ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு

Page 2 of 2 Previous  1, 2

Go down

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Empty தேவனுடைய இரட்சிப்பின் ஈவு

Post by சார்லஸ் mc Mon Feb 06, 2012 11:02 pm

First topic message reminder :

“தேவனுடைய இரட்சிப்பின் ஈவு”


இது ஒரு இலவசமான ஈவு ஆகும்.

“ஈவு” - என்றால் என்ன?

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.” (யோவான்: 3:16).

ஒரு ஈவைக் குறித்த அதிகாரப்பூர்வமான வரையறை மூன்று முக்கியமான அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

1. யாரேனும் ஒருவர் அதைக் கொடுக்க வேண்டும்

2. யாரேனும் ஒருவர் அதைப் பெற்றுக் கொள்ள வேண்டும்

3. அதை பெற்றுக் கொள்ளுபவர் அதற்காகக் கிரயம் எதுவும் செலுத்துவதில்லை.

ஒரு ஈவு என்பது இலவசமாகக் கொடுக்கப்பட்டு, கிரயம் செலுத்துவதற்கான எந்த எண்ணமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படுவதாகும்.

தொடரும்...



Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 6:49 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Empty தேவனுடைய இரட்சிப்பின் ஈவு

Post by சார்லஸ் mc Fri Feb 10, 2012 2:27 pm

“நித்திய ஜீவன் என்னும் இலவச ஈவு”


பரிசுத்தமும் நீதியுமுள்ள தேவன் பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” என்று அறிவித்தார். (எசேக்கியேல்: 18:14). அதன் மூலம் முழு உலகத்தின் நியாயாதிபதியானவர் முழு மனுக்குலத்திற்கும் மரண தண்டனையை அறிவித்தார். நீதியினால் செய்யக் கூடிய ஒரே காரியம் இதுவே.

என்றாலும், பிரபஞ்சத்தின் வல்லமையான சிருஷ்டிகரும், சகல மனுக்குலத்தின் ஙியாயாதிபதியாகவும் இருப்பவராகிய பிதா - மீட்பவராகவும் இருக்கிறார். அவர் அன்போடும் இரக்கத்தோடும் பாவக்கறை படிந்த உலகை நோக்கிப் பார்க்கிறார். மிகவும் அற்புதமான ஆனால் பயங்கரமான முடிவை எடுக்கிறார். “அவர்களின் இடத்தில் நானே மரிப்பேன். அவர்கள் ஜீவிக்கும்படியாக, நீதி எதிர்பார்க்கும் அந்தத் தண்டனையை நானே செலுத்துவேன். அவ்வளவாக நான் அவர்களை நேசிக்கிறேன்.”

அதையேதான் த‌ேவன் செய்தார். அவர் உலகத்தை தம்மோடு ஒப்புரவாக்கிக் கொள்ளும்படி கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார். தமது குமாரனில் அவர் முழு மனுக்குலத்தையும் சோ்த்துக் கொண்டு சிலுவையில் மரித்தார். இப்போது ரோமருக்கு பவுல் எழுதிய இந்த வார்த்தைகள் அர்த்தம் பொதிந்தவையாக ஆகின்றன. “ஆகையால் ஒரே (ஆதாமின்) மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, ஒரே (கிறிஸ்துவின்) நீதியினாலே எல்லா மனுஷரக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.

அன்றியும், ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும் பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய் பெருகிற்று. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டு கொண்டது போல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டு கொண்டது” (ரோமர்: 5:19-21).

இந்தப் பகுதியில் பவுல் தேவனுடைய மீட்பு மற்றும் இரட்சிப்பின் திட்டத்தைத் தொகுத்து கூறுகிறார். இரண்டு பிரதிநிதித் தலைவர்கள் இருக்கிறார்கள். முழு மனுக்குலத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் ஆதாம்; இரட்சிப்புக்காக அவரில் விசுவாசம் வைக்கும் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்யும் கிறிஸ்து. (1கொரிந்தியர்: 15:22). அதாவது நாம் நமது இயற்கைப் பிறப்பில் ஆதாமினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறோம். ஆனால், விசுவாசத்தினால் கிறிஸ்துவுக்குள் இருக்கிறோம்.

தேவனால் வாய் மொழியாகக் கொடுக்கப்பட்ட ஒரு கட்டளையை ஆதாம் வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் மீறியபோது (ஆதியாகமம்: 2:17; 3:16, 17) அவன் பாவம் செய்தான். ஆதாமின் மூலமாக பாவம் உலகத்தினுள் நுழைந்தது. தொடர்ந்து மரண தண்டனையும் வந்தது. இவ்வாறு அனைவரும் பாவம் செய்தபடியால் பாவமும் மரணமும் மனுக்குலம் அனைத்திற்கும் பரவியது. (ரோமர்: 5:12). எவரேனும் மனிதனைக் காப்பாற்ற வராவிட்டால், அவன் இந்த ஜீவனில் மட்டுமின்றி நித்தியத்திற்கும் மரித்துப் போய் விடுவான்.

இப்படி காப்பாற்றுவதையே தேவன் கிறிஸ்துவில் செய்தார். பாவமற்ற “தேவ ஆட்டுக்குட்டியானவர்” தம்மையே சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுப்பதின் மூலம் மனுக்குலத்தின் பாவத்தக்கான தண்டனையை செலுத்தி தீர்க்கும்படி அவர் செய்தார். (ரோமர்: 5:6-11).

ஆதாமில் மானிடப் பிறப்பில், நாம் பாவிகளாக மரிக்கும்படி தீர்க்கப்பட்டிருக்கிறோம். ஆனால், சிலுவையில் கிறிஸ்துவின் மீட்பின் கிரியையின் காரணமாக, நாம் விசுவாசத்தில் அவருக்குள் இருப்பது போல, நீதிமானாக்கப்பட்டு ஜீவிக்க முடியும் (ரோமர்: 5:18,19). அதாவது, நாம் மேலிருந்து ஒரு ஆவிக்குரிய பிறப்பை அனுபவித்து, ஒரு புதிய “குடும்பத்தில்” மறுபடியும் பிறப்பது” அவசியமாக இருக்கிறது (யோவான்: 3:1-6).

தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Fri Nov 09, 2012 7:24 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Empty தேவனுடைய இரட்சிப்பின் ஈவு

Post by சார்லஸ் mc Sat Feb 11, 2012 12:56 am

“இதுவே இரட்சண்ய நாள்”


ஆனால், எவரும் தனிப்பட்ட முறையில் கிறிஸ்துவின் இரட்சிப்பின் ஈவுக்காக அவரிடம் வராமல் இரட்சிக்கப்பட முடியும் என்றாகி விடாது. ஓர் ஈவுக்காக ஏற்றுக் கொள்ளப்படும் வரையில் அது ஈவாகாது.

ரோமர்: 5:17 - வசனம் நாம் தனிப்பட்ட முறையில் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய கிருபையின் ஈவைப் “பெற்று” ஜீவனை அடைய வேண்டுமென்று நமக்கு கூறுகிறது. அதைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அது நமக்கு எந்த நன்மையும் செய்யாது. ஏற்கனவே ஈவு அருளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆண்டவராகிய இயேசுவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே நித்திய வாழ்வை அனுபவிப்பார்கள்.

“இதோ, இப்பொழுத‌ே - அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள் ” (2கொரிந்தியர்: 6:2).

இன்று ஒரு காரியத்தை செய்யும்படி தேவன் உங்களை அழைக்கிறார். அவருடைய குமாரனை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ளுங்கள். வேறெதுவும் முக்கியமில்லை.

சார்லஸ் வெஸ்லி தனது பாமாலையில் “என் கையில் எதையும் நான் கொண்டு வரவில்லை, உமது சிலுவையை மட்டுமே நான் பற்றிக் கொண்டிருக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார். இதுவே முக்கியமான காரியமாகும்.

ஆண்டருமூ்ரே இதைப்பற்றி, “ஒவ்வொரு மானிடனும் தனது பாவங்கள் அனைத்தையும் ஒரு குவியலாகவும், தனது நற்கிரியைகள் அனைத்தையும் மற்றொரு குவியலாகவும் குவித்து வைக்க வேண்டும். பிறகு அவையிரண்டையும் விட்டுவிட்டு இயேசுவானவரிடம் ஓடி வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய (இலவச) கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோமர்: 6:23).

“அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார், அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை, அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய், அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை போ்களோ, அத்தனை போ்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான்: 1:11,12).

“முடிந்தது”


இந்த நித்திய ஜீவனின் ஈவை நம்மால் சம்பாதித்துக் கொள்ள முடியாது; அப்படிச் செய்ய வேண்டிய அவசியமுமில்லை. அதற்காக நாம் எந்தக் கிரயமும் கொடுக்க வேண்டியதில்லை. இயேசுவானவர் சிலுவையில் “முடிந்தது” என்று கூறிய போது, நமது இரட்சிப்புக்கான கிரயம் - முழுமையாகச் - செலுத்தி முடிக்கப்பட்டாயிற்று!.

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 42463935667781101690910

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 40216434698560531946310

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

தேவனுடைய இரட்சிப்பின் ஈவு - Page 2 Empty Re: தேவனுடைய இரட்சிப்பின் ஈவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum