Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆன்லைன் திருமணம்- அதிசய திருமணம்
2 posters
Page 1 of 1
ஆன்லைன் திருமணம்- அதிசய திருமணம்
"திருமணங்கள், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன...' என்ற பழமொழி, நம்ம ஊரில் சர்வசாதாரணமாக, புழக்கத்தில் இருப்பது தெரிந்த விஷயம். ஆனால், உலகில் வேகமாக மாறி வரும் வாழ்க்கை முறை, இதுபோன்ற பழமொழிகளை, கேள்விக்குறியாக்கி விடும் போல் தெரிகிறது. சமீபத்தில் நடந்த, ஒரு வினோதமான சம்பவமே, இதற்கு நல்ல உதாரணம்.
பிரிட்டனின், சவுதாம்ப்டன் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்து வருபவர், சைய்யது இஸ்லாம். வயது: 28. வங்கதேசத்தை சேர்ந்தவர். அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசித்து வருபவர் மொனிரா சவுத்ரி. வயது: 28. இருவருக்கும், "ஆன்லைன் சாட்' மூலம் (கம்ப்யூட்டரில் அரட்டை அடிப்பது), பரிச்சயம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான இந்த கம்ப்யூட்டர் நட்பு, அடுத்த பரிணாமத்தை எட்டியது.
முகம் தெரியாமல், அரட்டை அடிப்பதற்கு பதிலாக, முகத்தை பார்த்துக் கொண்டே, அரட்டை அடிக்கலாமே என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, வீடியோ சாட் (கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து, இருக்கும் இடத்தில் இருந்தே, மற்றொரு ஊரில் இருப்பவரின் முகத்தை பார்த்து பேசும் வகையிலான தொழில்நுட்ப வசதி) மூலமாக, இருவரும் அரட்டை அடிக்கத் துவங்கினர்.
முகம் தெரியத் துவங்கியதும், அவர்களின் மனதில், காதல் பூ பூத்தது. இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வேலைப் பளு, இரு நகரங்களுக்கும் இடையே உள்ள, 5,600 கி.மீ., தூரம், உடனடியாக ஒரே இடத்தில் சந்திக்க முடியாத சூழல் ஆகியவற்றின் காரணமாக, தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இருக்கும் இடத்தில் இருந்தே, வீடியோ இணைப்பு மூலமாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரது வீட்டில் உள்ள பெரியவர்களும், பச்சைக் கொடி காட்டவே, திருமணத்துக்கான ஏற்பாடுகள் தயாராகின.
பெரியவர்களின் முன்னிலையில், சவுதாம்ப்டனில் சைய்யது இஸ்லாமும், பென்சில்வேனியாவில் மொனிராவும், திருமண உடையணிந்து, ஒரே நேரத்தில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்தனர். ஒருவரது முகம், ஒருவருக்கு தெரிந்ததும், வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டனர்.
மாலை மாற்றுதல், உள்ளிட்ட அனைத்து திருமணச் சடங்குகளும், கம்ப்யூட்டர் முன்னிலையிலேயே நடந்தன. திருமணம் முடிந்ததும், இருவரும் அவரவர் வேலையை கவனிக்கத் துவங்கி விட்டனர்.
இதற்கு பின் இருவரும், மொபைல் போனில் நலம் விசாரித்துக் கொண்டதுடன் சரி. திருமணம் நடந்து, நூறு நாட்களுக்கு பின், நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பிரிட்டனுக்கு புறப்பட்டு வந்தார் மொனிரா.
விமானம் வருவதற்கு, பல மணி நேரம் முன்பாகவே, சவுதாம்ப்டன் விமான நிலையத்தில், பட படக்கும் இதயத்துடன், தன், புது மனைவியை நேரில் காணப் போகும் உற்சாகத்தில் காத்திருந்தார் சைய்யது.
விமானத்தில் இருந்து இறங்கி வந்த மொனிராவை கட்டித் தழுவினார். மொனிராவின் கண்களில் இருந்து, ஆனந்த கண்ணீர். மொனிராவின் நெற்றியில், காதலுடன் முத்தமிட்டார் சைய்யது. இருவருக்குமே, நேரில் சந்தித்துக் கொண்ட, இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சில நிமிடங்கள் ஆயின. "எப்படி, இப்படி ஒரு திருமண நிகழ்வு சாத்தியமானது?' என, கேட்டபோது, "இருவரும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கை தான் இதற்கு காரணம்...' என, மகிழ்ச்சியுடன் கூறினர்.
விரைவில் தேனிநிலவுக்காக, வெளிநாட்டுக்கு பறக்கவுள்ளன, இந்த ஆன்லைன் காதல் பறவைகள்.
***
எஸ். சந்தோஷ்ராம்
தினமலர்
பிரிட்டனின், சவுதாம்ப்டன் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்து வருபவர், சைய்யது இஸ்லாம். வயது: 28. வங்கதேசத்தை சேர்ந்தவர். அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசித்து வருபவர் மொனிரா சவுத்ரி. வயது: 28. இருவருக்கும், "ஆன்லைன் சாட்' மூலம் (கம்ப்யூட்டரில் அரட்டை அடிப்பது), பரிச்சயம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையேயான இந்த கம்ப்யூட்டர் நட்பு, அடுத்த பரிணாமத்தை எட்டியது.
முகம் தெரியாமல், அரட்டை அடிப்பதற்கு பதிலாக, முகத்தை பார்த்துக் கொண்டே, அரட்டை அடிக்கலாமே என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, வீடியோ சாட் (கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து, இருக்கும் இடத்தில் இருந்தே, மற்றொரு ஊரில் இருப்பவரின் முகத்தை பார்த்து பேசும் வகையிலான தொழில்நுட்ப வசதி) மூலமாக, இருவரும் அரட்டை அடிக்கத் துவங்கினர்.
முகம் தெரியத் துவங்கியதும், அவர்களின் மனதில், காதல் பூ பூத்தது. இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வேலைப் பளு, இரு நகரங்களுக்கும் இடையே உள்ள, 5,600 கி.மீ., தூரம், உடனடியாக ஒரே இடத்தில் சந்திக்க முடியாத சூழல் ஆகியவற்றின் காரணமாக, தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, இருக்கும் இடத்தில் இருந்தே, வீடியோ இணைப்பு மூலமாகவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரது வீட்டில் உள்ள பெரியவர்களும், பச்சைக் கொடி காட்டவே, திருமணத்துக்கான ஏற்பாடுகள் தயாராகின.
பெரியவர்களின் முன்னிலையில், சவுதாம்ப்டனில் சைய்யது இஸ்லாமும், பென்சில்வேனியாவில் மொனிராவும், திருமண உடையணிந்து, ஒரே நேரத்தில், கம்ப்யூட்டர் முன் அமர்ந்தனர். ஒருவரது முகம், ஒருவருக்கு தெரிந்ததும், வெட்கத்துடன் புன்னகைத்துக் கொண்டனர்.
மாலை மாற்றுதல், உள்ளிட்ட அனைத்து திருமணச் சடங்குகளும், கம்ப்யூட்டர் முன்னிலையிலேயே நடந்தன. திருமணம் முடிந்ததும், இருவரும் அவரவர் வேலையை கவனிக்கத் துவங்கி விட்டனர்.
இதற்கு பின் இருவரும், மொபைல் போனில் நலம் விசாரித்துக் கொண்டதுடன் சரி. திருமணம் நடந்து, நூறு நாட்களுக்கு பின், நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. பிரிட்டனுக்கு புறப்பட்டு வந்தார் மொனிரா.
விமானம் வருவதற்கு, பல மணி நேரம் முன்பாகவே, சவுதாம்ப்டன் விமான நிலையத்தில், பட படக்கும் இதயத்துடன், தன், புது மனைவியை நேரில் காணப் போகும் உற்சாகத்தில் காத்திருந்தார் சைய்யது.
விமானத்தில் இருந்து இறங்கி வந்த மொனிராவை கட்டித் தழுவினார். மொனிராவின் கண்களில் இருந்து, ஆனந்த கண்ணீர். மொனிராவின் நெற்றியில், காதலுடன் முத்தமிட்டார் சைய்யது. இருவருக்குமே, நேரில் சந்தித்துக் கொண்ட, இன்ப அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு சில நிமிடங்கள் ஆயின. "எப்படி, இப்படி ஒரு திருமண நிகழ்வு சாத்தியமானது?' என, கேட்டபோது, "இருவரும், ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த நம்பிக்கை தான் இதற்கு காரணம்...' என, மகிழ்ச்சியுடன் கூறினர்.
விரைவில் தேனிநிலவுக்காக, வெளிநாட்டுக்கு பறக்கவுள்ளன, இந்த ஆன்லைன் காதல் பறவைகள்.
***
எஸ். சந்தோஷ்ராம்
தினமலர்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஆன்லைன் திருமணம்- அதிசய திருமணம்
ஏற்கெனவே ஒரு இடத்தில் வெப்காம் திருமணம் நடத்தி இருக்கிறார்கள் ..முஸ்லிம் சமுதாயபடி மந்திரம் அனைத்தும் நடத்தி வெப்காம் வழியாக திருமணம் செய்து இருக்கிறார்கள்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Similar topics
» முதல் திருமணம் மறைத்து இரண்டாம் திருமணம் செய்த கொத்தனார் கைது
» விசித்திர திருமணம் : பூனையொன்றை திருமணம் செய்த ஜெர்மனிய நபர்
» நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
» திருமணம் .............
» திருமணம்
» விசித்திர திருமணம் : பூனையொன்றை திருமணம் செய்த ஜெர்மனிய நபர்
» நிச்சயிக்கப்பட்ட திருமணம் Vs காதல் திருமணம்
» திருமணம் .............
» திருமணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|