ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பர் 25 - 31 - முக்கிய நிகழ்வுகள்

Go down

டிசம்பர் 25 - 31 - முக்கிய நிகழ்வுகள் Empty டிசம்பர் 25 - 31 - முக்கிய நிகழ்வுகள்

Post by சிவா Wed Jan 18, 2012 5:47 am



போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. டிசம்பர் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...

* சென்னை பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள். கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சுற்றுலா சென்றபோது இந்தப் பரிதாபம் நேர்ந்தது. (டிசம்பர் 25)

* தமிழகத்தில் 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கவர்னர் ரோசய்யா உள்ளிட்டோர் வரவேற்றனர். (டிசம்பர் 25)

* முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக வேறு அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை நிறுத்த அறிவுறுத்த வேண்டும் என்று சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங்கிடம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தினார். மத்திய அரசின் உத்தேச உணவுப் பாதுகாப்பு மசோதாவில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவரிடம் வேண்டுகோள் விடுத்தார். (டிசம்பர் 25)

* முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். (டிசம்பர் 25)

* கணிதமேதை ராமானுஜம் பிறந்தநாளான டிசம்பர் 22-ம் தேதி தேசிய கணித நாளாகக் கடைபிடிக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற ராமானுஜத்தின் 125-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். (டிசம்பர் 26)

* சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ள பெரியாறு அணை தொழில்நுட்பக் குழுவினர், மதுரையில் தமிழக- கேரள என்ஜினீயர்களுடன் ஆய்வு நடத்தினார்கள்.
(டிசம்பர் 26)

* முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பை மத்திய அரசே மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று சென்னையில் தன்னைச் சந்தித்து மனு கொடுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். (டிசம்பர் 26)

* கர்நாடக முன்னாள் முதல் மந்திரி பங்காரப்பா மரணம் அடைந்தார். (டிசம்பர் 26)

* பாராளுமன்றத்தில் இரவு 11 மணி வரை நடந்த விவாதத்துக்குப் பிறகு லோக்பால் மசோதா ஓட்டெடுப்பில் நிறைவேறியது. (டிசம்பர் 27)

* மும்பையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய காந்தியவாதி அன்னா ஹசாரே, ஊழலை ஒழிக்க இறுதிக்கட்டப் போருக்குத் தயாராகுமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். (டிசம்பர் 27)

* தமிழக சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்ட விமானத்துக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். (டிசம்பர் 27)

* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, தேசிய பேரிடர் குழு அமைப்பதை மத்திய அரசு நிறுத்திவைத்தது. (டிசம்பர் 27)

* டெல்லி வந்த ஜப்பான் பிரதமர் யோஷிகிகோ நோடாவை பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்றார். (டிசம்பர் 28)

* உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மும்பையில் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். சிறை நிரப்பும் போராட்டமும் வாபஸ் பெறப்பட்டது. (டிசம்பர் 28)

* முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை எதிரொலியாக சின்னமனூரில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற கண்டனப் பேரணி நடந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சிதம்பரத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. (டிசம்பர் 28)

* ரஷியாவில், பகவத் கீதைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை அந்நாட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அந்தத் தீர்ப்புக்கு இந்தியா மகிழ்ச்சி தெரிவித்தது. (டிசம்பர் 28)

* லோக்பால் மசோதா மீது டெல்லி மேல்-சபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. (டிசம்பர் 29)

* தமிழகத்தின் வடபகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. (டிசம்பர் 29)

* கடலூர், புதுச்சேரியைக் கடுமையாகப் பாதித்த `தானே' புயலுக்கு 33 பேர் பலியானார்கள். (டிசம்பர் 30)

* கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் பேச்சைக் கேட்டுச் செயல்படுவோருக்கு மன்னிப்புக் கிடையாது என்று சென்னையில் அ.தி.மு.க. பொழுக்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எச்சரிக்கை விடுத்தார். (டிசம்பர் 30)

* தானே புயலின் தாண்டவத்தால் கடலூர் நகரம் உள்ளிட்ட அந்த மாவட்டப் பகுதிகள் சூறையாடப்பட்டது போன்ற நிலையை அடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. (டிசம்பர் 30)

* தானே புயலின் சீற்றத்தால் புதுச்சேரி சின்னாபின்னமானது. 15 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியது. (டிசம்பர் 30)

* சென்னை புறநகரில் பலத்த மழை காரணமாக 10 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. (டிசம்பர் 30)

* தமிழ்நாட்டில் `தானே' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. மின்சாரம், குடிநீர் விநியோகத்தைச் சீர்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. (டிசம்பர் 31)

* தமிழ்நாட்டில் புயல், மழையால் இரண்டரை லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. புயல், மழையால் தமிழ்நாட்டில் 35 பேர் பலியாகினர். (டிசம்பர் 31)

* முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று கேரள மக்களிடம் கூற வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி உம்மன்சாண்டிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். (டிசம்பர் 31)

* இயற்பியல் துறையில் 2009-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணனுக்கு இங்கிலாந்தின் உயரிய, `2012 புத்தாண்டு சாதனையாளர் விருது' வழங்கத் தீர்மானிக்கப்பட்டது. (டிசம்பர் 31)


டிசம்பர் 25 - 31 - முக்கிய நிகழ்வுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum