ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

+24
கா.ந.கல்யாணசுந்தரம்
ayyamperumal
T.PUSHPA
Dr.சுந்தரராஜ் தயாளன்
அதி
சதாசிவம்
பாலாஜி
உமா
சார்லஸ் mc
subhajothi
அல்கெனா ரிஷி
ஜாஹீதாபானு
கே. பாலா
ரேவதி
வின்சீலன்
பார்த்திபன்
உதயசுதா
அசுரன்
கோவிந்தராஜ்
இளமாறன்
பிஜிராமன்
மகா பிரபு
சிவா
yarlpavanan
28 posters

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Go down

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 7 Poll_c1024%இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 7 Poll_c10 24% 
[ 9 ]
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 7 Poll_c1076%இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 7 Poll_c10 76% 
[ 29 ]
 
Total Votes : 38
 
 
Poll closed

open இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan Mon Jan 30, 2012 10:25 pm

First topic message reminder :

அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down


open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Feb 05, 2012 10:52 pm

இன்றுதான் இந்த திரியில் அருமையான விவாத மேடையைப் பார்த்தேன்.
பாராட்டுகள். நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் ரசித்துப் படித்தேன்.

மரபு கவிதைகள் இலக்கண சுத்தத்தோடு எழுதப்படவேண்டும்.
புதுக்கவிதைகள் அனைவரும் புரிந்துகொள்ளும்படி அதாவது பாமரனும் புரிந்துகொள்ளும்படி எழுதப்படவேண்டும். பட்டுக்கோட்டையார் முதல் நமது இன்றய இளைய தலைமுறைகள் அதிகம் ரசித்து எழுதுவது புதுக்கவிதைகள் தான்.

' எனக்கு ரோஜா மலர்களைவிட
முட்களைத்தான் அதிகம் பிடிக்கும்
காரணம் அவை தொட்டவுடன்
ரத்த பாசத்தைக் காட்டுகின்றன.....'

இது கவிஞர் மு.மேத்தா அவர்களின் வரிகள். இந்த சுவையான புதுக்கவிதையில் அல்லவா மனிதநேயம் மிளிர்கிறது. மரபு கவிதைகளின் காலம் இன்னும் முற்று பெறவில்லை.. ஆனால் புதுக்கவிதைகள் நவீனக்கவிதைகளோடு கைகோர்த்து சிம்மாசனத்தில் இன்றும் அமர்ந்து அரசாட்சி செய்து வருகின்றன என்பதை எவறாலும் மறுக்கப்படாத உண்மை.

கவிதைகளின் அணிவகுப்பில் தலைமையேற்கிறது புதுக்கவிதைகள்.

நல்ல சுவையான விவாதத்தில் பங்கு கொண்டது மனதுக்கு நிம்மதி.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by பிஜிராமன் Sun Feb 05, 2012 10:56 pm

முன்பு, இசைத்தமிழை, சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் இசை குறித்த எல்லாச் செய்திகளையும் மழுங்கடித்து, தமிழ் இசை என்று இருந்ததையே கர்நாடக இசை என்று மாற்றி, தமிழில் பாடவே வராது என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இசை என்றால் தெலுங்குதான் என்ற ஒரு மாயையை தோற்றுவித்து அதில் வெற்றியும் பெற்றனர் ஒரு சாரார். தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில் பிறந்து, ஆந்திரா எங்கிருக்கிறது என்றுகூட அறியாமல், நமது கோவில்களைச் சுற்றியே வளர்ந்து, தேவாரம் திருவாசகம் போன்றவற்றில் இருந்து கருவை எடுத்துக்கொண்டு அதையே தெலுங்கில் எழுதிவைத்தவர்களை பெரிய ஆட்கள் ஆக்கி ஆஹா ஓஹோ என்று புகழந்து அவர்களை மும்மூர்த்திகள் ஆக்கி, இசை என்றால் தெலுங்கு தான் என்ற ஒரு நிலையை உருவாக்கிவிட்டார்கள். அம்மாதிரியே இப்போது புதுக்கவிதை, புதுக்கவிதை என்று தமிழில் புதுக்கிக்கொண்டு ஜப்பானிய ஹைகூவுக்கும், சென்ரியு வுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு உள்ளது ஒரு கூட்டம். இதை அறியாமல் நமது இளைஞர்களும் புதுக்கவிதை என்றும், ஹைக்கூ, ஹைக்கூ என்றும் கூகை போல் கூவிக்கொண்டு திரிவது மிகவும் வேதனையாக உள்ளது.

தரத்தை தழுவித் தமிழ்கவி நாளும்
சிரத்தை எடுத்து உலகம் முழுதும்
மரபால் தொடுத்து மணம்போல் பரப்பி
கரத்தை உயர்த்துவோம் பார்


ஐயா,
தாங்கள் அடிக்கடி கூறுவது போல், ஹைகூ எழுத எடுக்கும் ஆர்வத்தை, குறள் எழுத எடுத்தால், மிகவும் நன்றாக இருக்கும். காரணம், அதனை அறிந்தால் கிடைக்கும் சுகமும், அறிய அறிய உண்டாகும் ஆர்வமும், தனித்துவம் கொண்டது. இதை நான் அனுபவித்து இருக்கிறேன், அது தங்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஆனால், இன்னும் சில காலங்களில், நம் ஈகரையில் மரபுக் கவி எழுதுவோர் எண்ணிக்கை உயரும் என்று நான் நம்புகிறேன்.

உதாரணமாய், விரைவில், தம்பி கார்த்தி எம் ஆர். மரபுக் கவிஞராய் வளம் வருவார்
அவர் அதற்கான முயற்சியில் ஆர்வமுடன் இறங்கியுள்ளார்.

நன்றிகள்









Last edited by பிஜிராமன் on Sun Feb 05, 2012 11:10 pm; edited 2 times in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Feb 05, 2012 11:06 pm

பிஜிராமன் wrote:
முன்பு, இசைத்தமிழை, சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் இசை குறித்த எல்லாச் செய்திகளையும் மழுங்கடித்து, தமிழ் இசை என்று இருந்ததையே கர்நாடக இசை என்று மாற்றி, தமிழில் பாடவே வராது என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி, இசை என்றால் தெலுங்குதான் என்ற ஒரு மாயையை தோற்றுவித்து அதில் வெற்றியும் பெற்றனர் ஒரு சாரார். தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில் பிறந்து, ஆந்திரா எங்கிருக்கிறது என்றுகூட அறியாமல், நமது கோவில்களைச் சுற்றியே வளர்ந்து, தேவாரம் திருவாசகம் போன்றவற்றில் இருந்து கருவை எடுத்துக்கொண்டு அதையே தெலுங்கில் எழுதிவைத்தவர்களை பெரிய ஆட்கள் ஆக்கி ஆஹா ஓஹோ என்று புகழந்து அவர்களை மும்மூர்த்திகள் ஆக்கி, இசை என்றால் தெலுங்கு தான் என்ற ஒரு நிலையை உருவாக்கிவிட்டார்கள். அம்மாதிரியே இப்போது புதுக்கவிதை, புதுக்கவிதை என்று தமிழில் புதுக்கிக்கொண்டு ஜப்பானிய ஹைகூவுக்கும், சென்ரியு வுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு உள்ளது ஒரு கூட்டம். இதை அறியாமல் நமது இளைஞர்களும் புதுக்கவிதை என்றும், ஹைக்கூ, ஹைக்கூ என்றும் கூகை போல் கூவிக்கொண்டு திரிவது மிகவும் வேதனையாக உள்ளது.

தரத்தை தழுவித் தமிழ்கவி நாளும்
சிரத்தை எடுத்து உலகம் முழுதும்
மரபால் தொடுத்து மணம்போல் பரப்பி
கரத்தை உயர்த்துவோம் பார்



எனக்கு இந்த கருத்தில் உடன்பாடில்லை.
அப்படியென்றால் திருக்குறளைக் கூட
மரபில்லாத வடிவம் என்றும் கூறுவீர்கள் என நினைக்கிறேன்.
கண்ணதாசன் கவிதைகள் காலம் கடந்து நிற்பது எதனால்? பாமரனும் ரசிக்கும் படியான புதுக்கவிதையின் வடிவம் அல்லவா? சிந்தித்து செயல்படுவீர்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by கபாலி Sun Feb 05, 2012 11:07 pm

மரபுக்கவிதை சேலை கட்டிய தமிழ்ப்பெண்..
புதுக்கவிதை ஜீன்ஸ் போட்ட புதுப்பெண்.

இரண்டுமே அழகுதான்.

எனவே நான் வாக்கிடவில்லை.


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by பிஜிராமன் Sun Feb 05, 2012 11:16 pm

எனக்கு இந்த கருத்தில் உடன்பாடில்லை.
அப்படியென்றால் திருக்குறளைக் கூட
மரபில்லாத வடிவம் என்றும் கூறுவீர்கள் என நினைக்கிறேன்.
கண்ணதாசன் கவிதைகள் காலம் கடந்து நிற்பது எதனால்? பாமரனும் ரசிக்கும் படியான புதுக்கவிதையின் வடிவம் அல்லவா? சிந்தித்து செயல்படுவீர்.


ஐயா, இந்த கருத்தில் எதற்கு உடன்பாடு இல்லை என்று கூறினீர்கள் என்றால், என்னால் தங்களுக்கான பதிலை தர முயல்கிறேன்.

குறளை எப்படி ஐயா, மரபில்லா வடிவம் என்று கூறுவேன். அவை குறள் வெண்பா வகையில் வருகின்றனவே.

நான் அந்தக் கருத்தை, எந்த கருத்திற்கு கீழ் கொடுதுள்ளேன் என்று பாருங்கள் ஐயா.

நன்றிகள் ஐயா....




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan Tue Feb 07, 2012 12:42 am

சதாசிவம் wrote:அழகான கருத்து பதிக்கும் திரியை தொடங்கிய தங்களுக்கு நன்றி. நீண்ட நாட்களாக இது குறித்து பெரிய விவாதம் நடத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.

மரபுக் கவிதைகள் வைரம் போல்,


அதை எடுப்பது கடினம், பட்டை தீட்டுவது அதைவிட கடினம். சந்தைக்கு கொண்டு வருவது அதை விடக் கடினம். வைரத்தின் தன்மைகளை வைத்து அது பல வகைபடுகிறது. அனைவராலும் வாங்க முடியாது, சிலரால் பார்க்கவோ தொடவோ முடியாது. இதன் விலை மதிப்பற்றது. அனைவராலும் வாங்க, அணுக முடியாது என்பதால் இது விலை குறைந்தது இல்லை. இது போல் தான் மரபுக் கவிதை. அதை எடுப்பது, தொடுப்பது எல்லாம் கடினம். அனைவருக்கும் புரியவில்லை என்பதால் மத நூல்களை நாம் குறைவாக மதிப்பீடு செய்ய முடியாது. அதை எடுத்துச் சொல்ல சரியான ஆளைத் தேட வேண்டும். சரியாக படிக்கப் பழக வேண்டும். மரபுக் கவிதைகளை இப்படி தான் அணுக வேண்டும். எப்படி மத நூல்கள் படிப்பவரின் பக்குவத்திற்கு ஏற்ப பல பொருள்களைத் தருகிறதோ, அது போல் தான் மரபுக் கவிதையும், இதில் உட்பொருளை ஒளித்து வைக்கலாம். அதை உடைத்து வெளியில் எடுப்பது அவர் அவர் திறமை. மொழியின் வலிமை இந்த பாடல்களில் தான் வெளிப்படும். தமிழை தாய்மொழியில்லாமல் படிப்பவருக்கு நம் மொழியில் உள்ள அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். இவர்களுக்கு இவர் படித்த முறையில் ஒரு கவிதை வரும் போது அதை மதிப்பீடு செய்வது சுலபம். இப்படி ஒரு முறை இல்லாமல் வரும் புதுக் கவிதைகளை மதிப்பீடு செய்யும் போது அது படிப்பவரின் மனதையும், புரிந்து கொள்வதையும் பொறுத்து மாறலாம். உதாரணமாக கவிதைப் போட்டிக்கு 200 கவிதைகள் வருகிறது என்றால், நடுவர் குழுவை பொறுத்து தேர்வுகள் மாறலாம், விலை மகளை பற்றி ஒரு புதுக் கவிதை எழுதினால் அது பரிசீலிக்கப்படுமா என்பதே கேள்விக்குறி தான்.

இதே போட்டி மரபுக் கவிதைகளுடன் நடுத்தும் போது தமிழை முறையாக அறிந்த எந்த நடுவர் குழுவும் சரியாக எழுதப்படும் கவிதைக்கு மட்டுமே தேர்வு. இதில் பெரிய வித்தியாசம் இருக்காது. விலைமகளைப் பற்றி இலக்கணம் வழுவாது, தமிழின் அழகைக் கையாண்டு எழுதினால் அது சபையேறும், வெல்லும்.

வெறும் மரபுக் கவிதைகளை விரும்பினால் எதையுமே ரசிக்க முடியாது. இது சுப்புடுவை கூப்பிட்டு கச்சேரி கேட்க வைப்பது மாதிரி, ஒரு கவிதையும் சுவைக்க முடியாது, அது சரியில்லை, இது சரியில்லை. எதுகை இல்லை இயைபு இல்லை என்று மண்டை முழுதும் இலக்கணம் மட்டுமே இருக்கும், இயல்பான ரசிப்பு இருக்காது.

இரண்டு தரப்பு கவிதைகளை ரசிக்க ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. அது அனைவருக்கும் கைக்கு எட்டுவதில்லை.

புதுக்கவிதை தங்கம் போல், இதுவும் மதிப்பானது, ஆனால் வைரம் போல் இல்லை. அனைவராலும் வாங்க முடியும். இதில் கருத்தை வைத்து பல வகையாக பிரிக்கலாம். ஆனால் எழுதும் முறையில் பல வகையாக பிரிக்க முடியுமா என்று தெரியவில்லை, இதற்கு அப்படி ஒரு கட்டுப்பாடு/இலக்கணம் இல்லை. சுலபமாக இருப்பதால் கவி புனைவது எளிது. மேலும் கட்டுப்பாடுகள் இல்லாததால் கவிஞர் சொல்ல வருவதை இயல்பான வார்த்தைகளில் கூறமுடியும். மரபுக்குள் கட்டுபடாததால் இதை பலரும் விரும்புவர், எப்படி கட்டுபாடில்லாமல் விளையாட குழந்தை விரும்புகிறதோ அது போல் இதுவும் .மழையில் நனைந்து ஐஸ் கிரீம் சாப்பிடுவதைப் போல். இது குழந்தைக்கு சரி, பெரியவர்களுக்கு சரியா ?

ஆனால் பெரியவர்கள் எப்படி குழந்தைகளை கட்டுப்படுத்துகிறார்களோ அது போல் தான் மொழிவல்லுனர்கள், மொழி அறிந்தவர்கள். நாம் மொழியின் குழந்தைகள், வளர விரும்பாமல் இருப்பதில் சுகம் காண்கிறோம், அது சரி என்கிறோம். ஆனால் மொழி வல்லுனர்கள் மொழியில் முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் சரியாகாது. ஒரு சில வரையறை தேவை என்று நினைக்கின்றனர்.

இப்படி யாரோ ஒருவர் அவ்வப்போது போடும் இலக்கண வரையறை /கட்டுப்பாட்டில் தான் மொழி இன்னும் வாழ்கிறது. இது அனைத்து மொழிக்கு பொருந்தும். எப்படி வேண்டுமானால் பேசலாம், எழுதலாம் என்று இருந்தால் ஒரு மொழியையும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தர முடியாது.

நான் ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டது போல் புதுக்கவிதையின் சிறப்பு பளிச்சென்று படிப்பவரின் மனதை தாக்குதல். ஆனால் இது சிக்கிமுக்கி கல்லில் இருந்து வரும் வெளிச்சமாகவோ, மின்னலில் இருந்து வரும் வெளிச்சமாகவோ இருக்கும். அளவு வேறு ஆயுள் ஒன்று. இங்கு இல்லை வேறு எங்கும் படிக்கும் புதுக்கவிதை எத்தனை நமக்கு வரி மாறாமல் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஔவையின் பாடல், திருக்குறள், இன்னும் பல பாடல்களில் ஒரு சில எப்படி மறக்காமல் இருக்கிறது. இதில் உள்ள சொல்கட்டமைப்பு தான் இதற்குக் காரணம்.


முதலில் தங்கள் பாராட்டுக்கு நன்றி.
தங்களது மரபுக்கவிதை, புதுக்கவிதை பற்றிய கருத்து சிறந்த வழிகாட்டலாக அமைந்துள்ளது. "இரண்டு தரப்பு கவிதைகளை ரசிக்க ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது." என்ற தங்களது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். சிலர் கவிதை எழுதினால் பலருக்குப் பொருள் விளங்குவதில்ல என்பது தங்கள் கருத்துக்குச் சான்றாகும். தாங்கள் கூறுவது போல இலக்கண வரையறை தான் தமிழ் மொழியை இன்னும் வாழவைக்கின்றது.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan Tue Feb 07, 2012 12:53 am

Kaa Na Kalyanasundaram wrote:இன்றுதான் இந்த திரியில் அருமையான விவாத மேடையைப் பார்த்தேன்.
பாராட்டுகள். நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் ரசித்துப் படித்தேன்.

மரபு கவிதைகள் இலக்கண சுத்தத்தோடு எழுதப்படவேண்டும்.
புதுக்கவிதைகள் அனைவரும் புரிந்துகொள்ளும்படி அதாவது பாமரனும் புரிந்துகொள்ளும்படி எழுதப்படவேண்டும். பட்டுக்கோட்டையார் முதல் நமது இன்றய இளைய தலைமுறைகள் அதிகம் ரசித்து எழுதுவது புதுக்கவிதைகள் தான்.

' எனக்கு ரோஜா மலர்களைவிட
முட்களைத்தான் அதிகம் பிடிக்கும்
காரணம் அவை தொட்டவுடன்
ரத்த பாசத்தைக் காட்டுகின்றன.....'

இது கவிஞர் மு.மேத்தா அவர்களின் வரிகள். இந்த சுவையான புதுக்கவிதையில் அல்லவா மனிதநேயம் மிளிர்கிறது. மரபு கவிதைகளின் காலம் இன்னும் முற்று பெறவில்லை.. ஆனால் புதுக்கவிதைகள் நவீனக்கவிதைகளோடு கைகோர்த்து சிம்மாசனத்தில் இன்றும் அமர்ந்து அரசாட்சி செய்து வருகின்றன என்பதை எவறாலும் மறுக்கப்படாத உண்மை.

கவிதைகளின் அணிவகுப்பில் தலைமையேற்கிறது புதுக்கவிதைகள்.

நல்ல சுவையான விவாதத்தில் பங்கு கொண்டது மனதுக்கு நிம்மதி.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.

புதுக் கவிதையை இலகுவாகப் புரிவதற்கு இலக்கணப் பிணக்கில்லாமையே காரணம். இலக்கணப் பயிற்சி உள்ளவருக்கு மரபுக் கவிதை கூட இனிக்கிறதே! முடிவாக இருவகைக் கவிதையுமே தரமானவை தான். ஆனால், வாசகர் எண்ணிக்கை எதற்குக் கூட என்பது வாசகரின் மொழியாளுமையிலும் தங்கியிருக்கிறதே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan Tue Feb 07, 2012 12:58 am

அய்யம் பெருமாள் .நா wrote:அருமையான செய்திகளை உள்ளடக்கிய விவாத திரி !

புது கவிதையோ , மரபு கவிதையோ வெவ்வேறானதல்ல என்பது என்னுடைய உளப்பாடு. ஏனென்றால் இரண்டிற்கும் கவினயம் அவசியம்.

இலக்கணத்திற்கு தலைவணங்கி எழுதுவது மரபு கவிதை ;
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது புது கவிதை :


மரபு கவிதையில் கவினயம் இல்லை என்றால் அது வெறும் செய்யுளாகிவிடும்
புது கவிதையில் கவினயம் இல்லை என்றால் அது உரைநடையாகிவிடும்
:


ஆக நான் விரும்புவது உணர்வுகளை கவினயத்தோடு வெளிப்படுத்துகிற படைப்புகளை.
நாம் மிகவும் ஒன்றிப்போய்விட்ட ஒரு படைப்பு அல்லது நம்மை மிகவும் கவர்ந்த ஒரு படைப்பு பாகுபாடு அற்றது.

இந்த பாகுபாடு அற்ற நிலை உடையவர்கள் தான் கவிதை ரசிகர்கள் என்பது என் கருத்து. ஆக புதுக்கவிதை , மரபு கவிதை என்கிற வேறுபாடு எல்லாம் 19 ஆம் நூற்றாண்டில் புதைக்கப்பட்ட ஒரு விவாதம்.


தங்கள் கருத்தை முழுநிறைவுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan Tue Feb 07, 2012 1:00 am

இளமாறன் wrote:விவாதங்கள் அருமை ...நடத்துங்கள் கவிகள் பேசுவதும் கலையே மகிழ்ச்சி மகிழ்ச்சி

தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by yarlpavanan Tue Feb 07, 2012 1:24 am

சதாசிவம் wrote:மிக நீண்ட அறிய பதிவுக்கு நன்றி ஐயா. புதுக்கவிதையின் வரலாறு ஆச்சரியமாக உள்ளது.


உங்கள் கருத்தை மும்மொழிகிறேன்.

வெறும் வாக்கெடுப்பு மூலம் ஒரு கவிதையின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியாது. இங்கு புதுக்கவிதை குறித்த பலரும் கூறுவது இது எங்களுக்கு புரிகிறது, சுவைஞர்கள் எதை விரும்புகிறார்களோ அதை சரி என்று முடிவு செய்வது சரி என்றும் கூறப்படுகிறது. உண்மையில் புரிதலை மட்டும் வைத்துக் கொண்டு கவிதையின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியாது என்பது என் கருத்து. ஹைகூ கவிதைக்கு இலக்கணம் இருப்பது போல் இன்றைய புதுக்கவிதைக்கும் என் இலக்கணம் பார்க்கக்கூடாது என்று நீங்கள் கூறுவது யோசிக்க வேண்டியது தான்.

ஆனால் இன்றைய தமிழ்நாட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் மொழியின் வளமை அறியா வறுமையில் உள்ளனர். புதுக்கவிதையில் ஒழுங்கு, இலக்கணம் என்று வகுத்தால் பலர் கவிதை எழுதுவதை நிறுத்திவிடுவர். அந்தக் காலத்தில் யாப்பு தெரிந்து புகழ்ப்பட பாடல்களைப் பாடியவர்களை புலவர் என்று கூறினோம். பாடல் எழுதிய அனைவரையும் புலவர் என்று அழைத்தனரா என்று தெரியவில்லை. ஆனால் இன்று சுடுதண்ணி வைக்கத் தெரிந்த ஒருவரை சமையலில் சிறந்தவள் என்று கூறுவது போல் எதை எழுதினாலும் அவரை கவிஞன் என்று கூறத்தொடங்கி விட்டனர். இதில் யார் சிறப்புக் கவிஞர், இதற்கு என்ன வரையறை என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை. இதில் மேலும் வருத்தம் எழுதிய புதுக்கவிதையில் கேள்வி கேட்டாலோ, வார்த்தைகளை மாற்றி அமைக்கலாமே என்று கருத்து தெரிவிக்கும் போது கவிதை எழுதுபவருக்கு வரும் கோபம் ஆச்சரியப்பட வைக்கிறது.

சிறந்த நடிகர் என்றால் அவருக்கு எல்லா கதாபாத்திரங்களும் நடிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். அது போல் கவிதையை தொழில், அல்லது முழு நேர பொழுபோக்காக வைத்து இருப்பவர்கள் யாப்பு பயில வேண்டும் என்பது என் அவா.


எவர் சொன்னார் புதுக்கவிதைக்கு இலக்கணம் இல்லை என்று? வரிக்(வசன)கவிதைக்கும் இலக்கணம் உண்டே!

உணர்வு வீச்சை அல்லது மூச்சான வரித்துண்டை முழுமையடையாத வரியாக எழுதுவதே புதுக்கவிதை!
எ-கா:
ஆவென்று அலறியவள்
"அம்" எனக் குழந்தை அழுகை கேட்க
அடங்கினாள் ஈன்ற தாய்!

உணர்வு வீச்சை, மூச்சான வரியாக முழுமையான வரியாக எழுதுவதே வரிக்(வசன)கவிதை!
எ-கா:
மகப்பேற்று வலியால் அவள் அழுகிறாள்.
குழந்தையின் அழுகை ஒலி கேட்க, அவளின் அழுகை குறைந்தது.

இவ்வாறான இலக்கணக் கோட்பாட்டோடு எழுதப்பட்ட கவிதைகளாகவே புதுக்கவிதையையும் வரிக்(வசன)கவிதையையும் நான் கருதுகிறேன். முடிவாக எந்தவொரு கவிதைக்கும் இலக்கணம் இருக்கிறது. ஆனால், மரபுக் கவிதைக்குச் சற்று இலக்கணம் அதிகம் என்பேன்.


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

open Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum