ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலி - பாட்டும் பாராட்டும்!

Go down

வாலி  - பாட்டும் பாராட்டும்! Empty வாலி - பாட்டும் பாராட்டும்!

Post by பிரசன்னா Wed Jan 11, 2012 12:42 pm

வாலி - பாட்டும் பாராட்டும்!

‘பாட்டு எழுதிகிறோம்;
பணம் வருகிறது;
வேறென்ன வேண்டும்?
குறையொன்றுமில்லை, கோவிந்தா!”


- இப்படி எண்ணிக்கொண்டு, வாழ்க்கையை ஓட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை; பணத்தையும் தாண்டி, என் பாட்டுகள் பாராட்டையும் வாங்கி வந்தால்தான் - பேனா பிடிப்பதில் அர்த்தம் இருக்கிறது என்று நினைப்பவன் நான்.

வாலி  - பாட்டும் பாராட்டும்! Vaali_1000_book_launch_stills_photos_07

‘பத்தோடு பதினொன்று; அத்தோடு, இது ஒன்று’-என்று, எண்ணிக்கையளவில் என் பாட்டுகள் பேசப்படுவதால்,

என் தமிழுக்கு என்ன தகவு இருக்க முடியும்?

உடுமலை; மருதகாசி; கண்ணதாசன்; பட்டுக்கோட்டை - இந்த வரிசையிலே, காலம் என் பேரையும் வரவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் - நான், சென்னை வந்தேனே தவிர; பங்களாவும், படகனைய காரும், வாங்க வேண்டும் என்ற அரிப்போடு வந்தவனல்ல.

நான், பிறிதொரு உத்தியோகத்தில் அமர்ந்தே காரையும் கட்டடத்தையும் வாங்கியிருக்க முடியும்.

இவ்வுலகின் மாட்டு - பணம் பண்ண பத்து வழிகள் இருக்கின்றன; புகழ் பண்ண ஒரே வழிதான் இருக்கிறது. அதுதான் திறமை!

என் படவுலக வெற்றிக்கு, அதிர்ஷ்டம்தான் அடிப்படை என்று பேசப்படுமாயின், அது என் பெற்றோருக்கு நான் தேடி வைக்கும் பெருத்த அவமானமாகும்.

சாதியால்; சந்தர்ப்பத்தால்; சிபாரிசால்; சிலாகித்து சிலரைப் பேசுவதால்-

எனக்குப் பட வாய்ப்பு வருமாயின், அது நான் நரகல் தின்பதற்கு ஒப்பாகும். நான் மிகப் பெரிய அங்கீகாரமாக, என் எழுத்துக்கு எதை எண்ணுகிறேன் என்றால் -

ஒரு பட இயக்குநரோ; ஓர் இசையமைப்பாளரோ; ஒரு படாதிபதியோ; ஒரு படக் கதாநாயகனோ -

என்னைப்பற்றிக் கீழ்க்கண்டவாறு பேச வேண்டும்.

‘வாலிக்கும் நமக்கும் ஒத்துக்காது; சுருக்கமா சொன்னா - எனக்கு அவ்வளவா அவரைப் பிடிக்காது!இருந்தாலும், இந்த பாட்டு - அவர் எழுதினாத்தான் நல்லா இருக்கும்!’ - என்னைப் பற்றிய இத்தகு கமெண்ட்ஸ் தான், என் தொழிலை கெளரவப்படுத்துகின்றன.

ஒருவருக்கு - என்னை, எதற்காகப் பிடிக்க வேண்டும்? அப்படிப் பிடித்துத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் - அந்த ஒருவருக்கும் இல்லை; அடியேனுக்குமில்லை!

ஆனால் - என் பாட்டு, இன்னொருவருக்குப் பிடித்திருக்க வேண்டியவனாயிருக்கலாம்; என் பாட்டு, தவிர்க்கப்பட முடியாத்தாக இருக்க வேண்டும். இதைத்தான், நான் என் தொழில் தர்மமாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!

கேட்டு வாங்க வேண்டியது கைத்துட்டு; கேட்காமல் வாங்க வேண்டியது கைத்தட்டு!

சில பேச்சாளர்கள் மைக்கைப் பிடித்த உடனேயே, அவையோர் முன் கீழ்க்கண்டவாறு ஒரு வேண்டுகோளை வைப்பார்கள்.

‘எனக்குத் தெரியும்... நான் பேசும்போது, ஆங்காங்கு உங்கள் பலத்த கைத்தட்டல்கள் மூலம் - என்னை உற்சாகப்படுத்துவீர்கள் என்று; ஏன் என்னை ஆரம்பத்திலேயே உற்சாகப் படுத்தக் கூடாதா?’

இப்படிக் கைத்தட்டைக் கேட்டு வாங்குவார்கள். அவையோரிடமிருந்து கைத்தட்டுகள் தானாய் வர வேண்டும் - அதாவது, அவர்களுக்கு ஏப்பம் வருவதுபோல; தும்மல் வருவது போல!

கேட்டுப் பெறுவது யாசகம்; கரகோஷங்களைக் கேட்காமல் பெறுவதுதான், மாணிக்க வாசகம்!

இறையருலால்- விருதுகள் எனக்கு வாய்த்திருக்கின்றன. அன்னணம் நான் வாங்கிய விருதுகளெல்லாம் - என் பாட்டு வாங்கிய விருதுகளே தவிர, கேட்டு வாங்கிய விருதுகளல்ல!

படவுலகில், நான் புனைந்த எல்லாப் பாடல்களும், பாராட்டுகளைப் பெற்றவை அல்ல; ஆனால், பாராட்டுகளை இயல்பாகப் பெற்று, என்னை எனக்கே இனங்காட்டிய பாடல்கள் உண்டு!

திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில், ஒரு பிரம்மாண்டமான பாராட்டு விழா - 1963-ல் திரு.விசுவநாத அண்ணன்; திரு.ராமமூர்த்தி அண்ணன் இருவருக்கும் நடந்தது.

சிவாஜி, கண்ணதாசன் முதலிய திரையுலகப் பிரமுகர்கள் திரண்டு வந்து, விசுவநாதன் ராமமூர்த்தியை -

வாய்கள் மணக்க, வாழ்த்தியருளிய விழா அது!

அந்த விழாவில் - விசுவநாதன் ராமமூர்த்திக் குழுவினரின் இசைக் கச்சேரியும் நடந்து -

கற்கண்டுத் தமிழைக் காற்று வாகனத்தில் ஏற்றி, அண்டை அயல் நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டு இருந்த அற்புதம் -

அந்த அந்தி நேரத்தில் அங்கு நிகழ்ந்தது!

கண்ணதாசன் பாடல்களுக்கிடையே - அதுகாறும் படத்தில் வெளிவராத என்னுடைய ஒரு பாட்டை -

அண்ணன் விசுவநாதன் அவர்கள் பி.சுசிலாவைக் கொண்டு பாடவைத்தார்கள்.

அந்தப் பாடல் -

அந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்கும், இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் அவர்களின் - ‘கற்பகம்’ படத்துப் பாடல்; பாடலின் பல்லவி -

‘பக்கத்து வீட்டுப் பருவ மச்சான்; பார்வையிலே படம் பிடிச்சான்; பார்வையிலே படம் பிடிச்சு - பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான்!’ - இந்தப் பாடலின் சரணத்தில், ஒரு வரி வந்தது.

’மனசுக்குள்ளே தேரோட்ட -
மை விழியில் வடம் பிடிச்சான்!’

- என்பதுதான் அந்த வரி; இந்த வரியைக் கண்ணதாசன் ‘ஓஹோ’வென்று சிலாகித்து மேடையிலே பாராட்டி -

‘வாலியை என் வாரிசு என்பேன்!’ என்றார் -

அவை நடுவில் அமர்ந்திருந்த நான் எழுந்து நின்று - கவியரசு கண்ணதாசனை நோக்கி கை கூப்பினேன்.

எவருக்கு எதிராக நான் கடைவிரித்தேனோ - அவர் பராட்டுகிறார். இதுதான் நூறு விழுக்காடு, கிடைத்தற்கரிய நிஜமான பாராட்டு. இந்தப் பாராட்டின் எடையை நிறுத்துச் சொல்ல, ஏது ஒரு தராசு?

இந்த விழாவில்தான் -

என் அருமை அண்ணன்; என் வாழ்வில் விளக்கேற்றி வைத்த புண்ணியப் பெருந்தகை -

விசுவநாதன் அவர்களுக்கும் அண்ணன் ராமமூர்த்தி அவர்களுக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ எனும் பட்டம், பலத்த கரகோஷத்திற்கிடையே -

சிவாஜி, கண்ணதாசன் இருவராலும் வழங்கப் பெற்றது!

எத்துணையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள், இருப்பினும் -

ரசிகமணி டி.கே.சி. போல் - உடனே நல்ல வரியைக் கேட்ட மாத்திரம் பாட்டைப் பாராட்டுவதில் -

இராம நாராயணனுக்கு நிகர் இராம நாராயணனே!

பல பாடல்களைச் சொல்லலாம். உணர்ச்சிவசப்பட்டு ‘ப்ரமாதம் சார்; ப்ரமாதம் சார்’ என்று சின்னத் தொந்தி குலுங்கச் சிரிப்பார்.

இதோ - அவர் ரசித்த ஒரு பாடல், ஒரு பானைச் சோறுக்கு, ஓர் அரிசி பதம்போலே!

’மஞ்சள் பூசி
மைல்கல் இருந்தால் -
கடவுள் என்பாரு; இந்த -
மக்களைப் பத்தி
நானா சொன்னேன்?
பெரியார் சொன்னாரு!’

இன்னோர் இயக்குநரை, இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்.

ஏ. ஆர்.ரஹ்மான் இசையில், அவர் படத்தின் எல்லாப் பாடல்களையும் நான் எழுதி, அவை பதிவாகி - அதற்கான பணம் மொத்தத்தையும், அந்த இயக்குநர் எப்பொழுதோ கொடுத்துவிட்டார்.

அவர் - திடீரென்று ஒருநாள் என் வீட்டுக்கு வந்தார்.

‘உங்களுக்கு நான் முழுப் பணமும் செட்டில் பண்ணிட்டேன். இருந்தாலும், கடைசியா ஒரு சிச்சுவேஷனுக்கு நீங்க எழுதிக் கொடுத்த பாட்டு இருந்ததே -

அது அற்புதம்! ஒரு ரசிகன் என்கிற முறையிலே, என்னுடைய அன்பளிப்பாக இந்தப் பணத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆகணும்!’

- என்று சொல்லி என் கையில், ஒரு லட்சம் ரூபாயைத் திணித்து விட்டு -

என் பதிலுக்குக்கூடக் காத்திராமல், அவர் காரேறிப் போய்விட்டார்.

அவர்தான், புகழ் வாய்ந்த இயக்குநர்; நடிகர்; உயர்ந்த கலா ரசிகர் - எஸ்.ஜெ. சூர்யா அவர்கள்!

- கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள், ARRKAY
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum