Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி!
2 posters
Page 1 of 1
எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி!
![எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Vm1](https://2img.net/h/www.dinamani.com/Images/article/2012/1/3/vm1.jpg)
எல்லையை மிதித்தாலே நமது தொல்லை வினைகளை "இல்லை' என்றாக்கும் தில்லைத் தலத்தில் தினந்தோறும் திருவிழாதான்!
ஆனித் திருமஞ்சனம், தைப்பூசம், மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாதப் பிறப்பு, பிரதோஷம், நால்வர் விழா என அநேக விழா அதி அற்புதமாக நடந்தாலும் சிகரம் வைத்தாற்போல் சிறந்து பொலியும் நன்னாளே ஆருத்ரா தரிசனம்.
சிதம்பரம், திருவாரூர் இரண்டும் மிகப் பழமையான திருத்தலம். "இரண்டில் எது மூத்தது?' என்ற கேள்வி எழலாம்.
தேவாரம் இதற்கு என்ன பதில் சொல்கிறது என்று தெரிந்துகொள்வோமா?
"மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை
மணிதிகழும் அம்பலத்தே மன்னிக்கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே'
-எது முந்தி என எவராலும் சொல்ல முடியாது. "முன்னைப் பழமைக்கும் முன்னைப் பழம் பொருளாக' நடராஜ மூர்த்தி பொலிகின்றார். ஆனால் அவரது ஆடல் என்றும் புதுமையாக இலங்குகின்றது.
நடன சபாபதியான சிவபிரான், திருவாதிரை நன்னாளில் - ஆருத்ரா தரிசன விழாவில் ஆனந்தம் மிகக் கொள்கிறார். அதனால்தான் "ஆதிரை முதல்வன்' என்றும் "ஆதிரையான்' என்றும் திருப்பெயர் பெற்றுள்ளார்.
மார்கழி மாதம், திருஆதிரை நட்சத்திரத்திற்கு முன் கொடியேற்றி பத்து நாள் விழா நடைபெறுகிறது.
திரு ஆதிரை நட்சத்திரத்தில் "இராஜசபை' என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்
குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியில்
பால் வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும்
காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த
மாநிலத்தே!'
-அப்பரடிகள்தான் எவ்வளவு அழகாகச் சொல்லியுள்ளார்.
பிறவி பெற்றதன் பயனே நடராஜரைத் தரிசிப்பதுதான். அதுவும் ஆருத்ரா தரிசனம் பாவ விமோசனம்.
பனி மாதமாக விளங்கும் மார்கழி மாதம் இறைவனைப் பணியும் மாதமாகவும் சிறந்து விளங்குகிறது.
இம்மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே நாம் எழுந்து விடுகிறோம். நாம் மட்டுமல்ல. தேவர்களும் எழுந்து தெய்வ தரிசனம் பெறுகிறார்கள்.
எப்படி என்கிறீர்களா?
தை முதல் நாள் முதல் "உத்தராயணம்' என்கிற பகல் பொழுது தேவர்களுக்கு. அப்படியென்றால் தைக்கு முன் வருகின்ற மார்கழி தேவர்களுக்கு அருணோதய நேரம்தானே!
வானவர்களும், மண்ணுலகத்தோரும் ஒரு சேர வணங்கும் மார்கழித் திங்களில்தான் மகாதேவனுக்கும் விழா! மாலவனுக்கும் விழா!
"கோயில்' என்று சொன்னாலே சைவர்களைப் பொறுத்தவரை சிதம்பரம்தான்! வைணவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான்.
ஸ்ரீரங்கத்தின் சிறப்பு விழா வைகுண்ட ஏகாதசி. அவ்வாறே தில்லையில் சிறப்பு விழா ஆருத்ரா தரிசனம்.
நடராசப் பெருமான், மார்கழி திருவாதிரையிலும், மாசி சுக்ல சதுர்த்தசியிலும், சித்திரை திருவோணத்திலும், ஆனி உத்திரத்திலும், ஆவணி சுக்ல சதுர்த்தசியிலும், புரட்டாசி சுக்ல சதுர்த்தசியிலும் அபிஷேகம் ஏற்கிறார். நமக்கு ஒரு வருடம் என விரிவது தேவர்களுக்கு ஒரு நாளே! மேற்கண்ட வண்ணம் ஒருநாளைக்கு ஆறுமுறை அபிஷேகம் ஏற்கிறார் தேவாதி தேவரான சிவ பரம்பொருள்.
ஒரு நாளின் முதற்குளியல் திருவாதிரைத் திருவிழா அன்றுதான். எனவேதான் ஆருத்ரா தரிசனம் போற்றப் பெறுகிறது. புலவர்களாலே ஏற்றப் பெறுகிறது.
""மார்கழி மாதம் திருவாதிரைநாள்
வரப்போகுது ஐயே'' என நந்தனார் மனம் உருகினார்.
""அருமருந்தொரு திருமருந்து
அம்பலத்தே கண்டேனே'' என முத்துத்தாண்டவர் முழக்கமிடுகிறார்.
""நடுங்க வைக்கும் குளிர்கொண்ட மாதத்திலே குளிர்ந்த தண்ணீரில் விடியற்காலையில் அபிஷேகமா? என்ன சிவபெருமானே இப்படிக் குளிப்பது ஏற்புடைத்தா?' என்று அதியற்புதமாக வினவுகிறார் அப்பைய தீட்சிதர்.
""பெருமானே! தங்கள் சிரத்தில் குளிர்ந்த கங்கை உள்ளது. மேலும் குளிர்ந்த பிறைச் சந்திரனும் பொலிகின்றது. உங்கள் ஒருபக்கத்தில் உறையும் உமாதேவியோ பனிமலை அரசனின் புதல்வி. வதைக்கும் இக்குளிர்நிகழ்வுகள் போதாதா? மார்கழி விடியற்காலையில் சந்தனத்தில் வேறு அபிஷேகமா? இவ்வளவு குளிரைத்தாங்கிக் கொள்வதற்கு ஒரே வழிதான் உள்ளது. காமம், கோபம், மதம் என தீய குணங்களால் என் இதயம் தகிக்கிறது. அங்கே வந்துவிடு குளிர் காயலாம். இதமாக இருக்கும்'' என கவித்துவத்தோடு நயம்பட அழைக்கிறார் அப்பைய தீட்சிதர்.
ஆருத்ரா தரிசனத்தில் என்ன அமுதமயமான கவிதரிசனம் பார்த்தீர்களா?
மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவத்தின்போது வேறொரு வித்தியாசமான நிகழ்வும் நடைபெறுகிறது.
அது என்ன தெரியுமா?
நடராஜப் பெருமான் தன்னை ஆலயத்தில் வந்து வழிபடாத ஆருயிர்கட்கும் அற்புதக் கருணை காட்டி அவர்தம் இல்லங்களுக்கு தாமே எழுந்தருளுகிறார்.
ஆமாம்.
கருவறையை விட்டு ஆருத்ரா தரிசன நன்னாள் அன்று நான்கு வீதிகளிலும் உற்ஸவராக அவரே உலா வருகின்றார். நம் மேல் நடராஜர் காட்டும் கருணைக்குத்தான் அளவேது?
கருவறை மூலவர் தெரு வரை உலா வருவது வேறு ஆலயங்களில் காணமுடியாத எட்டாவது அதிசயம்.
அதிகாலை எழுந்து மலர் பறித்து ஆண்டவனை வழிபட வேண்டும் என்ற ஆசையினால் மரங்கள் ஏற புலிக்காலை வேண்டிப் பெற்றார் ஒருவர்.
திருமால் கண்டு மகிழ்ந்த நடராஜர் திருநடனத்தை தானும் காண ஆசைப்பட்டார் ஆதிசேஷன்.
புலிக்கால் பெற்றவரே வியாக்ர பாதர்.
ஆதிசேஷனே பதஞ்சலி.
இவர்கள் இருவரும் காண சபாபதி இயற்றும் தனிப் பெருங்கூத்தே இவ்வுலகை இயக்கி வருகிறது.
"யாவையும் ஆடிடும் எம் இறை ஆடவே' என்னும் திருமந்திரம் அருளிய திருமூலர் ஆருத்ரா நாயகனை அற்புதமாகப் பணிகின்றார்.
எங்கும் திருமேனி! எங்கும் சிவ சக்தி!
எங்கும் சிதம்பரம்! எங்கும் திருநடம்!
வானாகி,மண்ணாகி, வளியாகி, ஒளியாகி, ஊனாகி, உயிராகி அனைவரையும் கூத்தாட்டுவானாக விளங்குபவன் தானே ஆதிரை முதல்வன் ஆதிசிவன்!
மதிவண்ணன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எங்கும் சிதம்பரம்! எங்கும் சிவசக்தி! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» சிவசக்தி அகவல்
» சிவசக்தி அகவல் - பி. சண்முகம்
» சிவசக்தி ஐக்கியம்! - வழிபாட்டு முறை
» மாங்கல்ய வரம் தரும் சிவசக்தி திருக்கோலம்
» சிவசக்தி அகவல்
» சிவசக்தி அகவல் - பி. சண்முகம்
» சிவசக்தி ஐக்கியம்! - வழிபாட்டு முறை
» மாங்கல்ய வரம் தரும் சிவசக்தி திருக்கோலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|