Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
+24
கா.ந.கல்யாணசுந்தரம்
ayyamperumal
T.PUSHPA
Dr.சுந்தரராஜ் தயாளன்
அதி
சதாசிவம்
பாலாஜி
உமா
சார்லஸ் mc
subhajothi
அல்கெனா ரிஷி
ஜாஹீதாபானு
கே. பாலா
ரேவதி
வின்சீலன்
பார்த்திபன்
உதயசுதா
அசுரன்
கோவிந்தராஜ்
இளமாறன்
பிஜிராமன்
மகா பிரபு
சிவா
yarlpavanan
28 posters
Page 4 of 11
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
First topic message reminder :
அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.
அமைதியற்ற உள்ளத்தைக் கூட அமைதிப்படுத்த உதவுவது கவிதையென நானுணர்கிறேன். பெரிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் குறுகிய எழுத்து வடிவம் கவிதை தான். கவிதை வாசிப்போர் அதிகம் என்பதால், உங்கள் கருத்தைக் கூறுங்களேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உங்கள் யாழ்பாவாணன்
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
அழகான கருத்து பதிக்கும் திரியை தொடங்கிய தங்களுக்கு நன்றி. நீண்ட நாட்களாக இது குறித்து பெரிய விவாதம் நடத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன்.
மரபுக் கவிதைகள் வைரம் போல்,
அதை எடுப்பது கடினம், பட்டை தீட்டுவது அதைவிட கடினம். சந்தைக்கு கொண்டு வருவது அதை விடக் கடினம். வைரத்தின் தன்மைகளை வைத்து அது பல வகைபடுகிறது. அனைவராலும் வாங்க முடியாது, சிலரால் பார்க்கவோ தொடவோ முடியாது. இதன் விலை மதிப்பற்றது. அனைவராலும் வாங்க, அணுக முடியாது என்பதால் இது விலை குறைந்தது இல்லை. இது போல் தான் மரபுக் கவிதை. அதை எடுப்பது, தொடுப்பது எல்லாம் கடினம். அனைவருக்கும் புரியவில்லை என்பதால் மத நூல்களை நாம் குறைவாக மதிப்பீடு செய்ய முடியாது. அதை எடுத்துச் சொல்ல சரியான ஆளைத் தேட வேண்டும். சரியாக படிக்கப் பழக வேண்டும். மரபுக் கவிதைகளை இப்படி தான் அணுக வேண்டும். எப்படி மத நூல்கள் படிப்பவரின் பக்குவத்திற்கு ஏற்ப பல பொருள்களைத் தருகிறதோ, அது போல் தான் மரபுக் கவிதையும், இதில் உட்பொருளை ஒளித்து வைக்கலாம். அதை உடைத்து வெளியில் எடுப்பது அவர் அவர் திறமை. மொழியின் வலிமை இந்த பாடல்களில் தான் வெளிப்படும். தமிழை தாய்மொழியில்லாமல் படிப்பவருக்கு நம் மொழியில் உள்ள அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். இவர்களுக்கு இவர் படித்த முறையில் ஒரு கவிதை வரும் போது அதை மதிப்பீடு செய்வது சுலபம். இப்படி ஒரு முறை இல்லாமல் வரும் புதுக் கவிதைகளை மதிப்பீடு செய்யும் போது அது படிப்பவரின் மனதையும், புரிந்து கொள்வதையும் பொறுத்து மாறலாம். உதாரணமாக கவிதைப் போட்டிக்கு 200 கவிதைகள் வருகிறது என்றால், நடுவர் குழுவை பொறுத்து தேர்வுகள் மாறலாம், விலை மகளை பற்றி ஒரு புதுக் கவிதை எழுதினால் அது பரிசீலிக்கப்படுமா என்பதே கேள்விக்குறி தான்.
இதே போட்டி மரபுக் கவிதைகளுடன் நடுத்தும் போது தமிழை முறையாக அறிந்த எந்த நடுவர் குழுவும் சரியாக எழுதப்படும் கவிதைக்கு மட்டுமே தேர்வு. இதில் பெரிய வித்தியாசம் இருக்காது. விலைமகளைப் பற்றி இலக்கணம் வழுவாது, தமிழின் அழகைக் கையாண்டு எழுதினால் அது சபையேறும், வெல்லும்.
வெறும் மரபுக் கவிதைகளை விரும்பினால் எதையுமே ரசிக்க முடியாது. இது சுப்புடுவை கூப்பிட்டு கச்சேரி கேட்க வைப்பது மாதிரி, ஒரு கவிதையும் சுவைக்க முடியாது, அது சரியில்லை, இது சரியில்லை. எதுகை இல்லை இயைபு இல்லை என்று மண்டை முழுதும் இலக்கணம் மட்டுமே இருக்கும், இயல்பான ரசிப்பு இருக்காது.
இரண்டு தரப்பு கவிதைகளை ரசிக்க ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. அது அனைவருக்கும் கைக்கு எட்டுவதில்லை.
புதுக்கவிதை தங்கம் போல், இதுவும் மதிப்பானது, ஆனால் வைரம் போல் இல்லை. அனைவராலும் வாங்க முடியும். இதில் கருத்தை வைத்து பல வகையாக பிரிக்கலாம். ஆனால் எழுதும் முறையில் பல வகையாக பிரிக்க முடியுமா என்று தெரியவில்லை, இதற்கு அப்படி ஒரு கட்டுப்பாடு/இலக்கணம் இல்லை. சுலபமாக இருப்பதால் கவி புனைவது எளிது. மேலும் கட்டுப்பாடுகள் இல்லாததால் கவிஞர் சொல்ல வருவதை இயல்பான வார்த்தைகளில் கூறமுடியும். மரபுக்குள் கட்டுபடாததால் இதை பலரும் விரும்புவர், எப்படி கட்டுபாடில்லாமல் விளையாட குழந்தை விரும்புகிறதோ அது போல் இதுவும் .மழையில் நனைந்து ஐஸ் கிரீம் சாப்பிடுவதைப் போல். இது குழந்தைக்கு சரி, பெரியவர்களுக்கு சரியா ?
ஆனால் பெரியவர்கள் எப்படி குழந்தைகளை கட்டுப்படுத்துகிறார்களோ அது போல் தான் மொழிவல்லுனர்கள், மொழி அறிந்தவர்கள். நாம் மொழியின் குழந்தைகள், வளர விரும்பாமல் இருப்பதில் சுகம் காண்கிறோம், அது சரி என்கிறோம். ஆனால் மொழி வல்லுனர்கள் மொழியில் முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் சரியாகாது. ஒரு சில வரையறை தேவை என்று நினைக்கின்றனர்.
இப்படி யாரோ ஒருவர் அவ்வப்போது போடும் இலக்கண வரையறை /கட்டுப்பாட்டில் தான் மொழி இன்னும் வாழ்கிறது. இது அனைத்து மொழிக்கு பொருந்தும். எப்படி வேண்டுமானால் பேசலாம், எழுதலாம் என்று இருந்தால் ஒரு மொழியையும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தர முடியாது.
நான் ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டது போல் புதுக்கவிதையின் சிறப்பு பளிச்சென்று படிப்பவரின் மனதை தாக்குதல். ஆனால் இது சிக்கிமுக்கி கல்லில் இருந்து வரும் வெளிச்சமாகவோ, மின்னலில் இருந்து வரும் வெளிச்சமாகவோ இருக்கும். அளவு வேறு ஆயுள் ஒன்று. இங்கு இல்லை வேறு எங்கும் படிக்கும் புதுக்கவிதை எத்தனை நமக்கு வரி மாறாமல் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஔவையின் பாடல், திருக்குறள், இன்னும் பல பாடல்களில் ஒரு சில எப்படி மறக்காமல் இருக்கிறது. இதில் உள்ள சொல்கட்டமைப்பு தான் இதற்குக் காரணம்.
மரபுக் கவிதைகள் வைரம் போல்,
அதை எடுப்பது கடினம், பட்டை தீட்டுவது அதைவிட கடினம். சந்தைக்கு கொண்டு வருவது அதை விடக் கடினம். வைரத்தின் தன்மைகளை வைத்து அது பல வகைபடுகிறது. அனைவராலும் வாங்க முடியாது, சிலரால் பார்க்கவோ தொடவோ முடியாது. இதன் விலை மதிப்பற்றது. அனைவராலும் வாங்க, அணுக முடியாது என்பதால் இது விலை குறைந்தது இல்லை. இது போல் தான் மரபுக் கவிதை. அதை எடுப்பது, தொடுப்பது எல்லாம் கடினம். அனைவருக்கும் புரியவில்லை என்பதால் மத நூல்களை நாம் குறைவாக மதிப்பீடு செய்ய முடியாது. அதை எடுத்துச் சொல்ல சரியான ஆளைத் தேட வேண்டும். சரியாக படிக்கப் பழக வேண்டும். மரபுக் கவிதைகளை இப்படி தான் அணுக வேண்டும். எப்படி மத நூல்கள் படிப்பவரின் பக்குவத்திற்கு ஏற்ப பல பொருள்களைத் தருகிறதோ, அது போல் தான் மரபுக் கவிதையும், இதில் உட்பொருளை ஒளித்து வைக்கலாம். அதை உடைத்து வெளியில் எடுப்பது அவர் அவர் திறமை. மொழியின் வலிமை இந்த பாடல்களில் தான் வெளிப்படும். தமிழை தாய்மொழியில்லாமல் படிப்பவருக்கு நம் மொழியில் உள்ள அடிப்படை இலக்கணம் மட்டுமே தெரியும். இவர்களுக்கு இவர் படித்த முறையில் ஒரு கவிதை வரும் போது அதை மதிப்பீடு செய்வது சுலபம். இப்படி ஒரு முறை இல்லாமல் வரும் புதுக் கவிதைகளை மதிப்பீடு செய்யும் போது அது படிப்பவரின் மனதையும், புரிந்து கொள்வதையும் பொறுத்து மாறலாம். உதாரணமாக கவிதைப் போட்டிக்கு 200 கவிதைகள் வருகிறது என்றால், நடுவர் குழுவை பொறுத்து தேர்வுகள் மாறலாம், விலை மகளை பற்றி ஒரு புதுக் கவிதை எழுதினால் அது பரிசீலிக்கப்படுமா என்பதே கேள்விக்குறி தான்.
இதே போட்டி மரபுக் கவிதைகளுடன் நடுத்தும் போது தமிழை முறையாக அறிந்த எந்த நடுவர் குழுவும் சரியாக எழுதப்படும் கவிதைக்கு மட்டுமே தேர்வு. இதில் பெரிய வித்தியாசம் இருக்காது. விலைமகளைப் பற்றி இலக்கணம் வழுவாது, தமிழின் அழகைக் கையாண்டு எழுதினால் அது சபையேறும், வெல்லும்.
வெறும் மரபுக் கவிதைகளை விரும்பினால் எதையுமே ரசிக்க முடியாது. இது சுப்புடுவை கூப்பிட்டு கச்சேரி கேட்க வைப்பது மாதிரி, ஒரு கவிதையும் சுவைக்க முடியாது, அது சரியில்லை, இது சரியில்லை. எதுகை இல்லை இயைபு இல்லை என்று மண்டை முழுதும் இலக்கணம் மட்டுமே இருக்கும், இயல்பான ரசிப்பு இருக்காது.
இரண்டு தரப்பு கவிதைகளை ரசிக்க ஒரு தனிப் பக்குவம் தேவைப்படுகிறது. அது அனைவருக்கும் கைக்கு எட்டுவதில்லை.
புதுக்கவிதை தங்கம் போல், இதுவும் மதிப்பானது, ஆனால் வைரம் போல் இல்லை. அனைவராலும் வாங்க முடியும். இதில் கருத்தை வைத்து பல வகையாக பிரிக்கலாம். ஆனால் எழுதும் முறையில் பல வகையாக பிரிக்க முடியுமா என்று தெரியவில்லை, இதற்கு அப்படி ஒரு கட்டுப்பாடு/இலக்கணம் இல்லை. சுலபமாக இருப்பதால் கவி புனைவது எளிது. மேலும் கட்டுப்பாடுகள் இல்லாததால் கவிஞர் சொல்ல வருவதை இயல்பான வார்த்தைகளில் கூறமுடியும். மரபுக்குள் கட்டுபடாததால் இதை பலரும் விரும்புவர், எப்படி கட்டுபாடில்லாமல் விளையாட குழந்தை விரும்புகிறதோ அது போல் இதுவும் .மழையில் நனைந்து ஐஸ் கிரீம் சாப்பிடுவதைப் போல். இது குழந்தைக்கு சரி, பெரியவர்களுக்கு சரியா ?
ஆனால் பெரியவர்கள் எப்படி குழந்தைகளை கட்டுப்படுத்துகிறார்களோ அது போல் தான் மொழிவல்லுனர்கள், மொழி அறிந்தவர்கள். நாம் மொழியின் குழந்தைகள், வளர விரும்பாமல் இருப்பதில் சுகம் காண்கிறோம், அது சரி என்கிறோம். ஆனால் மொழி வல்லுனர்கள் மொழியில் முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் சரியாகாது. ஒரு சில வரையறை தேவை என்று நினைக்கின்றனர்.
இப்படி யாரோ ஒருவர் அவ்வப்போது போடும் இலக்கண வரையறை /கட்டுப்பாட்டில் தான் மொழி இன்னும் வாழ்கிறது. இது அனைத்து மொழிக்கு பொருந்தும். எப்படி வேண்டுமானால் பேசலாம், எழுதலாம் என்று இருந்தால் ஒரு மொழியையும் அடுத்த தலைமுறைக்கு சொல்லித்தர முடியாது.
நான் ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டது போல் புதுக்கவிதையின் சிறப்பு பளிச்சென்று படிப்பவரின் மனதை தாக்குதல். ஆனால் இது சிக்கிமுக்கி கல்லில் இருந்து வரும் வெளிச்சமாகவோ, மின்னலில் இருந்து வரும் வெளிச்சமாகவோ இருக்கும். அளவு வேறு ஆயுள் ஒன்று. இங்கு இல்லை வேறு எங்கும் படிக்கும் புதுக்கவிதை எத்தனை நமக்கு வரி மாறாமல் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஔவையின் பாடல், திருக்குறள், இன்னும் பல பாடல்களில் ஒரு சில எப்படி மறக்காமல் இருக்கிறது. இதில் உள்ள சொல்கட்டமைப்பு தான் இதற்குக் காரணம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
நான் ஏற்கனவே ஒரு திரியில் குறிப்பிட்டது போல் புதுக்கவிதையின் சிறப்பு பளிச்சென்று படிப்பவரின் மனதை தாக்குதல். ஆனால் இது சிக்கிமுக்கி கல்லில் இருந்து வரும் வெளிச்சமாகவோ, மின்னலில் இருந்து வரும் வெளிச்சமாகவோ இருக்கும். அளவு வேறு ஆயுள் ஒன்று. இங்கு இல்லை வேறு எங்கும் படிக்கும் புதுக்கவிதை எத்தனை நமக்கு வரி மாறாமல் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஔவையின் பாடல், திருக்குறள், இன்னும் பல பாடல்களில் ஒரு சில எப்படி மறக்காமல் இருக்கிறது. இதில் உள்ள சொல்கட்டமைப்பு தான் இதற்குக் காரணம்.
மிகவும் உண்மையான ஒன்று ஐயா.
மிக மிக அருமையான உரை ஐயா...மிக்க நன்றிகள்.......
வெறும் மரபுக் கவிதைகளை விரும்பினால் எதையுமே ரசிக்க முடியாது. இது சுப்புடுவை கூப்பிட்டு கச்சேரி கேட்க வைப்பது மாதிரி, ஒரு கவிதையும் சுவைக்க முடியாது, அது சரியில்லை, இது சரியில்லை.
இதைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள் ஐயா, அதாவது, சுப்புடுவை அழைத்து கச்சேரி, இதன் வரலாறு எனக்கு தெரியவில்லை, விளக்குங்கள் ஐயா.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
ராமன் சுப்புடு என்பவர் ஒரு மிகச்சிறந்த, மிகவும் ஞானமுள்ள ஒரு இசைவிமர்சகர். தள்ளாத வயதிலிலும் மார்கழி மாத கச்சேரிகளில் வந்து கேட்டு இசை விமர்சனம் எழுதுவது அவருடைய வேலை. ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளில் அவர் விமர்சனக்கட்டுரை வெளிவந்திருக்கிறது. இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரிடம் பாராட்டு வாங்க தவம் கிடந்தனர். இவர் சுமார் என்று எழுதினாலே, பெரிய விஷயம். இவரின் கணக்குப்படி இன்றைக்கு அருமையாகப் பாடும் பல சங்கீத வித்துவான்களில் சிலர் ஜஸ்ட் பாஸ், பலர் பெயில்.
சங்கீதத்தை இலக்கண முறையில் ரசித்தால், சுவைக்க முடியாது. 99 % சினிமா பாட்டுக்கள் சங்கீத இலக்கண பிழை இருக்கிறது. இதை யோசித்தால் பாட்டை ரசிக்க முடியாது. இவை தெரியாமல் இருந்தால் பாட்டை அழகாக ரசிக்க முடியும்.
புதுக்கவிதையும் இப்படிதான். மொழியில் ஆர்வமும், பற்றும், பரிச்யமும், இலக்கண மரபும் தெரிந்து இருந்தால் கவிதையை ரசிக்க முடியாது.
அந்த சங்கீத ஜாம்பவான் சுப்பிடு இவர் தான்.
![இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 Subbudu1](https://2img.net/h/www.narthaki.com/info/imgs/subbudu1.jpg)
சங்கீதத்தை இலக்கண முறையில் ரசித்தால், சுவைக்க முடியாது. 99 % சினிமா பாட்டுக்கள் சங்கீத இலக்கண பிழை இருக்கிறது. இதை யோசித்தால் பாட்டை ரசிக்க முடியாது. இவை தெரியாமல் இருந்தால் பாட்டை அழகாக ரசிக்க முடியும்.
புதுக்கவிதையும் இப்படிதான். மொழியில் ஆர்வமும், பற்றும், பரிச்யமும், இலக்கண மரபும் தெரிந்து இருந்தால் கவிதையை ரசிக்க முடியாது.
அந்த சங்கீத ஜாம்பவான் சுப்பிடு இவர் தான்.
![இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 Subbudu1](https://2img.net/h/www.narthaki.com/info/imgs/subbudu1.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
சதாசிவம் wrote:ராமன் சுப்புடு என்பவர் ஒரு மிகச்சிறந்த, மிகவும் ஞானமுள்ள ஒரு இசைவிமர்சகர். தள்ளாத வயதிலிலும் மார்கழி மாத கச்சேரிகளில் வந்து கேட்டு இசை விமர்சனம் எழுதுவது அவருடைய வேலை. ஆனந்த விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளில் அவர் விமர்சனக்கட்டுரை வெளிவந்திருக்கிறது. இவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பல கர்நாடக இசைக் கலைஞர்கள் இவரிடம் பாராட்டு வாங்க தவம் கிடந்தனர். இவர் சுமார் என்று எழுதினாலே, பெரிய விஷயம். இவரின் கணக்குப்படி இன்றைக்கு அருமையாகப் பாடும் பல சங்கீத வித்துவான்களில் சிலர் ஜஸ்ட் பாஸ், பலர் பெயில்.
சங்கீதத்தை இலக்கண முறையில் ரசித்தால், சுவைக்க முடியாது. 99 % சினிமா பாட்டுக்கள் சங்கீத இலக்கண பிழை இருக்கிறது. இதை யோசித்தால் பாட்டை ரசிக்க முடியாது. இவை தெரியாமல் இருந்தால் பாட்டை அழகாக ரசிக்க முடியும்.
புதுக்கவிதையும் இப்படிதான். மொழியில் ஆர்வமும், பற்றும், பரிச்யமும், இலக்கண மரபும் தெரிந்து இருந்தால் கவிதையை ரசிக்க முடியாது.
அந்த சங்கீத ஜாம்பவான் சுப்பிடு இவர் தான்.
மிக்க நன்றிகள் ஐயா, இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது ............
ஜோடி என்ற படத்தில், விஜயகுமார், இவருடைய கதாபாத்திரத்தில் தான் நடிதிருக்கிறார் என்று.
அந்தப் படத்தில், விஜயகுமார், இசைக் கலைஞர்களை விமர்சனம் செய்வது தான் அவருடைய கதாபாத்திரம். நிச்சயம் அது இவருடைய வாழ்க்கையை தான் எடுத்திருப்பார்கள் பெயர் கூடு சுப்புடு என்று தான் வரும் சரியாக நியாபகம் இல்லை.
மிக்க நன்றிகள் ஐயா.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
பிஜிராமன் wrote:
ஜோடி என்ற படத்தில், விஜயகுமார், இவருடைய கதாபாத்திரத்தில் தான் நடிதிருக்கிறார் என்று.
மிக்க நன்றிகள் ஐயா.![]()
![]()
க.க.க.போ
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
நன்றி ராமன்
அந்த படத்தில் அவர் பெயர் வெங்குடு என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் சுப்புடுவை ஆதாரமாக வைத்து கதாபாத்திரம் வந்ததா அல்லது கதாபாத்திரம் வாயிலாக சுப்பிடு உலகுக்கு தெரிய வருகிறாரா?
தமிழும் இப்படி தான்.
பல நேரங்களில் புதுக்கவிதை தான் தமிழை வாழ வைக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். சங்கீத விஷயம் தெரிந்தவருக்கு ஜோடி பட கதாபாத்திரம் அவசியம் இல்லை. விஷயம் தெரியாதவருக்கு இது போன்ற புனைவுகள் தேவைப்படுகிறது. இதன் வாயிலாகத் தான் பலருக்கு தெரிய வருகிறது என்பதால் இது உயர்ந்தது என்று முடிவு செய்யக்கூடாது.
உங்கள் வள்ளுவனின் வாசகத்தில், கண்ணதாசனின் வரிகள்
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் ஒளியில்லை
குறள் -1118
அவள் கண்ணை பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
குறள் - 1112
அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை
குறள் - 1124
மேற்சொன்ன கண்ணதாசனின் வரிகள் இந்த திருக்குறளைத் தழுவி எழுதியவை. இந்த சினிமா பாடல்களை ஒரு புறமும் மறுபுறம் திருக்குறளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எந்த ரயில் நிலையம் சென்று 100 நபர்களை கேட்டால், 95 % நபர்கள் கண்ணதாசனின் வரிகள் புரிகிறது, நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். இதையே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் / தமிழ் அறிந்தவர்கள் 100 பேரை கூப்பிட்டு கேட்டால், அட இது திருக்குறளை நகல் எடுத்த கவிதை வரிகள் என்று கூறுவார்கள். பல சினிமா பாடல்களும் இப்படி தான் கடன் வாங்கப்படுகிறது.
பலருக்கு புரிவதால் கண்ணதாசனின் வரிகள், திருக்குறளுடன் ஒப்பீடு செய்ய முடியுமா.
அது போல் தான் மரபுக் கவிதையும், புதுக்கவிதையும். இவை இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றியவை. வெவ்வேறு வாசகர்களை கவருபவை. வாக்கு எடுப்பு மூலம் தீர்வு செய்வது தீர்வாகாது. அப்படி எடுப்பது திருக்குறள் புரியாதாதால் சினிமா பாடல்களை விட அதன் மதிப்பு குறைவு என்று முடிவு செய்வதை போல் அமைந்து விடும்.
உரைநடை பேசும் போதும் கவிநடையில் பேசுபவன் தான் கவி. உரைநடையை கவி என்றால், அதை பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்றைய புதுக்கவிதையில் இருக்கும் மிகப்பெரிய குறை பல நேரங்களில் வசன நடையில் அமைந்து இருப்பது தான். இரண்டு வரி உரைநடையை எட்டு வரியாக மடக்கி எழுதினால் அது கவி என்றாகி விடுகிறது.
கவிதை என்ற வார்த்தைக் கூட கவி பாடுகிறது அதில் கதை, விதை, கவி என்று மூன்று சொல் ஒளிந்து இருக்கிறது. இது தான் மொழியின் சிறப்பு. நல்ல கவிதைக்கு விதை அதாவது ஒரு கரு அல்லது கருத்து இருக்கவேண்டும். அதை அழகாக கதை போல் கோர்வையாக எதை சொல்ல வருகிறோமோ அதை திறம்பட சொல்ல வேண்டும். மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் கவி நயம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான்.
கவிதையை முழு நேர அல்லது பகுதி நேர தொழிலாக வைத்திருப்பவர்கள் மரபுக் கவிதை பயில வேண்டும், படைக்க வேண்டும் என்பது என் கருத்து.
அந்த படத்தில் அவர் பெயர் வெங்குடு என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் சுப்புடுவை ஆதாரமாக வைத்து கதாபாத்திரம் வந்ததா அல்லது கதாபாத்திரம் வாயிலாக சுப்பிடு உலகுக்கு தெரிய வருகிறாரா?
தமிழும் இப்படி தான்.
பல நேரங்களில் புதுக்கவிதை தான் தமிழை வாழ வைக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். சங்கீத விஷயம் தெரிந்தவருக்கு ஜோடி பட கதாபாத்திரம் அவசியம் இல்லை. விஷயம் தெரியாதவருக்கு இது போன்ற புனைவுகள் தேவைப்படுகிறது. இதன் வாயிலாகத் தான் பலருக்கு தெரிய வருகிறது என்பதால் இது உயர்ந்தது என்று முடிவு செய்யக்கூடாது.
உங்கள் வள்ளுவனின் வாசகத்தில், கண்ணதாசனின் வரிகள்
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் ஒளியில்லை
குறள் -1118
அவள் கண்ணை பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
குறள் - 1112
அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை
குறள் - 1124
மேற்சொன்ன கண்ணதாசனின் வரிகள் இந்த திருக்குறளைத் தழுவி எழுதியவை. இந்த சினிமா பாடல்களை ஒரு புறமும் மறுபுறம் திருக்குறளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எந்த ரயில் நிலையம் சென்று 100 நபர்களை கேட்டால், 95 % நபர்கள் கண்ணதாசனின் வரிகள் புரிகிறது, நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். இதையே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் / தமிழ் அறிந்தவர்கள் 100 பேரை கூப்பிட்டு கேட்டால், அட இது திருக்குறளை நகல் எடுத்த கவிதை வரிகள் என்று கூறுவார்கள். பல சினிமா பாடல்களும் இப்படி தான் கடன் வாங்கப்படுகிறது.
பலருக்கு புரிவதால் கண்ணதாசனின் வரிகள், திருக்குறளுடன் ஒப்பீடு செய்ய முடியுமா.
அது போல் தான் மரபுக் கவிதையும், புதுக்கவிதையும். இவை இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றியவை. வெவ்வேறு வாசகர்களை கவருபவை. வாக்கு எடுப்பு மூலம் தீர்வு செய்வது தீர்வாகாது. அப்படி எடுப்பது திருக்குறள் புரியாதாதால் சினிமா பாடல்களை விட அதன் மதிப்பு குறைவு என்று முடிவு செய்வதை போல் அமைந்து விடும்.
உரைநடை பேசும் போதும் கவிநடையில் பேசுபவன் தான் கவி. உரைநடையை கவி என்றால், அதை பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்றைய புதுக்கவிதையில் இருக்கும் மிகப்பெரிய குறை பல நேரங்களில் வசன நடையில் அமைந்து இருப்பது தான். இரண்டு வரி உரைநடையை எட்டு வரியாக மடக்கி எழுதினால் அது கவி என்றாகி விடுகிறது.
கவிதை என்ற வார்த்தைக் கூட கவி பாடுகிறது அதில் கதை, விதை, கவி என்று மூன்று சொல் ஒளிந்து இருக்கிறது. இது தான் மொழியின் சிறப்பு. நல்ல கவிதைக்கு விதை அதாவது ஒரு கரு அல்லது கருத்து இருக்கவேண்டும். அதை அழகாக கதை போல் கோர்வையாக எதை சொல்ல வருகிறோமோ அதை திறம்பட சொல்ல வேண்டும். மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் கவி நயம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான்.
கவிதையை முழு நேர அல்லது பகுதி நேர தொழிலாக வைத்திருப்பவர்கள் மரபுக் கவிதை பயில வேண்டும், படைக்க வேண்டும் என்பது என் கருத்து.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
நன்றி சதாசிவம் ...இந்த ஒப்பீடு தவறு என்ற காரணத்தால்தான் நான் எனக்கு பிடித்தது கவிதைகள் என்று பின்னூட்டம் இட்டிருந்தேன். நீங்கள் கொடுத்தது ,தெளிவான , , அழகாக விளக்கம் சூப்பருங்க:
எந்த கவிதையாக இருந்தாலும் மனதிற்கு நிறைவை, கவிஉணர்வை ,, "அட" என்று மனதில் ஒரு மகிழ்வை தரவேண்டும் .
இலக்கணப்படியான "மொக்கை"களையும்..,உரைநடையே புதுக்கவிதை போல "வேடமிட்டு"வரும் வித்தைகளையும் ...ஒரு நல்ல "கவிதை வாசகன் "உணர முடியும் என்பது என் கருத்து ...
எந்த கவிதையாக இருந்தாலும் மனதிற்கு நிறைவை, கவிஉணர்வை ,, "அட" என்று மனதில் ஒரு மகிழ்வை தரவேண்டும் .
இலக்கணப்படியான "மொக்கை"களையும்..,உரைநடையே புதுக்கவிதை போல "வேடமிட்டு"வரும் வித்தைகளையும் ...ஒரு நல்ல "கவிதை வாசகன் "உணர முடியும் என்பது என் கருத்து ...
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
எனக்கு இன்னும் புதுக்கவிதை மரபு கவிதைன்னா என்னனே விளங்க மாட்டேங்குது.சுதாக்கா சொன்னது போல படிக்க புரியும் கவிதை தான் எனக்கும் பிடிக்கும்.
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
கே. பாலா wrote:நன்றி சதாசிவம் ...இந்த ஒப்பீடு தவறு என்ற காரணத்தால்தான் நான் எனக்கு பிடித்தது கவிதைகள் என்று பின்னூட்டம் இட்டிருந்தேன். நீங்கள் கொடுத்தது ,தெளிவான , , அழகாக விளக்கம் சூப்பருங்க:
எந்த கவிதையாக இருந்தாலும் மனதிற்கு நிறைவை, கவிஉணர்வை ,, "அட" என்று மனதில் ஒரு மகிழ்வை தரவேண்டும் .
இலக்கணப்படியான "மொக்கை"களையும்..,உரைநடையே புதுக்கவிதை போல "வேடமிட்டு"வரும் வித்தைகளையும் ...ஒரு நல்ல "கவிதை வாசகன் "உணர முடியும் என்பது என் கருத்து ...
நன்றி பாலா சார்,
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
நீங்கள் கூறுவது உண்மை, ஒரு நல்ல வாசகனால் கவிதையின் தரத்தை நிர்ணயம் செய்ய முடியும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா? - Page 4 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
சதாசிவம் wrote:நன்றி ராமன்
அந்த படத்தில் அவர் பெயர் வெங்குடு என்று நினைக்கிறேன். இப்போது சொல்லுங்கள் சுப்புடுவை ஆதாரமாக வைத்து கதாபாத்திரம் வந்ததா அல்லது கதாபாத்திரம் வாயிலாக சுப்பிடு உலகுக்கு தெரிய வருகிறாரா?
தமிழும் இப்படி தான்.
பல நேரங்களில் புதுக்கவிதை தான் தமிழை வாழ வைக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். சங்கீத விஷயம் தெரிந்தவருக்கு ஜோடி பட கதாபாத்திரம் அவசியம் இல்லை. விஷயம் தெரியாதவருக்கு இது போன்ற புனைவுகள் தேவைப்படுகிறது. இதன் வாயிலாகத் தான் பலருக்கு தெரிய வருகிறது என்பதால் இது உயர்ந்தது என்று முடிவு செய்யக்கூடாது.
உங்கள் வள்ளுவனின் வாசகத்தில், கண்ணதாசனின் வரிகள்
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் ஒளியில்லை
குறள் -1118
அவள் கண்ணை பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில் ஒளியில்லை
குறள் - 1112
அவள் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் அவள் இல்லை
குறள் - 1124
மேற்சொன்ன கண்ணதாசனின் வரிகள் இந்த திருக்குறளைத் தழுவி எழுதியவை. இந்த சினிமா பாடல்களை ஒரு புறமும் மறுபுறம் திருக்குறளை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் எந்த ரயில் நிலையம் சென்று 100 நபர்களை கேட்டால், 95 % நபர்கள் கண்ணதாசனின் வரிகள் புரிகிறது, நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள். இதையே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் ஆசிரியர்கள் / தமிழ் அறிந்தவர்கள் 100 பேரை கூப்பிட்டு கேட்டால், அட இது திருக்குறளை நகல் எடுத்த கவிதை வரிகள் என்று கூறுவார்கள். பல சினிமா பாடல்களும் இப்படி தான் கடன் வாங்கப்படுகிறது.
பலருக்கு புரிவதால் கண்ணதாசனின் வரிகள், திருக்குறளுடன் ஒப்பீடு செய்ய முடியுமா.
அது போல் தான் மரபுக் கவிதையும், புதுக்கவிதையும். இவை இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் தோன்றியவை. வெவ்வேறு வாசகர்களை கவருபவை. வாக்கு எடுப்பு மூலம் தீர்வு செய்வது தீர்வாகாது. அப்படி எடுப்பது திருக்குறள் புரியாதாதால் சினிமா பாடல்களை விட அதன் மதிப்பு குறைவு என்று முடிவு செய்வதை போல் அமைந்து விடும்.
உரைநடை பேசும் போதும் கவிநடையில் பேசுபவன் தான் கவி. உரைநடையை கவி என்றால், அதை பலராலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இன்றைய புதுக்கவிதையில் இருக்கும் மிகப்பெரிய குறை பல நேரங்களில் வசன நடையில் அமைந்து இருப்பது தான். இரண்டு வரி உரைநடையை எட்டு வரியாக மடக்கி எழுதினால் அது கவி என்றாகி விடுகிறது.
கவிதை என்ற வார்த்தைக் கூட கவி பாடுகிறது அதில் கதை, விதை, கவி என்று மூன்று சொல் ஒளிந்து இருக்கிறது. இது தான் மொழியின் சிறப்பு. நல்ல கவிதைக்கு விதை அதாவது ஒரு கரு அல்லது கருத்து இருக்கவேண்டும். அதை அழகாக கதை போல் கோர்வையாக எதை சொல்ல வருகிறோமோ அதை திறம்பட சொல்ல வேண்டும். மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் கவி நயம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் எந்தக் கவிதையும் நல்ல கவிதைதான்.
கவிதையை முழு நேர அல்லது பகுதி நேர தொழிலாக வைத்திருப்பவர்கள் மரபுக் கவிதை பயில வேண்டும், படைக்க வேண்டும் என்பது என் கருத்து.
சுப்புடு அவர்கள் மூலம் கதாபாத்திரம் உருவாகியதே தவிர அந்த காதாபாத்திரத்தின் மூலம் அவர் அறியப் படவில்லை. அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே, அந்தப் படத்தை பார்த்தால், தெரிந்து கொள்வார்கள். ஐயா.
மிக மிக அருமையான, உவமையை கையாண்டுள்ளீர்கள் ஐயா.
மரபுக் கவிதை, நாளெல்லாம் தொடரும் என்று அதன் பெயரிலையே உள்ளது.
புதுக் கவிதை, அன்றன்று பூப்பவை. நீண்ட நாட்களுக்கு வருமா என்பது சந்தேகம் தான். இதுவும் அதன் பெயரிலேயே உள்ளது.
மிக்க நன்றிகள் ஐயா.......
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ந.க. துறைவன் மரபுக் கவிதைகள்
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்...
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
» தலைவலி அல்லது தலையிடி, மண்டையிடி என்பது நெற்றியில் அல்லது மண்டைக்குள் ஏற்படும் வலி
» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
» குமுதம் வாசகர்கள் அனுபவங்கள்...
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
Page 4 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|