புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Today at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_m10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10 
62 Posts - 57%
heezulia
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_m10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_m10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_m10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_m10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10 
104 Posts - 59%
heezulia
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_m10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_m10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_m10அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 10:53 am

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை பற்றி பேச்சு நடத்த மத்திய நிபுணர் குழு நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த நேரத்தில், இருதரப்பினர் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்ட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேச்சுவார்த்தையை அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழுவினர் புறக்கணித்ததால், பேச்சுவார்த்தை ரத்தானது.

பேச்சுவார்த்தை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையம் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் காரணமாக, தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

மக்களிடம் ஏற்பட்ட அச்சத்தை போக்குவதற்காக நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக துணைவேந்தர் முத்துநாயகம் தலைமையில், நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைத்தது.

நெல்லை கலெக்டர் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள், போராட்டக்குழு பிரதிநிதிகள் அடங்கிய குழுவை மாநில அரசு அமைத்தது. இரு குழுவினரும் ஏற்கனவே 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 4-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

இதற்காக காலை 10.15 மணி அளவில் முத்துநாயகம் தலைமையில் மத்திய குழுவினர் 12 பேர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க, இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார் தலைமையில், இந்து முன்னணியினர் சிலர் வந்து இருந்தனர்.

போராட்டக்குழு பிரதிநிதிகள்

பகல் 11 மணி அளவில், "கூடங்குளம் அணுமின் நிலையம் உடனடியாக திறக்கப்பட வேண்டும்'' என்று கூறி வி.பி.ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார்.

அப்போது, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், பிரதிநிதிகள் புஷ்பராயன், மைபா ஜேசுராஜ், ராஜலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் வந்த கார் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்தது.

காரை பின்தொடர்ந்து ஒரு வேனும் வந்தது. அந்த வேனில் போராட்ட குழுவினருக்கு ஆதரவாக, கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர்.

மோதல்

உதயகுமார் கார் வந்து நின்றதும் திடீர் என்று அந்த காரை நோக்கி கல் வீசப்பட்டது. பின்னர் இந்து முன்னணியினர் சிலர் அந்த காரை நோக்கி ஓடி வந்தனர். காரில் இருந்த ஒருவர் இறங்கியதும், அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இதனால் பதற்றம் அடைந்த, உதயகுமார் உள்ளிட்டவர்கள் காரில் இருந்து கீழே இறங்கவில்லை. சம்பவத்தை அறிந்ததும் வேனில் வந்த இடிந்தகரை பெண்கள் கூச்சலிட்டபடி உதயகுமாரின் காரின் அருகே ஓடிவந்தனர்.

கல்வீச்சு

அப்போது இந்து முன்னணியினருக்கும், அந்த பெண்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த பெண்களில் சிலர் செருப்பை கழற்றி வீசி பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து வந்து மோதலை தடுத்தனர். பின்னர் இடிந்தகரை பெண்கள் உதயகுமாரின் காரை சூழ்ந்து நின்று கொண்டு மேலும் தாக்குதல் நடக்காத வண்ணம் பார்த்துக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து உதயகுமார் மற்றும் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் அங்கிருந்து திரும்பி சென்று விட்டனர்.

போலீசார் இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், நிர்வாகிகள் உடையார், மணி, ஆறுமுகம், மூர்த்தி, செந்தில், சுப்பிரமணியன், மாரியப்பன், ராமையா, குருமுருகன், பெருமாள் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

தர்ணா போராட்டம்

இருந்தாலும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த திடீர் தாக்குதலின் எதிரொலியாக இடிந்தகரை பெண்கள் அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இடிந்தகரை பெண்கள் அதுபற்றி கூறும்போது, "மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த போராட்ட குழுவினர் வந்தனர். அவர்களுடன் நாங்களும் வந்தோம். இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்ட குழுவினரை தாக்க வேண்டும் என்ற நோக்கில் கல் வீசினர். இதனால் மோதல் ஏற்பட்டது. போராட்ட குழுவினருக்கு பாதுகாப்பு இல்லை. எங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்ட குழுவினருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்'' என்றனர்.

இதற்கிடையே அங்கு நின்று கொண்டிருந்த இந்து தேசிய காங்கிரஸ் தலைவர் மதுசூதன பெருமாள் மற்றும் நிர்வாகிகள் சிலர், "பாரத மாதாவுக்கு ஜே, இந்தியாவை பாதுகாப்போம்'' என்று கூறி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க கோஷம் போட்டவர்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து போலீசார் வெளியேற்றினர். பின்னர் மதுசூதன பெருமாள் உள்பட 3 பேரை கைது செய்து, பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

போலீஸ் கமிஷனர்

தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர், அதிரடிப்படை போலீசாருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். தர்ணா போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

"கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த அனுமதி இல்லை'' என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, இடிந்தகரை பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காலை 11.30 மணியில் இருந்து 12 மணி வரை இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

புறக்கணிப்பு

இந்த மோதல் சம்பவத்தால் போராட்ட குழுவினர் நேற்று பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் சம்பவத்துக்கு பின்னர் அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நம்பிக்கை இல்லை

தமிழக அரசுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தோம். மத்திய நிபுணர்கள் குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் கேட்ட அடிப்படை தகவல் கூட அவர்கள் தர மறுக்கிறார்கள்.

எங்கள் இயக்கத்தை சேர்ந்த நிபுணர்கள் குழுவுடன் மத்திய அரசின் நிபுணர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்க மத்திய அரசு குழு மறுத்து விட்டது. இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக எங்களை அழைத்தார்கள். குண்டர்களையும், ரவுடிகளையும் ஏவி விட்டு வன்முறையை தூண்டுகிறார்கள். எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

எங்கள் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். இனி நாங்கள் மத்திய அரசு நிபுணர்கள் குழு நடத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளமாட்டோம்.

கறுப்பு தினம்

வருகிற 4-ந் தேதி கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக காங்கிரசார் இங்கு கூட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். அன்று நாங்கள் கறுப்பு தினமாக அனுசரிப்போம்.

பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சி ஜனநாயக ஆட்சியா? பாசிச ஆட்சியா? என்று தெரியவில்லை. பிரதமரும், மத்திய மந்திரிகளும் எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிரட்டுகிறார்கள்.

அமெரிக்கா, ரஷியா, பிரான்சு ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக பிரதமர் மன்மோகன்சிங் செயல்படுகிறார். அவர், இந்திய நாட்டுக்காக உழைக்க வேண்டும். இவ்வாறு உதயகுமார் கூறினார்.

போராட்டக்காரர்கள் மீது 147 வழக்குகள்

இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு கடுமையான மின்சார பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உடனடியாக மின்சார உற்பத்தி தொடங்க வேண்டும்.

போராட்டக்குழு தலைவர் உதயகுமார் உள்பட போராட்டக்காரர்கள் மீது போலீசார் 147 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். ஆகவே போராட்டக்காரர்களை உடனடியாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முற்றுகை

நெல்லையில் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்ட தகவல் அறிந்ததும், இடிந்தகரையை சேர்ந்த மக்கள் உடனடியாக அணுமின் நிலைய பகுதிக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

உடனே அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

தினதந்தி



அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 10:53 am

அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Ms07



அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 10:54 am

அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Ms08



அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 10:57 am

கூட்டத்தை புறக்கணிக்க இவங்களுக்கு என்று ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது.வேலை மெனக்கெட்டு இவங்களுக்கு எடுத்து சொல்ல வந்தவங்களை சொல்லணும்.
போராட்ட குழுகிட்ட பேச்சுவார்த்தை என்று இன்னும் காலம் கடத்தாமல் மத்திய அரசு தன்னோட அதிரடி நடவடிக்கை எடுத்தா சரி ஆகிடும்.
போராட்ட குழுவுக்கு மக்கள் நலன் மட்டும் தான் முக்கியம் என்று நினைத்து இருந்தால் கண்டிப்பா பேச்சுவார்த்தையில் பங்கேற்று இருப்பார்கள்




அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Uஅணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Dஅணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Aஅணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Yஅணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Aஅணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Sஅணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Uஅணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Dஅணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Hஅணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 01, 2012 11:02 am


கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதை தவறு என்று கூறவில்லை, ஆனால் இத்தனை வருடங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடியும் வரை இவர்கள் எந்தவித மறுப்பறிக்கையும் வெளியிடாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதுதான் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு இல்லாமல் போனதற்கான முக்கிய காரணம்.



அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 01, 2012 11:12 am

உதயசுதா wrote:கூட்டத்தை புறக்கணிக்க இவங்களுக்கு என்று ஒரு காரணம் கிடைத்துவிடுகிறது.வேலை மெனக்கெட்டு இவங்களுக்கு எடுத்து சொல்ல வந்தவங்களை சொல்லணும்.
போராட்ட குழுகிட்ட பேச்சுவார்த்தை என்று இன்னும் காலம் கடத்தாமல் மத்திய அரசு தன்னோட அதிரடி நடவடிக்கை எடுத்தா சரி ஆகிடும்.
போராட்ட குழுவுக்கு மக்கள் நலன் மட்டும் தான் முக்கியம் என்று நினைத்து இருந்தால் கண்டிப்பா பேச்சுவார்த்தையில் பங்கேற்று இருப்பார்கள்

அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... அங்கு உள்ள மக்களை முட்டாளாக்கும் வெட்டி பயலுகளுக்கு விளக்கம் சொல்ல தேவையில்லை..

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 01, 2012 11:16 am

சிவா wrote:
கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதை தவறு என்று கூறவில்லை, ஆனால் இத்தனை வருடங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடியும் வரை இவர்கள் எந்தவித மறுப்பறிக்கையும் வெளியிடாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதுதான் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு இல்லாமல் போனதற்கான முக்கிய காரணம்.

இதில் பல வெளிநாட்டு சதி இருக்கிறது தல... எதிர்ப்பவர்கள் திறக்கவே கூடாது என்று கூறுகிறார்கள், map வேண்டும் முழு விபரம் வேண்டும் என்றும் கூறுகிறார்கள் எந்த ஒரு அரசாங்கமும் குடுக்காது என்று தெரிந்து கொண்டே கேட்கிறார்கள்... அப்ப இவர்களின் நோக்கம் தான் என்ன...

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Feb 01, 2012 12:57 pm

போட்டு தாக்குங்க அப்போ தான் ஒரு முடிவு வரும் எதிர்ப்பு



உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அணுமின் நிலைய ஆதரவாளர்கள்-எதிர்ப்பாளர்கள் மோதல்; அடி-தடி Mgr
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Wed Feb 01, 2012 2:33 pm

பிரசன்னா wrote:
சிவா wrote:
கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பதை தவறு என்று கூறவில்லை, ஆனால் இத்தனை வருடங்களாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று முடியும் வரை இவர்கள் எந்தவித மறுப்பறிக்கையும் வெளியிடாமல் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதுதான் இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு இல்லாமல் போனதற்கான முக்கிய காரணம்.

இதில் பல வெளிநாட்டு சதி இருக்கிறது தல... எதிர்ப்பவர்கள் திறக்கவே கூடாது என்று கூறுகிறார்கள், map வேண்டும் முழு விபரம் வேண்டும் என்றும் கூறுகிறார்கள் எந்த ஒரு அரசாங்கமும் குடுக்காது என்று தெரிந்து கொண்டே கேட்கிறார்கள்... அப்ப இவர்களின் நோக்கம் தான் என்ன...

இரண்டு விஷயங்கள் கேள்விப்பட்டேன் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை
1.அணுஉலயின் அடுத்த கட்டமாக தோரியம் உபயோகபடுத்தபடும் ,
இந்த தோரியம் ஜெர்மனியிலும் ,இந்தியாவிலும் மட்டுமே அதிக அளவு கிடைக்கும் ,இந்தியா இதை செயற்படுத்திவிட்டால் வளர்ச்சிபாதை சிறப்பாக இருக்கும் ,அதனால் ஜெர்மன் தான் அணுஉலைகளை மூடபோவதாக அறிவித்தது ,9 அணுஉலைகளில் 5 மூடப்பட்டு 4 வேலயில் தான் உள்ளது ,இதை மறைத்து மக்கள் நலன் அதற்காக மூடினோம் என்று கூறுகிறது ,
(இது மக்களை இன்னும் எதிர்பாதற்க்கு அதிகமாக்கும் ,ஜெர்மனியிலே மூடிவிட்டார்கள் என்று )(மேலும் இங்கு அணு உலை எதிர்ப்பு பிரசாரங்கள் மக்களின் பயத்தை அதிகரித்து தூண்டிவிடுவது போல உள்ளது ,
உதாரணம் -பாம்பு கடித்தால் விஷம் ஏறும் உடனே மருத்துவ மனைக்கு சென்று ஸ்னேக் வேனோம் இஞ்செக்சன் போட்டால் சரியாகிவிடும் என்பதற்கும் ,
பாம்பு கடிச்சிட்டுனா ,அவ்ளோதான் விஷம் ஏறிடும்,உடம்பு பூரா பரவிடும் ,நீல கலர் ஆயிடும் ,செத்துடுவோம் ,ஹாஸ்பிடல் போனும் ,ஊசி போடணும் ,ஒருவேலதான் பிழைப்போம் ,.........நு சொல்லி முடிக்ர முன்னாடியே பயத்துல செத்துடுவான்

இப்படிதான் அணு உலை எதிர்ப்பு பிரசாரங்கள் உள்ளது)

2. அணு உலை ஆரம்பிக்கபட்டபோது அந்த இடத்தில் உள்ளவர்களுக்கு இடம் போனதால் ,வீட்டுக்கொருவருக்கு வேலை கொடுக்கப்பட்டது ,இப்போது முழுதாக பணி முடிந்து விட்டதால் ,அவர்களுக்கு வேலை இல்லை ,இனி அடுத்த பிளாண்ட் ஆர்ம்பிக்கும் போதுதான் வேலை வரும் ,அதுவரை ?அதனாலேயே எதிர்பதற்க்கு
இந்த இரு காரணங்களும் சொல்லப்படுகிறது

இவர்கள் இவ்வாறு எதிர்பதை விட தகுந்த பாதுகாப்பு வேண்டி போராடலாம்

சிறந்த கதிரியக்க தடுப்புகள் ,மாதம் இருமுறை மருத்துவ சோதனை இலவசமாக வேண்டும் ,பிரோடெக்டிங்க் ஷீல்ட் வைக்கவேண்டும் என்று போராடலாம்

புகுஷிமா அணுஉலை பூகம்பம் ஏற்படும் போது கட்லில் இருந்து நீர் எடுத்து அணுஉலையை குளிர்விக்க பயன்படுத்தும் ராட்சத பைப் கள் ,உடைந்து போனது ,எமர்ஜென்ஸி பைப் களுக்கு மின்சாரம் தேவை ,மின்சாரம் தேவை என்றால் அணு உலை இயங்க வேண்டும் ,குளிர்விக்க முடியாமல் அணுஉலை வெடித்தது ,மேலும் அதன் ஆயுள் கால்ம் 20 ஆண்டுகள் அதையும் தாண்டி 20 ஆண்டுகள் பழமயானது ,மேலும் அது பூகம்பம் அதிகமா நடைபெறும் இடத்தில் உள்ளது

செர்நோபில் தெரிந்தே நடந்த விபத்து ,இந்த அலுத்ததில் சோதனை செய்ய கூடாது என்று தெரிந்த பின்னும் செய்தது (இதை பற்றிய முழு விபரங்கள் தெரியவில்லை ,தெரியும் போது சொல்கிறேன் )

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு பற்றி இணயத்தில் படித்து கொண்டிருந்தபோது ஒருவர் அனுப்பிய பின்னோட்டம் இது

அப்துல்கலாம் ராக்கெட் விஞ்ஞானி அவருக்கு அணு பற்றி தெரியாது அதனால் அவர் சொல்வதை கேட்கமாட்டோம் ,சரி அணு விஞ்ஞானி கள் சொல்கிறார்களே ,அதையும் கேட்க மாட்டோம் என்றால் யார் சொன்னால் தான் கேட்பீர்கள் ?
பேசாமல் விஞ்ஞானிகளுக்கு பதில் மத்திய அரசு போராடுகிற உங்களை வேலைக்கு அமர்த்துமாறு போராடுங்கள் ,நீங்கள் எல்லாரும் சிறந்த விஞ்ஞானிகள் அல்லவா ........................

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 01, 2012 2:50 pm

(மேலும் இங்கு அணு உலை எதிர்ப்பு பிரசாரங்கள் மக்களின் பயத்தை அதிகரித்து தூண்டிவிடுவது போல உள்ளது ,
உதாரணம் -பாம்பு கடித்தால் விஷம் ஏறும் உடனே மருத்துவ மனைக்கு சென்று ஸ்னேக் வேனோம் இஞ்செக்சன் போட்டால் சரியாகிவிடும் என்பதற்கும் , பாம்பு கடிச்சிட்டுனா ,அவ்ளோதான் விஷம் ஏறிடும்,உடம்பு பூரா பரவிடும் ,நீல கலர் ஆயிடும் ,செத்துடுவோம் ,ஹாஸ்பிடல் போனும் ,ஊசி போடணும் ,ஒருவேலதான் பிழைப்போம் ,.........நு சொல்லி முடிக்ர முன்னாடியே பயத்துல செத்துடுவான்
இப்படிதான் அணு உலை எதிர்ப்பு பிரசாரங்கள் உள்ளது)

சிறந்த கதிரியக்க தடுப்புகள் ,மாதம் இருமுறை மருத்துவ சோதனை இலவசமாக வேண்டும் ,பிரோடெக்டிங்க் ஷீல்ட் வைக்கவேண்டும் என்று போராடலாம்

சல்யூட் to rajarun ... சரியாக சொன்னீர்கள்... சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக