ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வரம் தரும் வள்ளிமலை!

2 posters

Go down

திருமண வரம் தரும் வள்ளிமலை! Empty திருமண வரம் தரும் வள்ளிமலை!

Post by பிரசன்னா Thu Feb 09, 2012 11:38 am

விரைவில் திருமணம் கைகூட மிகவும் சுலபமாக பரிகாரம், வள்ளி மலைக்குச் சென்று வழிபாடு செய்வது தான். வள்ளிக்கும், முருகனுக்கும் திருமணம் நடந்த இடம் வள்ளிமலை.

காட்பாடியிலிருந்து 21 கி.மீ. தொலைவில் வள்ளி மலை உள்ளது. வேலூர், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களிலிருந்தும் வள்ளிமலை செல்ல பஸ் வசதி உள்ளது.

மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை என்னும் திருக்குளத்தைக் கடந்து சென்றதும், அழகான அடிவாரக் கோயில். ஆறு திருமுகங்களுடன் வள்ளி தெய்வானை சமேதராக நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கும் முருகப்பெருமனைக் கண்குளிர தரிசனம் செய்கிறோம். “முருகா முருகா’ என்று சொல்லியபடி 445 படிகள் ஏறி மலை உச்சிக் கோயிலுக்குச் செல்கிறோம். அத்தனை படிகளும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற வேண்டுமானால் அவன் அருளைப் பெற வேண்டும். தடைகள் விலகப் போகின்றன என்னும் நம்பிக்கை நமது மனத்தில் உறுதியாக உள்ளதால் படி ஏறும் களைப்பு தெரியவில்லை. மாறாக உற்சாகம்தான் மேலிடுகின்றது.

அங்கு வரும் பக்தர்கள் ஊரிலிருந்து கிளம்பும்போது தேனும், தினை மாவும் வாங்கிக் கொண்டு வருகின்றனர். வள்ளி மலையில் முருகனுக்கும் வள்ளி-தெய்வானைக்கும் தேன்-தினை மாவு நைவேத்தியம் செய்யப்படுகிறது.

வள்ளி தினைப்புனை காத்த இடம் இது. முருகனுக்கு தேனும், தினை மாவும் வள்ளி கொடுத்த இடம் இது. இங்குள்ள குமரிச் சுனையில் வள்ளியம்மை மஞ்சள் அரைத்துக் குளித்தார். சூரிய ஒளியே படாமல் ஒரு குகைக்குள் இந்த சுனை உள்ளது. ஒரு வெள்ளை நிறத் துணியை இந்தச் சுனை நீரில் முக்கி எடுத்துக் கல்லில் உரசினால் அது மங்சள் நிறமாக மாறிவிடும். இந்த மலையில் பல குகைகளும் நீர்ச்சுனைகளும் உள்ளன.

வள்ளியை மணந்து கொள்ள முருகன் செய்த லீலைகள் அனைவரும் அறிந்தவை. இந்த மலை மீது ஏறி நின்றதும் கந்தன் வேங்கை மரமாக மாறியதும் கிழவன் வேடத்தில் வந்து தாகம் என்றதும் பிறகு மோகம் என்றதும் நினைவுக்கு வராமலா இருக்கும்?

படியேறி மலை உச்சிக்குச் சென்றதும் இடப்பால் கல்லினால் ஆன த்வஜஸ்தம்பம் உள்ளது. ஆலயத்தினுள் நுழைகிறோம். “ஓம்’ என்னும் பிரணவ வடிவத்தில் ஆலயப் பிரகாரம் அமைந்துள்ளது. பாறைகளைக் குடைந்து செய்து குடவரைக் கோயில் இது. இக்கோயில் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பகுதியில் வெளிச்சம் இருக்காது. இரண்டாவது பகுதி சற்று உயரமாகவும் வெளிச்சமாகவும் உள்ளது. மூன்றாவது கட்டு மூலவர் சந்நதி உள்ள பகுதி. தினைப் புனை காத்த வள்ளி பறவைகளை விரட்டும் கோலத்தில் உள்ள காட்சியை நுழைவாயில் அருகே கற்சிற்பத்தில் காணலாம்.

மலை உச்சிக் கோயிலில் முருகன் ஒரு திருமுகமும் இரு திருக்கரங்களும் கொண்டு அபயஹஸ்தத்துடன் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றார். இருபுறமும் வள்ளி தெய்வானை தேவியருடன் அருட்காட்சி அருளும் முருகனைக் கண்டு மகிழ்கிறோம். எடுத்துச் சென்ற தேனையும் தினை மாவையும் அர்ச்சனைப் பொருட்களுடன் சேர்த்து குருக்களிடம் கொடுக்கிறோம். நமது பெயர் நட்சத்திரம், ராசி, கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி சங்கல்பம் செய்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்கிறார் ஆலய குருக்கள். தேனும், தினை மாவும் நைவேத்தியம் செய்து மற்ற பிரசாதங்களுடன் நம்மிடம் கொடுக்கிறார் அர்ச்சகர்.

யாருக்குத் திருமணம் தாமதமாகிறதோ அவர்கள் வீடு திரும்பியதும் காலையில் முருகனை வேண்டித் துதித்து அந்தத் தேனையும் தினை மாவையும் தினமும் சிறிதளவு உட்கொண்டால் வெகு விரைவில் திருமணம் நடைபெறும்.

மூலவர் சந்நிதியை வலம்வரும்போது விசாலாட்க்ஷி - காசி விஸ்வநாதர் நந்திகேஸ்வரர் ஆகிய சந்நிதிகளை வழிபடுகிறோம். பெருமாள் கோயில்களில் உள்ளது போல் இங்கும் சடாரி சாதிக்கின்றனர். திருமாலின் இரு கண்களிலிருந்து தோன்றியவர்கள்தாம் வள்ளியும், தெய்வானையும். முருகன் மணம் புரிந்து கொள்வதற்காக பெருமாளைக் குறித்து வள்ளி இங்கு தவம் புரிந்ததன் காரணம் பற்றி சடாரி சாதிக்கும் வழக்கம் இங்கு பின்பற்றப்படுகிறது.

வள்ளியும், முருகனும் இத்தலத்தில் திருமணம் செய்து கொண்டு திருத்தணிக்குச் சென்று அங்கு தங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன. மூலவரான முருகப் பெருமானுக்கு எதிரில் சதுர வடிவிலான கல் ஜன்னல் ஒன்று உள்ளது. அதன் அருகில் ஒரு பாதாளக் குகை உள்ளதாம். அது திருத்தணி வரை செல்லுமாம். இந்த செவிவழிச் செய்தியை உள்ளூர் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

திருப்புகழ் சுவாமிகள் என்று அழைக்கப்படும் வள்ளமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் சமாதி இக்கோயிலுக்கு 2 கி.மீ. தொலைவில் உள்ளது. அவருடைய பூர்வாஸ்ரமம் பெயர் அர்த்தநாரி. அவர் திருவண்ணாமலை சென்று ரமண மகரிஷியையும், மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளையும் தரிசனம் செய்தார். அவ்விருவரும் வள்ளி மலைக்குச் சென்று திருப்புகழைப் பாடி உலகெங்கும் பரப்பு என்று அருள்வாக்கு அளித்தனர். “சாதாரண சமயல்காரரான எனக்கு ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் கிடையாது. இசைஞானமும் கிடையாது. என்னால் எப்படி இதைச் செய்ய முடியும்?’ என்று நினைத்துக் கொண்டே வள்ளி மலைக்கு சுவாமிகள் வந்தாராம். ஒரு சிறுமி வடிவில் வள்ளி நேரில் வந்து திருப்புகழை இசையோடு கற்பித்து ஞானோபதேசம் செய்தாளாம். இந்த அதிசயம் வள்ளிமலையில் 20-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்றது. அருணகிரிநாதரின் திருப்புகழை உலகறியச் செய்தவர் வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள். அருணகிரிநாதர் இத்தலத்திற்கு மொத்தம் 11 திருப்புகழ் பாடல்களை பாடியுள்ளார்.

மலை உச்சிக் கோயிலில் இருந்து வள்ளிமலை சுவாமிகளின் சமாதிக்குச் செல்லும் பாதை சற்று கரடுமுரடாகத்தான் இருக்கும். வாழ்க்கை ஸ்மூத்தாக அமையவும் திருமணம் விரைவில் நடைபெறவும் அருள்புரியும் தலமல்லவா இது? எனவே பாதை எப்படி உள்ளது என்பதைப் பொருட்படுத்தாமல் திருப்புகழ் சுவாமிகளின் சமாதியிலும் வழிபாடு செய்து விட்டு மனநிறைவுடன் இல்லாம் திரும்புகிறோம்.

உங்கள் இல்லத்திலும் விரைவில் கெட்டி மேளம் கொட்டட்டும். தேனினும் இனிய மணவாழ்க்கை அமையட்டும்.

- ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன்

மங்கையர்மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

திருமண வரம் தரும் வள்ளிமலை! Empty Re: திருமண வரம் தரும் வள்ளிமலை!

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 12:26 pm

வள்ளிமலை எங்கள் ஊரின் அருகாமையில் தான் உள்ளது
மேலும் தகவலுக்கு http://murugan.org/centers/vallimalai.htm


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருமண வரம் தரும் வள்ளிமலை! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திருமண வரம் தரும் வள்ளிமலை! Empty Re: திருமண வரம் தரும் வள்ளிமலை!

Post by ந.கார்த்தி Thu Feb 16, 2012 12:29 pm

எங்கள் ஊரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் தான் வள்ளிமலை உள்ளது..
அங்கு தேரோட்டம் வெகு சிறப்பாக இருக்கும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


திருமண வரம் தரும் வள்ளிமலை! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

திருமண வரம் தரும் வள்ளிமலை! Empty Re: திருமண வரம் தரும் வள்ளிமலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum