புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
25 Posts - 38%
heezulia
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
2 Posts - 3%
prajai
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
8 Posts - 2%
prajai
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_m10அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Feb 01, 2012 11:50 am

அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!

முப்பது ஆண்டுகளுக்கு முன்.

காரைக்குடியில் கம்பர் விழா; என் தலைமையில் கவியரங்கம்.இத்தகு சபையினில், சினிமாக்காரர்களை ஏற்ற மாட்டார் திரு.கம்பனடிப் பொடிகள் விதிவிலக்காக -

அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Vikatan-Vali-Series-2

கண்ணதாசனைக் கவியரங்கத் தலைமைக்கு அழைத்தார். அடுத்த வருடம் அடியேனுக்கு வந்தது அந்த வாய்ப்பு.

‘வாலியைக் கூப்பிடலாம்; வாலியைக் கூப்பிடலாம்’ என்று கம்பனடிப் பொடிகளுக்கு விடாமல் வேப்பிலை அடித்தவர் - காரைக்குடி மக்கள் கவிஞர் திரு.அரு. நாகப்பன்.

ஒருவழியாக, என்னை ஏற்றுக்கொண்ட கம்பனடிப் பொடிகள் -

‘கவிதையை, வாலி முன்கூட்டியே அனுப்ப வேண்டும்’ என்று ஒரு கண்டிஷன் போட்டார்.

அதற்கு நான் ‘அது சாத்தியமில்லை’ என்று சொன்ன கையோடு -

‘நான் திருச்சியில் வந்து இறங்குவேன்; அங்கிருந்து என்னைக் காரைக்குடிக்குக் காரில் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று தீர்மானமாகச் சொன்னேன்.

ஏனெனில், சென்னையிலிருந்து காரைக்குடிக்கு ரயிலில் செல்வதானால் - அது மெயின் லைன் வழியாகத்தான் போகும்; தலையைச் சுற்றி மூக்கைத் தொடும்!

‘இப்படிக் கண்டிஷன் போடுகிறானே!’ என்றெண்ணாமல் -

கொஞ்சம் வெகுளியோடும் கொஞ்சம் வியப்போடும் -

என் வேண்டுகோள்களை ஏற்றார், சட்டையைச் சட்டை செய்யாத கம்பனடிப் பொடிகள்; ஆம்; அவர் சட்டை அணியாதவர்!

மயிலாசனத்தில் நான்; ம.வே.பசுபதி, மரியதாஸ், அரு.நாகப்பன், பெரி.சிவனடியான், தமிழவேள், கம்பராமன், பாவலர் மணிசித்தன் முதலிய மகாக் கவிகள் என் தலைமையில்!

முன் வரிசையில் - ம.பொ.சி; ஏ.என்.சிவராமன்; ஜஸ்டிஸ் மகாராஜன்; கி.வா.ஜ; அ.ச.ஞானசம்பந்தம், தெ.பொ.மீ; ஜி.கே.சுந்தரம் - என

முத்தமிழில் துறைபோன மூதறிஞர் பலர். தகவார்ந்த மனிதரும் தருக்கேறி என்னணம் தரைசேர்ந்தார் என்பது பற்றிப் பாடினேன்.

‘மனத்தாலே மனிதகுலம்
மேம்பா டெய்தும்; நல்ல
மனங்கெட்டால் மானுடம்தான்
மெல்லச் சாகும்; கொண்ட
தனத்தாலே கல்வியாலே
தருக்கு ஏறித் - தலை
கனத்தாலே கனத்த தலை
கவிழ்ந்து போகும்!’

- இப்படிப் பாடிவிட்டு, இதற்கு உதாரணமாய் இலங்கை வேந்தைச் சொன்னேன்.

‘விலங்கு மனம் கொண்டிருந்தான்
இலங்கை வேந்தன்; அந்த
விலங்கு இனம் தன்னாலே
வீழ்ச்சி யுற்றான்; சிறு
குரங்கு என அதன் வாலில்
தீவைத்தானே - அது
கொளுத்தியதோ அவனாண்ட தீவைத்தானே!’

- இதைக் கேட்டு ‘தீவைத்தானே சிலேடை பிரமாதம்’ என வாய்விட்டுக் கூவிக் கை தட்டினார் சிலம்புச் செல்வர்!

கவியரங்கம் முடிந்த பின், முன் வரிசையில் அமர்ந்திருந்த கி.வா.ஜ. மேடைக்கு வந்து, என் முதுகில் தட்டிக் கொடுத்து ‘நீர் பாடியபடி - நீர் எந்தக் காலத்திலும் தருக்கில்லாமல் இருக்கக் கடவது!’ என ஆசீர்வதித்தார்.

நான் - அன்று முதல் ‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்!

செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது. இதைத்தான் ‘விநாச காலே விபரீத புத்தி!’ என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. காரியங்களை நாமறிவோம்; காரணங்களை, நாயகனே அறிவான்!

ஒரு பழம்பாடல்.

’வால் நீண்ட கரிக்குருவி
வலமிருந்து இடம் போனால் - கால்நடையாய்ச்
சென்றவர்தாம்
கனக தண்டிகை ஏறுவாரே!’

- கனக தண்டிகை என்றால், தங்கப்பல்லக்கு. கரிக்குருவி என்பது ‘வலியன்’ எனும் பறவை. இதைத்தான் ஆண்டாள் ‘ஆனைச் சாத்தான்’ எனத் திருப்பாவையில் பாடுகிறாள்.

இந்த கரிக்குருவி - இடம் இருந்து வலம் போனால் - கனக தண்டிகை ஏறியோர் கால்நடையாய்ச் செலக்கூடும் எனப் பொருள் கொள்ள வேண்டும்!

இதனை எண்ணுங்கால் - திரைத் துறையில் சிலரது தாழ்வு - என்னைத் திகைக்க வைக்கிறது!

‘இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!’

இப்படி ஒரு கடித்தத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்தபோதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்!

எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்; அவருக்கா இப்படி ஒரு சிரமம்?

அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Vaali
ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’. எம்.எஸ்.வி.யுடன் அமர்ந்திருக்கிறேன். அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய்! வாலி!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்க சிரிக்க அளவளாவிவிட்டு, “வாலி!உன் டிரைவரைவிட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!”

எவ்வளவு பெரிய நடிகர்! எம்.ஜி.ஆர்; சிவாஜி படங்களில் அவர்களைவிட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி - பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?

என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி; ஒரு நடிகை! என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்; எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்!’ என்று சொன்னதும் -

நான் நூறு சுக்களாய் நொறுங்கிப் போனேன்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருந்தார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.

நான் கவனித்துவிட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான்; இப்போ, சினிமாவில் பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி!’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை வணங்குகிறேன்.

‘ஓ! நீங்கதான் அந்த வாலியா?’ என்று என் கைகளைப் பற்றுகிறார்.

அவர் தொட மாட்டாரா என்று தமிழரர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.

அவர் தொட்டதால் அல்ல; அவரை மக்கள் கவனியாது விட்டதால்!

காலம் எப்படி எல்லாம் காட்டுகிறது - தன் ஆளுமையை!

இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை!

என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு.இளங்கோவன்!

என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு. சந்திரபாபு அவர்கள்.

நாடகம் எழுதித் தரக்கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி. சாவித்திரி அவர்கள்!

எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் -

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர்.

இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்:

அடக்கமாகும் வரை
அடக்கமாக இரு!

- கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 01, 2012 11:54 am

மகிழ்ச்சி நல்ல பகிர்வு

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 01, 2012 12:12 pm

உண்மையிலுமே நல்ல பகிர்வு இது.
யாரும் யாரை விடவும் உயர்ந்தவர்கள் இல்லை.
ஒரு காலத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் உயர்வான நிலைக்கு வருவார்கள்.உயர்வான நிலையில் இருப்பவர்கள் தாழ்வான நிலைக்கும் வருவார்கள்




அடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Uஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Dஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Aஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Yஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Aஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Sஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Uஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Dஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! Hஅடக்கமாகும் வரை அடக்கமாக இரு! A
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Feb 01, 2012 12:28 pm

மிகவும் அருமையான பதிவு...பிரசன்னா ...விரும்பினேன். எல்லோரும் இதில் அடக்கம். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக