Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடியரசு தினச் செய்திகள்
3 posters
Page 1 of 1
குடியரசு தினச் செய்திகள்
குடியரசு தினத்துக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!
சென்னை, ஜன. 25: குடியரசு தினத்தை ஒட்டி, "டாஸ்மாக்' கடைகள் வியாழக்கிழமை செயல்படாது என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.
மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களை மூட அவர் உத்தரவிட்டுள்ளார். கடைகள், பார்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு இருக்க வேண்டும்
எனவும், மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் அன்றைய தினம் மதுபானம்
விற்றால் விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜன. 25: குடியரசு தினத்தை ஒட்டி, "டாஸ்மாக்' கடைகள் வியாழக்கிழமை செயல்படாது என்று மாவட்ட ஆட்சியரகம் அறிவித்துள்ளது.
மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்களை மூட அவர் உத்தரவிட்டுள்ளார். கடைகள், பார்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு இருக்க வேண்டும்
எனவும், மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்றும் அன்றைய தினம் மதுபானம்
விற்றால் விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குடியரசு தினச் செய்திகள்
சென்னையில் இன்று குடியரசுதின விழா: ஜெயலலிதா முன்னிலையில், கவர்னர் ரோசய்யா கொடி ஏற்றுகிறார்
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றுகிறார்.
இதையொட்டி, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
குடியரசுதின விழா
குடியரசு தினவிழா இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி இந்தியா கேட் ராஜபாதையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த விழாவில், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய மந்திரிகள், அரசியல்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் இன்று காலை 8 மணி முதல் 9.15 மணிவரை கடற்கரை காந்தி சிலை அருகில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், கவர்னர் ரோசய்யா தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் பிரமாண்ட அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது.
பலத்த பாதுகாப்பு
குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மற்றும் நேற்று இரவிலும் விடிய, விடிய வாகன சோதனை நடைபெற்றது. முக்கிய சாலை சந்திப்புகளில் நின்று கொண்டு போலீசார் சந்தேக நபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
சென்னை அமெரிக்க தூதரகம் அருகிலும் இலங்கை ஆசாமி ஒருவரை பிடித்து விசாரணை நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சேஷசாயி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது.
2 ஆயிரம் போலீசார் குவிப்பு
பாதுகாப்பு ஏற்பாடுகளை இணை போலீஸ் கமிஷனர் சேஷசாயி நேற்று பிற்பகல் பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குடியரசு தினவிழாவுக்காக 2 ஆயிரம் போலீசார் விழா நடைபெறும் இடத்தில் குவிக்கப்படுவார்கள். கடலோர பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். விழா நடைபெறும் கடற்கரை காந்தி சிலை பகுதி தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்படும். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னையில் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடற்கரை காந்தி சிலை அருகில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், கவர்னர் ரோசய்யா தேசிய கொடி ஏற்றுகிறார்.
இதையொட்டி, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
குடியரசுதின விழா
குடியரசு தினவிழா இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி இந்தியா கேட் ராஜபாதையில் நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த விழாவில், பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய மந்திரிகள், அரசியல்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
சென்னையில் இன்று காலை 8 மணி முதல் 9.15 மணிவரை கடற்கரை காந்தி சிலை அருகில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில், கவர்னர் ரோசய்யா தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். பின்னர் பிரமாண்ட அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறுகிறது.
பலத்த பாதுகாப்பு
குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவில் இருந்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் மற்றும் நேற்று இரவிலும் விடிய, விடிய வாகன சோதனை நடைபெற்றது. முக்கிய சாலை சந்திப்புகளில் நின்று கொண்டு போலீசார் சந்தேக நபர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
சென்னை அமெரிக்க தூதரகம் அருகிலும் இலங்கை ஆசாமி ஒருவரை பிடித்து விசாரணை நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சேஷசாயி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது.
2 ஆயிரம் போலீசார் குவிப்பு
பாதுகாப்பு ஏற்பாடுகளை இணை போலீஸ் கமிஷனர் சேஷசாயி நேற்று பிற்பகல் பார்வையிட்டார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குடியரசு தினவிழாவுக்காக 2 ஆயிரம் போலீசார் விழா நடைபெறும் இடத்தில் குவிக்கப்படுவார்கள். கடலோர பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். விழா நடைபெறும் கடற்கரை காந்தி சிலை பகுதி தீவிர பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்படும். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குடியரசு தினச் செய்திகள்
குடியரசு தினம்: தலைவர்கள் வாழ்த்து
இந்தியாவின் 63-வது குடியரசு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: எத்தனையோ நாடுகள் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இழந்து தவிக்கின்றன.
இடைக்காலத்தில் நெருக்கடிநிலை என்ற பெயரால் ஜனநாயகத்தைப் பறிகொடுத்தாலும் இந்தியா இன்றும் தனது ஜனநாயக அமைப்புகளைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதே ஒரு சாதனையாகும்.
ஆனால் எல்லோரும் சமம் என்று ஜனநாயகம் உண்மையில் செயல்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சமூக ரீதியில் ஜாதி, மதங்களால் பிரிந்தும், பொருளாதார ரீதியில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு அதிகரித்தும் வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்றும் உலகிலேயே அதிக ஏழை மக்களைக் கொண்ட நாடு இந்தியாதான்.
இப்போது பற்றாக்குறை ஜனநாயகத்தை மட்டுமே நம்பியிராமல் அனைவரின் நல்வாழ்வுக்கும் வழி வகுக்கக்கூடிய உண்மையான ஜனநாயகம் மலர்வதற்கு நாம் அனைவரும் பாடுபடுவதிலேயே இந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்: வரும் காலங்களில் ஜாதி, மத, மாநில வேறுபாடுகளை அகற்றிவிட்டு கலாசாரத்தையும், மொழியையும் பேணிக் காக்க வேண்டும். அதேவேளையில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும்,மக்களாட்சி தத்துவத்தையும் பேணிக் காப்போம் என்று குடியரசு தினத்தில் சபதம் ஏற்போம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்: போராடிப் பெற்ற சுதந்திரம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும். அரசியல் சட்டத்தில் 60 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டு அரசியல் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் சகல துறைகளிலும் ஊழல் மலிந்து வளர்ந்த வண்ணமே உள்ளது. ஊழலை ஒழிப்பதற்கான மிகச் சரியான சட்டத்தைப் பெறவும், அரசியல் அதிகார ஊழலை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்காக மக்களைத் திரட்டி இயக்கம் நடத்தவும் குடியரசுத் தினத்தன்று உறுதி ஏற்போம்.
அகில இந்திய சமத்துவக் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார்: "இந்தியாவின் பெருமையை உயர்த்தி வைத்த சுதந்திரத் திருநாளையும், குடியரசு நாளையும் மக்கள் பேதமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மரபு தோன்ற வேண்டும். இந்தியக் குடியரசின் சமத்துவ லட்சியங்களைக் கட்டிக் காத்திடவும், உலகுக்கே தலைமை தாங்கி வழிகாட்டும் வகையில் இந்தியக் குடியரசைப் பலப்படுத்திடவும் குடியரசுத் தினத்தில் சபதம் ஏற்போம்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, அகில இந்தி மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனர் ந.சேதுராமன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் , தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் உள்பட வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் 63-வது குடியரசு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: எத்தனையோ நாடுகள் பெற்ற சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் இழந்து தவிக்கின்றன.
இடைக்காலத்தில் நெருக்கடிநிலை என்ற பெயரால் ஜனநாயகத்தைப் பறிகொடுத்தாலும் இந்தியா இன்றும் தனது ஜனநாயக அமைப்புகளைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதே ஒரு சாதனையாகும்.
ஆனால் எல்லோரும் சமம் என்று ஜனநாயகம் உண்மையில் செயல்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சமூக ரீதியில் ஜாதி, மதங்களால் பிரிந்தும், பொருளாதார ரீதியில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு அதிகரித்தும் வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்றும் உலகிலேயே அதிக ஏழை மக்களைக் கொண்ட நாடு இந்தியாதான்.
இப்போது பற்றாக்குறை ஜனநாயகத்தை மட்டுமே நம்பியிராமல் அனைவரின் நல்வாழ்வுக்கும் வழி வகுக்கக்கூடிய உண்மையான ஜனநாயகம் மலர்வதற்கு நாம் அனைவரும் பாடுபடுவதிலேயே இந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்: வரும் காலங்களில் ஜாதி, மத, மாநில வேறுபாடுகளை அகற்றிவிட்டு கலாசாரத்தையும், மொழியையும் பேணிக் காக்க வேண்டும். அதேவேளையில் இந்திய நாட்டின் ஒற்றுமையையும், சுதந்திரத்தையும், இறையாண்மையையும்,மக்களாட்சி தத்துவத்தையும் பேணிக் காப்போம் என்று குடியரசு தினத்தில் சபதம் ஏற்போம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்: போராடிப் பெற்ற சுதந்திரம் தொடர்ந்து காக்கப்பட வேண்டும். அரசியல் சட்டத்தில் 60 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டு அரசியல் சட்டத் திருத்தங்களையும் மேற்கொள்ள வேண்டும்.
நாட்டின் சகல துறைகளிலும் ஊழல் மலிந்து வளர்ந்த வண்ணமே உள்ளது. ஊழலை ஒழிப்பதற்கான மிகச் சரியான சட்டத்தைப் பெறவும், அரசியல் அதிகார ஊழலை ஒழிக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், அதற்காக மக்களைத் திரட்டி இயக்கம் நடத்தவும் குடியரசுத் தினத்தன்று உறுதி ஏற்போம்.
அகில இந்திய சமத்துவக் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார்: "இந்தியாவின் பெருமையை உயர்த்தி வைத்த சுதந்திரத் திருநாளையும், குடியரசு நாளையும் மக்கள் பேதமின்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மரபு தோன்ற வேண்டும். இந்தியக் குடியரசின் சமத்துவ லட்சியங்களைக் கட்டிக் காத்திடவும், உலகுக்கே தலைமை தாங்கி வழிகாட்டும் வகையில் இந்தியக் குடியரசைப் பலப்படுத்திடவும் குடியரசுத் தினத்தில் சபதம் ஏற்போம்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, அகில இந்தி மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனர் ந.சேதுராமன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் , தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூத் உள்பட வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குடியரசு தினச் செய்திகள்
குடியரசு தினம்:சென்னையில் கவர்னர் கொடியேற்றினார்
குடியரசு தினமான இன்று சென்னையில் கவர்னர் ரோசையா கொடியேற்றினார்.இன்று சென்னை மெரினாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கவர்னர் கொடியேற்றனார்.குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தினமலர்
குடியரசு தினமான இன்று சென்னையில் கவர்னர் ரோசையா கொடியேற்றினார்.இன்று சென்னை மெரினாவில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கவர்னர் கொடியேற்றனார்.குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, மற்றும் தமிழக அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: குடியரசு தினச் செய்திகள்
15 ஆயிரம் பேர் கூடி தேசியகீதம் இசைத்து உலக சாதனை
அவுரங்காபாத், ஜன.25: அவுரங்காபாத்தில் உள்ள ஒரு மைதானத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கூடி தேசியகீதம் இசைத்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மொத்தம் 15243 பேர் கூடி, ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் தேசியகீதம் இசைத்த நிகழ்வு என்னும் வகையில் கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் பாகிஸ்தானில் 5800 பேர் கூடி இத்தகைய சாதனையை நிகழ்த்தினர் என்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் கூறினர். கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தலைமை கண்காணிப்பாளர் ஆண்டிரியா பான்ஃபி இதற்காக லண்டனில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவரிடமிருந்து உலக சாதனைக்கான சான்றிதழை உள்ளூர் மக்களின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் விஜய் தர்தா பெற்றுக்கொண்டார்.
அவுரங்காபாத், ஜன.25: அவுரங்காபாத்தில் உள்ள ஒரு மைதானத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கூடி தேசியகீதம் இசைத்து உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மொத்தம் 15243 பேர் கூடி, ஒரே நேரத்தில் அதிகமானவர்கள் தேசியகீதம் இசைத்த நிகழ்வு என்னும் வகையில் கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் பாகிஸ்தானில் 5800 பேர் கூடி இத்தகைய சாதனையை நிகழ்த்தினர் என்று இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் கூறினர். கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தலைமை கண்காணிப்பாளர் ஆண்டிரியா பான்ஃபி இதற்காக லண்டனில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அவரிடமிருந்து உலக சாதனைக்கான சான்றிதழை உள்ளூர் மக்களின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் விஜய் தர்தா பெற்றுக்கொண்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரதமர் அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி:
பிரதமர் அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி:
புதுடில்லி: நாட்டில் குடியரசு தினம் என்றால் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடக்க வேண்டும் என பல முனை பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் ஆனால் இந்த முறை எந்தவொரு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும் எவ்வித மிரட்டலும் இல்லை என்ற ஒரு திருப்தியுடன் பெரும் அளவில் பாதுகாப்பு படையினருக்கு சிரமம் இல்லாமல் போனது என்ற நிம்மதி கிடைத்திருக்கிறது. முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன்சிங் டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தினார்.
நாட்டின் 63 வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் ஜனாதிபதி பிரதீபாபாட்டிலும், அந்தந்த மாநிலத்தில் கவர்னரும் கொடியேற்றி வைக்கின்றனர்.இதற்கான அணிவகுப்பு ஒத்திகை தொடர்ந்து நடந்தது. இந்த முறை குறிப்பிடத்தக்க எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதனால் டில்லி உள்பட எந்தவொரு மாநிலத்திற்கும் சிறப்பு அலர்ட் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அந்தந்த மாநிலம் வழக்கமான அதிகபட்சம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்னர். நக்சல் பாதித்த வட கிழக்கு மாநிலம் மற்றும் காஷ்மீரில் கூடுதல் கவனம் எடுத்து கொள்வது நல்லது என்றும் உள்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் பல ஆண்டுகள் தொடர்ந்து குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் . இதன் அடிப்படையில் படு பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். இந்த முறை அது போன்ற பெரும் சிரமம் இல்லை என்பது மகிழ்வுக்குரிதே.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தின அணிவகுப்பு செல்லும் பாதையில் ரகசிய கண்காணிப்பு காமிரா, துணை ராணுவ படையினர், தேசிய பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் அஞ்சலி: குடியரசு தின விழாவின் முதல் துவக்க நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன்சிங் மலர்வளையம் வைத்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி வரவேற்றார். இந்நேரத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர்.
தமிழகத்தி்ல் குடியரசு கொண்டாட்டம்: தமிழகத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசய்யா தேசிய கொடியேற்றி வைத்தார். முதல்வர் ஜெ., மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். விழாவில் வீர தீர செயல்கள் புரிந்த தீயணைப்பு அலுவலகர்கள், காவல்துறையினருக்கு பதக்கம் மற்றும் விருதுகளை வழங்கினார். காந்தியடிகள் காவலர் விருது 4 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. சமீபத்திய எழிலக தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமுற்ற தீயணைப்பு அலுவலர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அண்ணா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சென்னை ஐகோர்ட்டில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி இக்பால் கொடியேற்றி வைத்தார். விழாவில் நீதீபதிகள், வக்கீல்கள், மற்றும் கோர்ட் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
புதுடில்லி: நாட்டில் குடியரசு தினம் என்றால் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடக்க வேண்டும் என பல முனை பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் ஆனால் இந்த முறை எந்தவொரு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும் எவ்வித மிரட்டலும் இல்லை என்ற ஒரு திருப்தியுடன் பெரும் அளவில் பாதுகாப்பு படையினருக்கு சிரமம் இல்லாமல் போனது என்ற நிம்மதி கிடைத்திருக்கிறது. முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன்சிங் டில்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் அஞ்சலி செலுத்தினார்.
நாட்டின் 63 வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லியில் ஜனாதிபதி பிரதீபாபாட்டிலும், அந்தந்த மாநிலத்தில் கவர்னரும் கொடியேற்றி வைக்கின்றனர்.இதற்கான அணிவகுப்பு ஒத்திகை தொடர்ந்து நடந்தது. இந்த முறை குறிப்பிடத்தக்க எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இதனால் டில்லி உள்பட எந்தவொரு மாநிலத்திற்கும் சிறப்பு அலர்ட் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அந்தந்த மாநிலம் வழக்கமான அதிகபட்சம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்னர். நக்சல் பாதித்த வட கிழக்கு மாநிலம் மற்றும் காஷ்மீரில் கூடுதல் கவனம் எடுத்து கொள்வது நல்லது என்றும் உள்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் பல ஆண்டுகள் தொடர்ந்து குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் . இதன் அடிப்படையில் படு பயங்கர பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். இந்த முறை அது போன்ற பெரும் சிரமம் இல்லை என்பது மகிழ்வுக்குரிதே.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தின அணிவகுப்பு செல்லும் பாதையில் ரகசிய கண்காணிப்பு காமிரா, துணை ராணுவ படையினர், தேசிய பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் அஞ்சலி: குடியரசு தின விழாவின் முதல் துவக்க நிகழ்ச்சியாக பிரதமர் மன்மோகன்சிங் மலர்வளையம் வைத்து சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே., அந்தோணி வரவேற்றார். இந்நேரத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர்.
தமிழகத்தி்ல் குடியரசு கொண்டாட்டம்: தமிழகத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசய்யா தேசிய கொடியேற்றி வைத்தார். முதல்வர் ஜெ., மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். விழாவில் வீர தீர செயல்கள் புரிந்த தீயணைப்பு அலுவலகர்கள், காவல்துறையினருக்கு பதக்கம் மற்றும் விருதுகளை வழங்கினார். காந்தியடிகள் காவலர் விருது 4 போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. சமீபத்திய எழிலக தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமுற்ற தீயணைப்பு அலுவலர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அண்ணா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சென்னை ஐகோர்ட்டில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி இக்பால் கொடியேற்றி வைத்தார். விழாவில் நீதீபதிகள், வக்கீல்கள், மற்றும் கோர்ட் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» அன்னையர் தினச் சிறப்பு பதிவு
» சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» குடியரசு தினம்
» குடியரசு தின வாழ்த்துகள்
» சுதந்திர தினச் செய்தி (கொஞ்சம் லேட்டானாலும்)
» உலக தமிழர் செய்திகள் பகுதிக்கு செய்திகள் அனுப்பலாம்!
» குடியரசு தினம்
» குடியரசு தின வாழ்த்துகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|