புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
2 Posts - 3%
prajai
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_m10வாலி  - பாட்டும் பாராட்டும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலி - பாட்டும் பாராட்டும்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Jan 11, 2012 12:42 pm

வாலி - பாட்டும் பாராட்டும்!

‘பாட்டு எழுதிகிறோம்;
பணம் வருகிறது;
வேறென்ன வேண்டும்?
குறையொன்றுமில்லை, கோவிந்தா!”


- இப்படி எண்ணிக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை; பணத்தையும் தாண்டி, என் பாட்டுகள் பாராட்டையும் வாங்கி வந்தால்தான் - பேனா பிடிப்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைப்பவன் நான்.

வாலி  - பாட்டும் பாராட்டும்! Vaali_1000_book_launch_stills_photos_07

‘பத்தோடு பதினொன்று; அத்தோடு, இது ஒன்று’-என்று, எண்ணிக்கையளவில் என் பாட்டுகள் பேசப்படுவதால்,

என் தமிழுக்கு என்ன தகவு இருக்க முடியும்?

உடுமலை; மருதகாசி; கண்ணதாசன்; பட்டுக்கோட்டை - இந்த வரிசையிலே, காலம் என் பேரையும் வரவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் - நான், சென்னை வந்தேனே தவிர; பங்களாவும், படகனைய காரும், வாங்க வேண்டும் என்ற அரிப்போடு வந்தவனல்ல.

நான், பிறிதொரு உத்தியோகத்தில் அமர்ந்தே காரையும் கட்டடத்தையும் வாங்கியிருக்க முடியும்.

இவ்வுலகின் மாட்டு - பணம் பண்ண பத்து வழிகள் இருக்கின்றன; புகழ் பண்ண ஒரே வழிதான் இருக்கிறது. அதுதான் திறமை!

என் படவுலக வெற்றிக்கு, அதிர்ஷ்டம்தான் அடிப்படை என்று பேசப்படுமாயின், அது என் பெற்றோருக்கு நான் தேடி வைக்கும் பெருத்த அவமானமாகும்.

சாதியால்; சந்தர்ப்பத்தால்; சிபாரிசால்; சிலாகித்து சிலரைப் பேசுவதால்-

எனக்குப் பட வாய்ப்பு வருமாயின், அது நான் நரகல் தின்பதற்கு ஒப்பாகும். நான் மிகப் பெரிய அங்கீகாரமாக, என் எழுத்துக்கு எதை எண்ணுகிறேன் என்றால் -

ஒரு பட இயக்குநரோ; ஓர் இசையமைப்பாளரோ; ஒரு படாதிபதியோ; ஒரு படக் கதாநாயகனோ -

என்னைப்பற்றிக் கீழ்க்கண்டவாறு பேச வேண்டும்.

‘வாலிக்கும் நமக்கும் ஒத்துக்காது; சுருக்கமா சொன்னா - எனக்கு அவ்வளவா அவரைப் பிடிக்காது!இருந்தாலும், இந்த பாட்டு - அவர் எழுதினாத்தான் நல்லா இருக்கும்!’ - என்னைப் பற்றிய இத்தகு கமெண்ட்ஸ் தான், என் தொழிலை கெளரவப்படுத்துகின்றன.

ஒருவருக்கு - என்னை, எதற்காகப் பிடிக்க வேண்டும்? அப்படிப் பிடித்துத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் - அந்த ஒருவருக்கும் இல்லை; அடியேனுக்குமில்லை!

ஆனால் - என் பாட்டு, இன்னொருவருக்குப் பிடித்திருக்க வேண்டியவனாயிருக்கலாம்; என் பாட்டு, தவிர்க்கப்பட முடியாத்தாக இருக்க வேண்டும். இதைத்தான், நான் என் தொழில் தர்மமாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!

கேட்டு வாங்க வேண்டியது கைத்துட்டு; கேட்காமல் வாங்க வேண்டியது கைத்தட்டு!

சில பேச்சாளர்கள் மைக்கைப் பிடித்த உடனேயே, அவையோர் முன் கீழ்க்கண்டவாறு ஒரு வேண்டுகோளை வைப்பார்கள்.

‘எனக்குத் தெரியும்... நான் பேசும்போது, ஆங்காங்கு உங்கள் பலத்த கைத்தட்டல்கள் மூலம் - என்னை உற்சாகப்படுத்துவீர்கள் என்று; ஏன் என்னை ஆரம்பத்திலேயே உற்சாகப் படுத்தக் கூடாதா?’

இப்படிக் கைத்தட்டைக் கேட்டு வாங்குவார்கள். அவையோரிடமிருந்து கைத்தட்டுகள் தானாய் வர வேண்டும் - அதாவது, அவர்களுக்கு ஏப்பம் வருவதுபோல; தும்மல் வருவது போல!

கேட்டுப் பெறுவது யாசகம்; கரகோஷங்களைக் கேட்காமல் பெறுவதுதான், மாணிக்க வாசகம்!

இறையருலால்- விருதுகள் எனக்கு வாய்த்திருக்கின்றன. அன்னணம் நான் வாங்கிய விருதுகளெல்லாம் - என் பாட்டு வாங்கிய விருதுகளே தவிர, கேட்டு வாங்கிய விருதுகளல்ல!

படவுலகில், நான் புனைந்த எல்லாப் பாடல்களும், பாராட்டுகளைப் பெற்றவை அல்ல; ஆனால், பாராட்டுகளை இயல்பாகப் பெற்று, என்னை எனக்கே இனங்காட்டிய பாடல்கள் உண்டு!

திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில், ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா - 1963-ல் திரு.விசுவநாத அண்ணன்; திரு.ராமமூர்த்தி அண்ணன் இருவருக்கும் நடந்தது.

சிவாஜி, கண்ணதாசன் முதலிய திரையுலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து, விசுவநாதன் ராமமூர்த்தியை -

வாய்கள் மணக்க, வாழ்த்தியருளிய விழா அது!

அந்த விழாவில் - விசுவநாதன் ராமமூர்த்திக் குழுவினரின் இசைக் கச்சேரியும் நடந்து -

கற்கண்டுத் தமிழைக் காற்று வாகனத்தில் ஏற்றி, அண்டை அயல் நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டு இருந்த அற்புதம் -

அந்த அந்தி நேரத்தில் அங்கு நிகழ்ந்தது!

கண்ணதாசன் பாடல்களுக்கிடையே - அதுகாறும் படத்தில் வெளிவராத என்னுடைய ஒரு பாட்டை -

அண்ணன் விசுவநாதன் அவர்கள் பி.சுசிலாவைக் கொண்டு பாடவைத்தார்கள்.

அந்தப் பாடல் -

அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும், இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் - ‘கற்பகம்’ படத்துப் பாடல்; பாடலின் பல்லவி -

‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்; பார்வையிலே படம் பிடிச்சான்; பார்வையிலே படம் பிடிச்சு - பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான்!’ - இந்தப் பாடலின் சரணத்தில், ஒரு வரி வந்தது.

’மனசுக்குள்ளே தேரோட்ட -
மை விழியில் வடம் பிடிச்சான்!’

- என்பதுதான் அந்த வரி; இந்த வரியைக் கண்ணதாசன் ‘ஓஹோ’வென்று சிலாகித்து மேடையிலே பாராட்டி -

‘வாலியை என் வாரிசு என்பேன்!’ என்றார் -

அவை நடுவில் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்று - கவியரசு கண்ணதாசனை நோக்கி கை கூப்பினேன்.

எவருக்கு எதிராக நான் கடைவிரித்தேனோ - அவர் பராட்டுகிறார். இதுதான் நூறு விழுக்காடு, கிடைத்தற்கரிய நிஜமான பாராட்டு. இந்தப் பாராட்டின் எடையை நிறுத்துச் சொல்ல, ஏது ஒரு தராசு?

இந்த விழாவில்தான் -

என் அருமை அண்ணன்; என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த புண்ணியப் பெருந்தகை -

விசுவநாதன் அவர்களுக்கும் அண்ணன் ராமமூர்த்தி அவர்களுக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ எனும் பட்டம், பலத்த கரகோஷத்திற்கிடையே -

சிவாஜி, கண்ணதாசன் இருவராலும் வழங்கப் பெற்றது!

எத்துணையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள், இருப்பினும் -

ரசிகமணி டி.கே.சி. போல் - உடனே நல்ல வரியைக் கேட்ட மாத்திரம் பாட்டைப் பாராட்டுவதில் -

இராம நாராயணனுக்கு நிகர் இராம நாராயணனே!

பல பாடல்களைச் சொல்லலாம். உணர்ச்சிவசப்பட்டு ‘ப்ரமாதம் சார்; ப்ரமாதம் சார்’ என்று சின்னத் தொந்தி குலுங்கச் சிரிப்பார்.

இதோ - அவர் ரசித்த ஒரு பாடல், ஒரு பானைச் சோறுக்கு, ஓர் அரிசி பதம்போலே!

’மஞ்சள் பூசி
மைல்கல் இருந்தால் -
கடவுள் என்பாரு; இந்த -
மக்களைப் பத்தி
நானா சொன்னேன்?
பெரியார் சொன்னாரு!’

இன்னோர் இயக்குநரை, இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்.

ஏ. ஆர்.ரஹ்மான் இசையில், அவர் படத்தின் எல்லாப் பாடல்களையும் நான் எழுதி, அவை பதிவாகி - அதற்கான பணம் மொத்தத்தையும், அந்த இயக்குநர் எப்பொழுதோ கொடுத்துவிட்டார்.

அவர் - திடீரென்று ஒருநாள் என் வீட்டுக்கு வந்தார்.

‘உங்களுக்கு நான் முழுப் பணமும் செட்டில் பண்ணிட்டேன். இருந்தாலும், கடைசியா ஒரு சிச்சுவேஷனுக்கு நீங்க எழுதிக் கொடுத்த பாட்டு இருந்ததே -

அது அற்புதம்! ஒரு ரசிகன் என்கிற முறையிலே, என்னுடைய அன்பளிப்பாக இந்தப் பணத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகணும்!’

- என்று சொல்லி என் கையில், ஒரு லட்சம் ரூபாயைத் திணித்து விட்டு -

என் பதிலுக்குக்கூடக் காத்திராமல், அவர் காரேறிப் போய்விட்டார்.

அவர்தான், புகழ் வாய்ந்த இயக்குநர்; நடிகர்; உயர்ந்த கலா ரசிகர் - எஸ்.ஜெ. சூர்யா அவர்கள்!

- கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக