ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மிருகங்கள்!

2 posters

Go down

மனித மிருகங்கள்! Empty மனித மிருகங்கள்!

Post by கேசவன் Wed Jan 11, 2012 1:34 pm

யானைகளின் பாதையில் தனியார் நிறுவனங்கள் அமைத்துள்ள கதிரொளி மின்வேலிகளை அகற்றுங்கள்' என்று சென்னை உயர் நீதிமன்றம் சென்ற வாரம் உத்தரவிட்டுள்ளது. இயற்கை ஆர்வலர் கொடுத்திருந்த மனுவைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம். "மனிதன் தன் பேராசை காரணமாகவும் தன் சுகத்துக்காகவும் யானைகள் மற்றும் வனவிலங்குகளின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதைக்' கண்டிக்கவும் செய்துள்ளது.

இந்தத் தீர்ப்பை நிறைவேற்றும் பொறுப்பு இத்தனை ஆண்டுகளாக இந்தக் குற்றங்களைக் கண்டும் காணாமல் இருந்துவந்த தமிழக வனத்துறை அதிகாரிகளிடம் தரப்பட்டிருக்கிறது. இதைச் செய்யத் தவறும் வனத்துறை அதிகாரிகளைப் பொறுப்பாக்கித் தண்டனை விதிக்கவும் முற்பட்டால் மட்டுமே இந்தக் குற்றங்கள் ஒரு முடிவுக்கு வரும். அதுவரை, மின்வேலிகளில் சிக்கி யானைகள் இறந்து போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய மின்வேலிகள் பெரும்பாலும், தேயிலைத் தோட்ட நிறுவனங்களால் அமைக்கப்பட்டவை. இவை குறித்து ஆய்வு நடத்த அதிகாரிகள் நுழைவதற்கே ஆயிரம் தடைகள் என்றால், மற்றவர்களின் நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை. ஏதோ தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டும் பின்வாங்காமல் செயல்படும் ஆர்வலர்கள் மட்டுமே இன்னமும் யானைகளுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய கதிரொளி மின்வேலிகளை அமைப்பதால், பாதிக்கப்படுவது ஏழைகள்தான். மின்வேலிகள் இருப்பதை உணர்ந்து மாற்றுப் பாதையை யானைகள் தேடும்போது அவற்றின் கோபத்துக்கு இலக்காகும் மக்கள் ஏழைகளாகவும், காட்டுவாசிகளாகவும் இருக்கின்றனர். மின்வேலி அமைத்த நிறுவனத்தினர் எந்தப் பாதிப்பையும் அடைவதில்லை. பொருள் இழப்பும்கூட அவர்களுக்குக் கிடையாது. ஏனென்றால், இறந்தவர் குடும்பங்களுக்கு கருணைத் தொகையை தமிழக அரசு அல்லவா வழங்கிக் கொண்டிருக்கிறது!

யாரோ செய்யும் தவறுக்கு யானைகள் கோபமடைந்து யாரோ ஒருவரைக் கொல்ல, அதற்கு யாரோ ஒருவர் கருணைத் தொகை வழங்குவது என்கிற நிலைமையை மாற்றி, இந்தக் கருணைத் தொகை மற்றும் இழப்பீடுகளை, யானைப் பாதையை மறித்துள்ள தேயிலைத் தோட்டங்கள், நிறுவனங்கள்தான் ஏற்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தினால் அது சரியான, நியாயமான செயலாக இருக்கும்.

காலம்காலமாக யானைப் பாதையில் காட்டுவாசிகள் வாழ்ந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் யானைகள் அவர்களை வாரம் ஒருவராகக் கொன்று போட்டதில்லை. மின்வேலித் தடைகளும், மாற்றுப்பாதையைத் தேடும் ஆத்திரமும்தான் அவற்றை மதம் கொள்ளச் செய்கின்றன; மனிதர்களைக் கொல்ல வைக்கின்றன.

யானைகள் ஊருக்குள் நுழைய முடியாதபடி குழி வெட்டும் திட்டம் சில இடங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மின்வேலிகள் அமைத்தது எப்படித் தவறான செய்கையோ அதற்கு ஒப்பானது யானைகள் நடமாட முடியாமல் குழி பறிப்பதும்! மக்கள் பணத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கத்தான் அரசு இதைச் செய்கின்றது என்றாலும்கூட, இந்தப் பள்ளங்களில் யானைகள், குட்டியானைகள் விழுந்தால், அவை எழவே முடியாது. இதற்கும் மின்வேலிக்கும் என்ன பெரிய வேறுபாடு? மின்வேலி சட்டத்துக்கு அப்பாற்பட்டது. குழிவெட்டுதல் அரசே சட்டப்படி செய்வது. அவ்வளவுதான்.

இந்தவேளையில், எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள "யானை டாக்டர்' என்ற கதையை நினைவுகூர வேண்டியுள்ளது. நாட்டின் மீது அதிகாரம் செலுத்துவதைப் போலக் காட்டின் மீது மனிதன் அதிகாரம் செலுத்த முடியாது என்பதுதான் இக்கதையின் அடிப்படைக் கருத்து. இருப்பினும் இதில் யானைகள் பற்றி சொல்லப்படும் இரண்டு விஷயங்கள் சிந்திக்க வேண்டியவை.

முதலாவதாக, காட்டுக்குள் குடித்துவிட்டு வீசப்படும் பீர், மது பாட்டில்களின் கண்ணாடிச் சில்லுகள், பல டன் எடையுள்ள ஒரு யானையின் கால்களுக்குள் மிக ஆழமாகக் குத்திக் கொள்ளும்போது அந்தப் புண் புரையோடி யானை நடக்க முடியாமல் சாய்ந்து, பட்டினியால் சாகும் வேதனையான நிலை. தன் காலில் குத்திய கண்ணாடிச் சில்லுகளை தானே எடுத்துப்போட்டு வழிநடையைத் தொடர மனித விலங்கினால் மட்டுமே முடியும்.

இரண்டாவதாக, கிரேன்களை மனிதன் கண்டுபிடித்து பல டன் எடை கொண்ட பொருள்களை எளிதாகக் கையாளும் இன்றைய நவீன உலகில், எதற்காக யானைகளைச் சுமைதூக்கப் பயன்படுத்த வேண்டும்? எப்போதும் பசுமையான சூழலில் வாழவேண்டிய யானைகள் எதற்காக கோவில்களில் அலங்காரப் பொருளாக இருக்க வேண்டும்? என்கின்ற கேள்விகள்.

கோவில்யானைகளை இல்லாமல் செய்துவிடுவது சாத்தியமில்லை. கோவில் விழாக்களும், யானையின் மீது சுவாமி ஊர்வலமும் கலாசாரத்தில் கலந்துவிட்டதால் இதைத் தவிர்க்க இயலாது. ஆனால், யானைகளைச் சுமை தூக்கப் பயன்படுத்தாமல் இருக்கச் செய்வதும், காடுகளில் பீர் பாட்டில்களை உடைக்காமல் இருக்கச் செய்வதும் சாத்தியம்.

யானைகள்-மனிதர்கள் மோதல், சாதல் முடிவுக்கு வர வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி, அவற்றை அதன் வழியில் வாழ விடுவதுதான். அதன் இனப்பெருக்கம் மற்றும் இயல்பான வாழ்க்கை, நடமாட்டத்துக்கான இடம் ஆகியவற்றிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிவிடுவதுதான்.

http://ujiladevinandavanam.forumta.net/t336-topic


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனித மிருகங்கள்! 1357389மனித மிருகங்கள்! 59010615மனித மிருகங்கள்! Images3ijfமனித மிருகங்கள்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மனித மிருகங்கள்! Empty Re: மனித மிருகங்கள்!

Post by சார்லஸ் mc Wed Jan 11, 2012 3:14 pm

நல்ல கட்டுரை.

சம்பந்தப்பட்டவா்கள் உணருவாா்களா?!

உணராதபட்சத்தில் அவா்கள் மிருகத்தை விட கேவலமானவா்ளாக கருதப்பட வேண்டியவா்கள்.


மனித மிருகங்கள்! 154550மனித மிருகங்கள்! 154550மனித மிருகங்கள்! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மனித மிருகங்கள்! 154550மனித மிருகங்கள்! 154550மனித மிருகங்கள்! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum