புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
44 Posts - 61%
heezulia
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
2 Posts - 3%
viyasan
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
236 Posts - 43%
heezulia
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
21 Posts - 4%
prajai
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_m10கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Feb 02, 2012 9:42 pm

செந்தமிழ்க் கல்லிலே அற்புதமண்டபம்
சிந்தையில் கட்டிவைத்தேன் - அதில்
சுந்தர மென்னிழை சந்தங்கள் கொண்டெழில்
சித்திரம் தீட்டி வைத்தேன்
வந்திருந் தின்பமும் கொண்டிட மற்றவர்
வண்ணஒளி அமைத்தேன் - அதில்
எந்தன் மனதெழும் கற்பனைத் தீபங்கள்
எங்கும் எரிய வைத்தேன்

நந்தவனத்திற்சு கந்தமலர் கொய்து
நற்கவிநூல் இழைத்தேன் - நல்ல
சந்தணமும் நறும் பன்னீர் தெளித்தங்கு
சுந்தர வாசமிட்டேன்
செந்தூர வண்ணச்செ றிவெடுக்க அதில்
சிந்தனை தூபமிட்டேன் - ஒரு
தந்திரமுமல்ல தங்கமெனும் தமிழ்
தந்துஅழகு செய்தேன்

மந்தமுறமன தின்பம்பெற அவர்
மன்னவன் போல்மகிழ = இல்லை
மந்திரங்கள்,எது கையொடு மோனையும்
இட்டு அழகு செய்தேன்
சொந்த எழில்வண்ணக் கந்தருவ எழில்
செந்தமிழ் மாந்தருக்கு -அவர்
வந்திடும் வேளை நீராடிக் களித்திடப்
வட்டக் குளமமைத்தேன்

இந்தஎழில் இல்லம்கொஞ்சம் இருண்டதும்
இன்னொளி போய்விடலாம் - எனப்
பந்தங்களும் ஒளி தந்திடவே எங்கும்
பார்த்து எரியவிட்டேன்
அந்தியிலே குளிர்பொய்கையில் நீந்திட
ஆடைஅணிகளுடன் - அகில்
சந்தணமும் உடன் செந்தணலும் வைத்தே
சற்று அமைதிகண்டேன்

வெந்திடும்போல் பசி உண்டுஎன்றால் அவர்
வேண்டிட முன்தரவே - மரப்
பொந்தினிலே நல்ல தேனடை கொண்டதில்
தேன்வடித்தும் எடுத்தேன்
பந்தியுடன் உண வுண்டு களித்திடப்
பாலொடு பண்டங்களும் இன்னும்
முந்திரியும் கூட முக்கனிகள் சேர
முன்னே எடுத்து வைத்தேன்

இத்தனையும் செய்து எத்தனை மனங்கள்
எண்ணிடக் காத்திருந்தேன் - நல்ல
புத்தம்புது வரவெண்ணி துயிலின்றி
பக்கமும் பார்த்து நின்றேன்
சத்தியமும் மன தைரியமும் கொண்டு
முற்றும் விழித்திருந்தேன் -ஆயின்
புத்தொளி வான்சுடர் தோன்றிடக்காலை
பொழுதென்று கண்டறிந்தேன்

செந்தமிழில் கரம் தந்து அன்புகொண்டு
சிந்தையி லொன்றுபட - நல்ல
பைந்தமிழே இனிதென்று படித்தொரு
பாமலர்ப் பூச்சொரிய
நந்தவனம் எனும் விந்தைதமிழினில்
நற்கவி மாலைகட்ட - எந்தன்
சிந்தையில் கட்டிய மண்டபவாசலை
முன்கதவின்றி வைத்தேன்

..

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Feb 02, 2012 10:50 pm

எந்தன்
சிந்தையில் கட்டிய மண்டபவாசலை
முன்கதவின்றி வைத்தேன்
நல்ல முடிவு .............. ஓசை அருமை சூப்பருங்க



கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) 599303
கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்) 102564

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 04, 2012 7:19 am

நன்றி கோவிந்தராஜ் ! மிக்க நன்றி!!

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 04, 2012 7:20 am

நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
. நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
. சொல்லும் சிரிப்பிதுவோ
ஓலையிடை தென்னங்கீற்றினூடு நிலா
. ஓடிச் சிரித்ததுவோ-மழை
போலும் இளந்தூறல்காண வண்ண வான
. வில்லும் சிரித்ததுவோ

வாழை மரங்களில் வந்துநீளும் குலை
. வைத்த முன் பூவரிசை -அது
தோழமை கொண்டு சிரித்தனவோ- கனி
. தேனைக் குழைத்தனவோ
கீழை வயற்கரை கோபுரவீதியில்
. கூடும் மந்தியினமும் - வந்து
வீழப் பொலிந்த கனிஉண்டு ஆனந்த
. வேளை என்றாடியதோ

பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர்
. பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
. சாய்ந்தே சிரித்தனவோ
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
. பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
. தங்கும் சிரித்ததுவோ

கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
. காணும் பசும் இலைகள் - நெடு
வானமழை விழும்நீர் துளி கொஞ்சிட
. வெட்கிச் சிரித்தனவோ
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களைத்
. தாங்கிச் சிலுசிலிர்த்து எழி
லான சிறுஓடை மீதுமலர் தூவி
. ஆனந்த மென்கிறதோ

வெள்ளை மணல் மீது வந்துகடலலை
. வீழ்ந்து சிரித்தனவோ -கயல்
துள்ளிக் குளத்திடை தாமரைப்பூ இதழ்
. தொட்டுச்சிரித்ததுவோ
வெள்ளிப் பனி உச்சி ஏறும்கதிர்கண்டு
. வீழ்ந்து சிரித்ததுவோ -சுகம்
அள்ளித்தரும் இளம்தென்றல் சிலிர்ப்பிட
. ஆரத் தழுவியதோ

அத்தனை காணும் சிரிப்பு மியற்கையின்
. அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளோ
. இரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
. பட்டெழில் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச் சிரித்திடு
. அற்புத பூமியிதே.

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Feb 04, 2012 8:22 pm


பெண்ணெனும் சிலைசெதுக்கும் சிற்பி ஆண்

கருவில் உருவைக்கொண்டே - அன்னை
கையில் தவழ்ந்து வந்தோம்
உருகும் அன்பைக் கண்டோம் - அவளின்
உள்ளத் துறைந் திட்டோம்
பருகும் உணவைத் தந்தவளோ - எமைப்
பாசங் கொண் டருகில்
கருணை வடிவாய் நின்றணைத்தாள் - இரு
கண்கள் எனக்காத்தாள்

அம்மா எனுமோர் தெய்வமகள் - அவள்
ஆண்டவன் மறுவடிவம்
நம்மை ஆக்கவும் உலகினிலே - பின்
நலமாய் காத்திடவும்
வெம்மை கொண்டயல் தீமைவரின் - அதை
வெயிலா யெரித்திடவும்
அம்மை அருளால் முத்தொழிலும் - அவள்
அகிலம் கொள்ள வந்தாள்

பெண்ணாய் முதிர்வில் தாயாவாள் - அவள்
பெருமை கொண்டிடுவாள்
மண்ணில் தாயென ஆகும்வரை - அவள்
மங்கை சிறுவயதாள்
எண்ணிப்பார் எவள் சின்னவளும் - வளர்ந்
தொருநாள் தாயாவாள்
கண்ணை இமையாய் காத்திடுவோம் - எதிர்
காலத் தாய் இவளாம்!

விண்ணில் சுழலும் புவிவாழ்வில் - அவள்
வேட்கைப் பலியிடவும்
பெண்மை இழிமை செய்வதுவும்- அவள்
புனிதம் அழிப்பதுவும்
எண்ணித் தலைமுறை காத்திடுவோம் - அவ்
விம்சைசெயல் நிறுத்த
கண்ணீர் சிந்தாக் காத்திடவும் - இக்
கணமே திடம் கொள்வோம்

எம்மைப் படைத்த போதினிலும் அவள்
உணர்வில் மலராவாள்
வெம்மைச் சூரியன் ஆனவளோஎம்
முன்னே நிலவானாள்
பொம்மை கற்சிலை செய்துவிட - நாம்
பிடிக்கும்உளி வடிவம்
அம்மை இவளது வாழ்வுருவை நாம்
ஆக்கும் சிற்பிகளாம்

மண்ணைப் பிடித்திட வரும்பானை - போல்
மனங் கொள் உருவெடுப்பாள்
திண்ணம் கைகளில் உளிகொண்டே செயல்
தேர்ந்தே கலைவடித்தால்
எண்ணத் திருப்பது உருவாகும்திரு
மகளாய்..! எழிற்சிலையாய்!
வண்ண திருமகள் வாழ்வில் நாம் - பல
வளங்கள் உருவமைப்போம்

.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக