புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
25 Posts - 38%
heezulia
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
2 Posts - 3%
prajai
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
8 Posts - 2%
prajai
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_m10பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?!


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jan 10, 2012 5:40 pm


பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?!







தைப்பொங்கல் வரலாறு:
பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Pongal

சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும்
பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை
முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச்
சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை
நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல். உழைக்கும் தமிழ் மக்கள் தாமே
கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து
உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும்
விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்தது வழிபட்டனர்.


பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

முதல் நாள் போகிப் பண்டிகை:

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது.
பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் 'பழையன
கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும்,
உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. போகியன்று, வீட்டின்
கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப்
போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு
சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும்,
தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.


இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை
அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன்
காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய
காட்சியாகும். பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர்.
அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி
வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி
கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகிப் பண்டிகையின் போது போளி, வடை,
பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.


போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம்
அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர்
இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.


இரண்டாம் நாள் தைப்பொங்கல்:
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.


தைப்பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட வெடிகள் வெடிக்க
தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர்.
தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானை பலர் வாங்குவர்.
மேற்குநாடுகளில் பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்ட பொதிகள்
விற்பனைக்கு இருக்கும். வசதிபடைத்த பலர் புத்தாடை வாங்குவர்.


பொங்கலன்று அதிகாலை எழுந்து முழுகுவர். வீட்டு முற்றத்தில் கோலம்
இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு
முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக
அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும்
அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம்
வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத்
தமிழர்கள், சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி
வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ
பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும்
அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின்
குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது
தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.




மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல்

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால்
கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப்
பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு
நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும்
பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

அன்று
மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை
குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு
பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை
கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை
கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய
மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.


உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள்.
விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள்.
தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும்
தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து
வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும்.
இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம்
கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும்
நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு
மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி
பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக' என்று கூறி மாடு
பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.


நான்காம் நாள் காணும் பொங்கல்:

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள்
இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப்
பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும்
பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்,
பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப்
போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.


இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை
வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க
சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து
பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.


நன்றி: விக்கிபீடியா

http://www.tamilvaasi.com/2012/01/blog-post_10.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 10, 2012 5:46 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா?! Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக