புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_m10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 
366 Posts - 49%
heezulia
 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_m10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_m10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_m10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_m10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 
25 Posts - 3%
prajai
 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_m10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_m10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_m10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_m10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_m10 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Jan 31, 2012 6:18 pm

வானக் கதிர்சிரிக்கும் வண்ணமலர் புன்னகைக்கும்
வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைக் கதிர்சிரிக்கும் சிற்றோடை சிலுசிலுக்கும்
சேர்ந்துவளர்: செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானப் பறவைகளும் காற்றொலியில் சலசலக்கும்
காட்டினிலே வண்டு மலர்கண்டு சிலிர்க்கும
போனவனை காட்டினிலே போட்டெரித்து மீண்டவனும்
போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்

நீரோடும் நதி குதித்து நெளிந்து மெலச் சிரிசிரித்து
நளினமிட கரைஅலைகள் நர்த்தனமாடும்
பேரோடு பூமியிலே பேரரிய வீரமிட்டோன்
பெண்சுகத்தில் ஈனமிட பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே ஒருவன் மட்டும் தனித்திருக்க
உண்மைவழி நின்றிடினும் சிரித்திடும்காலம்
யாரோடிச் சென்றிடினும் வாழ்வோடி முந்த அதைப்
போரட எண்ண விதி சிரித்திடும் நாளும்

தானோடிச் சுழல்வதுடன் தறிகெடவே ஓடும்புவி
தன்னுடைமை சொத்து என்று தத்துவம்பேசி
வீணாகத் தலைஎடுப்போன் விதிமுறைமை கண்டுநலம்
வாழென்று கூறிப் பேய்கள் போடும் எக்காளம்
தானமிடக் கண்டுலோபி தலைதிரும்பிச் சிரித்திடுவான்
தாவணிப்பெண் இருவர்கூடின் சிரித்திடக் கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவாழ்வின் விதியறிந்து நகைபுரிய
தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்.


2ம்+ 3ம் கவிதைகள் கீழே

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Feb 01, 2012 4:32 pm

 சிரிப்பொலி + காத்திரு வருவேன் + அழுவதும் சிரிப்பதும் (3 கவிதைகள்) Girlival


காத்திரு ! காற்றில் வருவேன்!

தேனிற் குழைத்த தீங்கனியாய்
தேவி எந்தன் அருகிருந்தாய்
வானிற் குழைத்த ஓவியமாய்
வாழ்வை மறந்து ஏன்சென்றாய்

பச்சைப்பசுமைப் புல்வெளியும்
பனிநீர் தூங்கும் அதனிதழும்
இச்சையுடன் நீ பக்கமதில்
இருந்ததை எழுந்து கூறாதோ

கொத்துமலர்களின் தோட்டமென
கோடிநிலவுகள் கூட்டமென
நித்தம் அருகினில் நீ இருந்தாய்
நினைவுகள் மீண்டும் வாராதோ

வெற்றாய் விரியும் விண்ணில் நீ
விட்டுச் சென்றது எங்கே சொல்
உற்றே நோக்கும் உன்விழிகள்
உயரச் சென்றது உண்மையெனில்

பஞ்சு போன்றோர் வெண்மேகம்
பரந்தநீலப் பிரபஞ்சம்
விஞ்சும் எழில்வான் விரிதிசைகள்
எங்கும்நீயே நீயேதான்

சுட்டுத் தீய்க்கும் சூரியனும்
சுடர்போல் நினது விழிதன்னை
சுட்டி காட்டி எரிகிறதே
சோர்ந்தே தவிக்கு மென்மனதை

கட்டிக் காக்கமுடியவில்லை
காற்றும் தீண்டிச் செல்லுகையில்
பட்டுத் தழுவு முன்கர்ங்கள்
பனிநீர்விழவும் உன் தேகம்

தொட்டுக் காணு மின்பமென
தோன்றச் சிந்தை வாடுகிறேன்
வட்டச் சந்திரன் உன்வதனம்
வடிவம் காட்டி எனைக்கொல்லும்

சிட்டுக் குருவி ஜோடிகளும்
சேர்ந்தே கிளையில் கொஞ்சுவதும்
வெட்டிக் கொல்லும் வகையாக
வேதனை யாகிக் கொல்லுதமா

நின்னை பிரிந்து நானொருவன்
நித்திலம் வாழுதல் நேர்ந்திடுமோ
கண்ணை விழித்துக் காண்பவளே
காதலன் வருவேன் காத்திரடி

(..3ம் கவிதைக்கு கீழே..போகவும்)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Feb 01, 2012 5:08 pm

ரொம்ப அனுபவிச்சு எழுதினிங்களா புன்னகை

அருமையோ அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
கரங்களா கர்ங்களா ஒன்னும் புரியல



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Feb 01, 2012 5:16 pm

காலம் எத்தனைக் கடந்தாலும்
காதல் என்றுமே மாறாது - அந்த
காதல் உணர்வும் போகாது.........

உங்கள் கவிதை மிக மிக அருமை ஐயா.........

தேனருவி தென்றல் வான்முகில்
மூன்றனையும் குழைத்து தருதே
உங்கள் கவி அதில் திகைத்தே
நின்றேன் இப்பொழுது

நன்றிகள் ஐயா....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 01, 2012 6:29 pm

எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு பெரிய கவிதைகளை சரளமாக எழுத இயலுதோ....
அருமை .... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Feb 01, 2012 9:08 pm

சிரிப்பதும் அழுவதும் ஏன்??

அன்போடு பாராட்டிய அனைவருக்கும், நன்றி! ஒரே நாளில் மூன்றுகவிதைளும் தருவதால்
ஒரே இழையில் தருகிறேன்


சிரிப்பதும் அழுவதும் ஏன்??

நீலமுகிலோடும் வானிலெழுந்திடும்
நித்திய சூரியனே - நினைப்
போலும் ஒளியுடன் வாழும்மனிதரும்
பாரிலிருக் கையிலே
கால விதியிதோ மாலைமதி கெட்டு
காணும் பிறை யொளியாய்-பலர்
கோல மழிந் துயிர் கொள்ளும் துயருடன்
கூடியிருப்ப தென்ன?

மாலை மலர்ந்திடும் பூக்களு முண்டதை
மேவி இருள் பரவும் - அதி
காலை மலர்களின் வாழ்வு ஒளிர்ந்திடும்
காணும் இரண்டுவிதம்
சாலையோரம் மரம்கீழும் வாழ்ந்துவரும்
சந்ததி யொன்றிருக்கும் - பக்கம்
மேலு யரும்மாடி மெல்லிய பஞ்சணை
மீது துயில் சிலர்க்கும்

கானமிடும் நல்ல வானில் குருவிகள்
ஊர்வலம் செய்யழகும் அங்கு
கூனல் நிமிர்முகில் கூட்டங்கள் பஞ்சென
கோலமிடும் எழிலும்
தேனொளி மின்னிட வானிடை ஆயிரம்
தீபங்கள் வைத்தவளோ - மன
மானது ரம்மிய மாகக் களித்திட
மஞ்சள் நிலவு வைத்தாள்

ஆனதிவைசெய்த தேவியும் ஏனங்கு
அத்தனை கோபங்கொண்டு - பல
மான இடியுடன் பூமிஅதிர்ந்திட
மின்னலை கொண்டுவைத்தாள்
வானம் அழுவது போல மழையுடன்
வாரிப் புயலடித்து - பெரி
தான முரண்படும் பேய்மழை ஊதலும்
ஏனோ நிகழவிட்டாள்

பூவழுதால் இதழ்தேன்வழியும் அதைப்
பூவுலகே யறியும் - அலை
மேவுகடல் மீது மீனழுதால் அலை
யோடு கலந்துவிடும்
தாவும் முயல் என்றும் தாவியோடவேண்டும்
தப்பிப் பிழைப்பதற்கும் - விதி
யாவும் குறையின்றி சாதுவெனப் பிறந்
தாலும் துயர் இருக்கும்

பூவும் உதிர்ந்திடப் பொல்லாப் புயல்வந்து
பற்றிடத் தேவையில்லை - மலர்க்
காவும் மலைதொட்டு வீசும்தென்றல் தொட
வீழும் விதிமுடியும்
நோவும் அழுதிட நூறுதுன்பங்களும்
நெஞ்சில் குடியிருக்கும் -இதை
யாவும் அறிந்திடில் தோன்றும் எண்ணங்களில்
உண்மை நிலைதிகழும்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக