புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_lcapஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_voting_barஇந்தக் கொள்ளையை யார் தடுப்பது? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் கொள்ளையை யார் தடுப்பது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 18, 2012 6:12 am

சென்னை, ஜன. 17: ""விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு'' என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு, மக்களின் வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிவதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில், லாட்டரி சீட்டு விற்பனையைத் தடை செய்தார்.

இன்றளவும் இந்தத் தடை அமலில் இருக்கிறது.

ஆனால் மக்களின் ""ஆசை'' என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.

ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

திரைப்படம் பார்க்க, திரையரங்கம் போகும் அவசியமில்லாமல் போய், தொலைக்காட்சிகளிலேயே பல முறை பாடல் காட்சிகளைப் பார்க்க முடிவதால், இந்தக் கேள்விக்கு எந்தவொரு நபரும் மிக எளிதாக பதிலைக் கூறிவிட முடியும். இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர்.

எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும்.

மூணு சீட்டு குலுக்குபவர்களை சிறு நகரங்களில் திரையரங்குகளின் வெளியே பார்த்திருக்கலாம். அதைப் போலவே, இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ""அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்.'

ஒரு கோடி ரூபாய் வென்றிடலாம் என்ற புதிய அறிவிப்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் இப்போது வந்து கொண்டிருக்கிறது.

இதற்குப் பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம். ஆக, ஏழு நாள்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் மட்டும் வருமானம் ரூ.7 கோடி.

10 லட்சம் பேர் என்றால்தான் மேற்படி கணக்கு. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தினம் ஒரு கோடி எஸ்.எம்.எஸ். வரை வரும் என்கிறார்கள் தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன அலுவலர்கள். அப்படியானால் கோடிகள் இன்னும் அதிகமாகும்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நடிகருக்கு பெரிய அளவில் சம்பளம் தருகிறார்களாம்.

இப்படி தமிழர்களின் பணம் சுரண்டப்படுவதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. சொந்த வருமானம் வந்தால் போதும் என்றாகிவிட்டது.

டி.வி. சேனல்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எம்.எஸ். மூலம் நடத்தப்படும் இந்தப் பல கோடி ரூபாய் மோசடியை அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது?

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் "கட்டணம் இல்லாத எஸ்.எம்.எஸ்.' சேவை மூலம் நேயர்களை பங்கேற்கச் செய்யலாமே எனும் கேள்விக்குப் பதில் சொல்வார் இல்லை.

காகித லாட்டரியை ஒழித்தபோது லாட்டரி முதலாளிகள் கவலைப்பட்டார்கள். குடும்பத் தலைவிகள் மகிழ்ந்தார்கள். இந்த 'காட்சிக் கொள்ளையைத்' தடுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


- கே.எம்.சந்திரசேகரன்



இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jan 18, 2012 9:09 am

ஆட்சியாளா்களின் ஆசீா்வாதம் இல்லாமலா இது இன்று வரை வெற்றி கரமாக நடந்து கொண்டிருக்கும்.
அரசியல் பத்திாிக்கைகள் மணல் கொள்ளையை பக்கம் பக்கமாக எழுதி தள்ளும். இதை கண்டு கொள்ளாது.
ஐயா அரசியல் நோக்கா்களே!. இதை சற்று கவனியுங்கள். மக்களை பகலிலேயே கொள்ளையடிக்கும் இக்கும்பலை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்ட காண்பிக்க முன் வாருங்கள்.
ஈட்சியாளா்களே ஆளுக்கொரு சேனல் வைத்து இதை அரங்கேற்றி வருவதனால் ஆதரவு கொடுக்கிறாா்களோ? என்னவோ?
யாா் கண்டது?
என்னமோ நடக்குது? மா்மமா இருக்குது?
இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 230655



இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 18, 2012 2:46 pm

இந்தக் கொள்ளையை யார் தடுப்பது?
புதன்கிழமை, 18 ஜனவரி 2012 11:52


இந்தக் கொள்ளையை யார் தடுப்பது? Sms-1

சென்னை, ஜன. 17: "விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு'' என்ற கோஷத்துடன் லாட்டரிச் சீட்டு திட்டத்தை அண்ணாதுரை முதல்வராக இருந்த காலத்தில் தமிழக அரசு அறிமுகம் செய்தது. ஆனால் தனியாரும் லாட்டரி தொழிலில் வந்த பிறகு, மக்களின் வருமானம் அதில் கரைந்து போய், குடும்பங்கள் சீரழிவதைப் பார்த்த முதல்வர் ஜெயலலிதா முந்தைய ஆட்சிக் காலத்தில், லாட்டரி சீட்டு விற்பனையைத் தடை செய்தார்.

இன்றளவும் இந்தத் தடை அமலில் இருக்கிறது.

ஆனால் மக்களின் "ஆசை'' என்ற பலவீனத்தை மூலதனமாகக் கொண்டு, டி.வி.க்கள் வெவ்வேறு பெயர்களில், லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.

ஏதாவது ஒரு பரிசுத் திட்டத்தை அறிவித்து, குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள் என்று சொல்வதை நம்பி பல லட்சம் பேர் எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானம், நிறுவனம் தரப் போகும் பரிசுத் தொகைக்கான செலவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது என்பது பாமரர்களுக்கு மட்டுமல்ல, படித்தவர்களுக்கும் தெரியவில்லை.

கடந்த சில வாரங்களாக திரையில் ஒரு பாடலில் சில காட்சிகளை ஓடவிட்டு அது தொடர்பான ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொல்ல அழைக்கும் நிகழ்ச்சி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

திரைப்படம் பார்க்க, திரையரங்கம் போகும் அவசியமில்லாமல் போய், தொலைக்காட்சிகளிலேயே பல முறை பாடல் காட்சிகளைப் பார்க்க முடிவதால், இந்தக் கேள்விக்கு எந்தவொரு நபரும் மிக எளிதாக பதிலைக் கூறிவிட முடியும். இதில் சரியான விடை எதுவாக இருக்கும் என்பதையும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களே மறைமுகமாகக் கூறிவிடுகின்றனர்.

எனவே ரூ.5 ஆயிரம் பரிசுப் பணத்தைப் பெற்றுவிடும் ஆசையில் நேயர்கள் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகும் போதே, திரையின் கீழ் பாகத்தில் ஒரு தகவல், அடிவரியாக ஓடிக் கொண்டிருக்கிறது. ""உங்களின் தொலைபேசி அழைப்புக்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.10 கட்டணம் ஆகும். அதிக நேரம் தொடர்பில் இருக்க விரும்பாதவர்கள், இணைப்பைத் துண்டித்துவிடவும்.''

திரையில் குறிப்பிட்டுள்ள எண்ணுக்கு நீங்கள் தொடர்பு கொண்டால், உடனே நீங்கள் பதிலைக் கூறிவிட முடியாது. சில நிமிடங்கள் காத்திருந்த பிறகே, பதிலைக் கூற முடியும்.

மூணு சீட்டு குலுக்குபவர்களை சிறு நகரங்களில் திரையரங்குகளின் வெளியே பார்த்திருக்கலாம். அதைப் போலவே, இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், "அழையுங்கள், உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம், பரிசை வென்றிடுங்கள்'' என்று தொடர்ந்து தூண்டிவிடும் வகையில் பேசுகிறார்கள்.

நீங்கள் 2 நிமிடம் இணைப்பில் இருந்தாலும் உங்களுக்கு ரூ.20 போய்விடும். இதில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.14 வரையில் நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்துக்குப் போய்விடும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஒரு லட்சம் பேர் தொடர்பு கொள்கிறார்கள் என வைத்துக் கொண்டாலும் மொத்த வருமானம் ரூ.20 லட்சம். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு சுமார் ரூ.14 லட்சம் வருமானம். பரிசுத் தொகை உள்ளிட்ட எல்லா செலவும் சேர்த்தாலும் ரூ.2 லட்சம். மீதியெல்லாம் "கொள்ளை லாபம்."

ஒரு கோடி ரூபாய் வென்றிடலாம் என்ற புதிய அறிவிப்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் இப்போது வந்து கொண்டிருக்கிறது.

இதற்குப் பதிவு செய்வதற்கு குறைந்தபட்சம் 2 எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். இதற்கு செல்போன் நிறுவனங்களைப் பொருத்து கட்டணம் ரூ.2 முதல் ரூ.6.99 வரை ஆகும். பரிசுப் பணம் ஒரு கோடி ஆயிற்றே. போட்டியும் அதிகமாக இருக்கும்தானே. ஏழு கோடி தமிழரில் 10 லட்சம் பேர் இதற்கு முயற்சி செய்தாலும் தலா 2 எஸ்.எம்.எஸ். அனுப்புவதால் செல்போன் நிறுவனங்களுக்கு சராசரி வருமானம் ரூ.1 கோடி. நிகழ்ச்சி நடத்தும் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் நிச்சயம். இப்படி ஏழு நாள்களுக்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு நேயர்கள் பதில் அனுப்பி இதில் பங்கு பெறலாம். ஆக, ஏழு நாள்களிலும் எஸ்.எம்.எஸ். மூலம் மட்டும் வருமானம் ரூ.7 கோடி.

10 லட்சம் பேர் என்றால்தான் மேற்படி கணக்கு. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தினம் ஒரு கோடி எஸ்.எம்.எஸ். வரை வரும் என்கிறார்கள் தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவன அலுவலர்கள். அப்படியானால் கோடிகள் இன்னும் அதிகமாகும்.

இதுதவிர நிகழ்ச்சியின் இடையே விளம்பரம் செய்வதில் கிடைக்கும் வருமானம், நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கு விளம்பர நிறுவனங்கள் தரும் செலவு என பார்த்தால் ரூ.15 கோடி முதல் ரூ.20 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள்.

இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நடிகருக்கு பெரிய அளவில் சம்பளம் தருகிறார்களாம்.

இப்படி தமிழர்களின் பணம் சுரண்டப்படுவதைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. சொந்த வருமானம் வந்தால் போதும் என்றாகிவிட்டது.

டி.வி. சேனல்கள், அலைபேசி நிறுவனங்கள், தனியார் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கைகோத்து வெவ்வேறு பெயர்களில் லாட்டரிக்கு இணையான கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.எம்.எஸ். மூலம் நடத்தப்படும் இந்தப் பல கோடி ரூபாய் மோசடியை அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது?

அறிவுத் திறனுக்குப் பரிசு என்றால் "கட்டணம் இல்லாத எஸ்.எம்.எஸ்." சேவை மூலம் நேயர்களை பங்கேற்கச் செய்யலாமே எனும் கேள்விக்குப் பதில் சொல்வார் இல்லை.

காகித லாட்டரியை ஒழித்தபோது லாட்டரி முதலாளிகள் கவலைப்பட்டார்கள். குடும்பத் தலைவிகள் மகிழ்ந்தார்கள். இந்த 'காட்சிக் கொள்ளையைத்' தடுக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நன்றி : தினமணி

தகவல் பகிர்வு - http://tamilleader.in

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jan 18, 2012 3:17 pm

இது ஏற்கனவே இருக்கு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக