Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. 4 பெட்டிக் கடைகளாக... சிதறுண்டு போகும்! - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன்
3 posters
Page 1 of 1
தி.மு.க. 4 பெட்டிக் கடைகளாக... சிதறுண்டு போகும்! - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன்
தி.மு.க. 4 பெட்டிக் கடைகளாக... சிதறுண்டு போகும்! - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன் (தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்)
தி.மு.க.வின் கொள்கைகளையும் லட்சியங்களையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு "தம் குடும்பம் மட்டுமே கழகக் குடும்பம்' என்று கலைஞர் செயல்படுவதால் எதிர்காலத்தில் கட்சி நான்கு பெட்டிக் கடைகளாகச் சிதறுண்டு போகும்,' என்று எச்சரிக்கிறார் பெரம்பூர் கந்தன். இவர் கலைஞர் பாசறையின் அமைப்பாளர். தவிர, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர். தி.மு.க. பொதுக்குழு கூடும் சமயம் கந்தன் வீசுவது சாதாரண குண்டல்ல; கந்தக குண்டு....
"அண்ணா கழகக் குடும்பத்தை எப்படிப் பார்த்தார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். 1962 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 50 இடங்களில் கழகம் வென்றது. அதே சமயம் தில்லியில் மக்களவைக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமிழகத்தில் சட்டமன்றக் கட்சிக்கு நெடுஞ்செழியனும், பாராளுமன்ற கட்சிக்கு இரா. செழியனும் தலைவர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பேச்சு இருந்தது. அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் செழியனைக் கூப்பிட்டார். "சகோதரர்களான நீங்கள் இருவரும் இந்த இரு அமைப்புகளிலும் தலைவர்களாக இருப்பது என்பது, கழகம் ஒரே குடும்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது போலத் தோற்றம் கொடுக்கும். எனவே உங்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்புக் கொடுக்க முடியும். அது யார் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்,' என்று சொல்லிவிட்டார். கடைசியில் செழியன் பாராளுமன்றக் கட்சித் தலைவராகப் போடப்படாமல் நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தான் அண்ணா கழகக் குடும்பத்தை நடத்திய முறை.
ஆனால் இப்போது என்ன நடக்கிறது? மகன் துணை முதல்வர். அவரைவிடத் தகுதியானவர்கள் கழகக் குடும்பத்தில் இல்லையா? மற்றொரு மகன் மத்திய அமைச்சர். மகள் தில்லி மேலவை உறுப்பினர். பேரன் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது கலைஞரின் சிந்தனைகள் கழகத்தின் எதிர்காலம் குறித்து இல்லை. எந்தெந்தப் பதவிகளை யார், யாருக்குப் பங்கு போட்டுக் கொடுத்தால் குடும்பத்தில் பிரச்னை வராது என்பதே அவரது 24 மணி நேர யோசனையாக இருக்கிறது. எந்த வகையில் கழகச் சட்ட திட்டங்களைத் திருத்தினால், வாரிசுகளின் வாரிசுகளுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று ஆராய்கிறார்கள். இந்த நிலை உருவாவதற்கு, பேராசிரியர் அன்பழகனும் ஒரு காரணமாகிப் போனார். மூத்த தலைவர் என்ற முறையில் நடக்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், தமக்கு இரண்டாவது இடம் சாஸ்வதமாக இருந்தால் சரி என்று சுயநலத்துடன் செயல்பட்ட பேராசிரியர், இந்த இயக்கம் இப்படித் தறிகெட்டுப் போவதற்குக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவராகி விட்டார். இந்த வகையில் வரலாறு அவரது நிலைப்பாட்டை விமர்சனப் பார்வையோடுதான் அணுகும்.
மொழி, இனம், பொருளாதாரம், சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயம் ஆகியவை குறித்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்ட கொள்கைகள் கலைஞர் காலத்தில் நீத்துப் போய்விட்டன. உயர்மட்டத்திலேயே சுயநலம் குடிகொண்டதால், கட்சியிலிருக்கும் இளைய தலைமுறையும், பதவி, பணம் என்று அலைபாய்கிறது. யாருக்கும் கொள்கைத் தெளிவு இல்லை. ஒரு உதாரணம். ஜனவரி 25ம் தேதி என்பது தமிழுக்காக உயிர்விட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுகின்ற தினம். ஆனால் இதையே ஒரு கொண்டாட்டமாக சித்திரிக்கிறார்கள். பேச வரும் தலைவருக்கும் எப்படி வரவேற்பு கொடுப்பது என்று கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள். இதன் மூலம் சிலரது பிழைப்பு ஓடுகிறது. இன்று இயக்கத்தில் வியாபாரிகள் அதிகமாகி விட்டார்கள். பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல் ஆகிவிட்டது கட்சி.
கழகத்துக்கு உண்மையாகப் பாடுபட்டவர்களுக்கு மதிப்பில்லை. 1991-1996ல் சட்டமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்து கட்சியின் கௌரவத்தைக் காப்பாற்றி, ஜனநாயகத்துக்குப் போராடிய பரிதி இளம்வழுதி, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, கருவேப்பிலையாக ஓரம் கட்டப்படுகிறார். "அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற கோஷத்தை வெற்று கோஷமாக்கிவிட்டு, அயராது உழைத்த கலைஞரின் குடும்பம் இன்று இந்தியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒன்றாகிவிட்டது. கட்சிப் பத்திரிகையான முரசொலி, தொண்டர்கள் உழைத்துக் கொடுத்த பணத்தில் வளர்ந்தது. ஆனால் அதன் நிர்வாகம் கலைஞர் குடும்பத்தின் கையில். அண்ணா அவர்கள் கழக ஏடான "நம் நாடு' பத்திரிகையை, கழக நிர்வாகிகளிடம் அல்லவா ஒப்படைத்திருந்தார்?
இப்போது சொன்னவற்றைவிட மிகப் பெரிய கொடுமை 2009ல் முள்ளிவாய்க்காலில், கொத்துக் கொத்தாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது மத்திய அரசில் பதவிதான் முக்கியம் என்று நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தமிழினத்துக்கே துரோகம் செய்தாரே... இதை மன்னிக்கவே முடியாது. "இன துரோகி' பட்டத்துக்குப் பொருத்தமானவர் கலைஞரே. இந்த உச்சபட்ச துரோகம்தான் எனக்குத் தீராத மனக்கொதிப்பை ஏற்படுத்திவிட்டது. இனியும் என்னால் கழகத்தில் நீடிக்க முடியாது. எனவே நான் என்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் "கொள்கை' ஊழல் புகாரில் மாட்டிக் கொண்டு ஒரு வருடமாக திகாரில் இருக்கிறது. எனவே வெட்கப்பட்டு வேதனைப்பட்டு என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஊழல் புகாரில் ஜெயிலில் இருந்தவருக்கு, பட்டுக் கம்பள வரவேற்பு! ஊழலுக்கு தாலாட்டுப் பாடும் கட்சியில் எப்படி இருக்க முடியும்?' என்று கேட்கிறார் கந்தன். "இவர் வீசும் ஏவுகணைகளால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படும்' என்கிறார்கள் சில மூத்த பிரமுகர்கள். பொதுக்குழுவில் இதைவிட இன்னும் பூதாகாரமான வெடிகள் வெடித்தாலும் ஆச்சரியமில்லை.
- ப்ரியன்
தகவல் பகிர்வு - தினமலர் » கல்கி செய்தி
தி.மு.க.வின் கொள்கைகளையும் லட்சியங்களையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு "தம் குடும்பம் மட்டுமே கழகக் குடும்பம்' என்று கலைஞர் செயல்படுவதால் எதிர்காலத்தில் கட்சி நான்கு பெட்டிக் கடைகளாகச் சிதறுண்டு போகும்,' என்று எச்சரிக்கிறார் பெரம்பூர் கந்தன். இவர் கலைஞர் பாசறையின் அமைப்பாளர். தவிர, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர். தி.மு.க. பொதுக்குழு கூடும் சமயம் கந்தன் வீசுவது சாதாரண குண்டல்ல; கந்தக குண்டு....
"அண்ணா கழகக் குடும்பத்தை எப்படிப் பார்த்தார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். 1962 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 50 இடங்களில் கழகம் வென்றது. அதே சமயம் தில்லியில் மக்களவைக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமிழகத்தில் சட்டமன்றக் கட்சிக்கு நெடுஞ்செழியனும், பாராளுமன்ற கட்சிக்கு இரா. செழியனும் தலைவர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பேச்சு இருந்தது. அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் செழியனைக் கூப்பிட்டார். "சகோதரர்களான நீங்கள் இருவரும் இந்த இரு அமைப்புகளிலும் தலைவர்களாக இருப்பது என்பது, கழகம் ஒரே குடும்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது போலத் தோற்றம் கொடுக்கும். எனவே உங்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்புக் கொடுக்க முடியும். அது யார் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்,' என்று சொல்லிவிட்டார். கடைசியில் செழியன் பாராளுமன்றக் கட்சித் தலைவராகப் போடப்படாமல் நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தான் அண்ணா கழகக் குடும்பத்தை நடத்திய முறை.
ஆனால் இப்போது என்ன நடக்கிறது? மகன் துணை முதல்வர். அவரைவிடத் தகுதியானவர்கள் கழகக் குடும்பத்தில் இல்லையா? மற்றொரு மகன் மத்திய அமைச்சர். மகள் தில்லி மேலவை உறுப்பினர். பேரன் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது கலைஞரின் சிந்தனைகள் கழகத்தின் எதிர்காலம் குறித்து இல்லை. எந்தெந்தப் பதவிகளை யார், யாருக்குப் பங்கு போட்டுக் கொடுத்தால் குடும்பத்தில் பிரச்னை வராது என்பதே அவரது 24 மணி நேர யோசனையாக இருக்கிறது. எந்த வகையில் கழகச் சட்ட திட்டங்களைத் திருத்தினால், வாரிசுகளின் வாரிசுகளுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று ஆராய்கிறார்கள். இந்த நிலை உருவாவதற்கு, பேராசிரியர் அன்பழகனும் ஒரு காரணமாகிப் போனார். மூத்த தலைவர் என்ற முறையில் நடக்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், தமக்கு இரண்டாவது இடம் சாஸ்வதமாக இருந்தால் சரி என்று சுயநலத்துடன் செயல்பட்ட பேராசிரியர், இந்த இயக்கம் இப்படித் தறிகெட்டுப் போவதற்குக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவராகி விட்டார். இந்த வகையில் வரலாறு அவரது நிலைப்பாட்டை விமர்சனப் பார்வையோடுதான் அணுகும்.
மொழி, இனம், பொருளாதாரம், சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயம் ஆகியவை குறித்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்ட கொள்கைகள் கலைஞர் காலத்தில் நீத்துப் போய்விட்டன. உயர்மட்டத்திலேயே சுயநலம் குடிகொண்டதால், கட்சியிலிருக்கும் இளைய தலைமுறையும், பதவி, பணம் என்று அலைபாய்கிறது. யாருக்கும் கொள்கைத் தெளிவு இல்லை. ஒரு உதாரணம். ஜனவரி 25ம் தேதி என்பது தமிழுக்காக உயிர்விட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுகின்ற தினம். ஆனால் இதையே ஒரு கொண்டாட்டமாக சித்திரிக்கிறார்கள். பேச வரும் தலைவருக்கும் எப்படி வரவேற்பு கொடுப்பது என்று கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள். இதன் மூலம் சிலரது பிழைப்பு ஓடுகிறது. இன்று இயக்கத்தில் வியாபாரிகள் அதிகமாகி விட்டார்கள். பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல் ஆகிவிட்டது கட்சி.
கழகத்துக்கு உண்மையாகப் பாடுபட்டவர்களுக்கு மதிப்பில்லை. 1991-1996ல் சட்டமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்து கட்சியின் கௌரவத்தைக் காப்பாற்றி, ஜனநாயகத்துக்குப் போராடிய பரிதி இளம்வழுதி, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, கருவேப்பிலையாக ஓரம் கட்டப்படுகிறார். "அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற கோஷத்தை வெற்று கோஷமாக்கிவிட்டு, அயராது உழைத்த கலைஞரின் குடும்பம் இன்று இந்தியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒன்றாகிவிட்டது. கட்சிப் பத்திரிகையான முரசொலி, தொண்டர்கள் உழைத்துக் கொடுத்த பணத்தில் வளர்ந்தது. ஆனால் அதன் நிர்வாகம் கலைஞர் குடும்பத்தின் கையில். அண்ணா அவர்கள் கழக ஏடான "நம் நாடு' பத்திரிகையை, கழக நிர்வாகிகளிடம் அல்லவா ஒப்படைத்திருந்தார்?
இப்போது சொன்னவற்றைவிட மிகப் பெரிய கொடுமை 2009ல் முள்ளிவாய்க்காலில், கொத்துக் கொத்தாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது மத்திய அரசில் பதவிதான் முக்கியம் என்று நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தமிழினத்துக்கே துரோகம் செய்தாரே... இதை மன்னிக்கவே முடியாது. "இன துரோகி' பட்டத்துக்குப் பொருத்தமானவர் கலைஞரே. இந்த உச்சபட்ச துரோகம்தான் எனக்குத் தீராத மனக்கொதிப்பை ஏற்படுத்திவிட்டது. இனியும் என்னால் கழகத்தில் நீடிக்க முடியாது. எனவே நான் என்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் "கொள்கை' ஊழல் புகாரில் மாட்டிக் கொண்டு ஒரு வருடமாக திகாரில் இருக்கிறது. எனவே வெட்கப்பட்டு வேதனைப்பட்டு என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஊழல் புகாரில் ஜெயிலில் இருந்தவருக்கு, பட்டுக் கம்பள வரவேற்பு! ஊழலுக்கு தாலாட்டுப் பாடும் கட்சியில் எப்படி இருக்க முடியும்?' என்று கேட்கிறார் கந்தன். "இவர் வீசும் ஏவுகணைகளால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படும்' என்கிறார்கள் சில மூத்த பிரமுகர்கள். பொதுக்குழுவில் இதைவிட இன்னும் பூதாகாரமான வெடிகள் வெடித்தாலும் ஆச்சரியமில்லை.
- ப்ரியன்
தகவல் பகிர்வு - தினமலர் » கல்கி செய்தி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: தி.மு.க. 4 பெட்டிக் கடைகளாக... சிதறுண்டு போகும்! - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன்
இவரு யாருப்பா திடீா் காமெடி பீசு...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: தி.மு.க. 4 பெட்டிக் கடைகளாக... சிதறுண்டு போகும்! - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன்
சார்லஸ் mc wrote:இவரு யாருப்பா திடீா் காமெடி பீசு...
இவருக்கும் oru பதவி கொடுங்கப்பா
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» வடசென்னை: 3- பெரம்பூர்; உழைக்கும் மக்களின் முகம்
» உஷார் மக்களே: மளிகை, பெட்டிக் கடைகளில் 25 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் கண்டுபிடிப்பு...
» கந்தன் வருவான்
» கந்தன் புத்தி
» கந்தன் திருத்திய காவியம்
» உஷார் மக்களே: மளிகை, பெட்டிக் கடைகளில் 25 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான பொருட்கள் கண்டுபிடிப்பு...
» கந்தன் வருவான்
» கந்தன் புத்தி
» கந்தன் திருத்திய காவியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|