ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை

5 posters

Go down

பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Empty பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை

Post by வாசுசெல்வா Tue 24 Jan 2012 - 14:55

சென்னை:வங்கியில் வாடிக்கையாளர்கள் போல நுழைந்த, ஐந்து பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல், துப்பாக்கி முனையில், 19.25 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றது. பட்டப்பகலில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளதால், அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பேனாராம். இவருக்கு பெருங்குடி, ராஜிவ்காந்தி சாலையில் சொந்த கட்டடம் உள்ளது. கீழ்தளத்தில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். முதல் தளத்தில், 2,100 சதுர அடி இடத்தை, பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக வங்கி அங்கு செயல்பட்டு வருகிறது. ஐ.டி., நிறுவனங்கள் நிறைந்த பகுதி என்பதால், வங்கியில் கூட்டத்திற்கு குறைவிருக்காது. ஏ.டி.எம்., மையத்துடன் இணைந்துள்ள அவ்வங்கியின் மேலாளர் பாலாஜி, காசாளர் ஆனந்தன். இவர்களை தவிர, ஐந்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.



நேற்று பகல் 1.40 மணிக்கு, ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கியில் இருந்தனர். அப்போது, ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று, வாடிக்கையாளர் போர்வையில் நுழைந்தது.சற்றுநேரம் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்தது. பின், அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மேலாளர், காசாளர், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இருந்த பகுதிக்கு தனித்தனியாக பிரிந்து நின்றனர். திடீரென துப்பாக்கியை காட்டி அங்குள்ள அனைவரையும் மிரட்டினர். பின், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஒரு ஓரமாக நிறுத்தினர். காசாளரிடம் இருந்த நபர், துப்பாக்கி முனையில், 19.25 லட்சம் ரூபாயை சுருட்டினார். பின், அவர்களை ஒரு அறையில் அடைத்து, யாராவது சப்தம் போட்டால் துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டினார். அதன்பின், மிக சாதாரணமாக வங்கியின் வெளியே வந்து, கதவை தாழ்போட்டு அங்கிருந்து தப்பினர்.



அவர்கள் சென்றுவிட்டதை ஊர்ஜிதம் செய்த ஊழியர்கள், கீழ்தளத்தில் உள்ள பேனாராமிற்கு தொலைபேசியில் நடந்த சம்பவத்தை விளக்கி, கதவை திறந்துவிடும்படி கூறினர். ஆனால், அவர் வருவதற்குள் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர், கதவை திறந்து விட்டார். அதன் பின், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.



சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன், இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன், அடையாறு துணை கமிஷனர் சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சென்னை மற்றும் புறநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு கொள்ளை சம்பவம் குறித்து, "மைக்'கில் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. மோப்பநாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது வங்கியிலிருந்து துரைப்பாக்கம் வரை சற்று தூரம் ஓடி நின்றது. சம்பவம் குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் பட்டப்பகலில், நடந்த இச்சம்பவத்தால், இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.



வீதி வீதியாக வாகன சோதனை: கொள்ளை சம்பவம் குறித்து அறிந்ததும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களுக்கு "மைக்' மூலம் உஷார் படுத்தப்பட்டது. நகரில் உள்ள பிரதான சாலைகள், கொள்ளையர்கள் தப்பிச் செல்ல வழியுள்ள நகர்கள் மற்றும் தெருக்கள் என, அனைத்து இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் என அனைத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ள பட்டது. சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்தவர்கள், வடமாநிலத்தினரிடம் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்து அரை மணி நேரம் கழித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததால், கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க முடியவில்லை.



"சிசி' கேமரா வசதியில்லாத வங்கி:வங்கிக் கொள்ளைகளை தடுக்கும் வகையில், அனைத்து வங்கி அதிகாரிகளை அழைத்து, போலீசார் சார்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கியும், "சிசி' கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், கொள்ளை போன வங்கியில் "சிசி' கேமரா பொருத்தாததால், கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற கொள்ளைகள் நடக்கும் போது, உடனடியாக தகவல் தெரிவிக்கும் வகையில், அபாய ஒலி எழுப்பும் இயந்திரமும் அங்கு பொருத்தப்படவில்லை. இருப்பினும், வங்கி அதிகாரிகள் கொடுத்த அடையாளத்தின் பேரில், படம் வரைந்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமலர்


பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Signaturexn
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்


பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010

http://www.selvaraj.00freehost.com

Back to top Go down

பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Empty Re: பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை

Post by Guest Tue 24 Jan 2012 - 15:56

என்ன ! இந்த வங்கில சி‌சி காமிரா இல்லயா ? சுத்தம் என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest


Back to top Go down

பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Empty Re: பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை

Post by யினியவன் Tue 24 Jan 2012 - 16:00

பட்சி சொல்லுது பில்டிங் ஓனருக்கும் கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு இருக்குமோன்னு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Empty Re: பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை

Post by ஜாஹீதாபானு Tue 24 Jan 2012 - 17:15

25 லட்சம் என்று பேப்பரில் போட்டிருந்தது அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Empty Re: பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை

Post by கேசவன் Tue 24 Jan 2012 - 18:47

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை 1357389பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை 59010615பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Images3ijfபட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Empty Re: பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை

Post by krishnaamma Wed 25 Jan 2012 - 12:43

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை Empty Re: பட்டப்பகலில் வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.19.25 லட்சம் கொள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
» சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை
» துப்பாக்கி முனையில் நகை வியாபாரியிடம் 12 கிலோ தங்கம் கொள்ளை
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
» பொறியாளரை கடத்தி துப்பாக்கி முனையில் திருமணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum