புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
91 Posts - 61%
heezulia
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
7 Posts - 5%
eraeravi
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
1 Post - 1%
viyasan
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
283 Posts - 45%
heezulia
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
19 Posts - 3%
prajai
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
7 Posts - 1%
mruthun
”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_m10”ரொம்ப பயந்துட்டான்ல” !  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”ரொம்ப பயந்துட்டான்ல” !


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 12:53 pm

”ரொம்ப பயந்துட்டான்ல” !

‘மளுக்’ என்று குழாயை திறந்துவிட்ட மாதிரி கண்ணீர் வரும் ராஜேந்தருக்கு! எந்த சந்தர்பத்தில் அழுவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது. “நான்லாம் ஊர்ல இருக்கும் போது ஒரு வேளை சோ...” என்று ஆரம்பிக்கும்போதே தாரை தாரையாக கண்ணீர் ஓடும். சிறு பிள்ளைகள் மாதிரி, இரண்டு கைகளாலும் துடைத்துக் கொள்வார். அந்த வாக்கியத்தை முடிப்பதுக்குள்ளாகவே அடுத்த சம்பவத்திற்கு தாவி, ‘நானெல்லாம்...” என்று இரண்டு கைகளாலும் சிட்டிகை போட்டுக்கொண்டே சென்னை பாஷையை சிதறு தேங்காயாக்குவார்.

”ரொம்ப பயந்துட்டான்ல” !  Rajendar
சிரிக்க ஆரம்பித்தார் என்றால், பக்கத்து பில்டிங்குகள் கூட கிடுகிடுக்கும். அப்படியொரு சிரிப்போற்சவம் நடந்து கொண்டிருந்தபோதுதான் ராஜேந்தரை உலுக்குகிற அந்த நிகழ்ச்சியும் நடந்தது. வயதான அம்மாள் ஒருவர் வாசலில் நின்று கொண்டு, “என் ராசா... நீதான் இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்கணும்” என்றார் பெருங்குரலெடுத்து!

அப்போது இவர் பூங்கா நகர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ. அந்த வயதான அம்மாளும் பூங்கா நகரிலிருந்து தான் வந்திருந்தார். சினிமாவில் வருவது போல் “என்னாச்சும்மா... அழாமச் சொல்லு. நான் இருக்கேன்ல” என்று ஆறுதல் கூறிய ராஜேந்தர், அந்த அம்மா ‘சொன்ன கதையை கேட்டு ஒரு புறம் கண்ணீர் வழிய, மறுபுறம் நெஞ்சைப் புடைத்துக் கொண்டு ஒரு பெரும் போருக்கு ஆயத்தமானார்.

அவர் சொன்னது இதுதான். “அய்யா... என் புள்ளையத் திருட்டு கேஸ்ல போலீஸ் புடிச்சிட்டுப் போயிடுச்சு. குத்துயிராக் கிடக்கிறான். பெரிய ஆஸ்பத்திரியிலே சேர்த்துருக்கோம். ஆனா ஒரு டாக்டரும் வைத்தியம் பார்க்க மாட்டேங்குறான். புள்ள துடியா துடிக்கிறான். கொஞ்சம் வந்து பாருங்களேன். உங்களை விட்டா எனக்கு யாரு இருக்கா...” ன்னாங்க. அந்த கடைசி வரியில் தனது அத்தனை வருட பொறுமையையும் தொலைத்துவிட்ட டி.ஆர். “யேய், எட்றா வண்டிய” என்றார். அந்த அம்மாளையும் வண்டிக்குள் திணித்துக் கொண்டு புறப்பட்டது பீரங்கி! (இருக்கிற நிலைமையை பார்த்தால் அது காராகப் படவில்லை என் கண்களுக்கு!)

சென்ட்ரல் ரெயில்வே நிலையத்திற்கு எதிரே இருக்கிறதே, அதே ஜி.எச்.தான். காரை விட்டு கீழே இறங்கிய டி.ஆர். “எங்கேஇருக்கான் உம் புள்ள? முதல்ல அவனக் காட்டு. அப்புறம் காட்றேன் இவனுங்களுக்கு” என்றார் அந்தம்மாளிடம். கண்ணீரும் கம்பலையுமாக அந்தம்மாள் வழி காட்ட, தன்னிகரில்லா தனது தளபதிகளுடன் வேக வேகமாக வார்டுகளை கடக்க ஆரம்பித்தார் ராஜேந்தர்.

”ரொம்ப பயந்துட்டான்ல” !  T.Rajendar-reel-28

“யேய், ராஜேந்தருடா...” என்று முகத்திலும் குரலிலும் ஆச்சர்யம் காட்டியபடி ஒவ்வொரு பேஷண்ட்டாக எழுந்து இவர் பின்னாலேயே ஓடி வர, மேற்படி பையனை நாங்கள் அடைவதற்குள் எங்களுக்கு பின்னால், சுமார் ஐநூறு அறுநூறு பேர் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்துடன் திரண்டிருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்ததும் ஜல்லிக்கட்டுக் காளை இன்னும் கொஞ்சம் முறுக்கிக் கொண்டு துள்ளியது. “டேய், யாருடா இவனை அடிச்சது?” என்று படத்தில் வருவது போலவே.

அன்றைக்குப் பார்த்து எந்தக் கோட்டான் முகத்திலே முழிச்சாரோ, அந்த பையனை அடித்த இன்ஸ்பெக்டரும் அந்த பேஷன்டுக்கு அருகில்தான் நின்றிருந்தார். பையனின் அம்மா, “இவருதாங்க அடிச்சாரு” என்று இன்ஸ்பெக்டரை காட்ட, நரம்புகள் புடைக்க கத்த ஆரம்பித்தார் டி.ஆர். “யோவ்... ஒரு பச்ச மண்ண(?) இப்படி அடிச்சிருக்கியே, உனக்கெல்லாம் ‘தம்பி தங்கச்சி இருக்காங்களாய்யா? இவன் செத்துப் போயிருந்தா என்னய்யா பண்ணுவே? இவன் திருப்பி அடிக்க மாட்டான்னுதானே அடிச்சே? வா, எங் கூட சண்டை போடு. யூனிபார்மை கழட்டிட்டு வா...” என்று சொல்லிக் கொண்டே, தன் சட்டை பித்தான்களை சரக் சரக்கென்று கிழித்துத் தள்ளினார். இந்த கோப வார்த்தைகளை அவர் முடித்திருந்தபோது, ராஜேந்தரின் வெள்ளை சட்டையில் ஒரு பட்டன் கூட இல்லை. அநேகமாக முக்கால் வாசி சட்டையை கழற்றியிருந்தார்.

பக்கத்தில் நின்றிருந்த நாங்கள் பாய்ந்து சென்று மேற்கொண்டு அவர் சட்டையை கழற்றாமல் பார்த்துக் கொண்டோம்.

”ரொம்ப பயந்துட்டான்ல” !  E7c59906-66ed-40c0-88aa-3c9a44c220bc_S_secvpf

இல்ல சார்... என்ன செஞ்சான்னு...? இன்ஸ் ஆரம்பிக்கும் போதே குறுக்கிட்டு, “என்ன வேணாச் செய்யட்டும்யா? கொல கூட பண்ணட்டும். அவனை அடிக்கிற அதிகாரம் உனக்கு இருக்கா? சட்டம் தெரியுமா உனக்கு? இபிகோ”ன்னு ஆரம்பிச்சு மறுபடியும் யாருக்கும் புரியாத விஷயங்களை எடுத்துவிட்டார். “ நானும் லாயருக்குப் படிக்கணும்னு ஆசைப்பட்டவந்தான், தெரியுமா” என்றார் மூச்சு வாங்க...

அதற்குள், ஆஸ்பிட்டல் டீன் பதறியடித்துக் கொண்டு ஓடோடி வந்தார். “சார், வாங்க நம்ம ரூம்லே போய் உட்கார்ந்து பேசுவோம்” என்று அவர் அழைக்க, சிங்கம் மறுபடியும் ஒரு துள்ளு துள்ளி அடங்கியது. இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த அந்த பையனின் அம்மா கையெடுத்து கும்பிட்டார். கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. “இந்த பையனைக் காப்பாத்த வேண்டியது எங்க பொறுப்பு” என்று உறுதியளித்தார் டீன்.

“யோவ் போங்கய்யா அவங்கவுங்க வார்டுக்கு” என்று வேடிக்கை பார்த்தவர்களை டீனே துரத்தியடித்தது வேடிக்கையாக இருந்தது.

காரில் திரும்பும்போது, “கொஞ்சம் தண்ணி வாங்குங்கய்யா” என்றார் டி.ஆர். ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றை வாங்கிக் கொடுத்தோம். ஒரே மூச்சில் குடித்தவர், “ரொம்ப பயந்துட்டான்ல” என்றார் இன்ஸ்பெக்டர் குறித்து. “ நாங்களும்தான்...” என்று வாய் வரை வந்ததை அடக்கிக் கொண்டு “ஆமாண்ணே...” என்றோம் கோரசாக!

கடைசிவரை அந்த பையன் என்ன தப்புப் பண்ணினான்னு யாருமே கேட்கலே? அது என்னதான் இன்னைக்கு வரைக்கும் எனக்கு புரியலே...

- ஆர்.எஸ். அந்தணன் (பளபள உலகம் கலகல பார்வை)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Thagaval Pakirvu - .tamilleader.in
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 09, 2012 2:13 pm

மகிழ்ச்சி நல்ல நகைச்சுவை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 09, 2012 3:52 pm

இன்ஸ்பெக்டரும் சட்டையைக் கழட்டியிருந்தால் என்ன சார் செஞ்சிருப்பீங்க...!!!!


நீங்க ரொம்ப பயந்திருப்பீங்கல்ல....!!! சிரி சிரி



”ரொம்ப பயந்துட்டான்ல” !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 09, 2012 3:56 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
படத்தில காமெடி பண்றது போதாதுன்னு நிஜத்திலும் காமெடி பண்ணி இருக்காரே



”ரொம்ப பயந்துட்டான்ல” !  U”ரொம்ப பயந்துட்டான்ல” !  D”ரொம்ப பயந்துட்டான்ல” !  A”ரொம்ப பயந்துட்டான்ல” !  Y”ரொம்ப பயந்துட்டான்ல” !  A”ரொம்ப பயந்துட்டான்ல” !  S”ரொம்ப பயந்துட்டான்ல” !  U”ரொம்ப பயந்துட்டான்ல” !  D”ரொம்ப பயந்துட்டான்ல” !  H”ரொம்ப பயந்துட்டான்ல” !  A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Jan 09, 2012 3:59 pm

காரில் திரும்பும்போது, “கொஞ்சம் தண்ணி வாங்குங்கய்யா” என்றார் டி.ஆர். ஒரு லிட்டர் பாட்டில் ஒன்றை வாங்கிக் கொடுத்தோம். ஒரே மூச்சில் குடித்தவர், “ரொம்ப பயந்துட்டான்ல” என்றார் இன்ஸ்பெக்டர் குறித்து. “ நாங்களும்தான்...” என்று வாய் வரை வந்ததை அடக்கிக் கொண்டு “ஆமாண்ணே...” என்றோம் கோரசாக!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக