ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது

Go down

ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Empty ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது

Post by சிவா Thu Jan 26, 2012 11:26 am



செங்கல்பட்டு: தமிழக அமைச்சர் சண்முகம் உறவினர் கொலை வழக்கில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தம்பி உட்பட, இருவர் கைது செய்யப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தில், இதுவரை அமைதியாக இருந்த சி.பி.ஐ., இப்போது திடீரென சுறுசுறுப்பாகியுள்ளது. திண்டிவனத்தில், அமைச்சர் சண்முகம் வீட்டில், 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு அன்று, பா.ம.க.,வினர் புகுந்து, அங்கிருந்தவர்களை தாக்கினர். இதில், அமைச்சரின் உறவினர் முருகானந்தம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி மற்றும் பலர் மீது, சண்முகம், திண்டிவனம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பெயரை விட்டுவிட்டு, மற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, 11 பேரை கைது செய்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ஆகியோர் பெயர் சேர்க்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்த சண்முகம், சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த கோர்ட், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.ஐ., போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த 5ம் தேதி, முருகானந்தம் கொலை வழக்கு தொடர்பாக, விழுப்புரத்தைச் சேர்ந்த கோபி, 28, இளஞ்செழியன், 32, தாளைமேடு பகுதியைச் சேர்ந்த குமரன், 37, நடராஜன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், ஆனந்தகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோரை, சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர். பின், அவர்களை காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று திண்டிவனத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் தம்பி சீனுவாச கவுண்டர்,65, அவரது ஆதரவாளரான விழுப்புரத்தைச் சேர்ந்த கருணாநிதி,50, ஆகியோரை கைது செய்தனர். இருவரும் நேற்று மாலை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களை, 15 நாள் கோர்ட் காவலில் வைக்கும்படி, நீதிபதி ஆனந்தி உத்தரவிட்டார். "உடல்நிலை சரியில்லாததால், தங்களை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்' என, இருவரும் நீதிபதியிடம் தெரிவித்தனர். "சிறை கண்காணிப்பாளரிடம் தகவல் தெரிவியுங்கள். அவர் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வார்' என, நீதிபதி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இருவரும், தங்களை கடலூர் சிறையில் அடைக்கும்படி கோரினர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும், சென்னை புழல் சிறையில் உள்ளதால், அங்கு தான் செல்ல வேண்டும் என, நீதிபதி கூறினார். ராமதாஸ் தம்பி சீனுவாச கவுண்டர், சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரது கைது, பா.ம.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜாமின் மனு தள்ளுபடி: இவ்வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ள நடராஜன், கோபி, குமரன், இளஞ்செழியன், பன்னீர்செல்வம், ஜெயராஜ், அனந்தகிருஷ்ணன் ஆகியோர் ஜாமின் கோரி, செங்கல்பட்டு செசன்ஸ் கோர்ட்டில் மனு செய்தனர். நேற்று, மனு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை இன்னும் முடிவு பெறாததால், அவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, சி.பி.ஐ., வழக்கறிஞர் இளஞ்செழியன் வாதிட்டார். அதை ஏற்று, நீதிபதி சிவானந்த ஜோதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தைலாபுரத்தில் சி.பி.ஐ., நுழையுமா? ராமதாஸ் ஆலோசனை: அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில், அடுத்தடுத்து கைது படலம் அரங்கேறி வரும் நிலையில், தைலாபுரம் தோட்டத்திலும் சி.பி.ஐ., நுழையலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், ஒசூரில் தங்கி அவசர ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2006ம் ஆண்டு, சட்டசபை தேர்தலின்போது, திண்டிவனத்தில் அ.தி.மு.க., பிரமுகர் முருகானந்தம் படுகொலை வழக்கில், பா.ம.க., நிறுவனர் ராமதாசின் சகோதரர் சீனு கவுண்டர் என்ற சீனிவாசன், அக்கட்சி முன்னாள் தலைமை நிலைய செயலர் கருணாநிதி ஆகியோர், நேற்று சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், இவ்வழக்கின் வேகம் அதிகரித்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவ்வழக்கு, தொடர்பாக, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணியிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, சி.பி.ஐ., குழு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் நுழையலாம் என கூறப்படுகிறது. சி.பி.ஐ., மூலம் கைது செய்யப்பட்டுள்ள சீனிவாசன், பா.ம.க.,வில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். ஆனால், கருணாநிதி திண்டிவனம் மாவட்ட நிர்வாகியாக இருக்கிறார். இவ்வழக்கில், அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே, கிருஷ்ணகிரியில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க, ராமதாஸ் நேற்று அங்கு சென்றிருந்தார். கைது குறித்த தகவல் கேள்விபட்டவுன், இக்கூட்டத்திற்கு வந்திருந்த கட்சி நிர்வாகிகள் சிலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கூட்டம் முடிந்தவுடன், ஒசூரில் "ரூம்' போட்டு ராமதாஸ், பா.ம.க., தலைவர் மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர். அதேபோன்று, சென்னையில் அன்புமணியும், தனக்கு நெருக்கமான நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தினமலர்


ராமதாஸ் தம்பி கைது, தூங்கிய சி.பி.ஐ., விழித்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது!
» சிவகாசி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை: போதையில் வீட்டில் தூங்கிய கொலையாளி கைது
» முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொச்சியில் கைது!
» பாமகவின் பூட்டுப் போடும் போராட்டம்: சென்னையில் ராமதாஸ், 2,000 பேர் கைது
» டாக்டர் ராமதாஸ் எந்த நிமிடமும் கைது! சி.பி.ஐ.-யின் இறுதி ராப்-அப்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum