ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

+2
அசுரன்
சார்லஸ் mc
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by சார்லஸ் mc Sat Jan 28, 2012 11:16 pm

First topic message reminder :

யெகோவா என்பது ஒரு கூட்டுப் பெயர்.

த‌ேவன் ஒருவரே என்பது நமது விசுவாசம். மூன்று ஆளத்துவங்கள் தேவனில் அடங்கியிருக்கின்றன என்று “கடவுளை அறிவோம்” என்ற தலைப்பின் கீழ் தெளிவாக பார்த்த‌ோம். ஆகிலும் 3 தனிப்பட்ட தேவர்கள் என்று நாம் நம்பவில்லை. மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். த‌ேவன் ஒருவரே என்பது நமது விசுவாசம்.

பிதாவாகிய தேவனுக்குள்ள சகல தன்மைகளும் குமாரனாகிய தேவனுக்கும் இருக்கின்றன. பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானவரே பரிசுத்தாவி என்பதை வசனங்களே தெளிவாய் போதிக்கின்றன.

“யெகோவா” - என்ற எபிரேய வார்த்தையை “கர்த்தர்” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருள் “இருக்கிறவராகவே இருக்கின்றவர்” என்பதாகும். பழைய ஏற்பாட்டில் இந்த “யெகோவா” என்ற பெயர் கூட்டுப் பெயராகவே வருகிறது. கூட்டுப் பெயர் என்றால் தேவனின் மூன்று ஆளத்துவங்களும் அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி என இணைந்தே சொல்லபடுவது - “யெகோவா”.

பழைய ஏற்பாட்டில் கூட்டுப் பெயராகவே வருகின்ற யெகோவாவின் நாமங்கள், பெயர்கள்:

1. யெகோவா ரஃபா - உன்னை குணமாக்குகிற கர்த்தர் (யாத்திராகமம்: 15:26)

2. யெகோவா நிசி - கர்த்தரே நமது வெற்றி அல்லது கொடி (யாத்திராகமம்: 17:8-15)

3.யெகோவா ஷாலோம் - கர்த்தர் நமது சமாதானம் (நியாயாதிபதிகள்: 6:24)

4. யெகோவா ரா - கர்த்தர் நமது மேய்ப்பர் - (சங்கீதம்: 23:1-4)

5. யெகோவா சிட்க்கனு - கர்த்தர் நமது நீதியாயிருக்கிறார் (எரேமியா: 23:6)

6. யெகோவாயீரே - கர்த்தர் த‌ேவைகளை பூர்த்தி செய்கிறவர் (ஆதியாகமம்: 22:14)

7. யெகோவா ஷம்மா - கர்த்தர் அங்க‌ே இருக்கிறார் (எரேமியா : 48:35)

8. ஏல்-எலியோன் - கர்த்தர் உன்னதமானவர் (ஆதியாகமம்: 14:18-20

9. எல்-ஷடாய் - கர்த்தர் போதுமானவர் ; சர்வ வல்லவர் (ஆதியாகமம்: 17:1 ; யாத்திராகமம்: 6:3)

10. எல்-ஓலம் - சதாகாலமும் உள்ள தேவன் (ஆதியாகமம்: 21:33)

11. அடோனாய் - எஜமான் (யாத்திராகமம்: 23:17) கர்த்தராகிய ஆண்டவர்.

12. ஏலோகிம் - “ஏல்” என்ற வார்த‌்தையின் பன்மை இது. “தேவன்” என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

வ‌ேதத்தில் கர்த்தரின் தன்மைகள் பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன. அத்தனை பெயர்களும் கூட்டுப் பெயர்களே.

தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:03 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by சார்லஸ் mc Wed Feb 01, 2012 2:07 am

1. மானிட அவதாரத்தின் காரணங்கள் - தொடர்ச்சி...

ஆ) பிதவை வெளிப்படுத்தும்படி மானிடரானார்:

பழைய ஏற்பாட்டில் தேவன் தன்னை சிருஷ்டி கர்த்தராகவும், அண்ட சராசரத்தையும் ஆளுகிறவராகவும் வெளிப்படுத்தினார் (சங்கீதம்: 103:19).

கிறிஸ்து, தேவனை பிதாவாக வெளிப்படுத்தினார். பழைய ஏற்பாட்டில் யூதருக்கு அளிக்கப்பட்ட வேத வாக்கியங்களில் தேவன் ஒருவராகவும், பரிசுத்தராகவும், பராமரிக்கிறவராகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளார். தேவனை பிதாவாக கிறிஸ்து வெளிப்படுத்தியதால் தேவனைப்பற்றிய வெளிப்பாடு நிறைவடைந்தது.

யோவான்: 1:18 - “தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.”

யோவான்: 14:9 - “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்”

யோவான்: 16:27 - “நீங்கள் என்னை சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால், பிதாதாமே உங்களை நேசிக்கிறார்”

யோவான்: 13:3 - “தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக் கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்கு போகிறதையும் இயேசு அறிந்து, ...”

1யோவான்: 3:1,2 - “நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே, பிதாவானவர் நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கின்ற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்”

தொடரும்...



Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:25 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by சார்லஸ் mc Wed Feb 01, 2012 2:32 am

இ) ஒரு உண்மையுள்ள பிரதான ஆசாரியனாகும்படி மனித அவதாரம் எடுத்தார்:

இயேசு ஒருவர்தான் மனிதராகிய நமது சார்பில் ஒரு உண்மையான பிரதான ஆசாரியனான இருக்க முடிந்தது. இந்த உண்மையை எபிரேய நிருபம் விவரிக்கிறது.

எபிரேயா்: 2:10 - “ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சோ்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கேற்றதாயிருந்தது”

எபிரேயா்: 4:15,16 - “நம்முடைய பலவீனங்களை குறித்துப் பரிதபிக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். ஆதலால் நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் ”

எபிரேயர்: 5:1 - “அன்றியும், மனுஷரில் தெரிந்து கொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காக காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்டுகிறான்.”

எபிரேயர்:5:4 - “ஆரோனைப்போல த‌ேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்த கனமான ஊழியத்திற்கு தானாய் ஏற்படுகிறதில்லை”

எபிரேயர்: 5:5 - “அந்தப்படியே, கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராயிருக்கிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.”

தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:27 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by சார்லஸ் mc Wed Feb 01, 2012 4:20 am

ஈ) பாவத்தை பரிகரிக்க கிறிஸ்து மானிடனாய் அவதரித்தார்:

கிறிஸ்து தம்மைத்தாமே பலியாக கொடுத்ததினிமித்தம் பாவத்தை பரிகரித்தார்.

எபிரேயர்: 2:10 - “ஏனென்றால், தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சோ்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கு ஏற்றதாயிருந்தது. ”

எபிரேயர்: 9:26 - “அவர் தம்மைத் தாமே பலியிடுகிறதனாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக அந்த கடைசி காலத்தில் ஒரே தரம் வெளிப்பட்டார்.”

மாற்கு: 10:45 - “மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனை கொடுக்கவும் வந்தார் என்றார்.”

யோவான்: 1:29 - “மறு நாளில‌ே யோவான், இயேசு தன்னிடத்தில் வரக் கண்டு: இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி” என்றான்.

யோவான்: 1:36 - “இயேசு நடந்து போகிறதை அவன் கண்டு: இதோ தேவ ஆட்டுக்குட்டி என்றான்”

1யோவான்: 3:5 - “அவர் நம்முடைய பாவங்களை சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை”

லேவியராகமம்: 16:20,21 - “அவன் இப்படி பரிசுத்தஸ்தலத்திற்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ் செய்து தீர்ந்த பின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக் கடாவைச் சேரப் பண்ணி, அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின் மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லா பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக் கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள் வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன்”

ஏசாயா: 53:5 - “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் தண்டனை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமடைகிறோம்”

2கொாிந்தியா்: 5:21 - “நாம் அவருக்குள் தேவநீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.”

தொடரும்...


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:30 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by அதி Wed Feb 01, 2012 7:49 am

ஆஹா அருமை அருமை.முழுவதும் படித்துவிட்டு வருகிறேன்.
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by சார்லஸ் mc Thu Feb 02, 2012 1:38 am

உ) கிறிஸ்து பிசாசின் கிரியைகளை அழிக்கும்படிக்கு மானிடனாய் வெளிப்பட்டார்:

1யோவான்: 3:8 - “... பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ் செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே த‌ேவனுடையகுமாரன் வெளிப்பட்டார்.”

எபிரேயர்: 2:14,15 - “... பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்க்குள்ளானவர்கள் யாவரையும் விடுதல‌ைபண்ணுபடிக்கும் அப்படியானார்.”

வெளிப்படுத்தல்: 20:10 - “மேலும், அவர்களை மோசம் போக்கின பிசாசானவன் மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்; அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்”

ஊ) நமக்கு ஒரு பாிசுத்த வாழ்க்கையின் மாதிரியை காண்பிக்கும்படி கிறிஸ்து மானிடனாய் அவதரித்தார்:

மத்தேயு: 11:29 - “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்”

1யோவான்: 2:6 - “அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்”

2கொரிந்தியர்: 3:18 - “நாமெல்லாரும் திறந்த முகமாய் கா்த்தருருடைய மகிமையை கண்ணாடியிலே காண்கிறதுபோல கண்டு, ஆவியாய் இருக்கிற கர்த்தரால் அந்த சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்”

மத்தேயு: 5:6,7 - “நீதியின்மேல் பசி தாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவாா்கள்”

இயேசு கிறிஸ்து தேவகுமாரன், மனித குமாரன் நல்ல முன் மாதிரி.

எ) இரண்டாம் வருகைக்கு ஜனங்களை ஆயத்தம் பண்ணும்படி கிறிஸ்து முதலாவதாக மானிடனாக வந்தார்:

எபிரேயர்: 9:28 - “கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களை சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்”

ரோமர்: 8:18 - 25 “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு சிருஷ்டியானது ஆவலோடே காத்துக் கொண்டிருக்கிறது. அதேனென்றால், சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை பெற்றுக் கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்த சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்கு கீழ்ப்படடிருக்கிறது. ஆகையால் நமக்கு தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்து பிரசவ வேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமும் கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம் வருகிறதற்கு காத்திருந்து நமக்குள்ளே தவிக்கிறோம். அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்படுகிறோம். காணப்படுகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்ப வேண்டுவதென்ன? நாம் காணாததை நம்புனோமாகில், அது வருகிறதற்கு பொறுமையோடே காத்திருப்போம்”

வெளிப்படுத்தல்: 5:6,7 - “அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். அந்த புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும், தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்தக் கொண்டு, ஆட்டுக்குட்டியானவாருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து:” என்று எழுதப்பட்டுள்ளது.

இதுவரை இயேசு கிறிஸ்து திரித்துவ தேவனில் ஒருவர் என்பதையும், கர்த்தராயிருக்கிற இய‌ேசு கிறிஸ்துவின் மானிட அவதாரத்தின் காரணங்களையும் பார்த்தோம். இனி அடுத்த திரியில் வேறொரு தலைப்பின் கீழ் வேதத்தை தியானிப்போம்.

இதை வாசிக்கும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளையும் கர்த்தராயிருக்கிற இய‌ேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. ஆமென்! அல்லேலூயா!


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:35 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by hega Thu Feb 02, 2012 1:54 am

சத்தியம் சொல்ல நினைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

ஆனால் இப்படி வேத வார்த்தைகளை தொடர்ச்சியாய் பகிர்வதால் சத்தியம் இன்னதென அறிந்த எமக்கே குழப்பமாய் இருக்கிறதே சகோ ..

திரித்துவத்தை உணர்ந்தாலே போதுமே...

பிதா, குமரன்,பரிசுத்தாவியானவர் மூவரும் ஒருவரேனும்போது குழப்பம் ஏன்

கர்த்தர் ஒருவரே ஜெகோவா என்பது அவர் நாமம்.

திரித்துவத்தை மறுதலிப்பவர்களே ஜெகோவாவின் சாட்சிகள்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2

Post by சார்லஸ் mc Thu Feb 02, 2012 2:07 am

hega wrote:சத்தியம் சொல்ல நினைக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.

ஆனால் இப்படி வேத வார்த்தைகளை தொடர்ச்சி யாய் பகிர்வதால் சத்தியம் இன்னதென அறிந்த எமக்கே குழப்பமாய் இருக்கிறதே சகோ ..

திரித்துவத்தை உணர்ந்தாலே போதுமே...

பிதா, குமரன்,பரிசுத்தாவியானவர் மூவரும் ஒருவரேனும்போது குழப்பம் என்

கர்த்தர் ஒருவரே ஜெகோவா என்பது அவர் நாமம்.

திரித்துவத்தை மறுதலிப்பவர்களே ஜெகோவாவின் சாட்சிகள்.

அப்பாடா... நீங்கள் ஒருவராவது புரிந்து கொண்டீர்களே... நன்றி.

ஒவ்வொரு தலைப்பின் கீழ்தான‌ே ஆதாரமாக வேதவசனங்களை குறிப்பிட்டுள்ளேன்.

அநேகர் திரித்துவத்தை உணராத நிலை ஏற்பட்டு கேள்விகள் கேட்டுக் கொண்டதினால் இப்படி விவரமாக எழுத நேரிட்டது. நன்றி சகோதரி. ஹேகா அவர்களே!

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 678642


Last edited by சார்லஸ் mc on Thu Nov 08, 2012 11:37 pm; edited 1 time in total
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by hega Thu Feb 02, 2012 2:18 am

புரிதலுக்காய் நன்றி. இளமாறன் பிரான்சில் இருப்பாராய் இருந்தால் அவர் கேடகும் கேள்விகளில் தவறேதும் இல்லை.

இன்றைக்கு கிறிஸ்தவனென்றாலே பலபிரிவுகள் ,குழப்பங்கள் என்றாகி விட்டது. ஐரோப்பாவில் அது சற்று அதிகமாகி விட்டது.

avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by இளமாறன் Thu Feb 02, 2012 2:26 am

hega wrote:புரிதலுக்காய் நன்றி. இளமாறன் பிரான்சில் இருப்பாராய் இருந்தால் அவர் கேடகும் கேள்விகளில் தவறேதும் இல்லை.

இன்றைக்கு கிறிஸ்தவனென்றாலே பலபிரிவுகள் ,குழப்பங்கள் என்றாகி விட்டது. ஐரோப்பாவில் அது சற்று அதிகமாகி விட்டது.


யெகோவா சாட்சிகள் தொல்லை இங்கு தாங்க முடியவில்லை .. அழுகை


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by சார்லஸ் mc Thu Feb 02, 2012 2:29 am

காலம் கடைசி காலம்...

கா்த்தருடைய வருகை சமீபம்.

எனவே, இது போன்ற மாா்க்க ப‌ேதங்கள் வரத்தான் செய்யும். இருப்பினும், நம்மால் இயன்ற வரை கேள்விகளுக்கு பதிலளிப்போம் என நினைத்தேன்.

இதை வாசிக்கும் ஒரு சிலராவது விளங்கிக் கொள்ளட்டுமே என கருதின‌ேன்.


“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 154550“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 154550“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 154550“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 154550“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

“யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி) - Page 2 Empty Re: “யெகோவா” என்பது ஒரு கூட்டுப் பெயரே (பிதா, குமாரன், பாிசுத்தாவி)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum