புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
2 Posts - 4%
heezulia
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மரம் வளர்த்த குரங்கு! Poll_c10மரம் வளர்த்த குரங்கு! Poll_m10மரம் வளர்த்த குரங்கு! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் வளர்த்த குரங்கு!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jan 28, 2012 5:44 pm

மரம் வளர்த்த குரங்கு!
மதுரை க. பரமசிவன்
மரம் வளர்த்த குரங்கு! 28sm7
குரங்கு ஒன்று காட்டிலிருந்த மாமரம் ஒன்றின் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தது. அங்குமிங்கும் தாவித் தாவி தனது குரங்குச் சேட்டைகளை ஒன்றுவிடாமல் செய்து கொண்டிருந்தது.

வெகுநேரம் விளையாடியதில் அதற்குக் களைப்பு ஏற்பட்டது. பசியும் எடுத்தது.

அப்போது தற்செயலாகத் தானிருந்த மரத்தைக் கவனித்த குரங்கு அதில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தில் பழங்கள் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டது. ஒரு பழத்தைப் பறித்துச் சுவைத்துப் பார்த்தது. மிகவும் இனிப்பாக இருந்தது. இன்னொன்றைச் சுவைத்தது. அது அதற்குமேல் இனிப்பாக இருந்தது.

இப்படியே ஒவ்வொன்றாகப் பல பழங்களைப் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தது.

இப்படியே சாப்பிட்டுக் கொண்டே போனதில் மரத்திலிருந்த பழங்கள் எல்லாம் காலியாகிப் போயின.

குரங்குக்கு அந்தப் பழங்களின் சுவை நாக்கை விட்டு அகலவில்லை. அதற்கு ஆசை அடங்கவில்லை. மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பார்த்தது. பச்சை நிறத்தில் காய்கள் மட்டுமே இருந்தன. பழங்களே இல்லை!

மாங்கனியின் ருசி பற்றியே நினைத்துக் கொண்டிருந்த குரங்குக்கு ஒரு யோசனை வந்தது. அது நல்ல யோசனைதான்.

தான் சாப்பிட்டுப் போட்ட பழங்களின் கொட்டைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு போய் தனது இருப்பிடத்துக்கு அருகிலே புதைத்து வைத்தால் என்ன? மரம் வளர்ந்து நிறையக் கனிகளைத் தருமே? தான் மட்டும் அக் கனிகளை உண்டு மகிழுவது மட்டுமல்லாமல் தனது கூட்டத்தாருக்கும் கொடுத்து மகிழலாமே. மாம்பழத்துக்காக இவ்வளவு தூரம் வரவேண்டிய தேவையும் நமக்கு இருக்காது.. இப்படியே அந்தக் குரங்கின் சிந்தனை நீண்டு கொண்டே போனது.

ஒரு கட்டத்தில் தனது நீண்ட யோசனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, உடனே செயலில் இறங்க வேண்டும் என்று தீர்மானித்தது.

விழுந்ததிலேயே நல்லதாக ஒரு மாங்கொட்டையைத் தேர்வு செய்து எடுத்துக் கொண்டு தனது இருப்பிடத்தை நோக்கிக் கிளம்பியது குரங்கு.

நீண்டதூரம் தாவித் தாவி வந்து இறுதியில் தனது இருப்பிடத்தை அடைந்தது. அந்தக் குரங்கும் அதன் கூட்டத்தாரும் வசித்த இடம் ஓர் அருவிக் கரை. அங்கு நிறைய மரங்கள் இருந்தாலும் மாமரங்கள் இல்லை.

இருப்பிடம் திரும்பிய குரங்கு, அங்கே ஒரு நல்ல இடத்தைத் தேர்வு செய்தது.

ஒரு தேர்ந்த விவசாயியைப் போல, அழகாக ஒரு குழிதோண்டி அதில் அந்த மாங்கொட்டையைப் புதைத்தது. பின்னர் அந்த இடத்தில் அடையாளம் வைத்துவிட்டு தனது இருப்பிடத்துக்குச் சென்று நன்றாக உறங்கியது.

மறுநாள் காலையில் எழுந்தவுடன், மாங்கொட்டையைப் புதைத்த இடத்துக்கு வேக வேகமாக வந்தது.

அங்கே மரம் ஒன்றும் வளராததைக் கண்டு மனம் பதைத்தது. உடனே புதைத்த இடத்தைத் தோண்டிப் பார்த்தது. அந்த மாங்கொட்டை அப்படியே இருந்தது. மாங்கொட்டையில் துளிர்கூட விடவில்லை.

குரங்கு ஏமாற்றத்துடன், மீண்டும் அதே இடத்திலேயே அந்தக் கொட்டையைப் புதைத்து வைத்தது. பிறகு தனது இருப்பிடம் திரும்பியது.

மறுநாளும் விடிந்தும் விடியாமலும் இருக்கும்போதே அந்த இடத்துக்கு ஓடோடி வந்தது.

மண்ணிலிருந்து மாங்கொட்டையை எடுத்துப் பார்த்தது. செடி முளைக்காததைக் கண்டு வருத்தத்துடன் மீண்டும் புதைத்து வைத்துவிட்டுச் சென்றது.

இப்படியே பல நாட்கள் சென்றன. அந்த மாங்கொட்டைக்கு முளைப்பதற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் தினமும் தோண்டியெடுத்து மீண்டும் புதைத்து வைத்ததில் அந்தக் கொட்டை அழுகிப் போய் மக்கத் தொடங்கியது.

சிலநாட்கள் இப்படியே சென்றன. கடைசியாக ஒருநாள் மனம் வெறுத்துப் போய் குரங்கு அந்த மாங்கொட்டையை மண்ணிலிருந்து பிடுங்கியெடுத்துத் தூர வீசியெறிந்தது.

மண்ணில் புதைந்து இயல்பான வளர்ச்சியைப் பெற்று பெரிய மரமாகிக் கனி தரவேண்டிய அந்த மாங்கொட்டை, பொறுமையும் தெளிவான அறிவுமில்லாத குரங்குப் புத்தியால், வீணாக வாடி வதங்கிப் போனது!

பகிர்வு - தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக