புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
92 Posts - 61%
heezulia
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
1 Post - 1%
eraeravi
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
284 Posts - 45%
heezulia
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
19 Posts - 3%
prajai
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_m10மரங்களை வெட்டுங்கள் (???!!!) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரங்களை வெட்டுங்கள் (???!!!)


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Sat Aug 21, 2010 9:09 am

எனக்கு வந்த மின்னஞ்சல் செய்தி (நன்றி:திரு கார்த்திக் பாலசுப்ரமணியன்)

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'


ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!


இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.


காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை


நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!



உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sat Aug 21, 2010 9:39 am

எங்கோ படித்ததை இங்கு வந்து கொட்டியிருக்கிறீர்கள். இந்த மரங்களினால் எந்தப் பாதிப்பும் ஏற்படபோவதில்லை. அதன் தகவமைப்பு காரணமாக அது கரிசல் நிலங்களில் வளர்கிறது. இது விஷ மரம் என்பதும் மகா அபத்தம். அதன் பட்டையிலிருந்துதான் பல சித்த மருத்துகள் தயாரிக்கப் படுகின்றன. கருவேலங் கொழுந்தை விஷ நீக்கியாய பயன்படுத்தலாம்.
பபூல் என்று ஒரு பற்பசை இதன் குணத்தை அடிப்படையாகக் கொண்டே தயாரித்து விற்கப்படுகிறது.
அயல் நாட்டுக்காரர்களின் கூற்றில் உண்மை எதுவுமே இல்லை. இயற்கை அளித்துள்ள வளங்களில் கருவேலமரமும் ஒன்று.
மரங்களை வெட்டுங்கள் (???!!!) Arimeda+karuvelam

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 21, 2010 10:11 am

கருவேலம் மரம், வேலிக்கருவை மரம் என்று இரண்டு வகையான மரங்கள் உள்ளது.

நண்பர் சிந்திய இங்கே குறிப்பிட்டுள்ளது வேலிக்கருவை மரம் என்று நினைக்கிறேன்
படம்:-மரங்களை வெட்டுங்கள் (???!!!) DSC00242

நண்பர் தென்றல் கருவேல மரம் பற்றி கூறுகிறார் என்று நினைக்கிறேன்.தென்றல் அவர்கள் கூறியதுபோல கீழ்காணும் கருவேல மரத்தில் கொந்து எடுக்கப்படுகிறது. மேலும் பல் துலக்கவும் இதன் குச்சியை பயன்படுத்துகிறார்கள்.(அனால் வேலிக்கருவை மரத்தில் அப்படி பயன்படுத்தப் படுவதில்லை)
கருவேலமரம் படத்தை காண்க: மரங்களை வெட்டுங்கள் (???!!!) %E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D

எனக்கு தெரிந்தவரை வேலிக்கருவை வெறும் விறகுக்காக மட்டுமே பயன்படுகிறது. மேலும் நிலத்தின் நீரை உறிஞ்சி, நிலத்தின் வளமையை கெடுத்துவிடும். உண்மை தெரிந்தவர்கள் விளக்குங்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
tthendral
பண்பாளர்

பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Posttthendral Sat Aug 21, 2010 10:39 am

இரண்டு மரங்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. வேலிக்கருவை சாதாரணமாகக் காணப்படும் மரங்களுள் ஒன்று. அதன் இலை, விதைகள் இன்றும் மருத்துவ பயன்பாட்டில் உள்ளன. ஆடுகள் அதன் பழங்களையும் காய்களையும் இன்றும் விரும்பி உண்பதை எங்கள் கிராமப் புறங்களில் காணலாம். அதன் பட்டை உடல் வலிவை தருவதாகவும் பிசின் ஆண்மை குறைவை போக்குவதாகவும் உள்ளது.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 21, 2010 11:07 am

நான் அருவாளை தூக்கவா வைக்கவா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 21, 2010 11:08 am

maniajith007 wrote:நான் அருவாளை தூக்கவா வைக்கவா
நீ போயி வீட்டு வாசல்ல உள்ள தேவை இல்லாத செடிகளை பிடுங்கி போடு. ஜாலி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 21, 2010 11:11 am

பிச்ச wrote:
maniajith007 wrote:நான் அருவாளை தூக்கவா வைக்கவா
நீ போயி வீட்டு வாசல்ல உள்ள தேவை இல்லாத செடிகளை பிடுங்கி போடு. ஜாலி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 21, 2010 11:13 am

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:நான் அருவாளை தூக்கவா வைக்கவா
நீ போயி வீட்டு வாசல்ல உள்ள தேவை இல்லாத செடிகளை பிடுங்கி போடு. ஜாலி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இப்படி ஓடினா என்ன அர்த்தம்?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Aug 21, 2010 11:14 am

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:நான் அருவாளை தூக்கவா வைக்கவா
நீ போயி வீட்டு வாசல்ல உள்ள தேவை இல்லாத செடிகளை பிடுங்கி போடு. ஜாலி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இப்படி ஓடினா என்ன அர்த்தம்?

குருவே சரணம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 21, 2010 4:48 pm

பயனுள்ள கட்டுரையை வழங்கியுள்ளீர்கள் சிந்தியா! வேலிக்கருவை பற்றி மேலும் சில தகவல்களை இங்கு வழங்குகிறேன்!

மரங்களை வெட்டுங்கள் (???!!!) Art-juliflora மரங்களை வெட்டுங்கள் (???!!!) Projul_150x130


அறிவியல் பெயர்: Prosopis Juliflora

தமிழில்: வேலிக்கருவை, வேலிகாத்தான்.

யூகலிப்டஸ் மற்றும் வேலிக்கருவை, இரண்டுமே காற்றின் ஈரப்பசையை இலைகள் மூலம் கிரகித்துக் கொண்டு, புவி வெப்பத்தை அதிகப்படுத்துகிறது! இதனால் இதன் அருகில் வேறும் மரங்கள் வளர முடியாத சூழல் நிலவுகிறது!

தமிழகத்தின் விவசாயிகள் அனைவரும் நகர வாழ்க்கைக்கு மாறிவருவதால், அவர்களின் விளை நிலங்களை இந்த வேலிக்கருவை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது! இந்த மரத்தை எப்படி வெட்டினாலும், வேருடன் பிடுங்கினாலும் அடுத்த சில தினங்களில் மீண்டும் தளைத்துவிடும்.

வெப்பமான பகுதிகளில் வேலிக்கருவை செழிப்புடன் வளர்கிறது. அதனால் தான் தமிழகத்தில் அதன் ஆக்கிரமிப்பை அதிகரித்துக் கொண்டே வருகிறது!

வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயத்தின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டு கண்காட்சிகளிலும், குறிப்பேடுகளிலும் மட்டுமே காணப்படும் இம்மரம் இந்தியாவிலும், எத்தியோப்பியாவிலும் பல்கிப் பெருகி வருகிறது.

அண்டை மாநிலமான கேரளாவில் கூட வேலிக்கருவை மரத்தை அழிக்கும் திட்டத்தை அரசாங்கமே ஆரம்பித்து, இன்று மாநிலம் முழுதும் வேலிக்கருவை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.

இதன் கூரிய முள் காலில் குத்தினால் அது விஷமாக மாறி காலை வெட்டி எடுக்கும் அளவிற்குக் கூட விபரீதமாகிவிடும். சிலரின் உயிரையும் பறித்துள்ளது இந்த விஷ முள்.

மரங்களை வெட்டுங்கள் (???!!!) Vilaiti_Keekar_%28Prosopis_juliflora%29_pods_W_IMG_1146




மரங்களை வெட்டுங்கள் (???!!!) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக