ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

+7
அசுரன்
yarlpavanan
Dr.சுந்தரராஜ் தயாளன்
மகா பிரபு
செல்ல கணேஷ்
பிஜிராமன்
சதாசிவம்
11 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் Sun Jan 29, 2012 6:51 pm

First topic message reminder :

தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.

மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.

இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.

நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.

இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.

நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.




Last edited by சதாசிவம் on Tue Feb 28, 2012 6:20 pm; edited 1 time in total


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down


நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by sshanthi Wed Feb 08, 2012 4:33 pm

அருமையான தொடர்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் Fri Feb 10, 2012 6:33 pm

sshanthi wrote:அருமையான தொடர்
நன்றி சாந்தி,

தொடருங்கள்


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் Fri Feb 10, 2012 7:20 pm

49. உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.
50. குடைநிழ லிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்.
51. சிறப்புஞ் செல்வமும் பெருமையு முடையோர்
அறக்கூழ்ச் சாலை அடையினும் அடைவர்.
52. அறத்திடு பிச்சை கூவி யிரப்போர்
அரசோ டிருந்தர சாளினும் ஆளுவர்.
53. குன்றத் தனையிரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே யழியினும் அழிவர்.
54. எழுநிலை மாடங் கால்சாய்ந் துக்குக்
கழுதை மேய்பா ழாயினு மாகும்.
55. பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி
நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.
56. மணவணி யணிந்த மகளி ராங்கே
பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ
உடுத்த ஆடை கோடி யாக
முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்.
57. இல்லோ ரிரப்பதும் இயல்பே இயல்பே.
58. இரந்தோர்க் கீவது முடையோர் கடனே.


பொருள் விளக்கம்

வாழ்க்கையின் நிலையில்லாமையை அழகாக எடுத்துக் கூறும் சிறந்த பாடல்.

49 .
ஒருவன் சம்பாதித்த சம்பாதித்யம், பரம்பரையாக வந்த சொத்து, உடைமைகள் ஒருவரிடம் நிலையாக தங்காது. காலம் மாறினால் இருப்பதை இழக்க வேண்டி வரலாம். உணவுக்கு தவிக்கும் வறுமை நிலை உள்ளவர்களுக்கு வாழ்வு வந்து வசதி வாய்ப்புடன் வாழலாம்.

50 .
நன்கு வசதியுடன் அரச வாழ்க்கை வாழ்ந்த, யானை மேல் சவாரி செய்த வசதியான ஒருவர், வறுமை நிலை எய்து பிழைப்புக்கு வேறு ஊரு சென்று ஒருவரை இரந்து நிற்க நேரலாம்.

51 .
சிறப்புடன் செல்வமும், வசதியுடன், பெருமையுடன் வாழ்ந்தவர் ஒரே நாளில் ஏழ்மை நிலை எய்து அன்னதானம் செய்யும் சத்திரத்தின் வாசலில் உணவுக்காக காத்திருக்கும் நிலைமையும் வரலாம். (சுனாமி, பூகம்பம், சூறாவளி போன்ற பேரிடர்கள் வரும் போது ஒரே நாளில் பல பேருக்கு அன்னமிட்டோர், அன்னம் கிடைக்காதா என்று அண்ணாந்து பார்க்கும் இன்றைய நிலையை ஒப்பிட்டு பார்க்கவும்)

52 .
தெருவில் யாராவது பிச்சை இடுவார்களா என்று ஏங்கி இருப்பவர்களுக்கு வாழ்வு வந்து அரசனோடு இருந்து ஆளவும் செய்யாலாம்.

53 .
மலை அளவுக்கு சங்க நிதி, பதும நிதி என்று கணக்கிடா அளவு பணத்தை வைத்திருப்பவர்கள், காலையில் வைத்திருந்த மலை அளவு பணத்தை அதே நாள் பகல் பொழுதில் இழக்கவும் செய்யலாம்.

54 .
ஏழு அடுக்கு மாளிகைக்கு சொந்தமாக கால் மேல், கால் போட்டு இன்பமாக தூங்கும் ஒருவர் கழுதை மேய்ப்பவன் ஆனாலும் ஆகலாம்.

55 .
எருமையும், கழுதையும் மேய்ந்து கேட்பதற்கு ஆள் இல்லாமல் இருந்த வெட்டைவெளி நிலம், தங்கம் அணிந்த பெண்களும், குழந்தைகளும் பல வகை மக்களும் மகிழ்ச்சியுடன் வாழும் அழகழகான வீடுகள் உடைய பெரிய நகரமாக ஆனாலும் ஆகலாம் (இன்றைய ரியல் எஸ்டேட் வளரும் நகரங்கள் எல்லாம் இப்படி தான்)

56 .
காலையில் திருமண கோலத்தில் இருந்த மணப்பெண், மணமகனை இழந்து மணக்கோலத்தில் இருந்த கூறைப்புடவையில் கூந்தல் விரித்து அழும் நிலைமையும் வரலாம்.

57 . வாழ்க்கையில் எது வேண்டுமானால் எப்பவும் வரலாம், பணம் இருப்பவர் ஒரே நாளில் ஏழையாகலாம், ஏழையாய் இருப்பவர் ஒரே நாளில் பணக்காரர் ஆகலாம். ஆதலால் இல்லாமல் இருப்பவர் ஒருவரை நாடுவது இயல்பே.

58 .
இப்படி வறுமை நிலை வந்து இரந்து கேட்பவருக்கு (நாளை நமக்கும் இப்படி ஒரு நிலை வரலாம் என்று உணர்ந்து) இருப்பவர்கள் இரப்பவருக்கு கொடுத்து உதவுவது அவர்களின் கடமையே.

தொடரும்.....




Last edited by சதாசிவம் on Sat Feb 11, 2012 9:11 am; edited 1 time in total


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by கபாலி Sat Feb 11, 2012 12:54 am

மிகவும் அருமையான பழந்தமிழ் அருமையைப் பேணும் வகையிலான பயனுள்ள தொடர்..

ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்றென மதிக்கிறேன்.

தொடருங்கள் உங்கள் தமிழ்ச்சேவையை..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் Sat Feb 11, 2012 9:09 am

கபாலி wrote:மிகவும் அருமையான பழந்தமிழ் அருமையைப் பேணும் வகையிலான பயனுள்ள தொடர்..

ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்றென மதிக்கிறேன்.

நன்றி கபாலி நன்றி

தொடருங்கள் உங்கள் தமிழ்ச்சேவையை..


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by மகா பிரபு Sat Feb 11, 2012 9:12 am

இரப்பவருக்கு என்பதன் பொருள் என்ன அண்ணா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் Sat Feb 11, 2012 9:19 am

மகா பிரபு wrote:இரப்பவருக்கு என்பதன் பொருள் என்ன அண்ணா?

இரத்தல் என்றால் பிச்சை எடுத்தல் என்றும் பொருள் படும்.
இரப்பவருக்கு என்றால் ஒருவரை நாடி அவரிடம் "உதவி கேட்பவருக்கு" என்று பொருள் கொள்ள வேண்டும்.



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by மகா பிரபு Sat Feb 11, 2012 9:22 am

சதாசிவம் wrote:
மகா பிரபு wrote:இரப்பவருக்கு என்பதன் பொருள் என்ன அண்ணா?

இரத்தல் என்றால் பிச்சை எடுத்தல் என்றும் பொருள் படும்.
இரப்பவருக்கு என்றால் ஒருவரை நாடி அவரிடம் "உதவி கேட்பவருக்கு" என்று பொருள் கொள்ள வேண்டும்.

நன்றி அண்ணா. :வணக்கம்:
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by சதாசிவம் Thu Feb 16, 2012 5:23 pm

59. நல்ல ஞாலமும் வானமும் பெறினும்
எல்லாம் இல்லை இல் இல்லோர்க்கே

60. தறுகண் யானை தான் பெரிது ஆயினும்
சிறு கண் மூங்கில் கோற்கு அஞ்சுமே

61. குன்றுடை நெடும் காடு ஊடே வாழினும்
புன் தலைப் புல்வாய் புலிக்கு அஞ்சுமே

62. ஆரையாம் பள்ளத்து ஊடே வாழினும்
தேரை பாம்புக்கு மிக அஞ்சுமே

63. கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்
கடும் புலி வாழும் காடு நன்றே

64. சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன் தேர் குறவர் தேயம் நன்றே



பொருள் விளக்கம்


59. நல்ல உலகம் பெற்று இருந்தாலும், வானமே கையில் இருந்தாலும் இனிமையான மனைவியை பெறாத ஒருவருக்கு எதுவும் இல்லை.

60. பெரிய உருவத்தை கொண்டு பலம் பொருந்தி இருந்தாலும், யானைப் பாகனின் கையில் இருக்கும் சிறிய கணுக்களை உடைய மூங்கில் குச்சிக்கு யானை பயம்படும்.

61. குன்றுகள் நிறைந்து நீண்டு அடர்ந்து உள்ள காடுகளில் வசித்தாலும் சிறிய தலையை உடைய புல் உண்ணும் விலங்குகள் (மான்) புலிக்கு அஞ்சி வாழும்.

62. ஆரைச்செடி அடர்ந்து வளர்ந்து இருக்கும் பள்ளத்தில் வாழ்ந்தாலும் தேரை (தவளை) பாம்புக்கு அஞ்சி வாழும்.

63. மக்களின் உணர்வுகளுக்கு மரியாதை தராத, கொடுமைகள் செய்யும் கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில் வாழ்வதைவிட புலிகள் வசிக்கும் அடர்ந்த காட்டில் வசிக்கலாம்.

64. நன்கு கற்று உணர்ந்து, கற்ற விஷயத்தை பிறருக்கு சொல்லிக்கொட்டும் சிறந்த அறிவுடைய சான்றோர் இல்லாத நாட்டில் வாழ்வதைவிட, தேனை எடுத்து உண்ணும் குறவர்கள் இருக்கும் காட்டில் வசிக்கலாம். (அறிவில்லாத காட்டுவாசியாக)

தொடரும்


Last edited by சதாசிவம் on Thu Feb 16, 2012 5:45 pm; edited 1 time in total


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by ரட்சகா Thu Feb 16, 2012 5:36 pm

பகிர்வுக்கு நன்றி....
சூப்பருங்க சூப்பருங்க

61,62 பொருள் விளக்கம் மாற்றப்பட்டு உள்ளது....
திருத்துங்கள் நண்பரே....


மனம் விட்டு பேசுங்கள்
அன்பு பெருகும்
- அன்னை தெரசா
ரட்சகா
ரட்சகா
பண்பாளர்


பதிவுகள் : 139
இணைந்தது : 08/02/2012

Back to top Go down

நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.  - Page 4 Empty Re: நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum