளா?  Yசீரியல்களா? சீரழிவுகளா?  Aசீரியல்களா? சீரழிவுகளா?  Sசீரியல்களா? சீரழிவுகளா?  Uசீரியல்களா? சீரழிவுகளா?  Dசீரியல்களா? சீரழிவுகளா?  Hசீரியல்களா? சீரழிவுகளா?  A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 09, 2012 6:11 pm

என்ன சுதா சீரியல பார்க்கரத விட்டுட்டீங்களா நம்ப முடியவில்லை.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Feb 09, 2012 6:14 pm

முஹைதீன் wrote:என்ன சுதா சீரியல பார்க்கரத விட்டுட்டீங்களா நம்ப முடியவில்லை.
நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் இதுதான் உண்மை.நான் வீட்டுக்கு போகவே ஆறரை மணி ஆகிடும்.போனதும் வீடு சுத்தமாக்கி, சுஜிக்கு பாடம் சொல்லி கொடுத்து,இரவு சமையல் செய்து,அடுத்த நாள் காய்கறி நறுக்கின்னு எத்தனையோ வேலை இருக்கு.இதுக்கு நடுவுல எங்க இருந்து சீரியல் பார்க்குறது.



சீரியல்களா? சீரழிவுகளா?  Uசீரியல்களா? சீரழிவுகளா?  Dசீரியல்களா? சீரழிவுகளா?  Aசீரியல்களா? சீரழிவுகளா?  Yசீரியல்களா? சீரழிவுகளா?  Aசீரியல்களா? சீரழிவுகளா?  Sசீரியல்களா? சீரழிவுகளா?  Uசீரியல்களா? சீரழிவுகளா?  Dசீரியல்களா? சீரழிவுகளா?  Hசீரியல்களா? சீரழிவுகளா?  A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 09, 2012 6:18 pm

உதயசுதா wrote:
முஹைதீன் wrote:என்ன சுதா சீரியல பார்க்கரத விட்டுட்டீங்களா நம்ப முடியவில்லை.
நீங்க நம்பினாலும் நம்பாட்டியும் இதுதான் உண்மை.நான் வீட்டுக்கு போகவே ஆறரை மணி ஆகிடும்.போனதும் வீடு சுத்தமாக்கி, சுஜிக்கு பாடம் சொல்லி கொடுத்து,இரவு சமையல் செய்து,அடுத்த நாள் காய்கறி நறுக்கின்னு எத்தனையோ வேலை இருக்கு.இதுக்கு நடுவுல எங்க இருந்து சீரியல் பார்க்குறது.
சீரியல் பார்த்துக்கிட்டே வேலை பார்க்கணும் இது கூட தெரியல சுதாவுக்கு அய்யோ அய்யோ ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Feb 09, 2012 6:25 pm

சுதாக்கு ஐடியா சொல்ல ஒரு ஆள் வந்தாச்சு

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Feb 09, 2012 6:44 pm

நன்றி அன்பு முகைதீன் அவர்களே.

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Thu Feb 09, 2012 11:12 pm

அருமையான கட்டுரையைத்தான் இங்கு போட்டுள்ளீர்கள். நன்றி...

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Feb 10, 2012 7:12 am

சினிமாவும் சீாியல்களும் மக்களை சீரழிக்கும் இரு வழிகள்.



சீரியல்களா? சீரழிவுகளா?  154550சீரியல்களா? சீரழிவுகளா?  154550சீரியல்களா? சீரழிவுகளா?  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சீரியல்களா? சீரழிவுகளா?  154550சீரியல்களா? சீரழிவுகளா?  154550சீரியல்களா? சீரழிவுகளா?  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Fri Feb 10, 2012 12:09 pm

நாம் தான் நல்ல நிகழ்சிகளை மட்டும் பார்க்க பழகி கொள்ள வேண்டும் . டிச்கோவேரி , ஹிஸ்டரி போன்ற சேனல்கள் மிகவும் நல்ல மாறுபட்ட நிகழ்சிகளை தமிழிலேயே தருகின்றன . ஆனால் நாம் மெகா சீரியல் பார்த்து மூளையை கெடுக்கிறோம்



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

சீரியல்களா? சீரழிவுகளா?  Mgr
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக