Latest topics
» நானொரு சிறு புள்ளிby ayyasamy ram Today at 12:08
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன்-மோடி
4 posters
Page 1 of 1
எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன்-மோடி
எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன்-மோடி
எதிர்க்கட்சிகள் ஆண்டு வரும் மாநில அரசுகளையும், அந்த மாநிலங்களையும் ஆசிர்வதிக்க மத்திய அரசு மறுக்கிறது. அவர்களுக்கு நல்லது செய்ய அது விரும்புவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
ஜெய்ப்பூரில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு மோடி உரை நிகழ்த்தினார். அவரது பேச்சுக்கு கூட்டத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. மேசைகளைத் தட்டி அனைவரும் மோடி பேச்சை ரசித்துக் கேட்டனர். முதலில் எழுதி வைத்த உரையை வாசித்தார் மோடி.ஆனால் மத்திய அரசைத் தாக்கிப் பேசியதற்கு கூட்டத்தினரிடம் அமோக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து உரையை விட்டு விட்டு அவராகவே பேசத் தொடங்கினார்.
மோடி தனது பேச்சில் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். மாநிலங்கள் வளருவதற்கும், முன்னேறுவதற்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மோடி பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆதரிக்கவோ, ஆசிர்வதிக்கவோ மத்திய அரசு விரும்புவதில்லை. இன்று எனது குஜராத் மாநிலம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க எனது மாநிலத்தின் கடும் உழைப்பும், எங்களது சுய நிதியாதாரங்களுமே முழுக் காரணமும் ஆகும்.மத்திய அரசின் பங்கு இதில் ஒரு துளியும் கிடையாது.
மத்திய அரசு, பிரதமர் ஆகியோரின் ஆசிர்வாதங்கள் எனது அரசுக்கு இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் கூறுகிறார். ஆனால் எனது அரசுக்கு அது கிடைக்கவில்லை. எங்களுக்கு மத்திய அரசு மற்றும் பிரதமரின் ஆசிர்வாதம் இல்லை. ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கிறது. எங்களால் எங்களது சொந்தக் காலில் நிற்கக் கூடிய பலம் உள்ளதால் நாங்கள் பிழைத்து விட்டோம். எங்களுக்கு மத்திய அரசு எதுவும் தருவதில்லை. எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே செய்து கொள்ள வேண்டிய நிலை. நாங்களாகத்தான் இன்று இந்த அளவுக்கு முன்னேறி வந்துள்ளோம்.
வளர்ச்சித் திட்டங்களுக்காக நாங்கள் மத்திய அரசிடம் எதையும் கேட்டு நிற்பதில்லை. ஒருமுறை, குஜராத் மாநிலத்திற்கென ஒரு தனி செயற்கைக் கோளை தாருங்களேன் என்று கேட்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். அதைப் படித்து விட்டு பிரதமர் குழம்பி விட்டாராம். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவரது குழப்பமும் நியாயம்தான். வழக்கமாக ஒரு மாநில முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி என்ன கேட்பார்? நிதி கேட்பார். ஆனால் நான் நிதி கேட்பதில்லை. குஜராத்துக்கென தனியாக சாட்டிலைட் கேட்டேன். அதுதான் அவரை குழப்பி விட்டது.
இருந்தாலும் குஜராத்துக்கென தனியாக 36 மெகாஹெர்ட்ஸ் கியூபான்ட் டிரான்ஸ்பான்டரை ஒதுக்கிக் கொடுத்தார்கள். இதை வைத்துக் கொண்டு தொலைதூரக் கல்வித் திட்டத்தை மிகப் பெரிய அளவில் நாங்கள் குஜராத்தில் விரிவுபடுத்தினோம். மின் ஆளுமையை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். டெலிமெடிசின் திட்டத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறோம்.
இதேபோல ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில், பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பாலைவனப் பகுதிகளில் சூரிய மின்சார உற்பத்திப் பிரிவுகளை தொடங்குங்கள் என்று நான் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கோரிக்கை விடுத்தேன். அதற்கு என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஒன்றுமே நடக்கவில்லை, அதுதான் நடந்தது. இன்று வரை எனக்கு பிரதமரிடமிருந்து பதிலே வரவில்லை.
பொருளாதார சீர்குலைவு என்று பயப்படுகிறார்கள். பயப்படத் தேவையில்லை. இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நமது திறமை, தகுதி, வேகம் உள்ளிட்ட அனைத்தையும் பரீட்சித்துப் பார்க்க இந்த பொருளாதார சவால்களை நாம் துணிச்சலுடன் ஏற்று முறியடிக்க வேண்டும். அதற்கு துணிச்சல் மட்டுமே தேவை. இருந்தால் சாதிக்கலாம்.
2008ம் ஆண்டு உலகை பொருளாதார பின்னடைவு தாக்கியபோது ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்டுங்கள் என்று பிரதமருக்கு நான் யோசனை தெரிவித்தேன். அவரும் அதை வரவேற்றார். மேலும் குஜராத்தில் நாங்களாகவே இதற்கு முன்னோடியாக ஒரு நடவடிக்கையை எடுத்தோம். 100 நாடுகளைச் சேர்ந்த உலகளாவிய முதலீட்டாளர்களை வரவழைத்து பேசினோம், விவாதித்தோம். அதன் இறுதியில் என்ன நடந்தது என்று தெரியுமா? 450 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இப்போது ராஜஸ்தானை விட நாங்கள்தான் அதிக அளவிலான சூரிய சக்தியை உற்பத்தி செய்கிறோம். ராஜஸ்தானுக்கு ஆண்டுக்கு 8500 மெகாவாட் மின்சாரம்தான் சூரிய சக்தி மூலம் கிடைக்கிறது. ஆனால் நாங்கள் அதை விட கூடுதலாக 4000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். 2012 இறுதியில் இது 7000 மெகாவாட்டாக உயரும்.
மின்தடை என்று வேறு மாநிலத்தவர் யாராவது சொன்னால் குஜராத் மக்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் அவர்கள் ஒருமுறை கூட மின்சாரம் நின்று பார்த்ததில்லை. குஜராத்தின் வளர்ச்சியும், செழுமையும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும். வலிமையான, பொலிவான இந்தியாவாக நமது நாடு மாற வேண்டும் என்றார் மோடி.
அரை மணி நேரத்திற்குப் பேசினார் மோடி.அவரது பேச்சுக்கு கூட்டத்தினர் மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தது கூடியிருந்த மத்திய அரசின் பிரதிநிதிகளையும், காங்கிரஸ் முதல்வர்களையும் நெளிய வைத்து விட்டது. அதை விட உச்சமாக மோடி பேசி முடித்தபோது அத்தனை பேரும் எழுந்து நின்று சில விநாடிகள் தொடர்ந்து பலத்த கைதட்டல் கொடுத்து மோடியைக் கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் - ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதிர்க்கட்சிகள் ஆண்டு வரும் மாநில அரசுகளையும், அந்த மாநிலங்களையும் ஆசிர்வதிக்க மத்திய அரசு மறுக்கிறது. அவர்களுக்கு நல்லது செய்ய அது விரும்புவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
ஜெய்ப்பூரில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு மோடி உரை நிகழ்த்தினார். அவரது பேச்சுக்கு கூட்டத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. மேசைகளைத் தட்டி அனைவரும் மோடி பேச்சை ரசித்துக் கேட்டனர். முதலில் எழுதி வைத்த உரையை வாசித்தார் மோடி.ஆனால் மத்திய அரசைத் தாக்கிப் பேசியதற்கு கூட்டத்தினரிடம் அமோக வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து உரையை விட்டு விட்டு அவராகவே பேசத் தொடங்கினார்.
மோடி தனது பேச்சில் மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். மாநிலங்கள் வளருவதற்கும், முன்னேறுவதற்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மோடி பேசுகையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆதரிக்கவோ, ஆசிர்வதிக்கவோ மத்திய அரசு விரும்புவதில்லை. இன்று எனது குஜராத் மாநிலம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க எனது மாநிலத்தின் கடும் உழைப்பும், எங்களது சுய நிதியாதாரங்களுமே முழுக் காரணமும் ஆகும்.மத்திய அரசின் பங்கு இதில் ஒரு துளியும் கிடையாது.
மத்திய அரசு, பிரதமர் ஆகியோரின் ஆசிர்வாதங்கள் எனது அரசுக்கு இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் கூறுகிறார். ஆனால் எனது அரசுக்கு அது கிடைக்கவில்லை. எங்களுக்கு மத்திய அரசு மற்றும் பிரதமரின் ஆசிர்வாதம் இல்லை. ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் துணை நிற்கிறது. எங்களால் எங்களது சொந்தக் காலில் நிற்கக் கூடிய பலம் உள்ளதால் நாங்கள் பிழைத்து விட்டோம். எங்களுக்கு மத்திய அரசு எதுவும் தருவதில்லை. எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே செய்து கொள்ள வேண்டிய நிலை. நாங்களாகத்தான் இன்று இந்த அளவுக்கு முன்னேறி வந்துள்ளோம்.
வளர்ச்சித் திட்டங்களுக்காக நாங்கள் மத்திய அரசிடம் எதையும் கேட்டு நிற்பதில்லை. ஒருமுறை, குஜராத் மாநிலத்திற்கென ஒரு தனி செயற்கைக் கோளை தாருங்களேன் என்று கேட்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். அதைப் படித்து விட்டு பிரதமர் குழம்பி விட்டாராம். என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. அவரது குழப்பமும் நியாயம்தான். வழக்கமாக ஒரு மாநில முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி என்ன கேட்பார்? நிதி கேட்பார். ஆனால் நான் நிதி கேட்பதில்லை. குஜராத்துக்கென தனியாக சாட்டிலைட் கேட்டேன். அதுதான் அவரை குழப்பி விட்டது.
இருந்தாலும் குஜராத்துக்கென தனியாக 36 மெகாஹெர்ட்ஸ் கியூபான்ட் டிரான்ஸ்பான்டரை ஒதுக்கிக் கொடுத்தார்கள். இதை வைத்துக் கொண்டு தொலைதூரக் கல்வித் திட்டத்தை மிகப் பெரிய அளவில் நாங்கள் குஜராத்தில் விரிவுபடுத்தினோம். மின் ஆளுமையை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். டெலிமெடிசின் திட்டத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறோம்.
இதேபோல ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில், பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பாலைவனப் பகுதிகளில் சூரிய மின்சார உற்பத்திப் பிரிவுகளை தொடங்குங்கள் என்று நான் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கோரிக்கை விடுத்தேன். அதற்கு என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஒன்றுமே நடக்கவில்லை, அதுதான் நடந்தது. இன்று வரை எனக்கு பிரதமரிடமிருந்து பதிலே வரவில்லை.
பொருளாதார சீர்குலைவு என்று பயப்படுகிறார்கள். பயப்படத் தேவையில்லை. இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நமது திறமை, தகுதி, வேகம் உள்ளிட்ட அனைத்தையும் பரீட்சித்துப் பார்க்க இந்த பொருளாதார சவால்களை நாம் துணிச்சலுடன் ஏற்று முறியடிக்க வேண்டும். அதற்கு துணிச்சல் மட்டுமே தேவை. இருந்தால் சாதிக்கலாம்.
2008ம் ஆண்டு உலகை பொருளாதார பின்னடைவு தாக்கியபோது ஒரு வட்ட மேசை மாநாட்டைக் கூட்டுங்கள் என்று பிரதமருக்கு நான் யோசனை தெரிவித்தேன். அவரும் அதை வரவேற்றார். மேலும் குஜராத்தில் நாங்களாகவே இதற்கு முன்னோடியாக ஒரு நடவடிக்கையை எடுத்தோம். 100 நாடுகளைச் சேர்ந்த உலகளாவிய முதலீட்டாளர்களை வரவழைத்து பேசினோம், விவாதித்தோம். அதன் இறுதியில் என்ன நடந்தது என்று தெரியுமா? 450 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இப்போது ராஜஸ்தானை விட நாங்கள்தான் அதிக அளவிலான சூரிய சக்தியை உற்பத்தி செய்கிறோம். ராஜஸ்தானுக்கு ஆண்டுக்கு 8500 மெகாவாட் மின்சாரம்தான் சூரிய சக்தி மூலம் கிடைக்கிறது. ஆனால் நாங்கள் அதை விட கூடுதலாக 4000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். 2012 இறுதியில் இது 7000 மெகாவாட்டாக உயரும்.
மின்தடை என்று வேறு மாநிலத்தவர் யாராவது சொன்னால் குஜராத் மக்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் அவர்கள் ஒருமுறை கூட மின்சாரம் நின்று பார்த்ததில்லை. குஜராத்தின் வளர்ச்சியும், செழுமையும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும். வலிமையான, பொலிவான இந்தியாவாக நமது நாடு மாற வேண்டும் என்றார் மோடி.
அரை மணி நேரத்திற்குப் பேசினார் மோடி.அவரது பேச்சுக்கு கூட்டத்தினர் மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தது கூடியிருந்த மத்திய அரசின் பிரதிநிதிகளையும், காங்கிரஸ் முதல்வர்களையும் நெளிய வைத்து விட்டது. அதை விட உச்சமாக மோடி பேசி முடித்தபோது அத்தனை பேரும் எழுந்து நின்று சில விநாடிகள் தொடர்ந்து பலத்த கைதட்டல் கொடுத்து மோடியைக் கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் - ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன்-மோடி
ஆச்சரியமாக இருக்கிறது .... இந்த அளவுக்கு ஒரு மாநிலம் தன்னிறைவு பெற முடியுமா ....பிரசன்னா wrote:மின்தடை என்று வேறு மாநிலத்தவர் யாராவது சொன்னால் குஜராத் மக்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் அவர்கள் ஒருமுறை கூட மின்சாரம் நின்று பார்த்ததில்லை. குஜராத்தின் வளர்ச்சியும், செழுமையும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும். வலிமையான, பொலிவான இந்தியாவாக நமது நாடு மாற வேண்டும் என்றார் மோடி.
Re: எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன்-மோடி
ராஜா wrote:ஆச்சரியமாக இருக்கிறது .... இந்த அளவுக்கு ஒரு மாநிலம் தன்னிறைவு பெற முடியுமா ....பிரசன்னா wrote:மின்தடை என்று வேறு மாநிலத்தவர் யாராவது சொன்னால் குஜராத் மக்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் அவர்கள் ஒருமுறை கூட மின்சாரம் நின்று பார்த்ததில்லை. குஜராத்தின் வளர்ச்சியும், செழுமையும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவ வேண்டும். வலிமையான, பொலிவான இந்தியாவாக நமது நாடு மாற வேண்டும் என்றார் மோடி.
முடியும் நண்பரே... அரசியல் வியாதிகள் ஒழுங்காக இருந்தால் முடியும்...
இந்த ஆட்சியில் தமிழகம் எவ்வளவு முன்னேற்றம் அடைகிறது என்று பார்போம் ...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன்-மோடி
மோடியின் தொலைநோக்குப் பார்வை, ஒவ்வொரு மாநிலதிற்கும் தேவை. தன்னலம் ,தன் குடும்ப நலம் கருதாது நாட்டிற்கு உழைக்க ஒவ்வொரு மாநிலதிற்கும் ஒரு மோடி இருந்தால் போதும். கனம் அப்துல் கலாம் கனவுகள் உண்மையாகும். மோடிக்கு ஒரு பெரிய ஓஓஓஓஓ
ரமணியன்.
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: எல்லோரும் நிதி கேட்பார்கள், நான் 'சாட்டிலைட்' கேட்டேன்-மோடி
மோடிக்கு வாழ்த்துக்கள்.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Similar topics
» ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
» சிவாஜி சாரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்”சத்யராஜ்”
» ஐபிஎல் நிதி முறைகேடு: பதில் மனு தாக்கல் செய்தார் மோடி
» எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்
» உருகும் நொடியிலே நான் உறைந்து கிடக்கிறேன்.. காதல் மயக்கத்தில் நிதி அகர்வால்..
» சிவாஜி சாரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்”சத்யராஜ்”
» ஐபிஎல் நிதி முறைகேடு: பதில் மனு தாக்கல் செய்தார் மோடி
» எல்லோரும் ஊங்க் கொட்டுங்க ..... நான் ஒரு கதை சொல்லுறேன்
» உருகும் நொடியிலே நான் உறைந்து கிடக்கிறேன்.. காதல் மயக்கத்தில் நிதி அகர்வால்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|