ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

+7
கபாலி
ராஜா
சரவணன்
மகா பிரபு
yarlpavanan
செல்ல கணேஷ்
கவினா
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Tue Jan 17, 2012 3:33 pm

First topic message reminder :

கருங்காலி என்ற சொல்லின் தோற்றம் குறித்த விவாதத்தை தொடங்கி வைத்த அன்பர் திரு.செல்ல கணேஷ் அவர்களுக்கு முதலில் என் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

"கருங்காலி" என்ற சொல்லின் தோற்றம் இன்று வரை விவாதத்திற்கு உட்பட்டதாகவே இருந்துவருகிறது.

ஆங்கில மொழி வல்லுனர்களுக்கும் தமிழ் மொழி வல்லுனர்களுக்கும் இடையில் ஒரு அர்த்தம் செறிந்த சொல் யுத்தம் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது.

நம்பிக்கை துரோகிகளைக் குறிக்கப் பயன்படும் ஆங்கில சொல்லான “Black Legs” என்பதன் நேரடி மொழி பெயர்ப்புதான் நாம் தமிழில் பயன்படுத்தும் கருங்காலி என்ற சொல்லாகும் என்பது ஆங்கில மொழி வல்லுனர்களின் வாதமாகும்.

இதை நிரூபிக்க அவர்கள் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறார்கள்.ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பின்பு, காரல் மார்க்ஸின் சிந்தாந்தம் அங்கே வேகமாக பரவத்தொடங்கியது. தொழிலாளர்களுக்கென்று சங்கங்கள் உருவாகத்தொடங்கின. அப்படிப்பட்டதொரு காலகட்டத்தில் அங்கே ஒரு நிலக்கரி தொழிற்சாலையில் வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கியது.

இப்போது செய்வதைப் போலவே அப்போதும் முதலாளித்துவம் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக தொழிலாளர்களை விலைக்கு வாங்கத் தொடங்கியது.போராட்ட காலகட்டத்தில் யாரெல்லாம் வேலைக்கு வருகிறார்களோ அவர்களுக்கெல்லாம் இரண்டு சம்பளம் என்று அறிவித்தது. சில தொழிலாளர்களும் இந்த அறிவிப்பால் மயங்கி தொழிற்சாலையின் பின்வாசல் வழியாக வேலைக்கு சென்றுவிட்டு, வேலை முடிந்ததும் முன்வாசலில் நடக்கும் போராட்டத்தில் ஒன்றும் தெரியாத பிள்ளைகளைப் போல வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

போராட்டக் குழுவின் தலைவருக்கு சிலர் போராட்டத்திற்கு துரோகம் செய்துவிட்டு இப்போது போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்து விடுகிறது. அவர்களை அடையாளம் காண அவர் ஒரு யுத்தியை கண்டுபிடித்தார். அது ஒரு நிலக்கரி தொழிற் சாலையாக இருந்ததால் தொழிற்சாலைக்குள் சென்று திரும்பியவர்களின் கால்களில் எப்படியும் கரி பிடித்து கருப்பாகத்தானே காட்சியளிக்கும்? எனவே அவர்களை மிக எளிதாக அவர் அடியாளம் கண்டு பிடித்து விட்டார்.

அவர்கள் தொழிலாளர்களாக இருந்து கொண்டு தொழிலாளர் இனத்திற்கே துரோகம் செய்ததால் நம்பிக்கை துரோகம் செய்பவர்களை “Black Legs” என்று அதுமுதல் ஆங்கிலேயர்கள் அழைத்து வருவதாக ஆங்கில மொழி வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

எனவே அந்த ஆங்கில மொழிச் சொல்லிலிருந்துதான் நாம் நமது கருங்காலி என்ற சொல்லை மொழி பெயர்த்துப் பெற்றுக்கொண்டோம் என்பது அவர்கள் வாதம்.

ஆனால் உண்மை அதுவல்ல. தமிழ் நாட்டில் தொன்று தொட்டு கோடரிக்கு கருங்காலி என்ற மரத்திலிருந்துதான் கைப்பிடி செய்து போடுகிறோம். மர இனத்தில் பிறந்து தன் மர இனத்தையே அழிக்கப் பயன்படும் ஆயுதமான கோடரிக்கு கைப்பிடியாய் மாறிப்போன அவலம் இந்த கருங்காலி மரத்திற்குத்தான் ஏற்பட்டது. அதனால்தான் தமிழர்கள் நம்பிக்கைத் துரோகிகளை கருங்காலி அழைக்கின்றனர்.

வேண்டுமேயானால் ஆங்கிலேயர்கள் நம் சொல்லான கருங்காலி என்ற சொல்லிலிருந்து அவர்கள் சொல்லான “Black Legs” என்ற சொல்லை பெற்றிருக்கலாம்.
ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்படுவதற்கு முன்பிருந்தே இங்கு கோடரிகளுக்கு கருங்காலி மரத்தால்தான் கைப்பிடி செய்யப்படுகிறது என்ற வரலாற்று உண்மையை ஏன் ஆங்கிலேயர்கள் மறுக்கிறார்கள்? தமிழன் கண்டறிந்த எல்லாவற்றையும் தான் கண்டறிந்ததாய் மார் தட்டிக் கொள்பவர்கள் இதை மட்டும் விட்டு வைக்கவா போகிறார்கள்? இதே போன்றுதான் தேனிலவு என்ற சொல்லும்.
ஆங்கிலத்தில் அதை அப்படியே மொழி பெயர்த்துக் கொண்டு அதை Honeymoon என்று அழைத்து வருகிறார்கள். இதுவும் தமிழில் இருந்து போன சொல்தான் என்பதை புரிந்து கொண்டால் நாம் நம் பலத்தை அறியலாம்.

வாசித்த அனைவர்க்கும் நன்றி.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


Last edited by சுந்தரபாண்டி on Tue Jan 17, 2012 8:12 pm; edited 1 time in total


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down


கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Mon Jan 23, 2012 3:27 pm

பிச்ச wrote:அருமையான பதிவு. விளக்கமும் கலந்துரையாடலும் அருமை. சூப்பருங்க
நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Thu Feb 09, 2012 7:05 pm

ராஜா wrote:
சுந்தரபாண்டி wrote:தமிழ் நிறைய குழந்தைகளுக்கு தாயாக உள்ளது.
ஆங்கிலதிற்கு நிறைய தந்தைகள் உள்ளனர்.சரிதானே?
மகிழ்ச்சி மகிழ்ச்சி இதை விட அழகாக யாராலும் சொல்ல முடியாது

ராஜா wrote:
சுந்தரபாண்டி wrote:தமிழ் நிறைய குழந்தைகளுக்கு தாயாக உள்ளது.
ஆங்கிலதிற்கு நிறைய தந்தைகள் உள்ளனர்.சரிதானே?
மகிழ்ச்சி மகிழ்ச்சி இதை விட அழகாக யாராலும் சொல்ல முடியாது
நன்றி நண்பரே


வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கபாலி Thu Feb 09, 2012 10:49 pm

அருமையானவிளக்கம்.. நன்றி நண்ப..


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by சதாசிவம் Fri Feb 10, 2012 10:29 am

நல்ல கருத்து,

தமிழில் மேல் எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் தமிழ் மட்டுமே உயர்வு என்று கூற்றை ஏற்க இயலவில்லை. சிலநேரங்களில் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்வது போல் இங்கு உள்ள குறைகளை அறியாமல் என்றோ உயர்ந்து இருந்து என்று மட்டும் பேசிக்கொள்கிறோம்.

தமிழிலும் பல சொற்கள் வேறு மொழியில் இருந்து வந்தது, வந்து கொண்டு இருக்கிறது. துரோகத்திர்க்கு கருங்காலியை உதாரணமாக சொன்னச் தமிழ் பாடலை இது வரை நான் படித்ததில்லை. துரோகத்தை பற்றி பேசும் பழைய தமிழ் பாடல்கள் இருந்தால் சொல்லுங்கள், தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

ஒரு மொழி கால மாற்றத்தில் பல மொழிகளின் வார்த்தைகளையும் கடன் வாங்கி, பின்பு அது வழக்கத்தில் வந்து விடுகிறது. இப்படி வழக்கத்தில் வந்து இருக்கும் சொல்லை அந்த மொழியில் உள்ள ஒரு சொல்லாக எடுத்துக் கொள்ளலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியக் கூற்றுப்படி ஆங்கிலம் மொழி செய்வது தவறாகாது.

I m not well என்ற வார்த்தையை ஏன் அப்படியே மொழிபெயர்க்க வேண்டும்.

தமிழில் ஒருவர் இறந்தால் அவர் சிலலோகபதவி
அடைந்து விட்டார், கைலாசம் /வைகுண்டம் சென்று விட்டார் என்று கூறுகிறோம். இதை பொருள் மாறாமல் (அவர் இறந்து விட்டார் என்பதை ) ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்ப்பது.

he went to kailaasam என்று சொன்னால் அவர் சுற்றுலா சென்று உள்ளார் என்பது போல் தானே பொருள் வருகிறது. ஒவ்வொரு மொழிக்கு சில வழக்குச் சொற்றொடர்கள் உள்ளது. அவை அது கூறும் பொருளில் பார்க்கவேண்டும்.

இது போல் தான் சித்தப்பா, பெரியப்பா.
இது எங்க அம்மா, இவர் என் சித்தப்பா, அவர் பெரியப்பா என்று நாம் கூறுகிறோம். இதை அப்டியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தாள் அம்மாவின் கற்பு கேள்விக்குறியாகிவிடும். இதனால் தமிழ் தாழ்ந்தா மொழியா ?


கீழே உள்ள சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை

கச்சேரி , ஆசாமி, சாமி, கைது, அசல், நகல் , தகராறு, சாமான், தயார், பதில், மராமத்து, மிட்டாய், சுமார், தபால். இன்னும் பல நூறு சொற்கள் இது போல் உள்ளது. நாம் தமிழ் என்று நினைத்து இருக்கும் பல சொற்கள் உண்மையில் தமிழ் சொற்களே இல்லை.

எல்லா மொழிக்கும் பல குழந்தைகள் உண்டு ஒரு சில இப்போது தான் வளர்ந்து வருகிறது, அது போல் பல அப்பாக்கள் உண்டு. ஆங்கில மொழியை அடிப்படையாக கொண்டும் சில மொழிகள் உள்ளது.

அப்படி மாறி மாறி மொழிவதால் தான் அதை மொழி என்று கூறுகிறோம். எந்த ஒரு மொழியும் கண்ணகியாக வாழ முடியாது.



சதாசிவம்
கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Mon Feb 13, 2012 11:04 pm

சதாசிவம் wrote:நல்ல கருத்து,

தமிழில் மேல் எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் தமிழ் மட்டுமே உயர்வு என்று கூற்றை ஏற்க இயலவில்லை. சிலநேரங்களில் காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்று சொல்வது போல் இங்கு உள்ள குறைகளை அறியாமல் என்றோ உயர்ந்து இருந்து என்று மட்டும் பேசிக்கொள்கிறோம்.

தமிழிலும் பல சொற்கள் வேறு மொழியில் இருந்து வந்தது, வந்து கொண்டு இருக்கிறது. துரோகத்திர்க்கு கருங்காலியை உதாரணமாக சொன்னச் தமிழ் பாடலை இது வரை நான் படித்ததில்லை. துரோகத்தை பற்றி பேசும் பழைய தமிழ் பாடல்கள் இருந்தால் சொல்லுங்கள், தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

ஒரு மொழி கால மாற்றத்தில் பல மொழிகளின் வார்த்தைகளையும் கடன் வாங்கி, பின்பு அது வழக்கத்தில் வந்து விடுகிறது. இப்படி வழக்கத்தில் வந்து இருக்கும் சொல்லை அந்த மொழியில் உள்ள ஒரு சொல்லாக எடுத்துக் கொள்ளலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியக் கூற்றுப்படி ஆங்கிலம் மொழி செய்வது தவறாகாது.

I m not well என்ற வார்த்தையை ஏன் அப்படியே மொழிபெயர்க்க வேண்டும்.

தமிழில் ஒருவர் இறந்தால் அவர் சிலலோகபதவி
அடைந்து விட்டார், கைலாசம் /வைகுண்டம் சென்று விட்டார் என்று கூறுகிறோம். இதை பொருள் மாறாமல் (அவர் இறந்து விட்டார் என்பதை ) ஆங்கிலத்தில் எப்படி மொழிபெயர்ப்பது.

he went to kailaasam என்று சொன்னால் அவர் சுற்றுலா சென்று உள்ளார் என்பது போல் தானே பொருள் வருகிறது. ஒவ்வொரு மொழிக்கு சில வழக்குச் சொற்றொடர்கள் உள்ளது. அவை அது கூறும் பொருளில் பார்க்கவேண்டும்.

இது போல் தான் சித்தப்பா, பெரியப்பா.
இது எங்க அம்மா, இவர் என் சித்தப்பா, அவர் பெரியப்பா என்று நாம் கூறுகிறோம். இதை அப்டியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தாள் அம்மாவின் கற்பு கேள்விக்குறியாகிவிடும். இதனால் தமிழ் தாழ்ந்தா மொழியா ?


கீழே உள்ள சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை

கச்சேரி , ஆசாமி, சாமி, கைது, அசல், நகல் , தகராறு, சாமான், தயார், பதில், மராமத்து, மிட்டாய், சுமார், தபால். இன்னும் பல நூறு சொற்கள் இது போல் உள்ளது. நாம் தமிழ் என்று நினைத்து இருக்கும் பல சொற்கள் உண்மையில் தமிழ் சொற்களே இல்லை.

எல்லா மொழிக்கும் பல குழந்தைகள் உண்டு ஒரு சில இப்போது தான் வளர்ந்து வருகிறது, அது போல் பல அப்பாக்கள் உண்டு. ஆங்கில மொழியை அடிப்படையாக கொண்டும் சில மொழிகள் உள்ளது.

அப்படி மாறி மாறி மொழிவதால் தான் அதை மொழி என்று கூறுகிறோம். எந்த ஒரு மொழியும் கண்ணகியாக வாழ முடியாது.


அன்பு நண்பர் சதாசிவம் அவர்களுக்கு.
உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன்.

நண்பரே காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதற்கு ஏற்ப பலரும் தம் தாய்மொழியை புகழ்வதை நம்மால் நாள்தோறும் காண இயலும்.
ஆனால் நாம் தமிழ் மொழியைப் புகழ்ந்து பேசுவது அந்த வகையில் இல்லை நண்பரே.

தமிழின் வழக்கத்திற்கு வந்துவிட்ட வேற்று மொழி சொற்களையும் தமிழ் சொற்களாக ஏற்கலாம் என்ற தொல்காப்பியத்தின் கூற்றை நாம் அனைவருமே எற்க்றோம். அதிலெல்லாம் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. இன்னும் சொல்லப் போனால் தொல்காப்பியத்திலேயே 13 சமஸ்கிருத சொற்கள் உள்ளதையும் நாம் நன்கு அறிகிறோம்.
எனவே கடன் வாங்குவதும் கடன் கொடுப்பதும் மொழிகளுக்கு இடையே நடைபெறும் தவிர்க்கமுடியாத பரிவர்த்தனை என்பதை ஒப்புக் கொள்கிறோம்.
ஆனால் அதன் அளவைப் பொறுத்துதான் அது அப்பாவா இல்லை குழந்தையா என்பதை முடிவு செய்கிறோம். அதாவது ”மிகைநாடி மிக்க கொளல்” என்ற வள்ளுவனின் சொல்லிற்கேற்ப. அந்த வகையில்தான் தமிழை அப்பாவாகவும் ஆங்கிலத்தை குழந்தையாகவும் உருவகப்படுத்தி சொன்னேனே அல்லாமல் ஆங்கிலத்தை இழிவு படுத்தும் நோக்கத்தோடு அல்ல. அவ்வாறு நாம் ஒரு மொழியை இழிவு படுத்தினால் உலகில் உள்ள அத்தனை மொழிகளும் இழிவு பட்டுவிடுகிறது என்பதை நான் நன்கு அறிகிறேன்.

அதே போல் ஒரு மொழியின் இயல்பை புரிந்து கொள்ளாமல் அப்படியே மொழிபெயர்த்தால் அது தவறான பொருளையே தரும். அது எந்த மொழியிலிருந்து எந்த மொழிக்கு மொழிபெயர்த்தாலும் இந்த தவறு நடைபெறும். இதிலெல்லாம் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை நண்பரே.
அதே போல பழம்பெருமையை மட்டும் பேசிவிட்டு புதிதாக எதையும் சாதிக்காமல் ஒரு இருப்பு நிலையில் நின்றுவிடுவதையும் நாம் ஆதரிக்கமுடியாது என்ற உன்கள் கருத்து எனக்கு ஏற்புடையதாகவே உள்ளது. ஆனால் யோசித்து பாருங்கள் நண்பரே இன்றைய கணினிக்கும் என் தமிழ் ஏற்றவளாகத்தான் உள்ளாள்.

இன்னும் பின்னர் விரிவாக பேசலாம்.

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி








நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by சார்லஸ் mc Tue Feb 14, 2012 3:53 am

நல்ல ஆரோக்கியமான விவாதம் நடைபெறுகிறது.

இது அனைவருக்கும் பயனுள்ளது.

தொடா்ந்து தொடருங்கள் நண்பா்களே...

உங்களது பயனுள்ள கருத்துக்கள் அனைவரையும் தமிழைக் குறித்த விஷயத்தில் மேன்மையடையச் செய்யும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 154550கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 154550கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 154550கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 154550கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Tue Oct 23, 2012 11:12 pm

சார்லஸ் mc wrote:நல்ல ஆரோக்கியமான விவாதம் நடைபெறுகிறது.

இது அனைவருக்கும் பயனுள்ளது.

தொடா்ந்து தொடருங்கள் நண்பா்களே...

உங்களது பயனுள்ள கருத்துக்கள் அனைவரையும் தமிழைக் குறித்த விஷயத்தில் மேன்மையடையச் செய்யும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by sureshyeskay Wed Oct 24, 2012 10:01 am

Indian Ebony . Diospyros ebenum . கருங்காலி மரத்தின் விஞ்ஞான பெயர். IUCN (Redlist ) ல் (International Union for Conservation of Nature ) உள்ளது. Redlist : அழிவின் ஆபத்துக்கு இலக்காகியுள்ள மரங்களின் பட்டியல்.
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by T.N.Balasubramanian Wed Oct 24, 2012 10:20 am

இழுக்கும் ஈர்ப்பை ஈகரையில் உலா வரவிட்ட
சுந்தரபாண்டி,செல்ல கணேஷ் , சதாசிவம் அவர்களுக்கு நன்றி.

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by கவினா Wed Oct 24, 2012 10:47 am

T.N.Balasubramanian wrote:இழுக்கும் ஈர்ப்பை ஈகரையில் உலா வரவிட்ட
சுந்தரபாண்டி,செல்ல கணேஷ் , சதாசிவம் அவர்களுக்கு நன்றி.

ரமணியன்

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Back to top Go down

கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது? - Page 2 Empty Re: கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum