Latest topics
» கருத்துப்படம் 27/09/2024by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுந்தொகையின் செல்வ வளம்..!!!
5 posters
Page 1 of 1
குறுந்தொகையின் செல்வ வளம்..!!!
நண்பர்களே,
சங்க இலக்கியங்கள் மீதான எனது காதல் பல காலமாக நீடித்து நிலைத்து நிற்பது ;ஆழமானது ;
இன்று 'பக்தி 'பூர்வமானதும் கூட!மிக வியக்கத்தக்க ,உயர்ந்த சிந்தனைகளை, உன்னத உலகியல்
மரபுகளை உள்ளடக்கிய பெருஞ் செல்வம் அது!அகம், புறம் எனும் இரு பெரும் பிரிவுகளிலுமே
இவை யாவற்றையும் காணலாம் - அதுவும் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே
அற்புதமான வடிவில் யாத்து சீரிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளமை,
அதிலுள்ள சிரமத்தையும் சிரத்தையையும் கருதினோமெனில், பிரமிப்பையும் மலைப்பையும் தோற்றுவிப்பனவே!!
என் உள்ளம் கொள்ளை போனது அகத்துறைப் பாக்களில்தான் - அதிலும் குறிப்பாக குறுந்தொகையில்!!!
நேர்த்தியான கட்டமைப்பு,சிறந்த உள்ளடக்கம், இயல்பான உவமைகள், செறிவான சிந்தனை, நுண்ணிய உணர்வுகள்....
அனைத்தையும் கொண்டவை குறுந்தொகைப் பாடல்கள்! அத்துனையும் சிறந்தவையெனினும் அதில் ஒரு முத்து..
காதலனுக்காக காத்திருக்கும் காதலி; தன் உள்ளம் நிறைந்தவன், உணர்வில் பூத்தவன், உள்ளுள் உறைந்தவன் எனினும்
காத்து, காத்து நின்றதில் மனம் வெதும்பிப் போகின்றனள் - அவளன்றி அவள் துயர் யாரறிவர் ?
சினத்தில் வெடித்துச் சிதறும் துயரம் கப்பிய வார்த்தைகளே இவைகள் எனும் போதிலும் , தன் தலைவன் நிலை தாழக்
கூடாது எனும் கவலையே அவளுக்கு! - நிந்தனையிலும் கூட அவளது சிந்தனைப் போக்கைப் பாருங்களேன்...!
பாடல் இதோ நான்கே வரிகளில் :
உள்ளின் உள்ளம் வேமே ; உள்ளா
திருப்பின்எம் அளவைத் தன்றே ; வருத்தி
வான் தோய்வு அற்றே காமம் ;
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.
பொருள் இதுதான் -
என் தலைவரை நினத்தால் என் உள்ளம் கொதிக்கும் - வேகும்! நினைத்தால்தானே வேகிறது மனம் என நினைக்காமல்
இருக்கலாம் எனில் , அய்யோ!, அது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக அல்லவோ அமைந்துள்ளது! என் காதலோ
( காமம் என்பது அன்றைய வழக்கில் இன்றுள்ள காதலையேக் குறித்தது ) வானம் அளவியது போல் பெரிதாயுள்ளது!
என் இவ்வல்லலுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் - என் மனம் மருவிய தலைவன் சான்றோன் அல்லன்..!!!
கடைசியில் போட்டாளே ஒரு போடு..!
சான்றோன் - அன்பு, நாண்,ஒப்புரவு,கண்ணோட்டம்,வாய்மை என அய்ந்தும் கொண்டவன்.
தன் தலைவன்
1. நீண்ட காலம் வாராமல் இருந்தமையால் அன்பில்லாதவன் ;
2. தகுதியுடன் ஒழுகிக் கொள்ள கருத்தில்லாமையால் நாணமில்லாதவன் ;
3. விருந்தாற்றும் உலகியலை மறந்தமையால் ஒப்புரவில்லாதவன் ;
4. என் துயரம் தணிக்கக் கருதாமையால் கண்ணோட்டமில்லாதவன் ;
5. இன்ன காலத்தில் வருகிறேன் என்றபடி வராமையால் வாய்மையில்லாதவன்.
இந்த குணங்களை தன்தலைவன் பெற வேண்டும் எனும் ஆதங்கமே அவளது வார்த்தைகளில் வழிந்தோடுவது...!!
அன்பன்,
சுந்தரம்
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! ..க்கு... [You must be registered and logged in to see this link.]
சங்க இலக்கியங்கள் மீதான எனது காதல் பல காலமாக நீடித்து நிலைத்து நிற்பது ;ஆழமானது ;
இன்று 'பக்தி 'பூர்வமானதும் கூட!மிக வியக்கத்தக்க ,உயர்ந்த சிந்தனைகளை, உன்னத உலகியல்
மரபுகளை உள்ளடக்கிய பெருஞ் செல்வம் அது!அகம், புறம் எனும் இரு பெரும் பிரிவுகளிலுமே
இவை யாவற்றையும் காணலாம் - அதுவும் இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே
அற்புதமான வடிவில் யாத்து சீரிய முறையில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளமை,
அதிலுள்ள சிரமத்தையும் சிரத்தையையும் கருதினோமெனில், பிரமிப்பையும் மலைப்பையும் தோற்றுவிப்பனவே!!
என் உள்ளம் கொள்ளை போனது அகத்துறைப் பாக்களில்தான் - அதிலும் குறிப்பாக குறுந்தொகையில்!!!
நேர்த்தியான கட்டமைப்பு,சிறந்த உள்ளடக்கம், இயல்பான உவமைகள், செறிவான சிந்தனை, நுண்ணிய உணர்வுகள்....
அனைத்தையும் கொண்டவை குறுந்தொகைப் பாடல்கள்! அத்துனையும் சிறந்தவையெனினும் அதில் ஒரு முத்து..
காதலனுக்காக காத்திருக்கும் காதலி; தன் உள்ளம் நிறைந்தவன், உணர்வில் பூத்தவன், உள்ளுள் உறைந்தவன் எனினும்
காத்து, காத்து நின்றதில் மனம் வெதும்பிப் போகின்றனள் - அவளன்றி அவள் துயர் யாரறிவர் ?
சினத்தில் வெடித்துச் சிதறும் துயரம் கப்பிய வார்த்தைகளே இவைகள் எனும் போதிலும் , தன் தலைவன் நிலை தாழக்
கூடாது எனும் கவலையே அவளுக்கு! - நிந்தனையிலும் கூட அவளது சிந்தனைப் போக்கைப் பாருங்களேன்...!
பாடல் இதோ நான்கே வரிகளில் :
உள்ளின் உள்ளம் வேமே ; உள்ளா
திருப்பின்எம் அளவைத் தன்றே ; வருத்தி
வான் தோய்வு அற்றே காமம் ;
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே.
பொருள் இதுதான் -
என் தலைவரை நினத்தால் என் உள்ளம் கொதிக்கும் - வேகும்! நினைத்தால்தானே வேகிறது மனம் என நினைக்காமல்
இருக்கலாம் எனில் , அய்யோ!, அது என் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக அல்லவோ அமைந்துள்ளது! என் காதலோ
( காமம் என்பது அன்றைய வழக்கில் இன்றுள்ள காதலையேக் குறித்தது ) வானம் அளவியது போல் பெரிதாயுள்ளது!
என் இவ்வல்லலுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான் - என் மனம் மருவிய தலைவன் சான்றோன் அல்லன்..!!!
கடைசியில் போட்டாளே ஒரு போடு..!
சான்றோன் - அன்பு, நாண்,ஒப்புரவு,கண்ணோட்டம்,வாய்மை என அய்ந்தும் கொண்டவன்.
தன் தலைவன்
1. நீண்ட காலம் வாராமல் இருந்தமையால் அன்பில்லாதவன் ;
2. தகுதியுடன் ஒழுகிக் கொள்ள கருத்தில்லாமையால் நாணமில்லாதவன் ;
3. விருந்தாற்றும் உலகியலை மறந்தமையால் ஒப்புரவில்லாதவன் ;
4. என் துயரம் தணிக்கக் கருதாமையால் கண்ணோட்டமில்லாதவன் ;
5. இன்ன காலத்தில் வருகிறேன் என்றபடி வராமையால் வாய்மையில்லாதவன்.
இந்த குணங்களை தன்தலைவன் பெற வேண்டும் எனும் ஆதங்கமே அவளது வார்த்தைகளில் வழிந்தோடுவது...!!
அன்பன்,
சுந்தரம்
குறுந்தொகையின் செல்வவளம்..2..!!! ..க்கு... [You must be registered and logged in to see this link.]
Last edited by sundaram77 on Sun Sep 08, 2013 11:11 am; edited 17 times in total
sundaram77- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!
[You must be registered and logged in to see this image.]
முகப்பு பகுதிக்கு போய் உறுப்பினா் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே. [You must be registered and logged in to see this image.]
முகப்பு பகுதிக்கு போய் உறுப்பினா் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே. [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
[You must be registered and logged in to see this link.]
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!
சார்லஸ் mc wrote:[You must be registered and logged in to see this image.]
முகப்பு பகுதிக்கு போய் உறுப்பினா் அறிமுக பகுதியில் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் சகோதரரே. [You must be registered and logged in to see this image.]
என் பதிவைப் பார்த்து எனக்கு அறிமுகம் பற்றி தெரியப்படுத்தினமைக்கு நன்றி ,சார்லஸ்..!
sundaram77- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!
ஆரம்பமே அசத்தல் தான். நல்ல பதிவுகளை தொடருங்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!
அருமையான பதிவு, ஆழமான விளக்கம். குறுந்தொகை தமிழில் உள்ள மிகச் சிறந்த நூல்களுள் ஒன்று.
தொடருங்கள், உங்கள் பதிவுகளை..
தொடருங்கள், உங்கள் பதிவுகளை..
சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: குறுந்தொகையின் செல்வ வளம்..!!!
சிறப்பான பதிவு
தொடருங்கள், உங்கள் பதிவுகளை
தொடருங்கள், உங்கள் பதிவுகளை
[You must be registered and logged in to see this link.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
[You must be registered and logged in to see this link.]
Similar topics
» குறுந்தொகையின் செல்வ வளம்..7..!!!
» குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!!
» குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!
» குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!
» குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!!
» குறுந்தொகையின் செல்வ வளம்..8...!!!
» குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!
» குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..11...!!!
» குறுந்தொகையின் வளம்...9... யாயும் ஞாயும்..!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|