புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
4 Posts - 3%
prajai
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
4 Posts - 3%
Jenila
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
2 Posts - 2%
jairam
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%
M. Priya
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%
kargan86
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
8 Posts - 5%
prajai
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
6 Posts - 4%
Jenila
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%
viyasan
வரம்!  Poll_c10வரம்!  Poll_m10வரம்!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரம்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Feb 09, 2012 11:31 am


அடர்ந்த கானகத்தின் நடுவில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் தவம் செய்து வந்தார். அவருக்கு ஒரே ஒரு துணை. அது ஒரு நாய்!
முவிவர் பக்கத்திலேயே அது இருக்கும். அவர் தவம் செய்யும்போது அவர் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். முனிவர் சாப்பிட்டு மிச்சம் வைக்கும் பழ, காய்களையே அதுவும் தின்றது. அசைவத்தின் பக்கம் போகக்கூட இல்லை.

ஒரு நாள், பயங்கரமான சிறுத்தை ஒன்று, அந்த நாயை வேட்டையாடத் துரத்தியது. நடுங்கிப் போன நாய், முவிவரின் கால்களில் விழுந்து கதறியது.
"கவலைப்படாதே. நீ என குழந்தை மாதிரி. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். இந்த விநாடியே நான் என் மந்திர சக்தியால் உன்னையும் ஒரு சிறுத்தையாக, அந்த சிறுத்தையை விட பலம் மிகுந்த சிறுத்தையாக மாற்றி விடுகிறேன்' என்றபடி கண்களை மூடி மந்திரத்தை உச்சரித்தார்.

அடுத்த விநாடி, அந்த நாய், சிறுத்தையாக மாறிற்று. துரத்தி வந்த சிறுத்தை, துண்டைக் காணோம், நாயைக் காணோம் என்று ஓடிற்று.

ஒரு வாரம் ஆயிற்று. ஒரு பெரிய புலி அந்த பக்கம் வந்தது. ஆசிரமத்தில் இருந்த சிறுத்தையைப் பார்த்துப் பசியுடன் துரத்தியது.

வழக்கம் போல் முனிவரைத் தஞ்சமடைந்தது. முனிவர் இப்போது சிறுத்தையைப் புலியாக மாற்றினார். அப்புறம் என்ன? இந்தப் புலியைக் கண்டதும், வந்த புலி ஓடிப் போயிற்று.
உருமாற்றம் அடைந்த புலியோ இப்போது பழம், காய்களை சீண்டுவதில்லை. மெதுவாக முயலில் ஆரம்பித்து மான், பன்றி என்று ரகசியமாக வேட்டையாட ஆரம்பித்தது.
அப்புறம் மதம் கொண்ட யானை ஒன்று புலியைப் பந்தாட வர, நம் புலி, முனிவர் தயவில் யானையாக மாறி சேறு, ஆறு என்று ஜாலியாக அலைந்து ஆசிரமம் பக்கம் கூட எப்போதாவதுதான் வந்தது.

கொஞ்ச நாள் கழித்து பெரிய சிங்கம் ஒன்று யானையைக் கொல்ல விரைந்து வந்தது. இப்போதும் முனிவர் அருளால் யானை சிங்கமாக மாறியது.
அத்துடன் அதற்குப் பிரச்னை ஓய்ந்ததா என்றால் அது தான் இல்லை.
அடுத்த வாரமே மிகுந்த வல்லமை கொண்டதும், எட்டுக் கால்களை உடையதும், எல்லா மிருகங்களை வேட்டையாடக் கூடியதுமான சரபம் என்னும் மிருகம் அந்தப் பக்கம் வந்தது. சிங்கத்தைக் காலி செய்யத் துரத்தியது.

இப்போதுதான் சிங்கத்துக்கு முனிவரின் நினைவு வந்தது. காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று ஓடிப் போய்க் கெஞ்சியது.
வழக்கம் போல் முனிவர், அதை சரபமாக மாற்றினார்.

சரபமாக மாறிய நாய், காட்டையே கலக்க ஆரம்பித்தது. கண்ணில் பட்ட மிருகங்களை எல்லாம் துரத்தித் துரத்திக் கொன்றது. தின்றது. காட்டு உயிரினங்கள் எல்லாம் ஓடி ஓளிந்தன. தவித்தன. பயந்தன. மிரண்டன.

இப்போதும் ஆபத்து வந்தது.

சரபத்துக்கு அல்ல, முனிவருக்கு.

ஆம். தனக்கு வரம் தந்த முனிவரையே கொண்டு விட விரும்பியது சரபம்.

ஏன்?

காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் என்னைக் கண்டு நடுங்குகின்றன. பயந்து ஓடுகின்றன. என்னிடம் அஞ்சும் மிருகங்கள், அந்த முனிவரைச் சரணடைந்தால் அவரும் பழக்க தோஷத்தில் எல்லா மிருகங்களையும் சரபமாக மாற்றிவிட்டால் என்ன செய்வது? எனவே அந்த முனிவரைப் போட்டுத் தள்ளிவிட்டால் நான் மட்டுமே சரபமாக இருப்பேன் என்று கொக்கரித்த சரபம், முனிவரைக் கொல்ல நெருங்கியது.

எல்லாம் வல்ல முனிவருக்கு இந்த நாயின், சரபத்தின் எண்ண ஓட்டம் தெரியாதா என்ன?

வந்ததே கோபம் அவருக்கு. ஓடி வந்த சரபத்தைப் பார்த்து ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.

அவ்வளவுதான், அடுத்த விநாடியே அந்த சரபம், பழையபடி நாயாக, சோதா நாயாக மாறிற்று.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?
பாத்திரம் அறிந்த பிச்சை போடு!

- ப்ரியா கல்யாணராமன்.

நன்றி - குமுதம் பக்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக