ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள்

2 posters

Go down

40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள் Empty 40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள்

Post by சிவா Sun Jan 15, 2012 12:44 pm

40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள் Eyes

- கண்கள்.
- மனித உடலில் மிக இன்றியமையாத, மென்மையான உறுப்புகள்.


கண்களில் எப்போது வேண்டுமானாலும் பாதிப்புகள் வரலாம். ஆனாலும் 40 வயது வரை இந்த உலகை கலர் கலராய், விதவிதமாய் பார்த்து ரசித்தவர்கள் அதன் பின்பு `என்ன கொஞ்சம் சிரமமாக இருக்கிறதே' என்று புலம்ப தொடங்கு கிறார்கள்.

40 வயதுக்கு பிறகு கண்களில், அது தரும் காட்சிகளில் லேசான அறிகுறிகள் ஏதாவது ஏற்பட்டாலே, உடனே கவனித்து அதற்கான தீர்வுகளை தேடிக்கொண்டால், தொடர்ந்து முழுமை யான பார்வை பலனை அனுபவிக்கலாம். பொதுவாக 40 வயதுக்கு பிறகு கண்களில் என்னென்ன பிரச்சினை ஏற்படும்? அதற்கு என்ன தீர்வு? என்பதனை விளக்குகிறது, இந்த கட்டுரை.

40 வயதுக்கு மேல் செய்தித்தாள் படிப்பது சிரமமாக உள்ளது, சிறிய எழுத்துக்கள் தெரிவதில்லை. இது எதனால் ஏற்படுகிறது?

40 வயதுக்கு மேல் அனைவருக்கும் இந்த நிலை ஏற்படும். இது ஒரு நோய் அல்ல. இதை சாளேஸ்வரம் அல்லது வெள்ளெழுத்து (presbyopia) என்று கூறுவர். நமது கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான லென்ஸ் சுருங்கி விரியும் தன்மை கொண்டது. இதனால் 40 வயதுக்கு முன்பு சிறிய எழுத்தையும் படிக்க இயலும். இந்த சுருங்கி விரியும் தன்மை 40 வயதுக்கு மேல் படிப்படியாக குறைகிறது. இதுவே சிறிய எழுத்துகளை படிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இந்த குறைபாட்டை எப்படி சரி செய்யலாம்?

40 வயதுக்கு மேல் சிறிய எழுத்துக்களை படிப்பதற்கு மூக்கு கண்ணாடி அணிய வேண்டும். கண்ணின் லென்சின் சுருங்கி விரியும் தன்மை படிப்படியாக குறைவதினால் 2 வருடத்திற்கு ஒரு முறையாவது கண்ணாடி மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

வெள்ளெழுத்தினால் கண்களுக்கு வேறு பாதிப்பு ஏற்படுமா?

வேறு பாதிப்புகள் ஏற்படாது. இந்த வெள்ளெழுத்து 40 வயதுக்கு மேல் அனைவருக்கும் ஏற்படக்கூடிய இயல்பான வயது சம்பந்தப்பட்ட விஷயம்தான். ஒருவர் 40 வயதுக்கு முன்பு கண் மருத்துவரை அணுகாமல் இருந் திருக்கலாம். ஆனால் 40 வயதில் ஒவ்வொருவரும் கண் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொண்டு கண்ணாடி அணியவேண்டும். கண்ணாடியில் பைபோகல், புரோகிரசிவ் (progressive) என இருவகைகள் உள்ளன.

கண்ணாடி அணிய விருப்பம் இல்லாதவர்கள், கண்ணாடி அணியாமலே வெள்ளெழுத்து குறைபாட்டை சரி செய்ய இயலுமா?

சரி செய்ய இயலும். அதற்கு நவீன அறுவை சிகிச்சை உள்ளது. அந்த அறுவை சிகிச்சையின் பெயர் prelex (presbyopic lens exchange) ஆகும். இந்த சிகிச்சையில் கண்ணுக்குள் இருக்கும் இயற்கையான லென்ஸை அகற்றி விட்டு, அந்த இடத்தில் விசேஷ செயற்கை லென்ஸ் (மல்ட்டி போகல்) பொருத்தப்படுகிறது. இந்த சிகிச்சை 2 கண்களிலும் அடுத்தடுத்து செய்யவேண்டும். இந்த சிகிச்சைக்கு பிறகு ஆயுள் முழுவதும் கண்ணாடி அணிய வேண்டாம். தற்போது உள்ள விஞ்ஞான வளர்ச்சியில் இந்த அறுவை சிகிச்சை ஒரு வரப் பிரசாதமாகும். காரணம், 40 வயதுக்கு மேல் இந்த சிகிச்சை செய்து கொண்டால் கண்ணாடி அணியாமல் இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்.

40 வயதுக்கு மேல் கண்களில் ஏற்படும் மற்ற பாதிப்புகள் என்ன?


40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்கள் கண்களையும் பாதிக்கும். எனினும் ஆரம்ப நிலையில் இவை கண்களில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. எனவே மேற்கண்ட நோய்கள் உள்ளவர்கள் வருடத்திற்கு ஒரு முறை கண்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். சர்க்கரை நோயால் கண்ணில் ஏற்படும் பாதிப்புகளை 'Diabetic Retinopathy' என்று கூறுவர். இதனை லேசர் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.

கண் பார்வை குறைவதற்கு வேறு காரணங்கள் உண்டா?

40 வயதுக்கு மேல் கண்களில் `க்ளோக்கோமா' என்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கண்ணின் அழுத்தம் இயல்பை விட (6-21 mm Hg) அதிகமானால் அதனை க்ளோக்கோமா என்று அழைக்கிறோம். இந்த நோய் வயதானவர்களுக்கே வரும். கண்ணில் அழுத்தம் அதிகம் ஆவதால் பார்வை நரம்பு பலவீனம் அடைகிறது. இதன் விளைவாக பக்கப்பார்வை (side vision) பறிபோகும். இந்த நோயால் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதை முழுமையாக சரிசெய்ய இயலாது.

க்ளோக்கோமாவின் அறிகுறிகள் என்ன?

க்ளோக்கோமா ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. எனவே 40 வயது ஆனவுடன் அனைவரும் கண் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக ஏற்கனவே குடும்பத்தில் யாருக்காவது க்ளோக்கோமா பாதிப்பு இருந்தால் தவறாமல், மருத்துவரை அணுகவேண்டும். க்ளோக்கோமா நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து சரி செய்தால் பார்வை பாதிப்பு ஏற்படாது. தற்போது இந்த நோயை குணப்படுத்த பலவிதமான நவீன சிகிச்சைகள் உள்ளன. சொட்டு மருந்து தவிர நவீன லேசர் சிகிச்சையும் உள்ளது. இந்த சிகிச்சையால் அறுவை சிகிச்சையின் அவசியம் குறைந்து உள்ளது. க்ளோக்கோமாவின் தீவிரம் அதிகமானால் பார்வை மிகவும் மோசம் அடைந்து விடும்.

40 வயதிலேயே கண்புரை (Cataract) பாதிப்பு ஏற்படுமா?

பொதுவாக கண்புரை 50-55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே வரும். எனினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு முன்பே வர வாய்ப்பு உண்டு. குறிப்பாக சர்க்கரை கட்டுப்பாடு சீராக இல்லை என்றால் 40 வயதிலேயே கண்புரை வரலாம். இதை தவிர கண்ணில் அடிபட்டால் அல்லது ஸ்டிரொய்டு (steroid) வகை மருந்துகள் உட்கொண்டால் 40-45 வயதிலேயே புரை வர நேரிடும். இதனை கண்புரை அறுவை சிகிச்சையால் சரி செய்திடலாம்.

-டாக்டர். அருள்மொழி வர்மன்


40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள் Empty Re: 40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள்

Post by இளமாறன் Sun Jan 15, 2012 1:11 pm

நல்ல தகவல் சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





40 வயதுக்கு மேல் கண்ணில் ஏற்படும் கோளாறுகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum