புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_rcap 
22 Posts - 51%
ayyasamy ram
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_rcap 
17 Posts - 40%
mohamed nizamudeen
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_rcap 
3 Posts - 7%
T.N.Balasubramanian
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_lcapகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_voting_barகுறுந்தொகையின் செல்வவளம்..2..!!! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தொகையின் செல்வவளம்..2..!!!


   
   
sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun Jan 22, 2012 10:50 pm

நண்பர்களே,

குறுந்தொகையில் மற்றுமொரு நயமிகு பாடலைப் பார்க்கும் முன்னர், குறுந்தொகை பற்றிய சில குறிப்புகள்:

எட்டுத்தொகை நூல்களுள், பாடல்களின் அடி வரையறையில் மிகச் சிறிய பாடல்களைக்
கொண்டது குறுந்தொகையே! இப்பாடல்களில் உள்ள வரிகளின் மீச்சிறு எண்ணிக்கை நான்கு ;
மீப்பெருவன எட்டு!கடவுள் வாழ்த்து நீங்கலாக உள்ள மொத்தப் பாடல்கள் 401 ;ஆனால், 400 தான்
இருத்தல் வேண்டும்! 307, 391 - ஆம் பாடல்கள் 9 அடிகள் கொண்டவை ; இவற்றுள் 307 ஐ நீக்கி
400 பாடல்களாகக் கொள்ளலாம் என்பது தமிழுக்கு பெருந்தொண்டாற்றிய பெருமைமிகு உ.வே.சா வின்
நிலைப்பாடு!

குறுந்தொகைதான் முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூல் எனக் கருதப்படுகிறது; இது மட்டுமே இதன்
சீர்மையை எடுத்துக்காட்டப் போதுமானது ; இதனைத் தொகுத்தவர் பெருந்தேவனார் எனக் கருதப்படுகிறது!

குறுந்தொகையின் மாண்பினையும் அதன் சிறப்பான இடத்தையும் பிறிதொன்றையும் கண்டு அறியலாம் -
ஆம், நண்பர்களே! - தொகை நூற்களுள்ளேயே மிகப் பெரும் அளவில் உரையாசிரியர்களால் எடுத்துக்
காட்டப்பட்டது இந்நூல்தான் ; இருபத்தொன்பது உரையாசிரியர்கள் ஆயிரம் இடங்களில் குறுந்தொகைப்
பாடல்களை மேற்கோளாகச் சுட்டிச் சென்றுள்ளனர்!

விரிக்கின் பெருகும் ஆதலால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!

பாடலைப் பார்ப்போமா...!

இதனை ஆக்கியோன் கபிலன் எனும் பெரும் புலவன்; இவனைப் பற்றியே பெருமைப்பட பல கூறலாம்!
நக்கீரனின் இக்கூற்றைவிட வேறென்ன வேண்டும் - 'உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன்'

இடம் கருதி எவ்வளவோ தள்ளத் துணியினும் இதைச் சொல்லாமல் இருக்க இயலவில்லை!
தொகைநூல்களுள் மிகுதியும் இடம் பெற்ற பாடல்கள் இவனதே; மொத்தம் இருநூற்று முப்பதைந்து
பாடல்கள்! நமது பாடல் இதோ..!!

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.


தன் உள்ளம் ஈர்த்த தலைவனைக் கண்டு அளவளாவி மகிழ்ந்து வருகிறாள் தலைவி!களவொழுக்கத்தில்
திளைத்த தலைவியோ அவன் உறுதி மொழிகளை மீறிடத்துணிவனோ எனும் நம்பிக்கையில் அவனுடன்
ஒருசேரக் கலந்தும் விடுகிறாள்!ஆனால், அத்தலைவனோ யாது காரணமாகவோ பிரிந்து சென்றவன்
இன்னும் திரும்பிடவில்லை!துடிக்கிறாள் பேதை..!! நீதிக் கேட்களாமெனில் சாட்சியம் கேட்பார்களே ...!
மணந்த நாளினை நினைவு கூர்கிறாள் - அக்கள்வன் தன்னுள் நிறைந்தபோது யாரும் இல்லையே! ஒரு நாரைதான் இருந்தது - திணைப்பயிரின் அடிப்பகுதி போன்று சிறியதாகவும் பசியதாகவும் ஆன கால்களைக் கொண்டிருந்ததைக் கண்டேன்!ஆனால் அது ஓடுகின்ற நீரில் ஆரல் மீன் வராதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருந்தது!

எனவே, தலைவன் தன் சொல் பொய்ப்பின் என்னால் ஏதும் செய்யா இயலாதே எனத் துயர் மேலிட வாடுகின்றனள்!

அன்பன்,
சுந்தரம்

பி.கு: இதில் ஒரு வியக்கத்தக்க நயம் உள்ளது, நண்பர்களே! தலைவனும் தலைவியும் மணந்த நாளில் - இடத்தில் - நாரை இருப்பினும் இவர்களைக் காணாதிருந்ததனால் அது சாட்சியம் பகராதாம் - பொய் சாட்சியாய் விடுமன்றோ!!



குறுந்தொகையின் செல்வவளம்..3..!!! .....[You must be registered and logged in to see this link.]



சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 23, 2012 1:01 pm

நயம் மிக்க குறுந்தொகைப் பாடலை நயமாய் நவின்றமைக்கு நன்றி.
சூப்பருங்க
தொடருங்கள்



சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக