ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி.

3 posters

Go down

சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. Empty சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி.

Post by பிரசன்னா Wed Jan 11, 2012 12:55 pm

சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி.

பா.ம.க-வுக்கும் மருத்துவர் ராம​தாஸுக்​கும் இது போதாத காலமோ? சட்டமன்றத் தேர்தல் தோல்வி, கட்சிக்குள் பிளவு என இடி மேல் இடி விழுந்து வரும் வேளையில்... 2006-ம் ஆண்டு அமைச்சர் சி.வி.சண்முகத்தைக் கொலை செய்ய முயன்ற வழக்கு... எங்கெங்கோ சுற்றி, சி.பி.ஐ. கரங்களுக்கு மாறி, இன்னும் சில தினங்களில் தைலாபுரத் தோட்டத்துக்குள் விசாரணைக்காக போலீஸார் நுழையலாம் என்று தகவல்!

தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம். 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் சி.வி.சண்முகமும், பா.ம.க. சார்பில் கருணாநிதி என்பவரும் வேட்பாளர்களாகக் களத்தில் நின்றனர். அப்போது தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்தது பா.ம.க.!

சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. P8வாக்குப் பதிவு நடந்த மே எட்டாம் தேதி இரவு... சி.வி.சண்முகம் தனது ஆதரவாளர்களுடன்திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள அவரது வீட்டு முன்பு பேசிக்கொண்டு இருந்தார். அப்போது ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், சி.வி.சண்முகத்தைத் தாக்க முயல.... அங்கு நின்ற காரின் கீழே படுத்துத் தன்னைக் காத்துக்கொண்டார். சி.வி.சண்முகத்துக்குப் பதிலாக அவரது உறவினரும் அ.தி.மு.க. தொண்டருமான முருகானந்தத்தை அந்தக் கும்பல் வெட்டிச் சாய்த்தது. இந்த சம்பவம் தொடர்பாக... பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், மருமகன் பரசுராமன், ராமதாஸின் தம்பி சீனுவாசன், பா.ம.க. வேட்பாளர் கருணாநிதி, பிரதீபன், ரகு, குமரன் உள்ளிட்ட பா.ம.க-வைச் சேர்ந்த 21 பேர் மீது ரோசனை காவல் நிலையத்தில் புகார் செய்தார் சி.வி.சண்முகம்.

இந்தக் கொலை வழக்கு பற்றி திண்டிவனம் பகுதி அ.தி.மு.க. பிரமுகர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். ''அப்போது தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருந்த காரணத்தினாலும், மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு பா.ம.க-வின் ஆதரவு அவசியம் தேவைப்பட்டதாலும், ராமதாஸின் வற்புறுத்தலின்பேரில் அந்த வழக்கில் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டு இருந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனுவாசன், கருணாநிதி, பிரதீபன் ஆகிய ஆறு பேரையும் வழக்கில் இருந்து நீக்கிவிட்டு... ரகு, குமரன், சிவா உள்ளிட்ட 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். நீக்கப்பட்ட ஆறு நபர்களையும் மீண்டும் வழக்கில் சேர்க்கக் கோரி, திண்டிவனம் விரைவு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சி.வி.சண்முகம். இந்த மனு விசாரணையில் இருந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறி நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தார் ராமதாஸ். நாடாளுமன்றத் தேர்தலும் முடிந்தது. இன்னொரு பக்கம் வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடந்தது. அப்போது சண்முகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. P9இதை எதிர்த்து சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்தார். அதில், ''அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தைக் கொலை செய்த வழக்கிலும், என்னைக் கொலை செய்ய முயன்ற வழக்கிலும் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட ஆறு நபர்களின் பெயரைச் சேர்க்க வேண்டும். வழக்கு தொடர்பாக போலீஸில் பதிவு செய்யப்​பட்ட 'கேஸ் டயரி'யை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்'' எனக் கோரி இருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடுத்தவுடன் ஆத்திரமடைந்த ராமதாஸ், 'என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் கொலைப் பழி சுமத்தும் கட்சியுடன் நான் எப்படி கூட்டணி வைத்துக்​கொள்வது?’ எனக் கூறி அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, மறுவிசாரணை நடத்துவது தொடர்பாக திண்டி​வனம் நீதிமன்றத்துக்கு ஓர் உத்தரவு பிறப்பித்தார். திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரகாஷ் உத்தரவு இட்ட பிறகும் போலீசார் மந்தகதியில் விசாரணையைச் செய்து வந்தார்கள். மீண்டும், உயர் நீதிமன்றம் சென்ற சி.வி.சண்முகம், 'ராமதாஸ் உள்ளிட்ட ஆறு நபர்களின் பெயர்களை வழக்கில் சேர்க்க வேண்டும். சி.பி.ஐ. விசாரணையும் வேண்டும்’ என்று மனுத்தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது'' என்று முன்கதைச் சுருக்கத்தைச் சொல்கிறார்கள்.

அதன்பிறகு, திண்டிவனம் வந்த சி.பி.ஐ. டீம், தங்களது விசாரணையைத் துரிதப்படுத்தினர். அதன் விளைவாக சில தினங்களுக்கு முன்பு நடராஜன், இளஞ்செழியன், கோபி, பன்னீர்செல்வம், ஆனந்த் உட்பட எட்டு பேரைக் கைதுசெய்து, செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இப்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது ஸ்பாட்டில் இருந்த பத்திரிகையாளர்களிடமும், நேரடி சாட்சிகளிடமும் சி.பி.ஐ. டீம் கடந்த சில நாட்களாகத் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

''இப்போது கைது செய்யப்பட்டவர்கள்தான் நேரடியாக சி.வி. சண்முகத்தின் வீட்டுக்கு வந்தவர்கள். இவர்களை அனுப்பி வைத்தது யார் என்ற கேள்விக்கு சி.பி.ஐ. வரும்போது நடக்கப்போகும் கைதுப்படலம் தமிழகத்தை அதிரவைக்கும்'' என்கிறது போலீஸ் இப்போதே!''இந்த வழக்கின் மிக முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ரகு என்பவர் மர்மமான விபத்தில் இறந்து போனார். அதன் பின்னணிக்கும் இந்தச் சம்பவத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது'' என்றும் சொல்கிறார்கள்.

இந்த வழக்கு சம்பந்தமாக கல்வி அமைச்சர் சி.வி.சண்மு​கத்திடம் பேசியபோது, ''ஆறு ஆண்டுகளுக்கு முன், என் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலுக்காகவும், அப்போது என்னோடு இருந்த அ.தி.மு.க. தொண்டர் கொலை செய்யப்பட்டதற்காகவும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் போலீஸில் புகார் அளித்திருந்தேன். ஆனால், விசாரணை சரியான முறையில் நடக்காமல், அரசியல் செல்வாக்கால் அவர்கள் தப்பித்துக்கொண்டனர். அதன்பிறகு, நான் உயர் நீதிமன்றத்துக்குச் சென்று போராடியதன் விளைவு, அந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாறியது. கைது செய்யப்பட்டு இருப்பவர்கள் கூலிப் படையினர்தான். அவர்களை அனுப்பியவர்களும், கொலைக்குக் காரணமானவர்களும் யார் என்பது விரைவில் மக்களுக்குத் தெரியும்'' என்றார் சுருக்கமாக.

இதுவரை பாதுகாப்புக்காக மட்டுமே தைலாபுரம் தோட்டத்துக்குள் நுழைந்த போலீஸார், முதன் முறையாக விசாரணைக்காக அங்கு செல்ல இருப்பது ராமதாஸ் குடும்பத்துக்கும், பா.ம.க. தொண்டர்களும் பெரும் அதிர்ச்சிதான்!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. Empty Re: சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி.

Post by சிவா Wed Jan 11, 2012 12:57 pm

நடவடிக்கை வெற்றி பெற்றால் மகிழ்ச்சி! சிரி

சில நாட்களுக்கு இவரது அறிக்கைகளைப் படிக்க வேண்டியதிருக்காது!


சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. Empty Re: சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி.

Post by சார்லஸ் mc Wed Jan 11, 2012 2:45 pm

[quote="சிவா"]நடவடிக்கை வெற்றி பெற்றால் மகிழ்ச்சி! குஓட்டே


நடக்கின்ற நல்லவை சீக்கிரம் நடந்தேறட்டும்


சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. 154550சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. 154550சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. 154550சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. 154550சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி. Empty Re: சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கு. ராமதாஸின் கைது வெகுவிரைவில்? சிபிஐ அதிரடி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum