புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
25 Posts - 38%
heezulia
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
4 Posts - 6%
prajai
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
1 Post - 2%
Barushree
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
1 Post - 2%
M. Priya
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
8 Posts - 2%
prajai
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_m10தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Jan 09, 2012 11:06 am

தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்!


தினமணி தலையங்கம்:அவன்தான் மனிதன்! Edits

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் பென்னி குயிக்குக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது, பாராட்டுக்குரியது. இதற்காக "தினமணி' சார்பில் முதல்வருக்கு நன்றியைப் பதிவு செய்கின்றோம்.

முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழ்நாடு, கேரள மாநிலங்கள் கருத்து மாறுபாடு கொண்டிருக்கும் நேரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த அறிவிப்பை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கத் தேவையில்லை. 1911-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி மறைந்த பென்னிகுயிக் நினைவு நூற்றாண்டு விழாவின் தொடக்கமாகவே தற்போதைய அறிவிப்பைக் கொள்ள வேண்டும்.

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வுக்கு உயிர் கொடுத்தவர் பென்னி குயிக். அந்த மாபெரும் மனிதரைப் பல குடும்பங்கள் தெய்வமாக மதித்தன. இன்றும்கூட பல வீடுகளில் தங்கள் முன்னோர் படங்களுடன் பென்னி குயிக் படத்தையும் இடம்பெறச் செய்துள்ளனர். ஆனால், இந்த அளவுக்கு அந்த மாமனிதரை தமிழகத்தின் பிற பகுதியில் உள்ள மக்கள் இன்றும்கூட அறிந்திருக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

பென்னி குயிக்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறாக இல்லை. அவரைப் பற்றி அறிந்த பொறியாளர்கள் மத்தியில் மட்டுமே அவர் நினைவுகூரப்படுகிறார். சிறு அளவில் கருத்தரங்குகளில் பேசப்படுகிறார். இப்போது, இந்த மணிமண்டபம் குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பு செய்திருப்பதன் மூலம், தமிழர் அனைவருக்கும் குறிப்பாக, இளம் தலைமுறையினருக்கு இந்த மாபெரும் மனிதரின் அளப்பரிய சேவை மீண்டும் கொண்டு செல்லப்படுகிறது.

1858-ல் பிரிட்டிஷ் அரசில் ராயல் பொறியாளராகச் சேர்ந்தது முதல் தமிழகத்தை மிக நுட்பமாகக் கவனித்து அதன் தேவைகளை உணர்ந்தவர் பென்னி குயிக். ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் சென்ற நூற்றாண்டில் கடும் வறட்சி ஏற்பட்டு, பட்டினிச் சாவுகள் நேரிட்டதைப் பார்த்து மனம் வருந்தியவர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி, ஓடி, கடலில் வீணாகிப் போகும் தண்ணீரைத் தமிழகத்துக்குத் திருப்பும் திட்டத்தை உருவாக்கியவர். பலத்த மழை வெள்ளத்தால் பணிகள் பாதிக்கப்பட்டபோது, பிரிட்டிஷ் அரசு இத்திட்டத்துக்கு நிதிஒதுக்குவதில் மெத்தனம் காட்டியது. பணி முடங்கிவிடக்கூடாது என்பதற்காக இங்கிலாந்தில் இருந்த தன் சொத்துகளை விற்று, இந்த அணையைக் கட்டி முடித்தவர்.

தெருச் சாக்கடை திட்டத்துக்கும்கூட 10 விழுக்காடு எதிர்பார்க்கும் இந்த நாளில், தன் சொத்துகளை விற்று அணையைக் கட்டி முடிக்க பென்னி குயிக் முற்பட்டதன் காரணம், நம்மவர்களைவிட ஆங்கிலேயரான அவர் இந்த மக்களின் வேதனையைப் புரிந்துகொண்டவர் என்பதுதான்.

அணுக முடியாத காட்டுப் பகுதியில், பல்வேறு இடையூறுகளுக்கு இடையிலும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தது மட்டுமல்ல, எத்தகைய வெள்ளம் வந்தாலும் தாங்கி நிற்கும் அளவுக்கு இந்த அணையைப் புவியீர்ப்பு விசை அணையாகக் கட்டினார். அதாவது, அணையில் 156 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கும்போது, அணையைத் தகர்த்து வெளியேற முட்டுகின்ற நீரின் விசையைத் தாங்கும் அளவுக்கு, அணையின் மொத்த எடை (அல்லது நிறை) இருக்கும் வகையில் அமைக்கப்படுவதே புவியீர்ப்பு விசை அணை!

கற்களாலும் சுண்ணாம்பாலும் அமைந்த இந்த அணையின் நிறை மேலும் கூட்டப்பட்டுள்ளதே தவிர, கொஞ்சமும் குறையவில்லை. ஆனால், 156 அடி உயரத்துக்கு நீர் தேக்காமல், தற்போது 132 அடி உயரம்தான் தண்ணீர் தேக்கப்படுகிறது. அதாவது அணை நீரின் விசை மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், கேரளத்தின் அழுகுணிக் குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கிறது.

தமிழக அரசு மணிமண்டபத்துடன் நின்றுவிடக்கூடாது. இந்த மணிமண்டப வளாகத்தைப் பென்னி குயிக் பாசன மேலாண்மை மையமாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் நிலவிய பாசன முறைகள் குறித்து பயிற்றுவிக்கும் கல்லூரிகள் இன்றில்லை. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் பாசன மேலாண்மைக்கான படிப்பு இருக்கின்றது. திருச்சி துவாக்குடியில் பாசன மேலாண்மைப் பயிற்சி மையம் உள்ளது. இங்கு பொதுப் பணித் துறையில் உள்ளவர்களுக்கு சுழற்சி முறையில், விருப்ப முறையில் புத்தொளிப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மிகச் சிறிய எண்ணிக்கையில் விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனாலும் இது போதாது.

பாசன மேலாண்மை என்பது முக்கியமாக கடைக்கோடியில் உள்ள சாதாரண விவசாயிகளுக்குத்தான் அளிக்கப்பட வேண்டும். ஏரி, குளங்களில் தேங்கும் நீர் அளவு என்ன, எந்த அளவுக்கு நீர் தேங்கினால் எந்தெந்த நீர்ப் போக்கியைப் பயன்படுத்தலாம், எந்தெந்த மதகுகளைத் திறக்கலாம் என்பதற்கு கரைகளிலும், மதகுகளிலும் அடையாளம் வைத்த தமிழர்களின் பாசன அறிவு இன்று பயன்படுத்தப்படவில்லை. பாசன மேலாண்மையில் நிலவிய தமிழ்ச் சொற்களைக்கூட இன்றைய விவசாயிகள் அறிந்திருக்கவில்லை.

ஒவ்வொரு பாசனக் கால்வாயையும், ஏரிகளையும், குளங்களையும் மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைப்பதுதான் தமிழக பாசனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இருக்கும். தேவைக்கேற்ப அணை நீரைத் திறப்பதும், வாய்க்கால் தூர் வாருவதும் அந்தந்தப் பகுதி விவசாயிகளின் பொறுப்பில்விட்டு, அளிக்கப்பட்ட நிதி சரியாகச் செலவிடப்பட்டதா என்கின்ற தணிக்கையை மட்டுமே அரசு மேற்கொள்ளும் நிலைமை உருவாக வேண்டும். இதற்கு சாதாரண விவசாயிகள் அளவில் பாசன மேலாண்மை குறித்த அறிவும் பயிற்சியும் அவசியம்.

தமிழர் வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணிப்பு செய்த பென்னி குயிக் மணிமண்டப வளாகம், தமிழகத்தின் சிறுவிவசாயிகளுக்கு தங்கள் பகுதி நீராதாரத்தை எப்படிச் செவ்வனே பயன்படுத்தலாம் என்பதைச் சொல்லித் தரும் வளாகமாக மாறட்டும்.

நன்றி - தினமணி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக