புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
426 Posts - 48%
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
29 Posts - 3%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்!


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:54 am

நக்கீரன்


தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள்.

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!


திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர்.

பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.

நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர்
நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையீசர்,
கருவூரார், கொங்கணர், காலாஞ்சி
எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி
தேரையர், குதம்பையர், சட்டைநாதர்


இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழி கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.

எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார்.

எனக்கு முன்னே
சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில்


என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில்-

அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்


என அடித்துச் சொல்கிறார்.

தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம்.

தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது.

தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. .

சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள்.

சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:55 am

சித்தர்களில் திருமூலர் முதன்மை இடம் வகிக்கிறார். அவர் பாடிய திருமந்திரம் 3,027 பாடல்களைக் கொண்டது. இதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படையை விளக்குகிறது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே' என்ற இவரது கூற்று பேரறிஞர் அண்ணாவுக்கும் அவர் தம்பிமார்க்கும் சம்மதமே.

அண்ணா வேலைக்காரி திரைப்படத்தில் சாதியைச் சாடுவதற்கு திருமூலரின் "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற முழக்கத்தைக் கையில் எடுத்தார்.

தேரையர் என்ற சித்தர் எழுதிய "நோய்யணுகா விதி" சிறந்த மருத்துவ நூல் என்பர்.

இன்னொரு புகழ்பெற்ற சித்தர் அகத்தியர். அகத்தியம் என்ற இலக்கண நூல் செய்த அகத்தியர் வேறு இவர் வேறு. அகத்தியர் என்ற பெயரில் பலர் இருந்திருக்கிறார்கள்.

"தேடுகின்ற புராணமெல்லாம் பொய்யே என்றேன்
ஆடுகின்ற தீர்த்தமெல்லாம் அசுத்த மென்றேன்"


என்பார் அகத்தியர்.

'மூர்க்கருடன் பழகாதே பொய் சொல்லாதே
பின்னே நீ திரியாதே பிணங்கிடாதே'


என்பது நக்கீரர் கூற்று.

தமிழ்ச் சமுதாயத்தில் இன்றும் பெரு நோயாக உள்ள சாதியை சித்தர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள். மேல் சாதி கீழ் சாதி, சாதிக்குள் சாதி இவற்றை அன்றே பொய் எனத் துணிந்து சாடிய நெறி சித்தர்களது என்பது குறிப்பிடத்தக்கது.

'சாதி குலமில்லை, சற்குருவறிந்தால்'
'சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்'
'சாதிபேதம் என்பதொன்று சற்றுமில்லை இல்லையே'


எனப் பலர் சித்தர்கள் சாதிக் கொடுமையை எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்கள். சாதிப் பிரிவை மிகுதிப்படுத்தி வளர்க்கும் சடங்கு, ஆசார, சாத்திரக் குப்பைகளால் தீமையேயன்றி அணுவளவும் நன்னை இல்லை என்றார்கள்.

'கலையுரைத்த கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண் மூடிப் போக'


என அருட்பெருஞ் சோதி தனிப் பெருங் கருணை என்ற சமரச சன்மார்க்கத்தைக் காட்டிய இராமலிங்க அடிகள் கூறுகிறார்.

இன்னொரு புகழ்பெற்ற சித்தர் சிவவாக்கியர். ஆனால் இவரது பெயர் பதிணென் சித்தர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை.. இருந்தும் சித்தர்களில் இவர் ஒரு அதிதீவிரப் போக்குடைய சித்தர் ஆவார். ஒரு சில சித்தர் பாடல்கள் பதிப்புக்களில் இவரது பெயர் முதல் இடம் பெற்றுள்ளது.

மொத்த சித்தர்களின் எண்ணிக்கை 50 க்கு மேல் இருக்கிறது!

சிவவாக்கியர் சாதி, சமயம், கோயில், குளம், மந்திரம் தந்திரம், ஆசாரம் சடங்கு போன்ற குருட்டு நம்பிக்கைகளை மிகவும் கடுமையாகத் தாக்கிய புரட்சியாளர். ஒவ்வொரு பாடல்களிலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சீற்றம், வெறுப்பு துலாம்பரமாகத் தெரிகிறது.

இதனால் அரண்டு போன சைவ ஆதீனங்கள் நாட்டிலுள்ள சிவவாக்கியர் பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளை தேடி எடுத்துக் கொளுத்தினார்கள்.

சித்தர்களின் பாடல்கள் ஓசை நயம் மிக்கவை. பழகு தமிழில் பாடப்பட்டவை. இருந்தும் மறைபொருள் பொருள் கொண்டவை. பாடல்களைப் படிக்கும் போது நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் இருக்கக் காணலாம்.

'நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?'


சிவவாக்கியர் பாடிய இந்தப் பாடல் நாடறிந்த பாடல்.

சுட்ட சட்டியும் அதில் வேகுகின்ற கறியைக் கிளறுகின்ற கரண்டியும் அந்தக் கறிச்சுவையை அறியாதது போல, பரம்பொருள் நம் உள்ளத்தே இருக்க அதை அறியாமல் கற்சிலைக்கு நான்கு வகை மலர்கள் சாற்றுவதும் அதைச் சுற்றி வந்து முணு முணுக்கும் மந்திரம் எங்குள்ளது?

நட்ட கல் பேசுமோ? பேசாது!

இவ்வாறு உருவ வழிபாட்டை மறுத்து சிவவாக்கியர் நாத்திகவாதம் பேசுகிறார். இவ்வாறு 534 பாடல்களில் சிவவாக்கியர் உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் அஞ்சாது சாடி சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்துள்ளார்.

சிவவாக்கியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. அவரது இயற்பெயர், ஊர், பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிவவாக்கியம் என்ற இவரது நூலின் காப்புச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரிலேயே இவர் சிவவாக்கியர் எனக் குறிப்பிடப்படுகிறார்.

சிவவாக்கியர் தாயுமானவரால் குறிப்பிடப்படும் பெருமை பெற்றவர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:59 am

சாதியும் தீண்டாமையும் இந்து மதத்தை பீடித்துள்ள நோய்கள்!

இன்று உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். இது கேட்பதற்கு கசப்பாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இதற்கு அந்த மதத்தின் எளிமை. எல்லாம் வல்ல, எல்லாம் தெரிந்த, எங்கும் நிறைந்த, உருவம் அற்ற ஒரு கடவுளை வணங்குவது காரணமாக இருக்கலாம்.

இஸ்லாம் மதத்தின் வேத நூல் குரான் மட்டுமே. அரபு மொழியில் எழுதப்பட்ட குரானில் 114 அத்தியாயங்கள், 6,666 வசனங்கள், 1,709 பக்கங்கள், 336,233 சொற்கள் காணப்படுகின்றன. குரானை கபிரியல் என்ற தேவ தூதன் 23 ஆண்டு (கி.பி. 610-கி.பி.632) காலப் பகுதியில் முகமது நபிக்கு அருளியதாகச் சொல்லப்படுகிறது.

கிறித்தவ மதத்தின் வேத நூல்களின் எண்ணிக்கை 66. அத்தியாயங்கள் 1,709. வசனங்கள் 31,173. பக்கங்கள் 1,709, சொற்கள் 774,746 காணப்படுகின்றன. 66 புத்தகங்களும் (27 பழைய ஏற்பாடு) 3 மொழிகளில் கிட்டத்தட்ட 1,500 ஆண்டு காலம் எழுதப்பட்டது. பழைய ஏற்பாட்டை ஹீப்புரூ மொழியில் எழுதிய முதல் மனிதர் மோசஸ். அதை எழுதி முடிக்க 1,000 ஆண்டுகள் எடுத்தது. அதில் சில அத்தியாயங்கள் அறாமிக் (யுசயஅiஉ) மொழியில் எழுதப்பட்டது. பழைய ஏற்பாடு கி.மு. 300 ஆண்டளவில் கிரேக்க மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. புதிய ஏற்பாடு கி.பி. 50-கி.பி. 100 இடைப்பட்ட காலப் பகுதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டது.

சைவசமயத்தின் அடிப்படை நூல்கள் வேதங்களும் சிவாகமங்களும் ஆகும். 'வேத நன்கினும் பெய்ப் பொருளாவது" என்ற சம்பந்தர் தேவராரத்தில் குறிப்பிட்ட இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்ற நால் வேதங்களையும் வியாசர் தொகுத்ததாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு வேதமும் நான்கு பகுதிகளைக் கொண்டவை. அவை மந்திரங்கள், பிரமாணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் எனப்படும்.

இருக்கு வேதத்தில் 1,028 பாசுரங்கள் உள்ளன. இதில் இந்திரனுக்கு 250, அக்னிக்கு 200, சோமனுக்கு 120, வருணனுக்கு 12 பாசுரங்கள் பாடப் பெற்றுள்ளன.

இந்தப் பாசுரங்கள் வெள்ளை நிறத்தவரான ஆரியர்கள் தங்கள் கருப்பு நிற எதிரிகளான தஸ்யூக்களை அழிக்குமாறும் அப்படி அழித்த கடவுளர்க்கு சோமபானம் படைத்து நன்றி பாராட்டுவன ஆகும்.

ஓ! உலகம் போற்றும் இந்திரனே!சுஷ்ரூவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றியொன்பது படைகளையும் நீ உன் தேர் சக்கரத்துக்கு இரையாக்கி நசுககிக் கொன்று ஆரியர்களுக்கு உதவிபுரிந்தாய்.

(இருக்கு வேதம் மண்டலம் மந்திரம் 53, ஸ்லோகம் 9 அதர்வணவேதம் காண்டம் ஓஓ மந்திரம் 21, சுலோகம் 9)

சோமன் என்பது உருவகம். சோமச் செடியில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் கள்ளைக் குறிப்பது. அதை ஆரியர்கள் தாங்களும் குடித்து கடவுளர்க்கும் படைத்தார்கள்.

மேலே குறிப்பிட்ட நான்கு வேதக் கடவுளர்க்கும் வழிபாடு இப்போது இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

வேதாங்கங்கள் ஆறு

1) சிக்கை - வேதங்களை உச்சரிக்கும் முறை.
2) கற்பம் - வேதக் கருமங்களை அனுட்டிப்பதைக் கூறும்.
3) வியாகரணம் - வேதங்களின் எழுத்துச் சொற்களின் இலக்கணங்களைக் கூறுவது.
4) நிருத்தம் - வேதங்களில் உள்ள சொற்களின் பொருளை அறிவிப்பது.
5) சந்தோவிசிதி - வேதங்களின் காயத்திரி, அதன் சந்தங்கள், எழுத்தின் அளவு என்பவற்றைக் கூறுவது.
6) சோதிடம் - வேத மந்திரங்களைச் சொல்வதற்கு காலங்களைக் குறிப்பது.


வேதத்தின் உபாகமங்கள் நான்கு

1) பதினெண் புராணம் - சிவன், விட்ணு, பிரமன், சூரியன், அக்கினி இவர்களின் ஆற்றல் பற்றி படிப்பறிவு குறைந்தவர்களுக்கு விளங்க வைப்பது
2) நியாயம் - வேதப் பொருளை நிட்சயிப்பதற்கு உதவுவது.
3) மீமாஞ்சை வேதப் பொருளின் தார்ப்பரியத்தை அறிய உதவுவது.
4) ஸ்மிருதி - நால் வருணம், ஆச்சிரமங்களுக்குரிய தர்மங்களைக் கூறுவது.




உப வேதங்கள் நான்கு


1) ஆயுர் வேதம் - வைத்திய நூல்
2) தனுர் வேதம் - படைக்கலப் பயிற்சி பற்றிய நூல். தனுர் என்றால் வில் என்று பொருள்.
3) காந்தருவ வேதம் - கடவுளுக்கும் மனிதருக்கும் உரிய இசையை அறிவிப்பது.
4) அருத்த வேதம் - - இம்மை மறுமைக்கு உரிய பொருள் சம்பாதித்தல் தொடர்பான சாத்திரங்களைக் கூறுவது.


மறை பொருட் கோட்பாடுகளை அறிவுறுத்தும் உப நிடதங்களின் எண்ணிக்கை 108. அதில் 12 சிறப்பானவை. இந்த உப நிடதங்களே வேதாந்தம் என அழைக்கப்படுகின்றன.

சிவாகமங்கள் 28. இவை சிவபெருமானின் ஐந்து திருமுகங்களில் இருந்து தோன்றியவை என்று நம்பப்படுகிறது. அவை நான்கு பாதங்களைக் கொண்டவை.

1) ஞானபாதம் - முப்பொருள் உண்மை
2) யோகபாதம் - அட்டாங்க சிவயோகம்
3) கிரியாபாதம் - மந்திரங்களின் உத்தாரம், சந்தியாவந்தனம், பூசை, செபம், அர்ச்சனை, ஆசாரிய, அபிசேகம்
4) சரியாபாதம் - சமயாசாரங்களை உபதேசிக்கிறது


சிவனை வேதத்தோடு இணைத்தும் வழிபாட்டினை ஆகமத்துடன் சேர்த்தும் சொல்வது சைவத்தின் பொதுப் போக்காகும். இதன் காரணமாகவே சைவத்துக்கு வேதம் பொது, ஆகமம் சிறப்பு என்று சொல்லப்படுகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 12:59 am

இன்னொரு புகழ்பெற்ற சித்தர் அகத்தியர். அகத்தியம் என்ற இலக்கண நூல் செய்த
அகத்தியர் வேறு இவர் வேறு. அகத்தியர் என்ற பெயரில் பலர்
இருந்திருக்கிறார்கள். ????????????????????எத்தனை அகத்தியர்கள் உள்ளனர் இதன் விளக்கம் இருந்தால் தரவும்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:00 am

சிவாகமங்களின் வழி நூல்கள் 207. சிவாகமங்களின் சார்பு நூல்கள் 8. பன்னிரு திருமுறைகள் வேதத்தின் வழி அல்லது சார்பு நூல்களாகும். 11 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ள 'திருமுகப்பாசுரம்' சிவனால் அருளப்பட்டது என்பர். எஞ்சியவை சிவஞானம் கைவரப்பெற்ற ஞானிகளால் பாடப்பட்டவை. வேதாகமே தமிழ் வேதமாகக் கருதப்படுகிறது.

இவற்றைவிட வேதங்கள், சிவாகமங்கள், புராணங்கள், திருமுறைகள் வழிவந்த 14 சித்தாந்த சாத்திரங்களும் உண்டு.

இவற்றை திருவியலூர் உய்யவந்த தேவர் (திருவுந்தியார்) திருக்கடவூர் உய்யவந்த தேவர் (திருக்களிற்றுப் பாடியார்) மெய்கண்ட தேவர் (சிவஞானபோதம்)

அருணந்தி சிவாச்சாரியார் (சிவஞான சித்தியார், இருபாலிருபது)திருவதிகை மனவாசகம் கடந்தார் (உண்மை விளக்கம்)

மறைஞான சம்பந்தர் (சதமணித்திரட்டு)

உமாபதி சிவாச்சாரியார் (சிவப்பிரகாசம் முதல் சங்கற்ப நிராகரணம் ஈறாக 8 சாத்திரங்கள்).

இவர்கள் 13-14 வது நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள்.

பதினான்கு சித்தாந்த சாத்திரங்களின் மூலமும் உரையும் கொண்ட நூல் மட்டும் 1206 பக்கங்கள் கொண்டவை.

குரானை முயன்றால் நெட்டுருச் செய்து கொள்ளலாம். பைபிளை படிக்க மாதங்கள் எடுக்கலாம். ஆனால் இந்து வேதாகமங்களைப் படிக்க வாழ்நாள் போதாது!

கோயில் அர்ச்சகர்கள் உட்பட வேதாகமங்களைப் படித்த சைவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

பதி (இறைவன்) பசு (உயிர்) பாசம் (ஆணவம், மாயை, கன்மம்)

ஆதி சங்கரரின் (கி.பி. 788-820) அத்துவைதம் (உயிர்களும் உலகமும் பிரமத்தின் தோற்றமே என்ற மாயாவாதம். இரண்டன்மை)

சங்கரரின் அத்துவைதத்தை மறுக்கும் இராமனுசரின் (கி.பி. 1017-1137) விசிட்டாத்துவைதம் (சித்து அசித்து இரண்டும் ஈசுவரனும் ஒன்றே)

மத்துவரின் (கி.பி. 1199-1278) துவைதம் (சீவான்மாவும் பரமான்மாவும் வேறு வேறு) இந்தக் கோட்பாடுகளை படித்து பொருள் உணர்ந்து கொண்டவர்கள் அரிது.

இதனால் சைவ சமயத்தவர்கள் அர்ச்சனை அபிசேகம் போன்ற சரியை கிரிகையோடு நின்று விடுகிறார்கள்.

இஸ்லாம், கிறித்தவம், இந்து சமயங்களுக்கு இடையில் ஒரு ஒற்றுமை உள்ளது. அது அவர்களது மத நூல்கள் அந்தந்த மதக் கடவுள் வாக்கு என்பது. வேதங்களும் ஆகமங்களும் தாமே தோன்றியவை. மனிதர்களால் இயற்றப்படாமல் இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.

தேய்ந்து வருகிற சமயங்களில் இந்து சமயம் முன்னணியில் நிற்கிறது. இதற்குக் காரணம் அந்த மதத்தில் காணப்படும் வர்ண பேதமும் சாதி அமைப்பும் வடமொழி -பிராமணிய மேலாண்மையும் ஆகும்.

கடந்த ஐப்பசி 16ஆம் நாள் பெரம்பலூர் துறைமங்கலம் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்கு பகுதியில் நடந்த புத்த மாநாட்டில் நூற்றுக் கணக்கான தலித் இந்துக்கள் மொட்டை அடித்து புத்த மதத்தில் இணைந்தனர்.

பெரம்பலூர் மாவட்ட அம்பேத்கர் இளைஞர் முன்னணி தமிழ்நாடு அமைப்பினரும், பன்னாட்டு பவுத்த இளைஞர் இயக்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

இதற்கான விழாவுக்கு அண்ணல் அம்பேத்கர் இளைஞர் முன்னணி மாநில தலைவர் கே.கந்தசாமி தலைமை தாங்கினார். டாக்டர் வேணு அண்ணாமலை முன்னிலை வகித்தார். கே.பி.தம்மசென் வரவேற்றார்.

'இந்த மத மாற்ற நிகழ்ச்சி ஒரு ஆரம்பம் தான். தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு இன்னும் சமூக நீதி கிடைக்கவில்லை. தீண்டாமை இன்னும் ஒழியவில்லை. கிராமங்களில் இன்னும் இரட்டை தம்ளர் முறை உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுகளை போக்கத்தான் தாழ்த்தப்பட்டோர் புத்த மதத்தில் சேருகின்றனர். இந்தியாவில் தோன்றிய புத்த மதத்தை புதுப்பிக்கிறோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்த மடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று' தலைவர் கந்தசாமி கூறினார்.

பவுத்த தேரர் பாதிதம்மா மற்றும் பவுத்த தேரர்கள் புத்தர் சிலைக்கு அபிசேகம் செய்தனர். அடுத்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பாலிமொழியில் மந்திரம் ஓதினர். பின்னர் புத்த மதத்தில் சேர விரும்பிய அனைவரும் பவுத்த தேரர் போதிதம்மா தலைமையில் 22 உறுதிமொழிகளைச் செய்து தீட்சை பெற்றுக் கொண்டனர்.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் நாக்பூரில் 1956 ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை கைவிட்டு புத்தமதத்தில் சேர்ந்து கொண்டார். இந்து மதத்தில் புரையோடிப் போய்விட்ட சாதி, தீண்டாமை, மூடநம்பிக்கைகள் மற்றும் சடங்குகள் இவற்றில் இருந்து விடுபடவே இந்த மதமாற்றம் இடம் பெற்றதாக அப்போது அம்பேத்கார் கூறினார்.

இந்த மதமாற்றம் பற்றி சைவ ஆதீனங்கள் கவலைப்படுவதில்லை. காஞ்சி காமகோடி பீடம் துக்கப்படுவதில்லை. சைவ-இந்து அமைப்புக்கள் வருத்தப்படுவதில்லை. இந்து பரிசத் அலட்டிக் கொள்வதில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:02 am

இவளவு படிக்கனுமா.. அப்பறமா படிச்சிட்டு சொல்றேன் திமிங்க்ஸ்..



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:08 am

இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர்! சாதிகள் சல்லி வேர்கள்!

டாக்டர் அம்பேத்கார் 1981 ஆம் ஆண்டு ஐப்பசி 15 இல் தனது 800,000 ஆதரவாளர்களோடு இந்து மதத்தை உதறிவிட்டு புத்த மதத்தை தழுவினார்.

'நான் இந்துவாக சாக மாட்டேன்!;' என்று கூறி அப்பேத்கார் மதம் மாறிய நாள் ஒவ்வொரு ஆண்டும் அதே நாக்பூரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


இந்த விழாவில் வெளிநாடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் 65,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து தலித் மக்கள் புத்த மதத்தை தழுவினார்கள்.

இந்த சிறப்பு நிகழ்ச்சியில் யப்பானில் பிறந்து இந்தியாவில் வதியும் புத்த சன்னியாசி பாந்தி நாகார்சுன் சுராய்சசாய் புத்த மதத்தை தழுவியவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

புத்தமதத்தை தழுவுகிறவர்கள் 22 உறுதி மொழிகளை எடுத்துக் கொள்கிறார்கள்.

பிரமன், விஷ்ணு, சிவன் போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.

கவுரி, கணபதி போன்றோரை கடவுள் என்று கருதவோ வழிபடவோ மாட்டேன்.

இராமன், கிருஷ்ணன் இருவரையும் கடவுள் அவதாரம் எடுக்கிறார் என்பதை நான் நம்ப மாட்டேன்.

பகவான் புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை நம்பமாட்டேன். அப்படி பரப்புரை செய்வது குறும்புத்தனமும் பொய்யானதும் ஆகும்.

நான் ஒரு போதும் சிரார்த்தம் செய்ய மாட்டேன்.

பவுத்த கோட்பாடுகளுக்கு எதிராக ஒரு போதும் நடக்க மாட்டேன்.

பிராமணர்களால் நடத்தப்படும் கிரிகைகள் எதனையும் ஏற்க மாட்டேன்.

அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.

சமத்துவத்தை ஏற்படுத்தப் பாடுபடுவேன்.

புத்த பகவானின் அட்டாங்க மார்க்கத்தைப் பின்பற்றுவேன்.

தருமத்தின் தசசீலங்களை பின்பற்றுவேன்.

எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்டுவேன். அவற்றை முடிந்த மட்டும் காப்பாற்றுவேன்.

பொய் சொல்லமாட்டேன்.

திருட மாட்டேன்.

காமத்தில் உழல மாட்டேன்;. பால் உணர்வில் அத்துமீற மாட்டேன்.

போதை தரும் குடியையோ மதுவையோ நான் அருந்தமாட்டேன்.


முடிந்த மட்டும் எனது வாழ்க்கையை பவுத்த கொள்கை. கருணை இவற்றை அடிப்படையாகக் கொண்ட உபதேசங்களுக்கு இணங்க அமைத்துக் கொள்வேன்.

பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும் சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும் மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டுவிட்டு புத்த மார்க்கத்தைக் கைக்கொள்கிறேன்.

பவுத்த தருமமே சிறந்த மதம் என்பதை நான் முற்றாக நம்புகிறேன்.

நான் இன்று மறுபிறவி எடுத்துள்ளேன் என்பதை நம்புகிறேன்.

நான் இன்று முதல் பவுத்த தருமம் உபதேசிப்பதுபோல் ஒழுகுவேன்.

பவுத்தம் ஒரு மார்க்கமே தவிர மதமல்ல. அது பிற்காலத்தில் மதமாக்கப்பட்டது.

பகுத்தறிவுவாதியான புத்தர் தெய்வம் ஆக்கப்பட்டார். அவரது முன்னைய பிறப்புக்களைப் பற்றி நம்பமுடியாத கற்பனைக் கதைகளை அவரது சீடர்கள் எழுதி வைத்தார்கள்.

பவுத்தம் சமுதாய சமத்துவக் கருத்துக்களைப் பரப்புகிறது. நிற அடிப்படையில் சொல்லப்பட்ட வேற்றுமையைத் தகர்க்கிறது. அதன் உட்பிரிவான சாதி வரம்புகளை மறுக்கிறது. பிறப்பால் ஒருவன் பிராமணன் ஆகமுடியாது. ஒழுக்கத்தால் மட்டுமே ஒருவன் பிராமணனாக முடியும் என பவுத்தம் சொல்கிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:08 am

பவுத்தம் ஆண் பெண் இடையே பால் அடிப்படையிலான வேறுபாட்டை அகற்றியது.

ஆண்களைப் போலவே பெண்கள் பவுத்த சங்கத்தில் துறவிகளாகச் சேர்க்கப் பட்டார்கள்.

பவுத்தம் மனிதனது வினைக்கு அவனே காரணம் என்று சொல்கிறது. நல்லது செய்தால் நல்வினைப் பயன் கிடைக்கும் என்றும் தீயது செய்தால் தீவினைப் பயன் சேரும் என்று சொல்கிறது. புத்தர் ஞானம் பெற்றபி;ன்னர் நான்கு வாய்மைகளை போதித்தார்.

முலாவது வாய்மை - பிறத்தல் துன்பம். பிணி துன்பம். தளர்ச்சி துன்பம். மரணம் துன்பம். வேண்டாவற்றோடு பிணிக்கப்பட்டிருப்பதும், வேண்டுவனவற்றிலிருநது பிரிக்கப்பட்டிருப்பதும் துன்பம். விழைவு கூடாமை துன்பம். சுருங்கக் கூறின் உருவம், நுகர்ச்சி, குறிப்பு, பாவனை உள்ளவறிவாகிய விஞ்ஞானம் என்ற ஐந்தும் துன்பம் தருவன. ஆதலால் பிக்குகளே துன்பம் உளது.

இரண்டாவது வாய்மை - இந்தத் துன்பங்களுக்குக் காரணம் பிறப்பீனும் வித்தாகிய அவா அல்லது வேட்கை. சிற்றின்பம் விரும்பும் வேட்கை. உயிர்வாழ விரும்பும் வேட்கை. திருஷ்டி என்ற அழிவுத்தன்மையை வேண்டும் வேட்கை. இந்த மூன்றுவித வேட்கையும் துக்கத்துக்கு காரணம். எனவே துக்க காரணம் உளது.

மூன்றாவது வாய்மை - தன்னிடத்தில் உண்டான ஆசையை அகற்றினால் துக்க நிவாரணம் உளது.

நான்காவது வாய்மை - இந்த துக்க நிவாரணத்துக்கு வழியுண்டு. அதுவே அட்டாங்க துக்க நிவாரண மார்க்கம். அவையாவன நற்காட்சி, நல்லூற்றம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளதோர் தலைப்பாடு. (இது பற்றி மேலும் அறிய விரும்புபவர்கள் சாத்தனார் எழுதிய மணிமேகலை காப்பியத்தைப் படிக்கவும்)

எல்லாம் வல்ல படைப்புக் கடவுள் ஒருவர் உண்டு என்று பவுத்தம் நம்புவதில்லை. உலகைக் கடவுள் படைத்தார் எனக் கூறுவது கடவுளை யார் படைத்தார் என ஒருவரைக் கேட்க வைக்கும்.

அண்டத்தைப் படைத்தவர் கடவுள் என்பதை புத்தர் ஒப்புக் கொண்டாரா என்பது கேள்வி. 'இல்லை' என்பதே பதில். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. படைப்பு கடவுளின்றியே உலகம் இருக்கிறது என்பது புத்தரின் வாக்கு. பவுத்தம் சிந்தித்தலை, கேள்வி கேட்பதை மற்றும் பகுத்தறிவை ஊக்குவிக்கிறது.

'என்னால் நிருவாணத்துக்குரிய வழியைத்தான் காட்ட முடியும். அந்தப் பாதையில் நடப்பது உங்கள் பொறுப்பு' என்றார் புத்தர்.

அரண்மனையில் பிறந்து பட்டாடை உடுத்தி, பொன்னாபரணம் அணிந்து, பால், பழம் பருகி, அறுசுவை விருந்துண்டு, பன்னீரில் கொப்பளித்து, மஞ்சத்தில் படுத்துறங்கி, ஆசை மனையாளோடும், அன்புக் குழந்தையோடும் ஆடிப்பாடி அரச வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் அவற்றைத் துறந்து, மஞ்சள் அங்கி அணிந்து, பிச்சா பாத்திரம் ஏந்தி, வீதிதோறும் நடந்து, வீடுதோறும் பிச்சை எடுத்து வாழ்ந்தார்.

பவுத்தம் போல் அல்லாது இந்து மதத்தில் சாதி புரையோடிப் போய்க் கிடக்கிறது. அது அந்த மதத்தை அரித்துக் கொண்டிருக்கிற புற்று நோய்.

தொட்டால் தீட்டு, நிழல் பட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு இப்படி எல்லாமே தீட்டுத்தான்.

இந்தியாவில் 101 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 85 விழுக்காடு இந்துக்கள். அதில் சுமார் 20 விழுக்காடு தலித் மக்கள்.

எனவே இப்போது நடைபெறும் மதமாற்றம் மழைத் தூவானம் போல் தெரியலாம். ஆனால் அது பெரு மழையாகப் பெய்யலாம்..

ஏற்கனவே மும் மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், இந்திரன், சந்திரன், வருணன், அக்னி, பிரகஸ்பதி, கின்னரர், கிம்புருடர் என வாழ்ந்த பரந்த கண்டம் சுமார் 700 ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சிக்கு உட்பட்டுக் கிடந்ததால் அது மூன்று துண்டாக வெட்டப்பட்டு விட்டது.

இதில் இரண்டு துண்டுகளில் இஸ்லாமிய குடியரசுகள். எஞ்சிய இந்தியாவில் 85 விழுக்காடு மட்டும் இந்துக்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:09 am

இந்த மதமாற்றம் பாதி கட்டயாத்தின் பேரில் நடந்திருக்கலாம். மீதி பணம், சலுகை, பதவிபோன்றவற்றுக்கு ஆசைப்பட்டு மாறி இருக்கலாம். சாதி அடக்குமுறையில் இருந்து தப்பவும் மத மாற்றம் நடந்திருக்கலாம்.

சாதி இந்து மதத்தின் உள்கட்டுமானத்தில் இடம்பெற்றுள்ளது. வேதங்களும், ஸ்மிருதிகளும் வர்ண பேதம் கற்பிக்க பின்னர் அது சாதிகளாகப் பெருகின.

இந்து மதத்தில் நால் வர்ணம் அதன் ஆணி வேர். சாதிகள் சல்லி வேர்கள்.

இந்தியாவில் 6,400 சாதிகள் இருக்கின்றன என உச்ச நீதிமன்றம் கூறியது. மண்டல் அறிக்கை 3000 கும் அதிகமான சாதிப்பட்டியலை வெளியிட்ட போது 'இந்து' நாளேடு வியப்போடு அதே சமயம் அவநம்பிக்கையோடு எழுதியது.

உலகில் 'இந்து அரசு' என அரசியலமைப்பில் எழுதி வைத்திருக்கும் ஒரே நாடு நேபாளம். அரசனாகத் தம்மை ஆக்கிக்கொள்ள ஆசைப்பட்ட பிரித்வி நாராயண் ஷா என்பவன் நான்கு வருணங்களுடன் 36 சாதிகளையும் கொண்ட இந்து மத அமைப்பை நேபாளத்தில் உண்டாக்கி அரச பரம்பரையை விஷ்ணுவின் ஆட்சி என்று ஆக்கிக் கொண்டான்.

ஆனால், இந்து மதத்தில் சிவன் முழுமுதல் கடவுள். அவரது வாகனம் எருது. இதனால் நேப்பாளத்தில் காளை மாட்டை கம்பால் அடிக்கக் கூடாது. அப்படி அடுத்தால் குற்றம். ஏரில் ப+ட்டி உழக் கூடாது. அப்படி உழுதால் குற்றம். வண்டியில் ப+ட்டி ஓட்டக் கூடாது. அப்படி பூட்டி ஓட்டினால் குற்றம். காளை மாட்டை கொல்லக் கூடாது. அப்படிக் கொன்றால் அது மரண தண்டனைக்குரிய குற்றம்.

இப்படி ஏன் சட்டம் இயற்றப்பட்டுள்ளது? வேறொன்றும் இல்லை. நேப்பாள மன்னர் மனு ஸ்மிருதி விதிகளின் படி அரசாள்கிறார்.

சரி நேப்பாள மன்னர்தான் இப்படி? நாங்கள் மேடை தோறும் போற்றி பெருமைப்படும் சேர, சோழ, பாண்டியர் ஆட்சியில் என்ன நடந்தது?

மூவேந்தர்கள் எண்ணாயிரம், திருபுவனம், ஆயகுடி, முக்சூடல் போன்ற ஊர்களில் காசி, வங்காளம் (முதலாம் இராசேந்திரன்) போன்ற தேசங்களில் இருந்து பிராமணர்களை கூட்டம் கூட்டமாகக் கொண்டு வந்து அவர்களுக்கு இறையிலி மான்யங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதி மங்கலங்கள் என்ற புதிய குடியிருப்புகளில் குடியேற்றினார்கள்.

பிராமணர்கள் வேதம் படிக்க வேத பாடசாலைகளை நிறுவி அவற்றுக்கு நிவந்தம் எழுதி வைத்தார்கள்.

இதனை திருமூலர் கண்டிக்கிறார். அந்தணர் குடியிருப்புக்கள் ஆயிரம் அமைத்து அவற்றை அந்தணர்க்குக் கொடுப்பதாலும் கோபுரத்துடன் கூடிய கோயில்களை ஆயிரக் கணக்கில் கட்டி முடிப்பதாலும் பயன் இல்லை. அவை ஒரு ஞானிக்கு ஒரு பகலுணவு அளிப்பதற்கு நிச்சயம் நிகராகா என்கிறார்.

அகரம் ஆயிரம் அந்தணர்க் கீயிலென்
சிகரம் ஆயிரஞ் செய்து முடிக்கிலென்
பகரு ஞானி பகலூண் பலதத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயந் தானே!;


திருநாள் பெருநாள்களிலும் வெற்றி விழாக்களிலும் வெளியூர் செல்லும் போதும் மூவேந்தரும் பிராமணர்க்குத் துலைநிறை (துலாபாரம்) பொன் (இரணிய கருப்பம்) ஆவாயிரம் (கோசகஸ்ரம்) முதலிய தானங்களைச் செய்து வந்தனர். (தேவநேயப்பாவாணர் எழுதிய தமிழர் மதம் - பக்கம் 93)



முதலாம் இராச இராசனின் இராசகுரு ஈசானச் கு குருதேவர், விக்கிரம சோழனுக்கு சுவாமி தேவர், சூன்றாம் குலோத சிவாச்சாரியார். முதலாம் இராசேந்திரனின் ராசகுரு சர்வசிவ பண்டிதர். இராசாதி இராசனுக்;துங்கனுக்கு சோமேசுவரர் இராசகுருவாக இருந்தனர்.

மொத்தத்தில் மூவேந்தர்கள் அந்தணர் தாள் பணிந்து ஆண்டனர்.

மனு, மிடாக்சாரி, ஹேமாத்ரி, ஜுமுக வாதனர் எழுதிய தயாபாக (தர்மரத்னா என்ற நீதி நூலின் ஒரு பகுதி) ஆகிய நான்கு சாத்திரங்களின்மேல் சோழர்களுடைய நீதி நிருவாகத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டது.

அர்த்தசாத்திரம் அரசியல் நூல் என்ற அளவில் ஸ்மிருதிகளின் நீதியினின்று ஒரு சிறிது மாறுபட்டுக் காணப்பட்டது.

இவ்வாறாக அரசியல் தத்துவத்திற்கு அர்த்தசாத்திரமும், நீதித்தத்துவத்திற்கு மேற்சொன்ன நான்கு சாத்திரங்களும் சோழர் காலத்து அந்தணர்களால் ஊர் நீதிமன்றங்களிலும் அரச நீதி வழங்கு மன்றங்களிலும் எடுத்து ஓதப்பட்டு விளக்கவுரை சொல்லப்பட்டன. (திரு.மா பாலசுப்பிரமணியன் எழுதிய 'சோழர்களின் அரசியல், கலாச்சார வரலாறு' பாகம் 2. பக்கம் 95)

பிற்கால சேர, சோழ, பாண்டிய அரசர்களால் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பொய்யாமொழிப் புலவர் வள்ளுவர் செய் திருக்குறள் இரட்டடிப்புச் செய்யப்பட்டது! திருக்குறள் பற்றிய குறிப்பு எதனையும் எந்தக் கல்வெட்டிலும், செப்பேட்டிலும் காணோம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 1:11 am

இன்னும் தொடருதா.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக