புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
366 Posts - 49%
heezulia
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
25 Posts - 3%
prajai
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_m10வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா !


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 24, 2012 4:56 pm

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா !

நரம்பில்லாததுதான் நாக்கு. இந்த நாக்கு யாரை வேண்டுமானாலும் தாக்கும். தாக்கியவரையே திடீரென பாசத்தோடு நக்கும். நக்கிக் கொண்டே அதே நபர் மீது விஷத்தையும் கக்கும். இந்த நாக்கு கொண்டவர்கள் நாட்டில் ஏராளம். அதுவும் பழகிக் கொண்டே, நடு முதுகில் நச்சென குத்திவிட்டு, மீண்டும் தோழமையோடு பேசும் நரி குணம் கொண்ட நட்டுவாக்கிளிகளும் நாட்டில் ஏராளம்.

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! A.raja_2011d
அப்படிப்பட்ட நாக்கு ஒன்று சமீபத்தில் பேசியது. அது “தி.மு.க. ஆட்சியில் இல்லாததன் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள்”. யார் என்று தெரிகிறதா? சாட்சாத் தி.மு.க.வின் தானைத்தலைவர் கருணாநிதிதான்.

பா.ம.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் சேரும் நிகழ்ச்சியில் தான் இந்த முத்தான
கருத்துக்களை கக்கி இருக்கிறார் கருணாநிதி. எப்படியும் மக்கள் மறந்துவிடுவார்கள். தினமும் ஒரு பேச்சு. அதை மறுநாளே மாற்றிக் கொள்ளும் பேச்சு. அட... எப்படித்தான் இப்படி முடிகிறதோ இந்த அரசியல்வாதிகளால். சாதாரண அரசியல்வாதிகளே இப்படி மாறி மாறி பேசும் போது, 70 ஆண்டுகளாக சரித்திரம் படைத்த கருணாநிதி மட்டும், எப்போதும் ஒரே மாதிரி பேசினால் எப்படி?

”பா.ம.க. தோழமை கட்சி தான். இடையிலே அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட சில பூசல்களால் இன்று காட்சிகள் மாறிவிட்டன. என்னையும் என்னுடை தலைவர்களையும் இழிவுபடுத்தினால் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், திராவிட இயக்கத்தையே இழித்தும் பழித்தும் பேசிய பிறகு எனக்கு ஏற்பட்ட உளைச்சலுக்கு எங்கு மருந்து தேடுவது? இவர்கள் இப்படி பேசுகிறார்களே என்ற எண்ணிய போது ஏற்பட்ட மனப்புழுக்கம் உங்கள் முகங்களை பார்க்கும் போது தீர்ந்துவிட்டதாக கருதுக்கிறேன்”.
வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Karuna_new_1133

அரசியல் கட்சிகளில் எந்தக் கட்சிக்குமே கொள்கை கிடையாது. அப்புறம் பா.ம.க.வுக்கு மட்டும் என்ன தனிக் கொள்கை வேண்டி இருக்கிறது. இந்த பா.ம.க. கட்சி, 2009ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் அணி சேர்ந்தது. அத்தேர்தலில் மரண அடி. போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் பா.ம.க. மண்ணை கவ்வியது. உடனே, 2011ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க.வுடன் அணி சேர்ந்தது. அது எப்படி தெரியுமா?

பா.ம.க. தலைவர் ராமதாசின் பேத்தி கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வந்தவரை, கூட்டணிக்கு சேர்த்துவிட்டவர் தான் கருணாநிதி. கல்யாண பத்திரிகை வைக்க வந்தவரை ஏன் கூட்டணி விருந்து போட்டார் கருணாநிதி. அதுவரை தி.மு.க.வை பா.ம.க.வினர் யாரும் எதிர்த்து பேசவில்லையா? அல்லது விமர்சிக்கவில்லையா?

காடுவெட்டி குரு. இவர் யார் என்று சொல்ல வேண்டியதில்லை. ராமதாஸ் கூப்பிட்டு... குரு கட்டிக் கொண்டு வா... என்றால் வெட்டிக் கொண்டு வருபவர் தான் காடுவெட்டி குரு.

அந்த குருவின் பேச்சை கேட்டால்... உண்மையான தி.மு.க.க்காரன் யாரும் பா.ம.க. கட்சிக் கொடியை கூட விட்டு வைக்க மாட்டான். ஆண்டிமடத்தின் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினராக இருந்த சிவசங்கரின் தலையை எடுத்துவிடுவேன் என்று மார்தட்டிவிட்டு, தி.மு.க. தலைமையை பற்றி அவர் பேசிய கருத்துக்கள் நாகரீகம் கருதி பதிவேற்றம் செய்யமுடியாது.

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! >

அந்த பேச்சு பேசி பல மாதங்கள் கழித்துதான், ஆற்காடு வீராசாமியை விட்டு ஒரு நாடகம் நடத்தி பா.ம.க.வை வெளியேற்றியது தி.மு.க. அந்த அளவுக்கு குரு பேசியதை விட... ராமதாஸ் எத்தனையோ முறை தி.மு.க.வை தாறுமாறாக போட்டு தாக்கி இருக்கிறார்.

இதன் பிறகு தான் 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக் கொள்கிறது. கூட்டணி வைக்கும் போது தெரியாத உண்மை, இரண்டு நாட்களுக்கு முன்பு கண்டுபிடித்துவிட்டார் கருணாநிதி.

அதைவிட இன்னொரு கண்டுபிடிப்பையும் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறார் கருணாநிதி.

“தி.மு.க. ஆட்சியில் இல்லாததன் பலனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் இல்லாத சூழ்நிலையில், வாக்களித்தவர்கள் எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்பதை வெளியே சொல்ல முடியாமல் வெட்கப்படுவதை நாம் காண்கிறோம்” என்றும் பேசி புல்லரிக்க வைத்துவிட்டார் தானைத்தலைவர்.

உண்மையைச் சொன்னால்... யார் கஷ்டப்படுகிறார்கள்! அ.தி.மு.க. ஆட்சியில் பாலும் தேனும் ஓடவில்லை தான். பால் விலையை ஏற்றினார்கள். பஸ் கட்டணத்தை ஏற்றினார்கள்.

இன்னும் மின் கட்டணம் வேறு உயரப் போகிறது. அந்த கஷ்டங்கள் எல்லாம், மக்களுக்கு கொடுமையானதுதான். ஆனால், பருவத்தே பயிர் செய்திருந்தால், இந்த கொடுமை நடந்திருக்குமா? ஆண்டு தோறும் ஐந்து பைசாவோ பத்து பைசாவோ கட்டணத்தை ஏற்றிக் கொண்டே இருந்தால், மொத்தமாக கட்டணத்தை சுமக்க வேண்டிய கொடுமை நேர்ந்திருக்காதே. அந்த கொடுமையை ஏற்றிய அ.தி.மு.க.வை விட... ஏற்ற வைத்த தி.மு.க.வைத்தான் சேரும்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வாக்களித்தவர்கள் எல்லாம் தவறு செய்துவிட்டோம் என்று வெளியே சொல்ல முடியாமல் வெட்கப்படுகிறார்களாம். உண்மையில் வெட்கப்பட வேண்டியவர் யார்? தி.மு.க.வுக்கு ஏன் வாக்களிக்கவில்லை. அதை குறித்து கருணாநிதி என்றாவது சிந்தித்திருந்தால், வெட்கப்பட்டிருக்க மாட்டார். பல பேரை வெட்டி சாய்த்திருப்பார். நாடே இருளில் மூழ்கிக் கொண்டிருந்த போது ஆற்காட்டாரே மின் துறைக்கு மந்திரியாக நீட்டிக்க விட்டது ஏன்?

நாடே காறி துப்பிய ஸ்பெக்ட்ரம் ராசாவை தூக்கி தூக்கி கொஞ்சியது ஏன்?

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! >

40 ஆண்டுகளாக குடியிருந்த மக்களை குப்பையில் தூக்கிவீசி, அந்த நிலத்தை ஆக்கிரமித்த வீரபாண்டி ஆறுமுகத்தை பார்த்து பம்மியது ஏன்?

ஆள் கடத்தல், அடிதடி என்று குடித்துவிட்டு நடுரோட்டில் ரகளை செய்த ஈரோடு ராஜாவை மீண்டும் கட்டியணைத்தது ஏன்?

தென் மண்டலத்தில் பொட்டு சுரேஷ் போட்ட ஆட்டத்தை விட, அவருக்கு கால் அமுக்கி விட்ட அமைச்சர்களை பற்றி சொல்லும் போது, மெளனகுருவாக இருந்தது யார்?

தனக்கே தெரியாமல், தனது துணைவியார் ராசாத்தி, மகள் கனிமொழிக்காக மந்திரி பதவி கேட்டு பேரம் பேசியதும், வோல்டாஸ் நிலத்தை அபகரித்ததையும் கண்டும் காணாமலும் இருந்தது யார்?

கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் கடன் வந்த விவகாரத்தை இன்று வரை சொல்ல முடியாமல் தவிப்பது ஏன்? அந்த கடன் பற்றி சி.பி.ஐ. விசாரிக்கிறது என்றதுமே, அக்கடன் தொகை எப்படி செலுத்தப்பட்டது என்ற விவரத்தை சொல்ல முடியவில்லையே ஏன்? சாராய வியாபாரியும் லாட்டரி வியாபாரியும் கொடுத்த பணத்துக்கு கதை வசனம் எழுதிக் கொண்டு, நாட்டு மக்களை கண்டும் காணாமாலும் இருந்தது யார்? சினிமா துறையையே தனது குடும்பம் காலில் போட்டு நசுக்கிக் கொண்டிருந்ததை கண்டு, அகமகிழ்ந்தவர் யார்?

இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது, 300 கோடியில் செம்மொழி மாநாடு நடத்தியது யார்?

வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Karunanidhi-in-pattu-vaetti-sattaiஇலங்கைத் தமிழர்களுக்கு ஏன் உதவ முடியவில்லை என்று கேட்டால், “ஒரு அடிமை... இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்” என்று கேட்டது யார்?

-இப்படியெல்லாம் தி.மு.க. ஆட்சியில் நடந்ததே என்று ஒரு நாளாவது வெட்கப்பட்டிருந்தால்.... இந்த ஆட்சி போயிருக்குமா?

தமிழர்களின் நலனை தூக்கி எறிந்த காங்கிரஸ் கட்சியின் அடிமைக்கு...
குடும்பத்தின் சுகமே தன் சுகம் என்று இருந்த அடிமைக்கு...
மந்திரிகளின் கொள்ளையை அனுமதித்துக் கொண்டிருந்த அடிமைக்கு...
கவிஞர்கள் என்ற பெயரில் களவாணிகள் முதுகை சொரிவதற்கு காத்திருந்த அடிமைக்கு... மீண்டும் ஆட்சி வேண்டுமா?


தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் - நன்றி www.tamilleader.in

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 24, 2012 5:00 pm

இரண்டு மூன்று அரசு மாறி மாறி வந்தால் தான் அரசியல் கட்சிகள் மக்களுக்காக கொஞ்சமாவது நல்லது செய்வார்கள் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Ila
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 6:15 pm

அரசியல்வாதிக்கு எங்கங்க வெட்கம் இருக்கப் போவுது?
இருந்தா கட்சிய நடத்தி ஆட்சிய புடிக்க முடியுமா?




செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Tue Jan 24, 2012 6:36 pm

தோழமைக்கு,
மந்திரி பதவி பேரத்திற்கு டெல்லி சென்ற கலைஞர்
இலங்கை தமிழ் மக்களின் உயிர் காக்க மட்டும் கடிதம் போட்டது ஏன்?
கனிமொழியை காண டெல்லி சென்ற கலைஞர்
தீ போல் கணன்ற பெரியாறு கேரளா பிரச்சனைக்கு மட்டும் கடிதம் போட்டது
ஏன் ?
எனக்கு தெரிந்து இவரால் தான் அஞ்சல் துறை நன்றாக செயல் படுகிறதோ ?




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue Jan 24, 2012 6:45 pm

குடும்ப பிரச்சனையை கடிதம்மூலம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை , நன்றாக (தவறாக) புரிந்துள்ளார் போல



வெட்கப்பட வேண்டியது கருணாநிதியா... மக்களா ! Signaturexn
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக