ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!

Go down

சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  Empty சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!

Post by பிரசன்னா Thu 2 Feb 2012 - 14:24

சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!
on Thursday, February 2, 2012 | 0 Comment

ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகிய மூவரில் 'யாருக்கு முக்கியத்துவம்’ என்ற பஞ்சாயத்து தி.மு.க. மேலிடத்தில் நடப்பதைப் போலவே மாவட்ட செயலாளர் பெரியசாமி, திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரில் யார் பெரிய ஆள் என்ற அதிகார யுத்தம் தூத்துக்குடியில் நடக்கிறது. திருச்செந்தூரில் கடந்த 25-ம்தேதி, வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.விழாவில் பேசிய என்.பெரியசாமி, வழக் கத்துக்கு மாறாக சொந்தக் கட்சிக்காரர்கள் மீதே பாய்ந்தார்.

சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  So26
''தி.மு.க. என்றைக்குமே வீரமான கட்சி. வீரமாக இருக்கிறவனுக்குத்தான் இங்கே இடம் உண்டு. கோழைகளுக்கு இடமில்லை. கட்சிக்குச் சோதனையான காலங்களில் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் பங்கு கொள்ளவேண்டும். கஷ்ட காலங்களில் தாங்குகிற சக்தி உள்ளவர்களுக்கு மட்டுமே தி.மு.க-வில் இடம் உண்டு. அப்படி இல்லாதவர்களை நான் மதிப்பதே இல்லை. எனக்கு அவர்களைப் பிடிக்காது. திருச்செந்தூர் தொகுதியில் நாம் எப்போதும் சவால் விட்டு

வெற்றி பெற்று வந்திருக்கோம். இன்னமும் வெற்றி பெறுவோம். அது யாரோட தயவிலும் கிடையாது. யாரையும் நம்பி கிடையாது. ஜெயலலிதா அரசைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை. துணிச்சலோடுதான் இருக்கிறோம். ஆனால், சிலர் பயப்படுறாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு இங்கே இடம் கிடையாது. அவர்கள் இருக்கணும்னா இருக்கட்டும் போகணும்னா போகட்டும். எவரைப்பற்றியும் கவலை இல்லை. கூட இருந்துக்கிட்டே துரோகம் பண்ண வேண்டாம். துரோகம் பண்றவங்க அதுக்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும். கட்சிக்காரங்களைத் தாக்குறது, அடிக்கிறது இதெல்லாம் வேண்டாம். அப்படி செய்றதால் பயந்து போயிடுவாங்கன்னு மட்டும் யாரும் நினைக்க வேண்டாம். நான் கடவுளுக்கு அடுத்தபடியா என் தலைவர் கலைஞருக்கு மட்டும்தான் பயப்படுவேன். மற்றபடி யாருக்கும் பயப்பட மாட்டேன்'' என்று வீர வசனங்களைப் பொரிந்து தள்ளினார்.

அவருக்குப் பிறகு பேசத் தொடங்கிய அனிதா ராதாகிருஷ்ணன், ''எங்களுக்கு கலைஞர்தான் தலைவர். வேறு யாரும் பெரிய ஆள் இல்லை. கலைஞர் தலைமையில் தளபதி, அஞ்சாநெஞ்சன் வழிகாட்டலின்படி அவர்களைப் பின் தொடர்வோம். நான் வைச்சதுதான் சட்டம்னு வேறு யாரும் சொல்ல முடியாது. இருக்கக் கூடாது, போகக் கூடாதுன்னு சொல்றதுக்கு எவனுக்கும் உரிமை கிடையாது. நான் என்ன, அ.தி.மு.க-வோடு தொடர்பு வைச்சிக்கிட்டு மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தலில் அவங்களுக்கு ஆதரவா வேட்பாளர் போட்டேனா? ஒரு ஆளுக்காக வேட்பாளரே போடாம கட்சிக்குத் துரோகம் செஞ்சேனா? நான் அ.தி.மு.க-வில் இருந்தப்ப அந்தக் கட்சிக்கு உண்மையாக இருந்தேன். இப்போ தி.மு.க-விலும் உண்மையாக இருக்கேன். நான் காட்டிக் கொடுக்க மாட்டேன். ஏமாத்த மாட்டேன்'' என்று படுவேகமாகப் பேசி முடித்தார்.

சீறிய பெரியசாமி... பாய்ந்த அனிதா!  So27
அதிரடிப் பேச்சு குறித்து அனிதா ராதாகிருஷ்ண னிடம் பேசினோம், ''விரைவில், உட்கட்சித் தேர்தல் வர இருக்கிறது. அதை மனசுல வைச்சிக்கிட்டு என்னை மாதிரி ஆட்களை விரட்டுறதுக்காக இவர் இப்படிப் பேசுறார். பல வருஷங்களா இவர் படுத்துற அவமானம் தாங்க முடியாம பலர் கட்சியை விட்டே ஓடியிருக்காங்க. இவரோட வீரம் எங்களுக்குத் தெரியாதா? ஆளும் கட்சியா இருக்கிறப்போ எதிர்க்கட்சியா இருக்கிறவங்களை கடுமையா விமர்சிக்கிறவர்... எதிர்கட்சியா இருக்கிறப்போ ஆளும் கட்சித் தலைமையை விமர்சித்த வரலாறு உண்டா? ஏதாவது ஆர்ப்பாட்டம் என்றாலும் 10 நிமிடங்களில் முடித்து விடுகிறார். இவர்தான் வீரரா? கட்சியில் இவரைத்தவிர வேறு யாருமே வேகமாக இருக்கக்கூடாது. அவருக்கு ஜால்ரா போடுகிறவர் மட்டும்தான் இருக்கணும்னு நினைக்கிறார். நான் ஜெயிலில் இருக்கும்போது கட்சியினர் யாரும் என்னைப் பார்க்க விடாதபடி தடுத்தார். விசாரணை என்று வந்தால் அவ்வளவும் வெளிவரும்'' என்றார்.
இதற்கு பெரியசாமியோ, ''நான் அவர் பெயரை ஒரு இடத்தில்கூட சொல்லலை. ஆனா அவர் என்னைச் சொல்லியே பேசிட்டார். அந்தப் பகுதி பேரூராட்சி தலைவரை மனதில் வைத்துத்தான் நான் அப்படிப் பேசினேன். நான் சொன்னபடி கூட்டம் நடத்த அந்த ஆள் முன்வரவில்லை. ஆனால் அன்றைக்கு முதல் ஆளாக அந்த ஆள் வந்துவிட்டார். அதனால அவரைத்தான் நான் குறிப்பிட்டுப் பேசி னேன். பிரச்னையை பெரிதாக்கி விளம்பரம் தேடுறதுக்காக அனிதா ராதாகிருஷ்ணன் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறார். நான் கடந்த 27 வருஷமா மாவட்டச் செயலாளராக இருந்துட்டேன். அவர் தேர்தலில் போட்டி போட்டு ஜெயித்து வந்தா வரட்டும், யார் வேண்டாம்னு சொன்னது? அதை எப்படி நான் தடுக்க முடியும்? அதுக்காகத்தான் இப்படிப் பேசுறேன்னு சொல்றது தப்பு. இதுவரை இந்தக் கட்சியில் யாரும் இதுபோல் என்னை எதிர்த்துப் பேசியது கிடையாது. அதுக்காக நான் யாருக்கும் பயப்படுவதும் கிடையாது. இதுமாதிரி எத்தனையோ ஆட்களைப் பார்த்துவிட்டேன். அதனால இதை அப்படியே விட்டுட்டேன்'' என்றார் சாதாரணமாக.
சூப்பரப்பு!
- எஸ்.சரவணப்பெருமாள்

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT - vikatan.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum