புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலையில் சிரிப்பு... மாலையில் அழுகை- பெண்களைத் தாக்கும் புதிய மனநோய்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 6:59 am

சந்தோஷம், துக்கம், கோபம், விரக்தி, பயம் போன்ற உணர்ச்சிகள் எல்லோருக்கும் பொதுவானவை. இந்த உணர்ச்சிகள் சிலரிடம் அதிகமாக இருக்கும், சிலரிடம் குறைவாக இருக்கும். இதுபோன்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் மனதை நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் ஒவ்வொரு நாளும் பலரை சந்திக்கிறோம். சிலர் காலையில் கல்யாண வீடு போல் கலகலப்பாக இருப்பார்கள். மாலையில் புயலடித்து ஓய்ந்தது போல் அமைதியாக இருப்பார்கள். இவர்கள் எப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள், எப்போது துக்கமாக இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. காரணமே தெரியாமல் துக்கமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் மனபாதிப்பை `பைபோளர் மானியாக் டிப்ரசன்' என மனநல மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

இவர்கள் வழிதெரியாமல் காட்டுக்குள் ஓடும் மானைப் போன்றவர்கள். மனதை ஒருநிலைப்படுத்தத் தெரியாது. வாரத்தில் 3 நாள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், 3 நாள் துக்கமாக இருப்பார்கள். இவர்களிடமுள்ள கோபம், விரக்தி, ஆத்திரம் போன்ற எதிர்மறை எண்ணங்களால் சந்தோஷம், தன்னம்பிக்கை, உற்சாகம் போன்ற நேர்மறை எண்ணங்கள் குறைந்து காணப்படும்.

இதனால் சிந்தனை மாறுபட்டு தவறான பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும். இவர்களை சந்தேகப் பேய் பிடித்து ஆட்டும். இதனால் உறவுகளுக்குள் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக மனபாதிப்புக்கு ஆளாகின்றனர்.

`ஒருவர் சாதாரணமான சம்பவத்துக்கே அதிக மகிழ்ச்சியடைவார். அதேபோல சிறிய இழப்புக்கே துவண்டுபோய் விடுவார். இவரைப் போன்றவர்கள் மனதால் பாதிக்கப்பட் டுள்ளார்கள் என்பது அர்த்தம். உதவி, அனுசரணை, தன்னம்பிக்கை, வேலை போன்றவை இல்லாதவர்கள் எளிதில் இவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் எதன்மீதும் பற்று இல்லாமல், சோர்வுடன் காணப்படுவர்.

முகம் இருண்டுபோய் இருக்கும். சிந்தனையில் தெளிவிருக்காது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பர். தனிமையையே அதிகம் விரும்புவர். எப்போதும் எதிர்மறையான சிந்தனையுடனே இருப்பர்' என மனதால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகளை பட்டியலிடுகின்றனர் மனநல மருத்துவர்கள்.

இவர்கள் மனநல நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டு வர வேண்டும். இதன்மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என கூற முடியாது. மறுபடியும் மனபாதிப்பு வரலாம். எனவே மருந்து, மனசிகிச்சை எனும் `காம்பினேஷன் தெரபி' இவர்களுக்கு அவசியம். மருந்து இல்லாமலும் மனபாதிப்பிலிருந்து விலக முடியும். அதற்கு தன்னம்பிக்கை தேவை. தனக்கு ஏற்படும் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, பிரச்சினைக்கான காரணத்தை கண்டுபிடித்து முறையான தீர்வு காண வேண்டும்.

மனபாதிப்புக்கு ஆளானவர்களிடம் எப்போதும் நேர்மறையான எண்ணங்களையே வளர்க்க வேண்டும். மற்றவர்களிடம் அன்பு செலுத்தவும், நட்பு கொள்ளவும் பழக்கப்படுத்த வேண்டும். புத்தகம் படித்தல், கடிதம் எழுதுதல் போன்றவற்றில் ஆர்வம் ஏற்படச் செய்ய வேண்டும். சமூகப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். தனிமையை நாட விடாமல் எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்படி செய்ய வேண்டும்.

சிலருக்கு சர்க்கரை நோய் பாரம்பரியமாக வருவதுபோல் மனபாதிப்பும் பாரம்பரியமாக வருகிறது. மேலும், தினசரி ஏற்படும் மன அழுத்தம், நெருக்கமானவர்களின் மரணம், வேலையிலுள்ள பிரச்சினை, பொருளாதார பிரச்சினை, குடும்ப சிக்கல், காதல் தோல்வி, தாழ்வு மனப்பான்மை, நண்பர்கள் இல்லாத நிலை போன்றவை மன பாதிப்பு ஏற்பட காரணமாக அமைகின்றன.

பெண்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதால் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். சீரியல் பார்க்கும் பெண்கள் நமக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை வருமோ என தேவையற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்கின்றனர். இதனால் எளிதில் மன பாதிப்புக்கு ஆளாகின்றனர். சில குழந்தைகள் கூட மனதால் பாதிக்கப்படுவதாக உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது வயது ஏற ஏற பாதிப்பின் தன்மையும் அதிகரிக்கும் என்பதே.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக