ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:36 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by krishnaamma Sat Jan 14, 2012 9:34 pm

தை ராசிபலன் 15.1.2012-12.2.2012

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) - லாபம்

உழைப்பால் வாழ்வில் உயர்வு பெறும் மேஷராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் இடத்தில் மாறுபட்ட குணத்துடன் இருந்தாலும், அவர்மீது குருவின் ஐந்தாம்பார்வை பதிகிறது. இந்த மாதம் அனுகூலம் தரும் கிரகங்களாக சூரியன், புதன், சுக்கிரன் செயல்படுகின்றனர். மனதில் நல்ல சிந்தனை உருவாவதோடு தைரியமும் அதிகரிக்கும். வசீகரமாக பேசி பலரின் பாராட்டைப் பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் நவீன மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர் விரும்பி வந்து உங்களுடன் உறவாடுவர். புத்திரர் பிடிவாத குணத்துடன் செயல்பட்டாலும், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். புத்திரர் உடல்நலத்திற்காக மருத்துவச் செலவு செய்ய நேரிடும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்திற்கான விஷயங்களில் அக்கறை உண்டாகும். தம்பதியர் குடும்ப நலனுக்காக ஒற்றுமை உணர்வுடன் நடந்து கொள்வர். தொழிலதிபர்கள் உற்பத்தியை அதிகரித்து தாராள லாபம்காண்பர். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் ஆதரவைப் பெறுவர். பணிபுரியும் பெண்கள் பணியை நிர்ணயித்த கால அவகாசத்திற்குள் நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் கணவரின் ஆதரவைக் கண்டு மனம் மகிழ்வர். செலவுக்குத் தேவையான பணம் சீராகக் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து அடிக்கடி சிந்திப்பர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு அரசு தொடர்பான உதவி எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளின் மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற முயற்சிப்பர். விவசாயிகள் விளைபொருளுக்கு நல்ல விலை பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தரத்தேர்ச்சி காண்பர்.

பரிகாரம்: திருமாலை வழிபடுவதால் முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். உஷார் நாள்: 18.1.12 பகல் 2.10 - 20.1.12 மாலை 5.17
வெற்றி நாள்: பிப்ரவரி 4, 5
நிறம்: சிமென்ட், பச்சை எண்: 5, 8


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by krishnaamma Sat Jan 14, 2012 9:34 pm

ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2)- மவுனம்

எதையும் துணிச்சலுடன் அணுகும் ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாம் இடத்தில் அனுகூலக் குறைவாக இருந்தாலும், சனிபகவான் நல்ல பலன்களை வழங்கும் விதத்தில் உள்ளார். அவசியமற்ற பேச்சின் மூலம் வீண்வம்பு உண்டாகலாம், மவுனம் அவசியம். மனைவியின் கருத்தை ஏற்பது நல்லது. வீடு, வாகன வகையில் இப்போது இருக்கிற வசதியைப் பயன்படுத்துவது போதுமானது. பூர்வ சொத்தில் மராமத்துச் செலவு அதிகமாகும். புத்திரர்கள் படிப்பில் கவனம் தவறி, பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு நீங்களே தூண்டு கோலாக அமைந்து விடக்கூடாது. உடல்நிலை நன்றாக இருக்கும். கடன் பிரச்னையில் இருந்து விடுபடுவீர்கள். தம்பதியருக்குள் அடிக்கடி விவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பநலனைக் கருத்தில் கொண்டு அமைதி காப்பது அவசியம். அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவிசெய்ய நினைக்க வேண்டாம். தொழிலதிபர்கள் மிதமான உற்பத்தி, சுமாரான லாபம் என்கிற நிலையை அடைவர். வியாபாரிகள் கூடியவரையில் ரொக்கத்திற்கு பொருள் விற்பதால் தேவையற்ற வகையில் கடன் பெறுவதை தவிர்க்கலாம். பணியாளர்கள் தங்கள் வாடிக்கையான திறமையை வெளிப்படுத்துவதில் சிரமம் ஏற்படும். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சோம்பல் அல்லது ஏதோ மனக்குறையினால் பணியில் கவனம் சிதறும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு திண்டாட வேண்டி வரும். சிக்கனம் பின்பற்றுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் சுமாரான விற்பனை, அளவான லாபம் பெறுவர். அரசியல்வாதிகளுக்கு புகழ் குறையக்கூடும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. கால்நடைகளினால் வரும் வரு மானம் குறையும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருந்தால் தான் சிறந்த மதிப்பெண் பெற இயலும்.

பரிகாரம்: பைரவரை வழிபடுவதால் துன்பம் விலகி நன்மை சேரும். உஷார் நாள்: 20.1.12 மாலை 5.17 - 23.1.12 காலை 9.38
வெற்றி நாள்: பிப்ரவரி 6, 7, 8
நிறம்: ஆரஞ்ச், நீலம் எண்: 6, 8


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by krishnaamma Sat Jan 14, 2012 9:35 pm

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)- உயர்வு

எவருக்கும் உரிய மரியாதை தருகின்ற மிதுனராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் மிகுந்த அனுகூலத்துடன் மகரத்தில் உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக செவ்வாய், ராகு, சுக்கிரன், குரு செயல்படுகின்றன. இதனால், வாழ்வில் அளப்பரிய உயர்வு தரும் மாற்றங்களை பெறுவீர்கள். வருமானம் அதிகம் கிடைக்க வருகிற வாய்ப்புக்களை முழு முயற்சியுடன் பயன்படுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபமங்கல நிகழ்ச்சியும் உண்டாகும். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நற்பலன் உண்டு. தாயின் மனம் மகிழ நடந்து கொள்வீர்கள். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நடந்து, படிப்பு, சுயதிறனில் வளர்ச்சி அடைவர். சொத்து வாங்குகிற திட்டம் இனிதாக நிறைவேறும். எதிரிகள் உங்கள் வாழ்க்கைத் தரத்தின் உயர்வு கண்டு விலகுவர். உடல்நலம் பலம் பெறும். கணவன், மனைவி ஒருவர் நலனில் ஒருவர் மிகுந்த அக்கறை கொள்வர். வாழ்வு முறை சிறப்பாகும். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி உயரும். லாபம் அதிகமாகும். தொழிற்சாலை சட்டதிட்டங்களை கவனத்துடன் பின்பற்றவது நல்லது. வியாபாரிகள் அதிக மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். போட்டிகுறையும். அதிக விற்பனை, தாராள லாபம் கிடைக்கும். புதிய கிளை துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலம் உண்டு. பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். உபரி வருமானம் கிடைத்து குடும்பத்தேவை பெருமளவில் பூர்த்தியாகும். பணிபுரியும் பெண்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர். பதவி உயர்வு எதிர்பார்த்தபடி கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு பொன், பொருள் சேர்க்கை பெற யோகம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் லட்சியத்துடன் செயல்பட்டு உற்பத்தியை அதிகரிப்பர். போட்டி குறைந்து தாராள விற்பனை நடைபெறும். அரசியல்வாதிகள் செயல்திறமையை வளர்த்து திட்டங்களை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு அதிக மகசூல் உண்டு. மாணவர்கள் வெளிவட்டார பழக்கத்தைக் குறைத்துக் கொள்வதால் மதிப்பெண் அதிகரிக்கும்.

பரிகாரம்: சிவனை வழிபடுவதால் நன்மை மேலும் அதிகரிக்கும். உஷார் நாள்: 23.1.12 காலை 9.38
- 25.1.12 காலை 4.17
வெற்றி நாள்: பிப்ரவரி 8, 9, 10 நிறம்: ரோஸ், வெள்ளை எண்: 1, 6


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by krishnaamma Sat Jan 14, 2012 9:35 pm

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)- பொறுமை

பிறரது கருத்துக்கும் மதிப்பளித்து செயல்படும் கடகராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சந்திரன், சுயசாரமான அஸ்தம் நட்சத்திரத்தில் தனது பயணத்தை துவக்குகிறார். சுக்கிரன், கேது நல்ல பலன்களை வழங்குவர். உங்களின் சுயகவுரவத்திற்கு பங்கம் உண்டாக வாய்ப்புண்டு. பொது இடங்களில் வாக்குவாதம் செய்யாமல் தவிர்ப்பதால் நன்மை வளரும். வீடு, வாகன வகையில்முறையான பராமரிப்பு அவசியம். வாகன பயணத்தில் மிதவேகம் வேண்டும். பணவரவு சுமார். புத்திரர்கள் கவனக்குறைவால் சிரமங்களுக்கு உட்படும் கிரகநிலை உள்ளது. பூர்வசொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு குறையும். ஆறு, எட்டாம் இட அதிபதிகளான குரு, சனி சமசப்தம பார்வையில் உள்ளனர். இதனால் அடுத்தவர் செலவில், சுகசவுகர்யம் அனுபவிப்பீர்கள். மருத்துவச் செலவுக்கு இடமுண்டு. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். குடும்பநலன் கருதி பொறுமை காப்பது அவசியம். நண்பர்களிடம் பணபரிவர்த்தனை கூடாது. வெளியூர் பயணங்களால் அதிகசெலவு, நிம்மதி குறைவு ஏற்படலாம். பொறுமையுடன் செயல்பட வேண்டிய மாதம் இது. தொழிலதிபர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கும். வியாபாரிகள் போட்டியால் விற்பனையில் சிரமம் எதிர்கொள்வர். லாபம் சுமார். பணியாளர்கள் பணியில் சில குறுக்கீடுகளை சந்திப்பர். பொறுமை காப்பதால் நன்மை கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் உடல்நலம் பேணுவதால் மட்டுமே பணியில் ஆர்வம் வளரும். குடும்பப் பெண்கள் கணவர் வழி உறவினர்களை விமர்சித்து பேசக்கூடாது. செலவிலும் சிக்கனம் வேண்டும். சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனை இலக்கை உயர்த்த புதிய திட்டங்களை உருவாக்குவர். சுமாரான விற்பனை, பணவரவு உண்டு. அரசியல்வாதிகளுக்கு தலைமையிடமிருந்து கண்டனக்கணை வர வாய்ப்புண்டு. விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாண வர்கள் படிப்பில் கவனம் öŒலுத்துவது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதால் நன்மை சேரும். உஷார் நாள்: 25.1.12 காலை 4.17 - 27.1.12 பகல் 1.18
வெற்றி நாள்: பிப்ரவரி 11, 12
நிறம்: மஞ்சள், சந்தனம் எண்: 3, 6


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by krishnaamma Sat Jan 14, 2012 9:36 pm

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)- சிறப்பு

எண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்மராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சூரியன் அனுகூலம் தரும் வகையில் புதனுடன் ஆறாம் இடமான மகரத்தில் உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சமசப்தம பார்வை பெற்று குரு, சனி செயல்படுகின்றன. மனதில் நல்ல சிந்தனைகள் உருவாகும். அக்கம் பக்கத்தவர் அன்புடன் நடந்து கொள்வர். பேச்சில் நிதானமும் விவேகமும் பரிமளிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. தாயின் அன்பு, ஆசி கிடைக்கும். புத்திரர்கள் நற்செயல்களை பின்பற்றுவர். எதிரியால் இருந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரத்தில் சாதக தீர்வு ஏற்படும். சமூக அந்தஸ்து உயர்ந்து பாராட்டு, பரிசு பெறுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன்,மனைவி இடையே சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களை புகழ்வதிலும் ஆலோசனை சொல்லி சரிசெய்வதிலும் நிதான அணுகுமுறை பின்பற்றுங்கள். குடும்பத்தின் முக்கிய தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலதிபர்கள் திட்டங்களை நிறைவேற்றி புதிய அனுபவம் பெறுவர். அரசு தொடர்பான எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரிகள் சுறுசுறுப்பான செயல்களால் விற்பனையை உயர்த்துவர். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் திறமைமிக்க செயலால் நிர்வாகத்திடம் மதிப்பு பெறுவர். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வும் பாராட்டும் வந்துசேரும். குடும்பப் பெண்கள் கணவருடன் கருத்து வேறுபாடு கொள்வர் தவிர்ப்பதால் மட்டுமே குடும்ப ஒற்றுமை சீராகும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் விற்பனை, தாராள லாபம் அடைவர். அரசியல்வாதிகள், நியாய தர்மத்துடன் நடப்பர். சொந்த நலனை தியாகம் செய்வர். விவசாயிகளுக்கு மகசூல் உயர்ந்து கூடுதல் பணவரவை பெற்றுத்தரும். மாணவர்கள் லட்சியத்துடன் படித்து சிறந்த தேர்ச்சி பெறுவர். மொத்தத்தில் இது சிறப்பான மாதமே.

பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உஷார் நாள்: 27.1.12 பகல் 1.18 - 29.1.12 இரவு 12.15
வெற்றிநாள்: ஜன. 18, 23 நிறம்: பச்சை, வாடாமல்லி எண்: 1, 9


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by krishnaamma Sat Jan 14, 2012 9:37 pm

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை1,2)

உறவினர்களிடம் அதிக பாசமுள்ள கன்னிராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் புதன் அனுகூலக்குறைவான இடத்தில் சூரியனுடன் இருந்தாலும், நற்பலன் தருபவராக ராகு செயல்படுகிறார். சிந்தனையில் குழப்பமும் செயல்களில் தடுமாற்றமும் ஏற்படலாம். உங்கள் நலன் விரும்புபவர்களின் உதவியால் வாழ்வில் முன்னேற்றம் பெறுவீர்கள். அலட்சியப் பேச்சால் சிரமம் எதிர்கொள்வீர்கள். கவனம். இளைய சகோதர, சகோதரிகள் அன்புடன் நடந்து கொள்வர். வீடு, வாகனத்தில் பெறுகிற வசதியை முறையாகப் பயன்படுத்துவது போதுமானது. புத்திரர்கள் கவனக்குறைவு, பிடிவாத குணத்துடன் செயல்படுவர். அவர்களிடம் கடினமாக பேசினால் குடும்பத்தில் சச்சரவும், பிரிவும் ஏற்படலாம். உடல்நலம் சுமாராக இருக்கும். பணநிலையிலும். மனநிலையிலும் குறை இருக்கும். கணவன்,மனைவி ஒருவர் செயலில் ஒருவர் குற்றம் காணுகிற மனநிலை உருவாகும். சகிப்புத்தன்மை பின்பற்றுவது அவசியம். நண்பர்களிடம் ஒப்படைத்த சில செயல்பாடுகள் எதிர்மறை பலனை உண்டாக்கும். முக்கிய விவகாரங்களை நீங்களே கவனித்தால் தான் கால விரயம், பண நஷ்டத்தை குறைக்கலாம். தொழிலதிபர்கள் கூடுதல் கண்காணிப்புடன் நிர்வாகம் நடத்தினாலும் நடைமுறைச் செலவு அதிகரிப்பை தவிர்க்க இயலாது. லாபம் குறையும். வியாபாரிகள் போட்டியை எதிர்கொள்வதில் சிரமப்படுவர். விற்பனை, லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்களுக்கு பணியில் குளறுபடியும் கூடுதல் பணிச்சுமையும் உருவாகும். பணிபுரியும் பெண்கள் உடல்நலக்குறைவால் வேலைகளைச் செய்வதில் சிரமப்படலாம். குடும்பப் பெண்களுக்கு வீட்டுச்செலவுக்கு பணக்கஷ்டம் இருக்கும். குழந்தைகளின் திருமணச்செலவு, படிப்பு விஷயங்களில் எதிர்பார்த்ததை விட பட்ஜெட் இடிக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கடினமாக உழைத்தாலும் சுமாரான விற்பனையே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத வகையில் பதவி பொறுப்பு கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: நாகராஜாவை வழிபடுவதால் தொழில்சிறந்து பணவரவு சீராகும். உஷார் நாள்: 29.1.12 இரவு 12.15 மணி -1.2.12 காலை 11.32
வெற்றி நாள்: ஜனவரி 18, 19, 20 நிறம்: ஆரஞ்ச், வெள்ளை எண்: 6, 9


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by krishnaamma Sat Jan 14, 2012 9:38 pm

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)- நன்மை

நடை, உடை, பாவனையில் தனித்துவம் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ளார். சுக்கிரனுக்கு இடம் தந்த சனிபகவான், ராசிநாதன் சுக்கிரன் வீட்டில் பரிவர்த்தனை பெற்று உச்சநிலை பெறுகிறார். செவ்வாய், புதன், சுக்கிரன், குரு நற்பலன்களை வழங்குவர். தர்மம் தலைகாக்கும் என்ற சாஸ்திரமொழி இந்த மாதம் உங்களுக்கு பொருந்தும். நியாய, தர்மத்துடன் எதைச் செய்தாலும் பிரச்னை வராது. வீடு, வாகன வகையில் வளர்ச்சி மாற்றங்களை இந்த மாதம் செய்ய வேண்டாம். குடும்ப சூழ்நிலை சுபிட்சம் தருகிற நல்ல பாதையில் செல்லும். புத்திர வகையில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி இனிதாக நிறைவேறும். நண்பர்கள், உறவினர் மதிப்புடன் நடத்துவர். ஆரோக்கியம் வளரும். எதிரிகள் செய்தகெடுசெயல் முடங்கும். புதிய இனங்களில் பணவரவு கிடைக்கும். கடன்களை அடைக்க பாதை பிறக்கும். கணவன் மனைவி பாசத்துடன் நடந்து குடும்ப பெருமையைக் காத்திடுவர். வெளியூர் பயணம் நல்ல அனுபவங்களை பெற்றுத்தரும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளைச் செய்வர். உற்பத்தி, தரம் உயரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து விற்பனை அதிகரிக்கும். கொள்முதலுக்கு தேவையான பணம் புரளும். பணியாளர்களுக்கு திருப்திகரமான சம்பள உயர்வு கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். தாமதமான சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கூடுதல் அன்புடனும், தாராள பணவசதியுடனும் மகிழ்ச்சிகர வாழ்க்கை நடத்துவர். ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் உற்பத்தி, விற்பனை என்கிற இலக்கை அடைவர். நிலுவை பணவரவும் எளிதில் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி பெற யோகம் உண்டு. விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பிலும் லாபம் கூடும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் துன்பம் குறையும். நன்மை கூடும். உஷார் நாள்: 1.2.12 காலை 11.32 - 3.2.12 இரவு 10.40
வெற்றி நாள்: ஜனவரி 21, 22 நிறம்: சந்தனம், சிமென்ட் எண்: 3, 7


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by krishnaamma Sat Jan 14, 2012 9:38 pm

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)- சுமார்

ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துப் பேசும் குணமுள்ள விருச்சிகராசி அன்பர்களே!

சூரியன், சுக்கிரன் நல்லபலன் வழங்கும் விதத்தில் செயல்படுகின்றன. ராசிநாதன் செவ்வாய் ஜீவன ஸ்தானத்தில் சரியான நிலையில் இல்லை. தொழில் சார்ந்த வளர்ச்சியில் அதிக கவனம் கொள்வீர்கள். மனக்குழப்பத்தை சரிசெய்ய உறவினர்களின் ஆலோசனை உதவும். சமூகத்தில் மரியாதை இருக்கும். வீடு, வாகன வகையில் பராமரிப்பு பணி நிறைவேறும். புத்திரர்கள் சராசரி நடைமுறையை பின்பற்றுவர். பணவரவு சுமாராக இருக்கும். பூர்வசொத்தின் பேரில் கடன்பெறுகிற சூழ்நிலை உருவாகும். எதிரிகளிடம் விலகிப்போவதால் நன்மை பெற வழி வகுக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். கணவன்,மனைவி ஒற்றுமையுடன் நடப்பர். நண்பர்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளில் சிறப்பான மரியாதை இருக்கும். தொழிலதிபர்கள் அரசின் சட்டதிட்டங்களை அக்கறையுடன் பின்பற்றுவதால் சிரமம் அணுகாத நன்னிலை ஏற்படும். உற்பத்தியை உயர்த்துவதில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவீர்கள். வியாபாரிகள் விற்பனையின் அளவை உயர்த்த சலுகைத் திட்டங்களை அறிவிக்க வேண்டியிருக்கும். லாபம் சுமார். பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வழக்கமான சலுகைகளில் மாறுதல் இராது. பணிபுரியும் பெண்கள் பணியில் குளறுபடி வராமல் தவிர்க்க கூடுதல் கவனத்துடன் செயல்படவேண்டும். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு திண்டாட நேரிடும். சிக்கனம் தேவை. சுயதொழில் புரியும் பெண்களுக்கு கடும் முயற்சியின் பேரில் உற்பத்தி, விற்பனை சீராகும். அரசியல்வாதிகள் புகழ் உயரும். புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு கூடுதல் மகசூல் உண்டு. கால்நடை வளர்ப்பிலும் லாபம் உயரும். மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.

பரிகாரம்: மாரியம்மனை வழிபடுவதால் வீண் செலவு குறையும். மனம் நிம்மதி பெறும். உஷார் நாள்: 3.2.12 இரவு 10.40 - 6.2.12 காலை 7.14
வெற்றி நாள்: ஜனவரி 23, 24 நிறம்: ஆரஞ்ச், வெள்ளை எண்: 2, 7


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by krishnaamma Sat Jan 14, 2012 9:40 pm

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)- சூப்பர்

சமயோசிதமாக பேசி அனைவரையும் கவரும் தனுசுராசி அன்பர்களே!

குரு, கேது, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் உங்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யும் விதமாக நல்ல பலன்களை வழங்குவர். ராசிக்கு இரண்டாம் இடத்தில் ராசியின் தர்மகர்ம அதிபதிகளான சூரியன், புதன் கிரகங்களின் நிலை சரியில்லை. பிறரை அவதூறு செய்யும் எண்ணம் வளரும். இதைத் தவிர்த்தால் நட்பு, உறவு நிலையில் விரிசல் விழாது. புதுமை கருத்துடைய சிலர் புதிய நண்பர்களாக கிடைப்பர். வீடு, வாகன வகை திருப்திகரமாக இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வீர்கள். புத்திரர்களின் விருப்பங்களை நிறைவேற்ற கூடுதல் செலவாகும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். உடல்நலம் பாதிக்கப்படலாம். கவனம். நன்னடத்தை குறைவான சிலரால் அவப்பெயர் வரலாம். அவர்களிடமிருந்து ஒதுங்குங்கள். தம்பதியர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் சந்தோஷ சூழ்நிலையை உருவாக்குவர். தொழிலதிபர்களுக்கு உற்பத்தி உயரும். புதிய ஒப்பந்தங்களை பெறுவர். கடன்களை அடைக்கு மளவு லாபம் இருக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை சிறந்து அதிக லாபம் கிடைக்கும். புதிய வாகனம், உபகரணம் வாங்குவீர்கள். பணியாளர்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்வர். சலுகைகள் எளிதாக கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறம்பட செயல்பட்டு நல்ல வருமானம் பெறுவர். குடும்பப் பெண்களுக்கு எதிர்பாராத வகையில் ஆபரணச் சேர்க்கை இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் நல்ல மூலதனத்துடன் அபிவிருத்தி பணிபுரிவர். விற்பனை அதிகரித்து லாபம் கூடும். அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும். அரசு தொடர்பான இனங்கள் நிறைவேற அனுகூலம் வளரும். விவசாயிகளுக்கு மகசூல் உயர்ந்து கால்நடை வளர்ப்பிலும் நல்ல லாபம் வரும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நற்பெயர் பெறும் விதத்தில் சிறப்பாகப் படிப்பர்.

பரிகாரம்: முருகனை வழிபடுவதால் தொழில் அபிவிருத்தி உண்டாவதோடு லாபம் கூடும். உஷார் நாள்: 6.2.12 காலை 7.14 - 8.2.12 பகல் 1.22
வெற்றி நாள்: ஜனவரி 26, 27 நிறம்: நீலம், சிவப்பு எண்: 1, 8


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by krishnaamma Sat Jan 14, 2012 9:40 pm

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)& சுபம்

கருணை மனதுடன் பிறருக்கு உதவும் மகரராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சனிபகவான் துலாம் வீட்டில் உச்ச பலத்துடன் அமர்ந்து குரு பார்வை பெற்றுள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், ராகு செயல்படுகின்றனர். உங்களது ஒவ்வொரு செயலும் நல்லவர்களின் பார்வையை ஈர்க்கும் விதமாக அமையும். இதனால் பொறாமை மனம் கொண்டவர்கள் உங்களை அவதூறு பேசுவர். பொறுமை காப்பதால் சிரமம் தவிர்க்கலாம். இளைய சகோதர, சகோதரிகளால் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. அவர்களின் செயல்பாட்டில் அதிருப்தி கொள்வீர்கள். வீடு, வாகன வகையில் பராமரிப்பு பணிகளை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது. புத்திரர்கள் நடை, உடை, பாவனை மற்றும் படிப்பில் முன்னேற்றம் காண்பர். எதிரிகளால் உங்களுக்கு சிரமமே. கவனம். உடல்நிலை பாதிப்பால் மருத்துவச் செலவாகும். அலைச்சல் பயணங்களை பெருமளவில் குறைத்துக்கொள்வீர்கள். கணவன், மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு நடக்கும். இன்ப துன்பங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். தொழிலதிபர்கள் நிறுவன வளர்ச்சிக்குரிய இயந்திரங்களை வாங்குவர்.உற்பத்தி சிறந்து பணவரவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த விற்பனை, நல்ல லாபம் கிடைக்கும். பணியாளர்கள், பிறரை நம்பாமல் நேரடிபார்வையில் பணிகளைச் செய்ய வேண்டும். நிர்வாகத்திடம் உள்ள மதிப்புக்கு பங்கம் வராது. பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்பப் பெண்களுக்கு உறவினர்கள் தொல்லை தருவர். பொறுமை வேண்டும். சுய தொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை அதிகரித்து தாராள லாபம் காண்பர். அரசியல்வாதிகள் கடந்த கால பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கப்பெறுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூல் கிடைக்கும். மாணவர்கள் படிப்பு, விளையாட்டில் கவனமாக செயல்படுவது அவசியம்.

பரிகாரம்: லட்சுமியை வழிபடுவதால் பணவரவு அதிகரிக்கும். உஷார் நாள்: 8.2.12 பகல் 1.22 - 10.2.12 மாலை 5.34
வெற்றிநாள்: ஜனவரி 27, 28, 29 நிறம்: ரோஸ், வெள்ளை எண்: 1, 2


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்! Empty Re: தை பிறந்தால் வழி பிறக்கும்: 12 ராசிகளுக்கான பலனும் பரிகாரமும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum