Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!
3 posters
Page 1 of 1
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!
முப்பது ஆண்டுகளுக்கு முன்.
காரைக்குடியில் கம்பர் விழா; என் தலைமையில் கவியரங்கம்.இத்தகு சபையினில், சினிமாக்காரர்களை ஏற்ற மாட்டார் திரு.கம்பனடிப் பொடிகள் விதிவிலக்காக -
கண்ணதாசனைக் கவியரங்கத் தலைமைக்கு அழைத்தார். அடுத்த வருடம் அடியேனுக்கு வந்தது அந்த வாய்ப்பு.
‘வாலியைக் கூப்பிடலாம்; வாலியைக் கூப்பிடலாம்’ என்று கம்பனடிப் பொடிகளுக்கு விடாமல் வேப்பிலை அடித்தவர் - காரைக்குடி மக்கள் கவிஞர் திரு.அரு. நாகப்பன்.
ஒருவழியாக, என்னை ஏற்றுக்கொண்ட கம்பனடிப் பொடிகள் -
‘கவிதையை, வாலி முன்கூட்டியே அனுப்ப வேண்டும்’ என்று ஒரு கண்டிஷன் போட்டார்.
அதற்கு நான் ‘அது சாத்தியமில்லை’ என்று சொன்ன கையோடு -
‘நான் திருச்சியில் வந்து இறங்குவேன்; அங்கிருந்து என்னைக் காரைக்குடிக்குக் காரில் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று தீர்மானமாகச் சொன்னேன்.
ஏனெனில், சென்னையிலிருந்து காரைக்குடிக்கு ரயிலில் செல்வதானால் - அது மெயின் லைன் வழியாகத்தான் போகும்; தலையைச் சுற்றி மூக்கைத் தொடும்!
‘இப்படிக் கண்டிஷன் போடுகிறானே!’ என்றெண்ணாமல் -
கொஞ்சம் வெகுளியோடும் கொஞ்சம் வியப்போடும் -
என் வேண்டுகோள்களை ஏற்றார், சட்டையைச் சட்டை செய்யாத கம்பனடிப் பொடிகள்; ஆம்; அவர் சட்டை அணியாதவர்!
மயிலாசனத்தில் நான்; ம.வே.பசுபதி, மரியதாஸ், அரு.நாகப்பன், பெரி.சிவனடியான், தமிழவேள், கம்பராமன், பாவலர் மணிசித்தன் முதலிய மகாக் கவிகள் என் தலைமையில்!
முன் வரிசையில் - ம.பொ.சி; ஏ.என்.சிவராமன்; ஜஸ்டிஸ் மகாராஜன்; கி.வா.ஜ; அ.ச.ஞானசம்பந்தம், தெ.பொ.மீ; ஜி.கே.சுந்தரம் - என
முத்தமிழில் துறைபோன மூதறிஞர் பலர். தகவார்ந்த மனிதரும் தருக்கேறி என்னணம் தரைசேர்ந்தார் என்பது பற்றிப் பாடினேன்.
‘மனத்தாலே மனிதகுலம்
மேம்பா டெய்தும்; நல்ல
மனங்கெட்டால் மானுடம்தான்
மெல்லச் சாகும்; கொண்ட
தனத்தாலே கல்வியாலே
தருக்கு ஏறித் - தலை
கனத்தாலே கனத்த தலை
கவிழ்ந்து போகும்!’
- இப்படிப் பாடிவிட்டு, இதற்கு உதாரணமாய் இலங்கை வேந்தைச் சொன்னேன்.
‘விலங்கு மனம் கொண்டிருந்தான்
இலங்கை வேந்தன்; அந்த
விலங்கு இனம் தன்னாலே
வீழ்ச்சி யுற்றான்; சிறு
குரங்கு என அதன் வாலில்
தீவைத்தானே - அது
கொளுத்தியதோ அவனாண்ட தீவைத்தானே!’
- இதைக் கேட்டு ‘தீவைத்தானே சிலேடை பிரமாதம்’ என வாய்விட்டுக் கூவிக் கை தட்டினார் சிலம்புச் செல்வர்!
கவியரங்கம் முடிந்த பின், முன் வரிசையில் அமர்ந்திருந்த கி.வா.ஜ. மேடைக்கு வந்து, என் முதுகில் தட்டிக் கொடுத்து ‘நீர் பாடியபடி - நீர் எந்தக் காலத்திலும் தருக்கில்லாமல் இருக்கக் கடவது!’ என ஆசீர்வதித்தார்.
நான் - அன்று முதல் ‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்!
செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது. இதைத்தான் ‘விநாச காலே விபரீத புத்தி!’ என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. காரியங்களை நாமறிவோம்; காரணங்களை, நாயகனே அறிவான்!
ஒரு பழம்பாடல்.
’வால் நீண்ட கரிக்குருவி
வலமிருந்து இடம் போனால் - கால்நடையாய்ச்
சென்றவர்தாம்
கனக தண்டிகை ஏறுவாரே!’
- கனக தண்டிகை என்றால், தங்கப்பல்லக்கு. கரிக்குருவி என்பது ‘வலியன்’ எனும் பறவை. இதைத்தான் ஆண்டாள் ‘ஆனைச் சாத்தான்’ எனத் திருப்பாவையில் பாடுகிறாள்.
இந்த கரிக்குருவி - இடம் இருந்து வலம் போனால் - கனக தண்டிகை ஏறியோர் கால்நடையாய்ச் செலக்கூடும் எனப் பொருள் கொள்ள வேண்டும்!
இதனை எண்ணுங்கால் - திரைத் துறையில் சிலரது தாழ்வு - என்னைத் திகைக்க வைக்கிறது!
‘இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!’
இப்படி ஒரு கடித்தத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்தபோதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்!
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்; அவருக்கா இப்படி ஒரு சிரமம்?
ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’. எம்.எஸ்.வி.யுடன் அமர்ந்திருக்கிறேன். அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய்! வாலி!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்க சிரிக்க அளவளாவிவிட்டு, “வாலி!உன் டிரைவரைவிட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!”
எவ்வளவு பெரிய நடிகர்! எம்.ஜி.ஆர்; சிவாஜி படங்களில் அவர்களைவிட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி - பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?
என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி; ஒரு நடிகை! என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்; எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்!’ என்று சொன்னதும் -
நான் நூறு சுக்களாய் நொறுங்கிப் போனேன்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருந்தார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.
நான் கவனித்துவிட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான்; இப்போ, சினிமாவில் பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி!’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை வணங்குகிறேன்.
‘ஓ! நீங்கதான் அந்த வாலியா?’ என்று என் கைகளைப் பற்றுகிறார்.
அவர் தொட மாட்டாரா என்று தமிழரர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.
அவர் தொட்டதால் அல்ல; அவரை மக்கள் கவனியாது விட்டதால்!
காலம் எப்படி எல்லாம் காட்டுகிறது - தன் ஆளுமையை!
இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை!
என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு.இளங்கோவன்!
என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு. சந்திரபாபு அவர்கள்.
நாடகம் எழுதித் தரக்கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி. சாவித்திரி அவர்கள்!
எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் -
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர்.
இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்:
அடக்கமாகும் வரை
அடக்கமாக இரு!
- கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
முப்பது ஆண்டுகளுக்கு முன்.
காரைக்குடியில் கம்பர் விழா; என் தலைமையில் கவியரங்கம்.இத்தகு சபையினில், சினிமாக்காரர்களை ஏற்ற மாட்டார் திரு.கம்பனடிப் பொடிகள் விதிவிலக்காக -
கண்ணதாசனைக் கவியரங்கத் தலைமைக்கு அழைத்தார். அடுத்த வருடம் அடியேனுக்கு வந்தது அந்த வாய்ப்பு.
‘வாலியைக் கூப்பிடலாம்; வாலியைக் கூப்பிடலாம்’ என்று கம்பனடிப் பொடிகளுக்கு விடாமல் வேப்பிலை அடித்தவர் - காரைக்குடி மக்கள் கவிஞர் திரு.அரு. நாகப்பன்.
ஒருவழியாக, என்னை ஏற்றுக்கொண்ட கம்பனடிப் பொடிகள் -
‘கவிதையை, வாலி முன்கூட்டியே அனுப்ப வேண்டும்’ என்று ஒரு கண்டிஷன் போட்டார்.
அதற்கு நான் ‘அது சாத்தியமில்லை’ என்று சொன்ன கையோடு -
‘நான் திருச்சியில் வந்து இறங்குவேன்; அங்கிருந்து என்னைக் காரைக்குடிக்குக் காரில் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று தீர்மானமாகச் சொன்னேன்.
ஏனெனில், சென்னையிலிருந்து காரைக்குடிக்கு ரயிலில் செல்வதானால் - அது மெயின் லைன் வழியாகத்தான் போகும்; தலையைச் சுற்றி மூக்கைத் தொடும்!
‘இப்படிக் கண்டிஷன் போடுகிறானே!’ என்றெண்ணாமல் -
கொஞ்சம் வெகுளியோடும் கொஞ்சம் வியப்போடும் -
என் வேண்டுகோள்களை ஏற்றார், சட்டையைச் சட்டை செய்யாத கம்பனடிப் பொடிகள்; ஆம்; அவர் சட்டை அணியாதவர்!
மயிலாசனத்தில் நான்; ம.வே.பசுபதி, மரியதாஸ், அரு.நாகப்பன், பெரி.சிவனடியான், தமிழவேள், கம்பராமன், பாவலர் மணிசித்தன் முதலிய மகாக் கவிகள் என் தலைமையில்!
முன் வரிசையில் - ம.பொ.சி; ஏ.என்.சிவராமன்; ஜஸ்டிஸ் மகாராஜன்; கி.வா.ஜ; அ.ச.ஞானசம்பந்தம், தெ.பொ.மீ; ஜி.கே.சுந்தரம் - என
முத்தமிழில் துறைபோன மூதறிஞர் பலர். தகவார்ந்த மனிதரும் தருக்கேறி என்னணம் தரைசேர்ந்தார் என்பது பற்றிப் பாடினேன்.
‘மனத்தாலே மனிதகுலம்
மேம்பா டெய்தும்; நல்ல
மனங்கெட்டால் மானுடம்தான்
மெல்லச் சாகும்; கொண்ட
தனத்தாலே கல்வியாலே
தருக்கு ஏறித் - தலை
கனத்தாலே கனத்த தலை
கவிழ்ந்து போகும்!’
- இப்படிப் பாடிவிட்டு, இதற்கு உதாரணமாய் இலங்கை வேந்தைச் சொன்னேன்.
‘விலங்கு மனம் கொண்டிருந்தான்
இலங்கை வேந்தன்; அந்த
விலங்கு இனம் தன்னாலே
வீழ்ச்சி யுற்றான்; சிறு
குரங்கு என அதன் வாலில்
தீவைத்தானே - அது
கொளுத்தியதோ அவனாண்ட தீவைத்தானே!’
- இதைக் கேட்டு ‘தீவைத்தானே சிலேடை பிரமாதம்’ என வாய்விட்டுக் கூவிக் கை தட்டினார் சிலம்புச் செல்வர்!
கவியரங்கம் முடிந்த பின், முன் வரிசையில் அமர்ந்திருந்த கி.வா.ஜ. மேடைக்கு வந்து, என் முதுகில் தட்டிக் கொடுத்து ‘நீர் பாடியபடி - நீர் எந்தக் காலத்திலும் தருக்கில்லாமல் இருக்கக் கடவது!’ என ஆசீர்வதித்தார்.
நான் - அன்று முதல் ‘நான்’ இல்லாமல் வாழப் பயின்றேன்!
செருக்கு மட்டுமல்ல; சூழலும் சிலர் சரிவுக்குக் காரணமாகிறது. இதைத்தான் ‘விநாச காலே விபரீத புத்தி!’ என்று சாத்திரங்கள் சாற்றுகின்றன. காரியங்களை நாமறிவோம்; காரணங்களை, நாயகனே அறிவான்!
ஒரு பழம்பாடல்.
’வால் நீண்ட கரிக்குருவி
வலமிருந்து இடம் போனால் - கால்நடையாய்ச்
சென்றவர்தாம்
கனக தண்டிகை ஏறுவாரே!’
- கனக தண்டிகை என்றால், தங்கப்பல்லக்கு. கரிக்குருவி என்பது ‘வலியன்’ எனும் பறவை. இதைத்தான் ஆண்டாள் ‘ஆனைச் சாத்தான்’ எனத் திருப்பாவையில் பாடுகிறாள்.
இந்த கரிக்குருவி - இடம் இருந்து வலம் போனால் - கனக தண்டிகை ஏறியோர் கால்நடையாய்ச் செலக்கூடும் எனப் பொருள் கொள்ள வேண்டும்!
இதனை எண்ணுங்கால் - திரைத் துறையில் சிலரது தாழ்வு - என்னைத் திகைக்க வைக்கிறது!
‘இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் - இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்!’
இப்படி ஒரு கடித்தத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் ஓரிரு சமயங்களில் வந்தபோதெல்லாம், எனக்கு வியர்த்துக் கொட்டும்!
எவ்வளவு பெரிய எழுத்தாளர்; எப்படியிருந்தவர்; அவருக்கா இப்படி ஒரு சிரமம்?
ஒரு கம்பெனியில் பாட்டு ‘கம்போஸிங்’. எம்.எஸ்.வி.யுடன் அமர்ந்திருக்கிறேன். அந்தக் கம்பெனி மாடியில் குடியிருக்கும் ஒருவர் ‘ஹாய்! வாலி!’ என்று இறங்கி வருகிறார். என்னோடும் விசுவநாத அண்ணனோடும் - சிரிக்க சிரிக்க அளவளாவிவிட்டு, “வாலி!உன் டிரைவரைவிட்டு, ஒரு பாக்கெட் ‘பர்க்லி’ சிகரெட் வாங்கிண்டு வரச் சொல்லேன். 555 வாங்க இப்பெல்லாம் வசதியில்லே!”
எவ்வளவு பெரிய நடிகர்! எம்.ஜி.ஆர்; சிவாஜி படங்களில் அவர்களைவிட அதிகம் சம்பளம் வாங்கியவர்! படுக்கையறைக்கே கார் வரும் மாதிரி - பங்களா கட்டியவர்! எங்கே போனது அந்த வாழ்வும் வளமும்?
என் வீட்டு வாசலில் ஒரு டாக்ஸி; ஒரு நடிகை! என்னைப் பார்க்க வந்தவர், ‘வாலி சார்; எனக்கு ஒரு நாடகம் எழுதிக் கொடுங்க; நான் ஒரு ட்ரூப் வெச்சு, நடத்தலாம்னு இருக்கேன்!’ என்று சொன்னதும் -
நான் நூறு சுக்களாய் நொறுங்கிப் போனேன்!
சென்னை எழும்பூர் ரயில் நிலையம். சிமென்ட் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருந்தார். இன்றைய தலைமுறைக்கு அவரைத் தெரியவில்லை.
நான் கவனித்துவிட்டேன். ஓடிப் போய் அவரருகே சென்று, ‘நமஸ்காரம் அண்ணா! நானும் உங்க மாதிரி திருச்சிக்காரன் தான்; இப்போ, சினிமாவில் பாட்டு எழுதிண்டிருக்கேன். என் பேரு வாலி!’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரை வணங்குகிறேன்.
‘ஓ! நீங்கதான் அந்த வாலியா?’ என்று என் கைகளைப் பற்றுகிறார்.
அவர் தொட மாட்டாரா என்று தமிழரர்கள் ஏங்கித் தவமிருந்த காலம் ஒன்று உண்டு. அவர் என்னைத் தொடுகிறார். நான் சிலிர்த்துப் போகிறேன்.
அவர் தொட்டதால் அல்ல; அவரை மக்கள் கவனியாது விட்டதால்!
காலம் எப்படி எல்லாம் காட்டுகிறது - தன் ஆளுமையை!
இப்போது எண்ணிப் பார்க்கிறேன், அந்தப் பழைய நிகழ்வுகளை!
என்னிடம் கடிதம் அனுப்பிப் பணம் கேட்டவர், ‘கண்ணகி’க்கு உயிர் கொடுத்த, உலகு புகழ் உரையாடல்களை எழுதிய திரு.இளங்கோவன்!
என்னிடம் சிகரெட் கேட்டவர் ‘மாடி வீட்டு ஏழை’யான திரு. சந்திரபாபு அவர்கள்.
நாடகம் எழுதித் தரக்கேட்டவர் - நடிகையர் திலகம் திருமதி. சாவித்திரி அவர்கள்!
எழும்பூர் ரயில் நிலையத்தில் எவர் கவனத்தையும் ஈர்க்காமல் அமர்ந்திருந்தவர் -
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் டூப்பர் ஸ்டார் - திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர்.
இவர்களைவிடவா நான் மேலானவன்? எனவே எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்:
அடக்கமாகும் வரை
அடக்கமாக இரு!
- கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!
உண்மையிலுமே நல்ல பகிர்வு இது.
யாரும் யாரை விடவும் உயர்ந்தவர்கள் இல்லை.
ஒரு காலத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் உயர்வான நிலைக்கு வருவார்கள்.உயர்வான நிலையில் இருப்பவர்கள் தாழ்வான நிலைக்கும் வருவார்கள்
யாரும் யாரை விடவும் உயர்ந்தவர்கள் இல்லை.
ஒரு காலத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் உயர்வான நிலைக்கு வருவார்கள்.உயர்வான நிலையில் இருப்பவர்கள் தாழ்வான நிலைக்கும் வருவார்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!
மிகவும் அருமையான பதிவு...பிரசன்னா ...விரும்பினேன். எல்லோரும் இதில் அடக்கம்.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|