புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
by ayyasamy ram Today at 22:30
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது.
மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.
இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.
நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.
இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.
நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.
மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று.
இப்படி நீதி கூறும் பல நூல்களில் மக்களிடம் பிரபலம் ஆகாத ஒரு சில நூல்களில் அதிவீர ராம பாண்டியர் எழுதிய நறுந்தொகையும் ஒன்று. இதில் இடம் பெற்ற வரிகள் மூலம் இது வெற்றிவேற்கை என்றும் அழைக்கப்படுகிறது.
நறுந்தொகை என்பது நறுமை + தொகை, அதாவது நன்மை + தொகை, வாழ்விற்கு நன்மை பயக்கும் பல நல்ல செய்திகளை, ஒழுக்கங்களை, வாழ்வியல் உண்மைகளை அழகாகக் எடுத்துக் கூறுவது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் இடம் பெறும் நூல் பயன் மூலம் இதை எழுதியவர் கொற்கையாண்ட அதிவீர ராம பாண்டியர் என்பது புலனாகிறது. இவர் 10 -11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொற்கையாண்ட பாண்டிய மன்னர். சிலர் இவர் வாழ்ந்த காலம் 15 ஆம் நூற்றாண்டு என்றும் கூறுகின்றனர். கொற்கை என்பது பாண்டிய நாட்டில் இருந்த கடற்கரை நகரம். கொற்கை முத்துகள் குறித்த செய்தி சிலம்பில் இடம் பெற்றுள்ளது. இது இன்றைக்கு அழைக்கப்படும் தூத்துக்குடி, தென்காசி பகுதியை குறிக்கிறது.
இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவையாவன நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவை, இன்னூல்கள் பெரும்பான்மை வடமொழி நூல்களின் சாயலில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் அம்மொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவர் சிறந்த சிவபக்தர் என்பது இவர் எழுதிய நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இவரியற்றிய நூல்களுள்ளே நைடதமானது இலக்கியப் பயிற்சிக்குச் சிறந்த நூலாகக்கொண்டு தமிழ்மக்கள் பல்லோரானும் பாராட்டிப் படிக்கப்படுகின்றது.
நறுந்தொகை மொத்தம் 82 செய்யுள்கள் கொண்ட தொகுப்பு நூலாகும். இதில் ஒரு சில செய்யுள்கள் தனிச் செய்யுளாகவும், ஒரு சில செய்யுள்கள் அதற்கு அடுத்து வரும் செய்யுள் வரிகளோடு தொடர்ப்பு கொண்டு பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளது. புறநானூறு, நாலடியார் நூல்களில் வரும் பாடல் வரிகளும் , பொருளும் சில பாடல்களில் பொருந்தி வருகிறது. பல நேரங்களில் ஔவையார் எழுதியதாக கோடிடப்படும் செய்யுள் வரிகள் உண்மையில் இந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.
நல்ல தமிழ் அறிவோம் தொடரில், இனி இந்த நறுந்தொகைப் பாடல்களைப் பயில்வோம்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கடவுள் வாழ்த்து
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
பொருள் விளக்கம்
ஓம் என்னும் பிரணவத்தின் பொருளாக விளங்கும் பெருமை பொருத்திய ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானின் மலர்ப் பாதங்களை தலை வணங்குவோமாக.
நூல் பயன்
வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே!
பொருள் விளக்கம்
வெற்றி வேற்கை என்னும் இந்த நூலை கொற்கையாளும் குலசேகரன் புகழ் அதிவீர ராமன் என்னும் நான் நல்ல தமிழில் உள்ள பாடல்களில் சிறந்ததாக இருக்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து நறுந்தொகையாகத் தொகுத்துள்ளேன். இந்த பாடல்களை குற்றம் இல்லாது உணர்ந்து, படித்து கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் குறை ஒன்றும் இல்லாதவர்களாவர்
வாழ்த்து
வாழிய நலனே; வாழிய நலனே!
பொருள் விளக்கம்.
எல்லோரும் நலமுடன் வாழட்டும், எல்லோரும் நலமுடன் வாழட்டும்
தொடரும் ..........
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.
பொருள் விளக்கம்
ஓம் என்னும் பிரணவத்தின் பொருளாக விளங்கும் பெருமை பொருத்திய ஐந்து கரங்களை உடைய விநாயகப் பெருமானின் மலர்ப் பாதங்களை தலை வணங்குவோமாக.
நூல் பயன்
வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கையாளி குலசேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவிலாதவரே!
பொருள் விளக்கம்
வெற்றி வேற்கை என்னும் இந்த நூலை கொற்கையாளும் குலசேகரன் புகழ் அதிவீர ராமன் என்னும் நான் நல்ல தமிழில் உள்ள பாடல்களில் சிறந்ததாக இருக்கும் பாடல்களை தேர்ந்தெடுத்து நறுந்தொகையாகத் தொகுத்துள்ளேன். இந்த பாடல்களை குற்றம் இல்லாது உணர்ந்து, படித்து கடைப்பிடிப்பவர்கள் வாழ்வில் குறை ஒன்றும் இல்லாதவர்களாவர்
வாழ்த்து
வாழிய நலனே; வாழிய நலனே!
பொருள் விளக்கம்.
எல்லோரும் நலமுடன் வாழட்டும், எல்லோரும் நலமுடன் வாழட்டும்
தொடரும் ..........
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
முன்னுரையை முகமலர்ச்சியுடன் படித்தேன், நறுந்தொகை என்ற நீதி நூலை தேர்ந்தெடுத்து கொடுக்கவுள்ள தங்களுக்கு என்னுடைய நன்றிகள் ஐயா.
கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......
உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள்
கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......
உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
பிஜிராமன் wrote:முன்னுரையை முகமலர்ச்சியுடன் படித்தேன், நறுந்தொகை என்ற நீதி நூலை தேர்ந்தெடுத்து கொடுக்கவுள்ள தங்களுக்கு என்னுடைய நன்றிகள் ஐயா.
கடவுள் வாழ்த்தும் நூற்பயனும் அறிந்தேன், அடுத்த செய்யுள் பகுதிக்காக காத்திருக்கிறேன்.......
உங்கள் சேவைக்கு என்றும் நன்றிகுறியவன் ஐயா. மிக்க நன்றிகள்
ஊக்கம் அளித்தமைக்கு நன்றி ராமன்.
விவேக சிந்தாமணியை துவங்கலாம் என்று இருந்தேன்,
நறுந்தொகைப் பாடல்கள் மிக எளிமையானவை. ஆதலால் இந்தத் தேர்வு.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
விவேக சிந்தாமணியை துவங்கலாம் என்று இருந்தேன்,
நறுந்தொகைப் பாடல்கள் மிக எளிமையானவை. ஆதலால் இந்தத் தேர்வு.
எதைத் தொடங்கினாலும், எனக்கு புதுமையான விருந்தாக தான் இருக்கப் போகிறது ஐயா.
தொடருங்கள்......நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
செல்ல கணேஷ் wrote:தோழமைக்கு,
அட ஈகரையில் மற்றும் ஓர் தொடர் இனிப்பு உள்ளது. உங்கள் தமிழ்ப்பணி தொடரட்டும். தோழமை சதாசிவம் அதை தேன் கலந்து தருவார் என்பதில் ஐயம் இல்லை. வாழ்க!
உங்கள் நம்பிக்கைக்கு மிக்க நன்றி கணேஷ்.
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நான் தொடர்ந்து படிக்க விழைகிறேன்.
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
நூல்
1. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
2. கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை
6. வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
7. உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல்
8. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
11. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
13. விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
14. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை
பொருள் விளக்கம்
1. நாம் உலகை உணர, உலகையாளும் இறைவனை உணர மொழி அவசியம். மொழியின் தொடக்கம் எழுத்து. அந்த எழுத்தை நமக்கு பயிற்றுவிட்ட ஆசிரியர் நமக்கு இறைவன் ஆவார்.
2. நன்கு கற்ற கல்வியுடையவனின் அழகு குற்றம் இல்லாமல் பதில் சொல்லுவது.
3. செல்வம் படைத்தவருக்கு அழகு வறுமையிலுள்ள நல்ல குணம் படைத்த சுற்றத்தாருக்கு வேண்டிய உதவி செய்து துணையாக இருத்தல்.
4. வேதம் ஓதும் வேதியருக்கு அழகு நாள் தவறாமல் வேதம் ஓதுவதும், பிறருக்கு ஒரு துன்பமும் விளைவிக்காமல், அனைத்து ஒழுக்கங்களுடன் சிறந்து விளங்குவது.
5. நாட்டை ஆளும் மன்னனுக்கு அழகு நீதி தவறாமல் அரசாட்சி செய்வது.
6. வணிகருக்கு அழகு நட்டம் வரும் தொழிலில் ஈடுபடாமல், முதல் பெருகும் தொழிலில் ஈடுபட்டு, பணத்தை மேலும் மேலும் பெருக்குதல்.
7. விவசாயம் செய்யும் உழவருக்கு அழகு ஏர் உழுது உணவு உண்ணல்.
8. திறமையான அமைச்சருக்கு அழகு ஒரு செயலைச் செய்தால் என்ன என்ன விளைவுகள் வரும் என்றும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிவால் ஊகித்து மன்னனுக்கு அறிவுரை சொல்லுதல்.
9. படைத்தளபதிக்கு அழகு போருக்கு அஞ்சாமையும், வெற்றி பெரும் ஆண்மையும்.
10. உண்ணும் உணவுக்கு அழகு தனியே உண்ணாமல், விருந்தினரோடு உண்ணுதல்
11. பெண்களுக்கு அழகு ஒருவர் கோபமாக பேசும் போது, அவரை எதிர்த்து பேசாமல் இருத்தல். (இது வேண்டாத பிரச்சனைகளைத் தவிர்க்கும்)
12. நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகு கணவனின் தேவைகளை அறிந்து பேணி இருத்தல்.
13. பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.
14. கல்வி கற்ற அறிவுடையவருக்கு அழகு கற்றதை உணர்ந்து, கர்வம் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் இருத்தல்.
15. ஏழைகளுக்கு அழகு வறுமை நிலையிலும் சமுதாயத்தில் தவறாகக் கருதும் ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடாதிருத்தல்.
தொடரும்
1. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்
2. கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்
3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்
4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும்
5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை
6. வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்
7. உழவர்க்கு அழகு ஏர்உழுது ஊண் விரும்பல்
8. மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்
9. தந்திரிக்கு அழகு தறுகண் ஆண்மை
10. உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்
11. பெண்டிர்க்கு அழகு எதிர் பேசாது இருத்தல்
12. குலமகட்கு அழகு தன் கொழுநனைப் பேணுதல்
13. விலை மகட்கு அழகு தன் மேனி மினுக்குதல்
14. அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்
15. வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை
பொருள் விளக்கம்
1. நாம் உலகை உணர, உலகையாளும் இறைவனை உணர மொழி அவசியம். மொழியின் தொடக்கம் எழுத்து. அந்த எழுத்தை நமக்கு பயிற்றுவிட்ட ஆசிரியர் நமக்கு இறைவன் ஆவார்.
2. நன்கு கற்ற கல்வியுடையவனின் அழகு குற்றம் இல்லாமல் பதில் சொல்லுவது.
3. செல்வம் படைத்தவருக்கு அழகு வறுமையிலுள்ள நல்ல குணம் படைத்த சுற்றத்தாருக்கு வேண்டிய உதவி செய்து துணையாக இருத்தல்.
4. வேதம் ஓதும் வேதியருக்கு அழகு நாள் தவறாமல் வேதம் ஓதுவதும், பிறருக்கு ஒரு துன்பமும் விளைவிக்காமல், அனைத்து ஒழுக்கங்களுடன் சிறந்து விளங்குவது.
5. நாட்டை ஆளும் மன்னனுக்கு அழகு நீதி தவறாமல் அரசாட்சி செய்வது.
6. வணிகருக்கு அழகு நட்டம் வரும் தொழிலில் ஈடுபடாமல், முதல் பெருகும் தொழிலில் ஈடுபட்டு, பணத்தை மேலும் மேலும் பெருக்குதல்.
7. விவசாயம் செய்யும் உழவருக்கு அழகு ஏர் உழுது உணவு உண்ணல்.
8. திறமையான அமைச்சருக்கு அழகு ஒரு செயலைச் செய்தால் என்ன என்ன விளைவுகள் வரும் என்றும், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று அறிவால் ஊகித்து மன்னனுக்கு அறிவுரை சொல்லுதல்.
9. படைத்தளபதிக்கு அழகு போருக்கு அஞ்சாமையும், வெற்றி பெரும் ஆண்மையும்.
10. உண்ணும் உணவுக்கு அழகு தனியே உண்ணாமல், விருந்தினரோடு உண்ணுதல்
11. பெண்களுக்கு அழகு ஒருவர் கோபமாக பேசும் போது, அவரை எதிர்த்து பேசாமல் இருத்தல். (இது வேண்டாத பிரச்சனைகளைத் தவிர்க்கும்)
12. நல்ல குடும்பப் பெண்களுக்கு அழகு கணவனின் தேவைகளை அறிந்து பேணி இருத்தல்.
13. பொது மகளிர்க்கு அழகு ஆண்களை கவர அலங்காரம் செய்து கொள்வதும், உடலை கச்சிதமாக வைத்துக் கொண்டு ஆண்களின் கவனத்தை கவர மேனி மினுக்குவதும்.
14. கல்வி கற்ற அறிவுடையவருக்கு அழகு கற்றதை உணர்ந்து, கர்வம் கொள்ளாமல் தன்னடக்கத்துடன் இருத்தல்.
15. ஏழைகளுக்கு அழகு வறுமை நிலையிலும் சமுதாயத்தில் தவறாகக் கருதும் ஒழுக்கக் கேடுகளில் ஈடுபடாதிருத்தல்.
தொடரும்
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்லதோர் தொடரைத் துவங்கியுள்ளீர்கள்...வாழ்த்துக்கள் தம்பி சதாசிவம்
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|