ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தையல் பொங்கினாள் !! (கவிதை)

3 posters

Go down

தையல் பொங்கினாள் !! (கவிதை) Empty தையல் பொங்கினாள் !! (கவிதை)

Post by kirikasan Sun Jan 15, 2012 8:26 pm

பொங்கல் வாழ்த்தும்
கவிதை
தையல் பொங்கினாள்

வாழ்த்து

பொங்கட்டும் பொங்கல் அன்பு பொங்கிட வாழ்விலென்றும்
தங்கட்டும் இன்பம்மூடே தளைக்கட்டும் உயர்வுநாளும்
அங்கெட்டுதிசையும் தென்றல் அறம்புகழ் உமது கூற
எங்கெட்டும் வரையில் நன்மைஎடுத் தின்பம் காண வாழீர்

தையல் பொங்கினாள்:

காரிருள் போர்வை கொண்டு கட்டெழில் மேனிமூடிப்
பாரெனும் நடனநங்கை பனிவிழி தூக்கங் கொள்ள
ஊரினை விட்டுஓடி உயர்மலை ஆழியெங்கும்
தேரினை ஓட்டிவெய்யோன் திரும்பிடக் கண்டுபூமி

காரிகை கண்விழித்து கலைந்தகார் குழல் மறைத்த
பேரெழில்முகம் துலங்கப் பின்னிருள் கூந்தல் தள்ளிப்
போர்வையை நெகிழ்த்தி வானப் பிரபஞ்சம் மீதுவீழ்த்திக்
கார்முகில் திரைமறைவில் கண்மறைந் தொளிந்துகொண்டாள்

ஊடறுத் தோடும்மேகம் உயர்புகழ் மாந்தர் சீலம்
மூடர்கள் மங்கசெய்யும் முயற்சியை வெல்லல் போலும்
கூடிய முகில்களூடே கதிர்படர்ந் தொளிர்ந்துமின்ன,
தேடியே உருள் புவிக்குள் சிறிதொரு தூசு நானும்

நாட்டினில் நடப்புஎண்ணி நம் தெருவாசல்வந்தேன்
கூட்டினுள் கொஞ்சும் புறாவும் கோழியைத் துரத்தும் சேவல்
மாட்டினோர் காதில் பேசி மந்திரம் போடும்காகம்
பாட்டினில் கேட்கும் பிச்சை பக்கத்தில் கண்டுநானும்

ஆகவோர் இளமைகொஞ்சும் அமைதிகொள் காலைஎன்றே
மீதவோர் தூரம் எண்ணி மெல்லென நடந்துசெல்ல
காதொடு பேசும் பெண்டிர் கலகலத்தோடும் சிறுவர்
மாதொடு கணவன் சண்டை மரத்தடிச் சாமி கூட்டம்

ஆகிடு மிவைகள் கண்டு அகமகிழ்ந்தடி எடுத்தேன்
வேகிடும் காலைவெப்பம் வீறுடன் எழுந்த சூர்யன்
பாகெனப் பூமிகாய்ச்சப் பகலவன் கொண்ட திட்டம்
ஏகுவார் அரசகட்டில் ஏறியபின்னர் நெஞ்சம்

தீதெனமாறு முலகத் தேசங்கள் ஆள்வர் போல
மீதென உச்சிமீது மெல்லவே சுட்டுப்போக
போதிய மரங்கள் கொண்ட பசுமரச் சோலைகண்டு
ஈதென வாழவேண்டும் எத்துயர் வந்தபோதும்

சீரென உறுதிகொண்டு செறிந்தஇந் நிழலின் சோலை
தாருமவ் வின்பம் போன்று தரணியில் வாழ எண்ண
யாரென அறியேன் சட்டென் றவளெதிர் தோன்றிஎன்னை
பாரடா மனிதா ஈது பக்குவ மாமோ என்றாள்

( பகுதி 2 ல்தொடரும்)
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தையல் பொங்கினாள் !! (கவிதை) Empty Re: தையல் பொங்கினாள் !! (கவிதை)

Post by kirikasan Sun Jan 15, 2012 8:30 pm

தையல் பொங்கினாள் - 2 ம் பகுதி

மங்கை நானும் ’தை’மகளாள் மகிழ்வென்ற வாழ்வுதர
இங்குதேன் போலினிக்கும் இன்பவாழ்வு நல்க வந்தேன்
பொங்குவதோ இன்பமின்றிப் போய்விடியத் துன்பமெல்லாம்
தங்கிடவே அன்புஎனும் தாயாக வந்திருந்தேன்

பொங்குவத முதமல்ல பெரும்புயல் வெள்ளமென்றும்
பொங்குவ தினிமையல்ல போட்டிகள்பொ றாமையென்றும்
பொங்கும்அற மெங்குமில்லை பிறர்மனம் கொல்லும் நீசம்
பொங்குவ துண்மையல்ல பொய்கொடிய வார்த்தை கண்டேன்

மறம்பொங்கும் தமிழென்று மலைபோ லுரம்பொங்க
அறம்பொங்க அன்புபொங்க அயலர் நட் புறவுபொங்க
நிறம்பொங்கிப் பலவண்ண நினவுகளும் பொங்கியெழ
திறம்கொண்ட வாழ்வில்தேன் தித்திப்பாய் திளைத்திருந்தான்

வெறிபொங்க உயிர்கொல்லும் விருப்புள்ள விலங்கினத்து
குறிபொங்கிக் குடிகெடுக்கும் குணமதுவோ அத்தனையும்
தறிகெட்ட மனதினிலே தாழ்வெண்ணம் பொங்கிவர
நெறிகெட்டு வாழ்வின்று நிலைத்தநிலை தொலையாதோ

ஏழை முதுகுவளைந் திளைத்து வியர்வைகொட்டி
வாழை வளர்த்துக் கனி வந்திடுநாள் பார்த்திருக்க
வேளைதனில் வேறெவரோ வெட்டிக்குலை கொள்ளுமிந்த
வாழுமுறை மாறாதோ வந்துநன்மை கூடாதோ

கண் பார்க்கும் மூலையெங்கும் காயங்கொலை, கேடுஎன
மண்வார்த்த பொற்சிலையாம் மனிதர் மனம் மகிழ்ந்தே
பண்ணிசைக்கப் பாவமிட்டு பார்த்து நடமாடுகிறார்
விண்ணதிர வந்து வெறி வார்த்தைகள் முழங்குவதேன்

மந்திரமோ வார்த்தைசில மனதை மயக்குவதேன்
சந்தியிலே பாம்பாட்டி தலையாட்டும் நாகமென
எந்த இன வேறுமின்றி எல்லோரும் ஆடுவதேன்?
விந்தையொரு நூல்படித்தேன் வானுறையும் தேவர்களும்

ஆகாய வீதியிலே அங்கு மிங்கும் போய்வருவர்
பூகோளம் மீதிருந்து போகும்சில வேண்டுதல்கள்
ஆகட்டுமென்று சொல்லி அருள்கூர வாக்களிப்பர்
தீகொட்டும்வார்த்தைகளோ தேன்சொட்டும் வார்த்தைகளோ

தொல்லுலக வார்த்தைகளைத் தேவை என்று தந்திடுவர்
கொல்லு கொல்லு என்றுகத்தி கூடிவரச் செய்யாது
நல்லுலகு வாழ்வுபெற நல்லதையே சொல்லிடுவீர்
அல்லதினி இல்லையென்று ஆகுவன பேசிடுவீர்

இன்பமெங்கும்`பொங்கிவரும் எழிலான வாழ்வுவரும்
அன்புமனம் ஒங்கிடவும் அல்லலின்றி வாழ்ந்திடவும்
துன்பம் குறைந் தோடிடவும் துணிவு பிறந்திடவும்
இன்னலது இல்லையென்ற இன்பவாழ்வு பொங்கிடட்டும்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தையல் பொங்கினாள் !! (கவிதை) Empty Re: தையல் பொங்கினாள் !! (கவிதை)

Post by கோவிந்தராஜ் Sun Jan 15, 2012 9:04 pm

சூப்பருங்க
பொங்கல் வாழ்த்துகள் !


தையல் பொங்கினாள் !! (கவிதை) 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! தையல் பொங்கினாள் !! (கவிதை) 599303
தையல் பொங்கினாள் !! (கவிதை) 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! தையல் பொங்கினாள் !! (கவிதை) 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

தையல் பொங்கினாள் !! (கவிதை) Empty Re: தையல் பொங்கினாள் !! (கவிதை)

Post by இளமாறன் Mon Jan 16, 2012 12:17 am

மறம்பொங்கும் தமிழென்று மலைபோ லுரம்பொங்க
அறம்பொங்க அன்புபொங்க அயலர் நட் புறவுபொங்க
நிறம்பொங்கிப் பலவண்ண நினவுகளும் பொங்கியெழ
திறம்கொண்ட வாழ்வில்தேன் தித்திப்பாய் திளைத்திருந்தான்


சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தையல் பொங்கினாள் !! (கவிதை) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

தையல் பொங்கினாள் !! (கவிதை) Empty Re: தையல் பொங்கினாள் !! (கவிதை)

Post by kirikasan Mon Jan 16, 2012 12:27 am

நன்றியும் பொங்கல்வாழ்த்துக்களும் கோவிந்தராஜ், இளமாறன் இருவருக்கும்!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

தையல் பொங்கினாள் !! (கவிதை) Empty Re: தையல் பொங்கினாள் !! (கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum