புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
18 Posts - 3%
prajai
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தீர்வு உண்டு! I_vote_lcapதீர்வு உண்டு! I_voting_barதீர்வு உண்டு! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்வு உண்டு!


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Wed Sep 30, 2009 11:28 pm

எங்கோ படித்தது தான், அந்த இக்கட்டான நேரத்திலும், என் நினைவுக்கு வந்தது...
சுதந்திரப் போராட்ட வீரன் ஒருவன். கர்னல் நீல் என்பவரின் காலத்தில் பிடிக்கப்பட்டான். மரண தண்டனை என்று முடிவாயிற்று. கைது செய்யப்பட்டு, கயிற்றால் கட்டி வைக்கப்பட்டான். அவன், உள் மூச்சை உள்ளே தேக்கி, மொத்தமாய் மூச்சை வெளியில் விட்டான். கட்டியிருந்த கயிறு பட்டென்று வெடித்ததாம்.
எனக்கும் அப்படியொரு உள் மூச்சு தேவைப்பட்டது. மொத்தமாய் வெளி வந்து எல்லாப் பிரச்னைகளையும், பட்டென்று வெடிக்க வைத்துவிடாதா என்றிருந்தது.
ஓடி வந்தாள் நர்மதா.
""என்ன செய்யறதுன்னு தெரியலே மேடம்... ஸ்டாப் பேமென்ட் நோட் பண்ண விட்டுப் போச்சு... செக் வந்து பாசாகிடுச்சு...'' என்று பரபரத்தாள்.
""மை காட்! என்ன அமவுன்ட்?'' என்றேன்.
""மூன்றரை லட்சம்...''
""அய்யோ... பார்ட்டி யாரு?''
""ஏக்நாத் எக்ஸ்போர்ட்ஸ் மேடம்...'' என்றாள்; அழுது விட்டாள்.
""வாட்... அந்த அக்கவுன்ட்டா? எப்படி நர்மதா... ஸ்டேட்மென்ட் அனுப்பலேன்னாலே, வந்து கழுத்தைப் பிடிக்கிற டைப்பாச்சே அவங்க?''
""ஆமாம், மேடம்... லெட்டர் என் கைல தான் கொடுத்தாங்க... நானும், சிஸ்டத்தில என்ட்டர் பண்ணினேன்... ஆனா, ரெகார்ட் ஆகல மேடம்.''


""அதெப்படி நர்மதா?''
""அதுதான் தெரியலே மேடம்... லெட்டரைக் கூட, உங்க டேபிள்ல தான் வெச்சேன் மேடம்...''
""இசிட்! என்னிக்கு?''
""முந்தா நாள் மேடம்... இருபத்துநாலு...''
""ஓ மைகாட்! அன்னிக்குதான் எல்லா சிஸ்டமும் கிராஷ் ஆச்சே... பேக்கப் வெச்சு தானே சமாளிச்சு, டே எண்ட் முடிச்சோம். நான் - பின்னான்ஷியல் என்ட்ரீஸ் எல்லாம் தானா டெலிட் ஆகியிருக்குமே...'' என்று என் ரத்தம் சூடானது.
""அய்யோ! தலை சுத்துது மேடம் எனக்கு...'' என அழத் துவங்கி விட்டாள்.
""சரி... நீ போய் வேலையை கவனி... பார்க்கலாம்... இன்றைய வேலைல தப்பு இல்லாம பாத்துக்க...'' என்று அவளை அனுப்பிவிட்டாலும், என் வயிற்றில், முதலைகளும், நண்டுகளும் ஊறத் தொடங்கிவிட்டன.


""மேடம்... இந்த லெட்டரைப் பிடிங்க... அஞ்சாவது ரிமைண்டர் டெல்லில இருந்து...'' என்று வந்து வைத்தார் ராமநாதன்.
""என்ன சார் இது?''
""பாரின் கரன்சி கன்வர்ஷன்ல ஏதோ பிரச்னை... கஸ்டமருக்கு ஜி.ஜி.பி., வாங்கி இருக்கிறோம்... அதுல வித்தியாசம் இருக்கு...''
""சார்! இது ரொட்டீன் சீட் சார்! ராமானுஜம் தானே பாரின் எக்ஸ்சேஞ்ச் பாக்கறார்... அவர்கிட்ட கொடுங்க சார்...'' என்று நீட்டினேன்.
""நோ, நோ... அவர் நாலு நாள் லீவு... நீங்க தான் பாக்கணும்... பிடிங்க...''
""என்ன சார் இது... இதைப் பத்தி எதுவுமே தெரியாது எனக்கு. எப்படி ரிப்ளை பண்ண முடியும்? பண்ணினாலும், எப்படி சரியா இருக்கும்?''
""ராமானுஜத்தை போன்ல பிடிங்க...'' என்றார் அலட்சியமாக.
""சார்... அவர் யூரோப் டூர்ல இருக்கார்... உங்களுக்கு தெரியாதா? எப்படி அவரை தொந்தரவு பண்றது, பாருங்க... எவ்வளவு கூட்டம்? லாக்கருக்கு, பென்ஷனுக்கு, செக்புக்குக்குன்னு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு... லீவ் மீ...'' என்று சொன்னதும், அவர் முகம் வெளுத்தது.
""மிசஸ் தேவிகா... இட்ஸ் மை ஆர்டர்... நீங்க தான் இந்த லெட்டரை டீல் பண்ணனும்... எனக்கு, எந்த சமாதானமும் தேவையில்லை... பிடிங்க, இதை...'' என்று தொப்பென்று வைத்து விட்டுப் போனார்.
இதென்ன புதுத் தலைவலி... எப்படி இதை சமாளிப்பது? சத்தியமாக எனக்கு, வெளிநாட்டு செலாவணி பற்றி அதிகம் தெரியாது. டாலருக்கும், பவுண்டுக்கும் இந்திய மதிப்பு என்ன என்று சரியாகச் சொன்னாலே அதிசயம். ஐந்து ரிமைண்டர்கள் வரும் வரை அமைதி காத்துவிட்டு, இப்போது தீயைப் போல என் கையில் திணித்தால், நான் மட்டும் என்ன செய்து விட முடியும்? ஆனால், வேறு வழியில்லை... ராமநாதன் என் பாஸ்... என் சுப்பீரியர்... பதில் சொல்லித்தான் தீர வேண்டும்...


எப்படி? எப்படி?
தலை வலித்தது. நாகம்மா வந்து நின்றாள்.
""போனஸ் சர்க்குலர் வந்துடுச்சா மேடம்?'' என்றாள் தழைந்த குரலில்.
""பாக்கணும்மா...'' என்றேன், கையில் பத்து லட்சத்திற்கான காசோலையை பாஸ் செய்தபடி.
""கொஞ்சம் போட்டுக் கொடுங்க மேடம்...'' என்று, இன்னும் பக்கத்தில் வந்தாள்.
""சனிக்கிழமைம்மா... அரை நாள்.... பாத்தியா கூட்டத்தை! இதுல ஏகப்பட்ட பிரச்னைகள்... ஞ்சம் வெயிட் பண்ணு நாகம்மா... திங்கட்கிழமை பார்க்கலாம்...''


""அய்யோ, எப்படி மேடம்... அவசரமா பணம் வேணும்... பையனுக்கு பீஸ் கட்டணும்...''
""திங்கட்கிழமை தானே ஸ்கூல்... பாக்கலாம்... இப்ப போய் வேலைய பாரு...'' என்றேன் கடுமையாக.
முணுமுணுத்தபடி நாகம்மாள் போனாள்.
பார்ட் டைம் ஸ்வீப்பர்களுக்கான யூனியன் தலைவரிடம் புகார் கொடுப்பாள்; தெரியும் எனக்கு.
பெருமூச்சு, எரிமலைக் காற்றாக வந்தது. ஏன் இந்த நாய்ப் பிறவி என்ற எரிச்சலும், பதவி உயர்வு என்ற கேரட்டுக்காக, ஏன் பன்றியாய் அலைந்தோம் என்ற சுயவிரக்கமுமாக என் நெஞ்சு வலித்தது. எல்லாவற்றையும் விட்டு, சகாரா பாலைவனத்திற்கு ஓடி, ஒட்டகம் மேய்க்கலாம் என்று தோன்றியது.
""அம்மா, உடனே வீட்டுக்கு வா...'' என்று சொல்லி, ப்ரீதி போனை வைத்துவிட்டதில் பதறி, ஆட்டோ பிடித்து வீடு நோக்கி பறந்தேன்.
என்ன விஷயம்? அவள் குரலில் ஏன் இத்தனை அழுத்தம்? ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தையிடம் இவ்வளவு உறுதிமிக்க ஆணை வெளிவருவது எப்படி?
அவர் இருக்கிறாரா, இல்லையா வீட்டில் என்று நினைக்கும் போதே, கண்கள் குளம் கட்டின. இருந்தால் மட்டும் என்ன வாழ்ந்துவிடப் போகிறது? வளையம், வளையமாக புகை விட்டுக் கொண்டு நிற்பார்.


"அய்யோ' என்று வாசலில் சொன்னால், கொல்லைப் பக்கத்திலும், "அடடா' என்று கொல்லைப் பக்கத்தில் சொன்னால், ஹாலிலும் வந்து நின்று புகைப்பதைத் தவிர, வேறு ஒன்றுமில்லை அவரிடம். சிகரட்... சிகரட்... என்று அடிமையாகி, அதிலிருந்து மீள முடியாது நிற்பவரிடம், எந்த அனுசரணையை, அன்பை, அந்யோன்னியத்தை எதிர்பார்க்க முடியும்?
வாசலில் ஜீப் நின்றிருந்தது.
திக்கென்றது. போலீஸ் ஜீப் ஏன் வந்திருக்கிறது?
அய்யோ... அவர் ஏதாவது குற்றமிழைத்து விட்டாரா? புகைப்பழக்கத்தின் போதை, அவரை குற்றவாளி ஆக்கி விட்டதா? "அய்யோ... வேண்டாம்' என்று எவ்வளவு அடித்துக் கொண்டேன்? கேட்கவில்லையே பாவி!
""வாங்க, மேடம்...'' என்றார் இன்ஸ்பெக்டர்... முகத்தில் புன்னகை...
""சார், என்ன இது இங்கே? வாங்க...'' என்று தடுமாறினேன்.
""தற்கொலை முயற்சி... உடனே வாங்கன்னு புகார் வந்தால், வராம எப்படி?'' என்று சிரித்தார்.
""தற்கொலை முயற்சியா! யார்... எங்கே... என்ன சார் சொல்றீங்க?'' என்று பதறினாள்.
""உங்க மகள் தான் புகார் கொடுத்தது... பயந்து போய் ஓடி வந்தோம். "சிகரட், ஒரு மனிதனை கொஞ்சம், கொஞ்சமாகக் கொல்லும் என்பது விஞ்ஞானம்! அதன்படி, என் அப்பா, தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் இன்ஸ்பெக்டர்... வந்து கேஸ் புக் பண்ணுங்க...'ன்னு சொல்றாள் உங்க மகள். பாருங்க... இந்த காலத்து குழந்தைகள் எவ்வளவு ஸ்மார்ட், எவ்வளவு ப்ரில்லியன்ட்?'' அவர் புன்னகைத்து விட்டு கிளம்பினார். மகளின் கைகளைப் பற்றி, கண்ணீர் விட்டு அழுத சங்கரை முதன் முதலாகப் பார்த்தேன். திகைப்பு, பரவசம், அதிசயம், அதிர்ச்சி, மகிழ்ச்சி என்று கவலையாக உணர்வுகள் சுழன்றன. சிந்தனை, அறிவுக் கூர்மை, சுய முயற்சி, கல்வியும், கவலையும் இணைந்து செயல்பட்டதில் வெளிப்படும் புத்திசாலித்தனம்... எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு உண்டு தானா? சோர்வில்லாமல் சிந்தித்தால் பலன் கிட்டுமா? புதுமையும், புத்துணர்வும் வாய்க்குமா? இது நிஜம் தானா?
ஆமாம்... உண்மை தான்!
இயற்கை கொடுத்திருக்கும் சிறப்புப் பரிசான பகுத்தறிவால் மட்டுமே, இனி எதையும் அணுகுவது என்ற முடிவில், அவள் முகம் மலர்ந்தது.
* * *

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Sep 30, 2009 11:33 pm

இயற்கை கொடுத்திருக்கும் சிறப்புப் பரிசான பகுத்தறிவால் மட்டுமே, இனி எதையும் அணுகுவது என்ற முடிவில், அவள் முகம் மலர்ந்தது. தீர்வு உண்டு! 677196 நாம் கவலையாய் இருக்கும் போது எடுக்கும் முடிவுகள் அநேகமாய் குழப்பமான முடிவை தான் இருக்கும்..நல்ல குழப்ப மில்லா மனசுடன் சிந்தித்தது எடுக்கும் முடிவுகள் தான் சிறப்பானவை ..

மிக மிக நல்லதொரு கதை கோவை ஷிவா..பாராட்டுக்கள்.. ஆனா உங்கள் கதைகள் கொஞ்சம் சிறிதாக இருந்தால் இன்னும் நல்லது..என்பது மீனுவின் தனிப் பட்ட கருத்து ,



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 01, 2009 4:44 am

நாம் கவலையாய் இருக்கும் போது எடுக்கும் முடிவுகள் அநேகமாய் குழப்பமான முடிவை தான் இருக்கும்..நல்ல குழப்ப மில்லா மனசுடன் சிந்தித்தது எடுக்கும் முடிவுகள் தான் சிறப்பானவை .. தீர்வு உண்டு! 677196 தீர்வு உண்டு! 677196 தீர்வு உண்டு! 677196

கோவை ஷிவா வாழ்த்துக்கள் தீர்வு உண்டு! 678642 தீர்வு உண்டு! 678642 தீர்வு உண்டு! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக