புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_m10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10 
366 Posts - 49%
heezulia
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_m10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_m10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_m10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_m10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10 
25 Posts - 3%
prajai
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_m10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_m10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_m10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_m10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_m10சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்...


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Sep 29, 2009 3:21 pm

கல்வியறிவின்மை, தொழிலின்மை, தன்கையில் பொருளாதாரப் பலமின்மை இவற்றோடு இவற்றால் ஏற்படும் தன்னம்பிக்கையின்மை என்பன ஒரு பெண் ஆணில் தங்கி வாழ்வதற்கான பிரதானமான காரணங்களாக அமைகின்றன. தன்னையும் பிறக்கப்போகும் தன்பிள்ளைகளையும் பேணிப்பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் தன்தங்கி வாழ்தலை ஆரம்பிக்கும் பெண் தன்கனவுகள் பொய்த்து குடும்பம் சீரழியும் நிலையை அடையும் போதும்கூட அத்தங்கிவாழ்தலிருந்து மீள முடியாமல் போவதுதான் மிகக்கொடுமை. சில பெண்கள் அதற்கும் மேலே போய் பொறுப்பற்றிருக்கும் கணவனின் சுமையையும் சேர்த்து இளம்பிள்ளைகளின் கைகயில் கொடுப்பதும் இன்று சமூகத்தில் மலிந்து போய்க்காணப்படும் ஒரு விடயமாகிவிட்டது.

'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்' என்ற சொற்பதம் வழக்கொழிந்துதான் போய்விட்டது. எனினும் வெறும் கல்லாகவும் பதா புல்லாகவும் இருப்பவா களையெல்லாம் கணவன் என்று தொழுது நிற்கும் பெண்களின் மனநிலையில் மாற்றம்தான் இல்லை.
கல்வியறிவின்மை, தொழிலின்மை, தன்கையில் பொருளாதாரப் பலமின்மை இவற்றோடு இவற்றால் ஏற்படும் தன்னம்பிக்கையின்மை என்பன ஒரு பெண் ஆணில் தங்கி வாழ்வதற்கான பிரதானமான காரணங்களாக அமைகின்றன. தன்னையும் பிறக்கப்போகும் தன்பிள்ளைகளையும் பேணிப்பாதுகாப்பான் எனும் நம்பிக்கையுடன் தன்தங்கி வாழ்தலை ஆரம்பிக்கும் பெண் தன்கனவுகள் பொய்த்து குடும்பம் சீரழியும் நிலையை அடையும் போதும்கூட அத்தங்கிவாழ்தலிலிருந்து மீள முடியாமல் போவதுதான் மிகக்கொடுமை. சில பெண்கள் அதற்கும் மேலே போய் பொறுப்பற்றிருக்கும் கணவனின் சுமையையும் சேர்த்து இளம்பிள்ளைகளின் கைகயில் கொடுப்பதும் இன்று சமூகத்தில் மலிந்து போய்க்காணப்படும் ஒரு விடயமாகிவிட்டது.
கல்வியறிவும், பொருளாதாரப்பலமும் இன்மையால் வாழ்வதற்கான தன்னம்பிக்கையற்று பெரும்பாலான பெண்களிருக்க கல்வியறிவும், பொருளாதாரப் பலமுமிக்க பெண்களும் வாழ்வதற்கான தன்னம்பிக்கையை இழப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது அடிப்படையிலேயே பெண்ணுடைய மனதில் 'நான் பெற்றோரிலும் சகோதரர்களிலும் பின்னர் கணவனிலும் சார்ந்து வாழவேண்டியவள்' எனும் எண்ணக்கரு ஊட்டப்படுதல் காரணமாகவே ஏற்படுகிறது.
பெண்களின் கருத்தமைவில் மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலமே இந்நிலைமையை மாற்றியமைப்பது சாத்தியமாகும். இளம் பெண்களின் மத்தியில் கருத்து மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நாளைய சந்ததியை சிறந்த தன்னம்பிக்கை மிக்க சந்ததியாக உருவாக்க வேண்டும். ஏனெனில், ஒரு தாயே குடும்பத்தில் சகலதுமாகிறாள்.
அப்பெண்ணின் முன்னைய கர்ப பசரிதைகள் 'பாரப்பெண்' என நிமிர்ந்து பார்க்கவைத்தது. 33 வயது தோற்றமோ, நாற்பதைத் தாண்டி நின்றது. ஏழாவது கர்ப்பம். ஏழ்மையும் ஏழ்மையினால் அதிகரித்துக் காணப்பட்ட முதுமையும் முகத்தில் கோலமிட்டன. பரிசோதனை முடிவுகளோ ஆபத்தின் அறிகுறிகளாக இருந்தன. உயர்குருதியமுக்கம், கணுக்கால்களில் அதிகவீக்கம், சலத்தில் புரதவெளியேற்றம், மங்கிய கண் பார்வை என அவற்றின் தாக்கம் அதிகளவில் இருந்தது. உடனடியாக அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டிய அவசியத்தை மருத்துவ மாதுக்கள் உணர்ந்தனர்.
"அம்மா! உடனை ஆஸ்பத்திரிக்குப் போங்கோ" என்று அம்மாவை அவசரப்படுத்தினர்.
"இல்லைப் பிள்ளை. நான் போய் ஆஸ்பத்திரியிலை இருக்க ஏலாது" என்ற அத்தாயின் பதில் அனைவரிற்கும் அதிர்ச்சியாக இருந்தது.
"அம்மா உங்களுக்கு என்னென்ன பிரச்சினை இருக்கென்றும் அதாலை முன்சூல்வலி என்ற நோய் வர இருக்கென்றும் வடிவா விளக்கமாகச் சொல்லிப்போட்டம். உடனை நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போகவேணும்"
"எனக்குப் பிள்ளைகளைப் பார்க்க ஆளில்லை. எனக்குப் போக ஏலாது" என்ற அத்தாயின் நிலை மனதை வருத்தினாலும் அவர்கள் விடவில்லை.
"அம்மா, உங்கடை அவரோடை விட்டிட்டுப் போங்கோ" என வழிகாட்ட முனைந்தனர்.
"அவர் பார்க்க மாட்டாருங்கோ. அவர் ஒரே குடி. இப்ப இரத்தமாகவும் போகுது. உழைப்புமில்லை. என்னை ஓரிடமும் போக அவர் விடமாட்டார்" "உங்கடை மகள் பார்ப்பாதானே. விட்டுட்டுப்போங்கோ" என்று கூறியபோதும் பதின்நான்கு வயதுச் சிறுமி பிள்ளைகளைப் பார்ப்பாளா என்ற சந்தேகம் மனதில் எழுந்தது. எனினும் அச்சந்தேகத்தைத் தகர்த்தது அத்தாயின் பதில். "அவதான் விறகுகட்டிக் கொண்டுவந்து குடுத்து உழைக்கிறவா"
தீர்க்க முடியாத பல சிக்கல்களை அத்தாய் பதிலாகத் தருவதை உணர்ந்தும், "அம்மா, உங்கடை பிள்ளையளை நீங்கள் ஆஸ்பத்திரியாலை வரும்வரைக்கும் பராமரிக்க நாங்கள் ஒழுங்கு பண்ணுறம் நீங்கள் ஆஸ்பத்திரிக்குப் போங்கோ" எனும் பெரும் உதவியைச் செய்ய மருத்துவ மாதுக்கள் முன்வந்தனர்.
"இல்லையுங்கோ, அவர் விடார். சொந்தக்காரர் வீட்டை போகவே விடமாட்டார்" என்ற பதில் முகந்தெரியாத அக்கணவன் மீது கோபத்தை ஏற்படுத்தியபோதும் அப்பெண்ணின் நிலைக்கு இரங்கி "அப்ப நீங்கள் என்னம்மா செய்யப்போறீங்கள்?" என்ற கேள்விக்கு, "அது எனக்கு ஒன்றும் நடக்காதுங்கோ. கடவுள்விடார்" எனும் அறியாமை மிக்க பதிலைச் சொல்லி சலிப்புடன் வாயை மூடவைத்த பெண்ணின் நிலை என்ன?
பொறப்பற்று, பிஞ்சு மகளை உழைப்பிற்கனுப்பி, குடித்து, கௌரவம் என்ற பெயரில் தன் சுயநலத்திற்காய் மனைவி பிள்ளைகளை அடிமையாய் வைத்திருக்கும் அக்கணவனை இனங்காணத் தெரியாத, சுயமாய் முன்னின்று உழைத்துக குடும்பத்தைச் சீரழிவிலிருந்து காக்கத் தெரியாத அப்பெண் தன் மகளுக்குக் கற்றுக் கொடுக்கப் போவது எதனை? பதின்நான்கு வயதில் விறகு சுமக்கும் அச்சிறுமி அச்சுமையிலிருந்து விடுபடவென பதினாறு வயதில் திருமணம் செய்து, தான பெறப்போகும் மகளுக்கும் இதையேதான் கற்றுக்கொடுக்கப் போகிறாள். சங்கிலித் தொடராய் சந்ததிகளுக்குக் கடத்தப்படும் இவ வெழுதா மரபை எங்கே? யார்? முறித்தெழுதப் போகிறார்கள்?
தான் தனது சொந்த மச்சானையே மணந்ததையும், அவனது அடி, உதை தாங்காமல் மூன்றாம் மாதமே பூநகரியிலிருந்து கால்நடையாய் புதுக்குடியிருப்பு வந்ததையும் கதைகதையாய் சொல்லிக் கொண்டிருந்தாள் அவ விளம்பெண். பசியோட தான் நடந்து வந்த கதையை அவள் கூறக்கேட்டு நான் "பாவம் வாழ்க்கையில் நிறைய அனுபவப்பட்டுவிட்டாள். இனித்திருமணமே செய்து கொள்ளமாட்டாள்" என மனதுள் எண்ணிக் கொண்டேன்.
இதன்பின்னர் இரண்டு மாதங்களே சென்றிருக்கக்கூடும். ஒரு நாள் நள்ளிரவில் அப்பெண் ஒருவனோடு வீட்டைவிட்டு வெளியேறியிருந்தாள். கையில் பச்சைக் குழந்தையுடனும், அருகில் இரண்டு வயதுக் குழந்தையுடனும் கண்ணில் நீருடனும் வந்திருந்த பெண் அவனின் மனைவியென அறிந்து நான் திகைத்துப் போயிருந்தேன். வீடுவீடாக "அவரைக் கண்டனீங்களோ" என வெட்கமும் துக்கமும் அலைமோத அப்பெண் கேட்டுத்திரிந்தாள்.
குழந்தைகளையும் தன்னையும் நட்டாற்றில் விட்டுப்போனவனை உதறித்தள்ளித் துணிந்து வாழும் மனப்பலமில்லாது வீடு வீடாகத் திரியும் இப்பெண் ஒருபுறம்,
நன்கறிந்த ஒருவனே பொய்த்துப் போனபின்பும் அண்மையிலே அறிமுகமான, குடும்பஸ்தன் என நன்கறியப்பட்ட ஒருவனோடு வெளியேறி தன் தங்கிவாழ்தலுக்குத் துணை தேடிக்கொண்ட பெண் ஒருபுறம்,
பெண்ணெனப்படுபவளின் வாழ்க்கை திருமணத்தில் முடியவேண்டும், திருமண வாழ்க்கையிலும் ஆணே பற்றுக்கோலாக இருக்க வேண்டும், ஆணின்றி வாழ்க்கை இல்லை எனக் காலங்காலமாய் ஊறிப்போன உணர்வுகளுடன் அழுந்தி, அழிந்து கொண்டிருக்கும் பெண்களை வெளிக்கொணர்வது எப்படி?
அறிவும், அழகும் ஒருங்கே பெற்ற பெண் ஒரு சிறந்த ஆசிரியை, பல்கலைக்கழக அனுமதி பெற்றும் அவர் செல்லாததற்குக் காரணம் காதல். ஏற்கனவே திருமணமாகிய, பல பெண்களுடன் தொடர்புடையவன் என்று பலரால் கூறப்பட்ட ஒருவனைத் திருத்தி வாழவைப்பேன், வாழுவேன் என்ற நம்பிக்கையுடன் கோலாகலத் திருமணத்துடன் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
சில வாரங்களின் முன் தனது திருமணப்படங்களைக் காட்டிச் சென்ற அப்பெண் தற்கொலை செய்துகொண்டார் எனும் செய்தி என்னைத் திகைக்க வைத்தது.
பல வருடங்களாகக் காதலித்து இப்படிப்பட்டவன்தான் என்று அறியப்பட்ட ஒருவனைத் திருத்தி வாழலாம் என்ற நம்பிக்கையைக் கைவிட்டமை ஒருபுறமிருக்க, தகுதியற்ற ஒருவனைத் தன்வாழ்வின் மையமாகக் கொண்டு, அந்த மையம் திசை மாறியமைக்காகத் தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் அறிவு எங்கே சென்றுவிட்டது?
திருமணமென்பது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதைவ}டவும் கல்வி, தொழில், இலட்சியங்கள் வாழ்க்கையாக அமையலாம் என்றும் அப்பெண்ணுக்கு அறிவூட்டத்தவறியது கல்விமுறைமையின் குற்றமா? சமூகத்தின் குற்றமா?
கல்வியறிவு, தொழில், பொருளாதாரம் அனைத்துமிருந்தும் வாழ்வதற்கான நம்பிக்கை இப்பெண்ணிற்கு ஏன் இல்லாமற் போனது? இளம் சந்ததியினரை வழிகாட்டும் தலையாய பணியைச் செய்யும் ஒரு ஆசிரியை தன் மாணவர்களுக்கு விட்டுச்சென்ற செய்தி அவர்களை எவ வாறு வழிநடத்தப் போகின்றது?
நாட்டின் குடிமகன் ஒருவனை உருவாக்குவதில் பெரும்பங்குவகிக்கும் ஆசிரியர்கள் இதையிட்டுச் சிந்தித்தால் என்ன?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Sep 29, 2009 3:39 pm

சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 677196 சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 677196 சிகரங்களைத் தொட்ட பின்னும் இன்றும் பெண்... 677196


பெண்ணெனப்படுபவளின் வாழ்க்கை திருமணத்தில் முடியவேண்டும், திருமண வாழ்க்கையிலும் ஆணே பற்றுக்கோலாக இருக்க வேண்டும், ஆணின்றி வாழ்க்கை இல்லை எனக் காலங்காலமாய் ஊறிப்போன உணர்வுகளுடன் அழுந்தி, அழிந்து கொண்டிருக்கும் பெண்களை வெளிக்கொணர்வது எப்படி?


இந்த விஷயத்தில் படித்த பெண்கள்..படிக்காத பெண்கள் என்ற விதி விலக்கே இல்லாமல் தங்கள் வாழ்க்கையை தாங்களே வீணாக்கி கொள்வதை விதி என்பதா இல்லை சாபம் என்பதா.. பெண்களாய் பார்த்து சிந்தித்து முடிவு எடுத்தால் மட்டுமே பெண்களுக்கு நல்ல..நிம்மதியான சந்தோசமான வாழ்க்கை அமையும்..
பயனுள்ள கட்டுரை யாழவன் ..நன்றிகள்



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Tue Sep 29, 2009 3:49 pm

பல வருடங்களாகக் காதலித்து இப்படிப்பட்டவன்தான் என்று அறியப்பட்ட ஒருவனைத்
திருத்தி வாழலாம் என்ற நம்பிக்கையைக் கைவிட்டமை ஒருபுறமிருக்க, தகுதியற்ற
ஒருவனைத் தன்வாழ்வின் மையமாகக் கொண்டு, அந்த மையம் திசை மாறியமைக்காகத்
தற்கொலை செய்துகொண்ட அப்பெண்ணின் அறிவு எங்கே சென்றுவிட்டது?
திருமணமென்பது
வாழ்க்கையின் ஒரு பகுதி. அதைவ}டவும் கல்வி, தொழில், இலட்சியங்கள்
வாழ்க்கையாக அமையலாம் என்றும் அப்பெண்ணுக்கு அறிவூட்டத்தவறியது
கல்விமுறைமையின் குற்றமா? சமூகத்தின் குற்றமா?

சமூக மற்றம் நடந்து விட்டதாக நாங்கள் நினைக்கின்றோம் ஆனாலும் இந்தமாதிரி சில நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இன்றைய பெண்கள் கல்வி, தொழில், இலட்சியங்கள் என்பவற்றில் முன்னேறி உள்ளனர் மீனு கூறியது போல் பெண்களாய் பார்த்து சிந்தித்து முடிவு எடுத்தால் மட்டுமே முடியும் ஏனெனில் அவர்களுக்கான கல்வி அறிவு தற்காலத்தில் அதிகமாக வழங்கப்பட்டு இருக்கிறது



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக